Tag Archive | விடுதலை

மனிதனுக்காக மரணிக்கும் மிருகங்கள்..!


இது மாலை மலர் இதழில் வெளியான செய்தியாகும்.

மாற்று ஆபரேசன் மூலம் மிருக உறுப்புகளை மனித உடலில் பொருத்த திட்டம்; சீன விஞ்ஞானிகள் ஆய்வு

பெய்ஜிங், மார்ச். 26- பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மிருகங்களின் உடல் உறுப்புகளை பொருத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.சீனாவில் உள்ள நாஜ்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதற் கான ஆய்வை மேற்கொண் டுள்ளனர்.முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன.

அது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பின்னர் மற்ற விலங்குகளின் உடல் உறுப்புகளையும் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

http://www.maalaimalar.com/2011/03/26123621/transfer-operation-used-for-an.html

இந்த செய்தியைச் சொன்னதுமே எனது மனைவி சொன்னது, பிசாசை ஆண்டவர் பன்றிக்குள் அனுப்பினார், மனுஷன் அந்த பன்றியை மனுஷனுக்குள் வைக்கப்போறானா ‘ என்று அங்கலாய்த்துக் கொண்டார்..!

ஏற்கனவே பன்றியின் கொழுப்பிலிருந்து இனிப்புகள் மீது போடப்படும் சில்வர் ஃபாயில் தயாரிக்கப்படுவதாகவும் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டவருக்கான இன்ஸுலின் கூட பன்றியின் கணையத்திலிருந்தே தயாரிக்கப்படுவதாகவும் சொல்லப்படும் நிலையில் தற்போது அதன் உடல் உறுப்புகளும் மனிதனுக்குப் பொருத்தப்படும் என்ற செய்தியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது; அப்படியானால் பன்றிக்கும் மனிதனுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்கிறது;  இந்து மக்கள் இதன்காரணமாகவே ஒரு மிருகத்தையும் விடாமல் அனைத்தின் ஆதரவையும் நாடி அவற்றை தெய்வமாக வழிபடுகிறார்கள் போலும். இனி, உன் தெய்வங்கள் மனிதனுக்காக என்ன செய்தது என்று யாரும் கேட்கமுடியாத நிலை இதனால் ஏற்பட்டுள்ளது; அவை தன்னைத் தானே பலியாக்கி மனித ஜீவன்களைக் காப்பாற்றப்போகிறது; மேலும் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கூற்றும் இதனால் பொய்யாகப் போகிறது; ஏனெனில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருந்தால் குரங்குகளின் உடல் உறுப்புகளையல்லவா ஆராய்ச்சிக்கு பயன்படுத்தியிருப்பார்கள்? 

மனிதன் நீடித்த நாட்கள் வாழ என்னென்ன ஆராய்ச்சிகளையோ செய்கிறான்; ஆனால் நித்திய நித்தியமாக வாழ அவனுடைய ஜென்ம பாவங்களுக்காக ஒருவன் பிராயசித்தம் செய்யாவிட்டால் அவனுடைய சரீரத்திலுள்ள வியாதிகள் குணமடையா.ஆன்மாவில் நம்பிக்கை பெருகினால் மாத்திரமே வியாதி குணமாகும்;அது மாத்திரமல்ல, இந்த ஜீவனுக்குப் பிறகு வரும் ஜீவனுக்கு உறுதியளிக்கும் ஒரு நண்பரை தன் சொந்த இரட்சகராக ஒருவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

  • “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்;  அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” (நீதிமொழிகள். 28:13)
  • “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” (ரோமர்.6:23)
  • “…இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (1.யோவான்.1:7)
  • “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால்,நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.” (1.யோவான்.1:9,10)
  • “சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.” (1.தீமோத்தேயு.4:8)

தாய்மதம் திரும்பும் இந்துக்கள்..!


// திருநெல்வேலி:

பிற மதங்களில் இருந்து, இந்து மதத்திற்கு திரும்பும் நிகழ்ச்சி, நேற்று நெல்லையில் நடந்தது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நெல்லையில் நேற்று மதமாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதமாறும் நிகழ்ச்சி, திருநெல்வேலி பார்வதி சேஷ மகாலில் நடந்தது. இதில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் மற்றவர்கள் கிறிஸ்தவர்கள். சுத்தி ஹோமம் நடத்தப்பட்டு, அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சாரதா கல்லூரி தாளாளர் சங்கரானந்தா சுவாமிகள் அவர்களுக்கு வீட்டில் பூஜை செய்ய விளக்குகள் வழங்கி, ஆசிர்வதித்தார்.

இது குறித்து வி.எச்.பி.,மாநில கோபாலரத்தினம் கூறுகையில், “”இந்தியா முழுவதும் குடும்ப கட்டுப்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை, இந்து மக்கள் மட்டுமே கேட்டு அதன்படி நடக்கிறார்கள். இதனால், மற்ற மதத்தினரை காட்டிலும் இந்து மக்கள் தொகை விகிதாச்சாரம் குறைந்து வருகிறது.

மதமாற்றத்திற்காக, ஒரு ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாயை பல்வேறு வெளிநாடுகள் இந்தியாவில் விதைக்கின்றன. “இந்தியாவில் அறுவடை’ என்ற பெயரில் முகாம் நடத்தி, மதமாற்றங்களை நடத்துகின்றனர். ஆனால், மற்ற மதங்களுக்கு செல்லும் மக்கள் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. அங்கேயும் ஆலய வழிபாட்டில் பேதம், இடுகாடு போன்றவற்றில் ஜாதிப் பிரச்னை நீடிக்கிறது.

எனவே, தாய் மதமான இந்து மதத்திற்கு பலரும் தாங்களாகவே விண்ணப்பித்து மாறுகிறார்கள். நாங்களும் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்களா… அரசின் நலத் திட்டங்களுக்காக மாறுகிறார்களா… என, ஆலோசித்தே சான்றிதழ் வழங்குகிறோம், என்றார். நிகழ்ச்சியில் தர்மபிரசார் அமைப்பாளர் பெருமாள், சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். //

http://www.dinamalar.com/district_detail.asp?id=172793

மேற்கண்ட தினமலர் பத்திரிகையின் விஷமமான செய்தியை வாசித்ததும் பயங்கரமான சிரிப்பு வந்தது;மீனவர்கள் கடலுக்குச் சென்று வலைவீசி மிகுந்த பிரயாசத்துடன் மீன்பிடிக்கிறார்கள்;அப்படி பிடிக்கப்பட்ட மீன்களிலிருந்து சிலது கரையேறும் முன்பே துள்ளி கடலில் வீழும்;அங்கே அவற்றை விழுங்க திமிங்கலங்கள் காத்திருக்கும்;அதுபோலவே மனித வாழ்க்கை என்பது உள்ளேயும் சரி, வெளியேயும் சரி துன்பங்கள் நிறைந்தது;அநித்தியமானது;இதில் எங்கே இருந்தால் என்ன‌?

ஏன் சிரிப்பு வந்தது என்றால் இந்த நாளிதழ் நல்ல தரமான நிருபர்களை உடையதானாலும் இந்த குறிப்பிட்ட செய்தியின் வாசகங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது;அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்,இதில் பக்கத்தை நிரப்ப எதையாவது எழுதவேண்டுமே..!

இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு காரணமாக இந்துக்களின் தொகை வேகமாக குறைந்து வருகிறதாம்;மேலும் மதமாற்றத்தின் காரணமாகவும் இந்துக்கள் தொகை குறைந்து வருகிறதாம்;மதம் மாறியவர்கள் இந்தியாவில் தானே இருக்கிறார்கள்? அவர்கள் இந்தியாவைவிட்டு ஓடினால் தானே தேசபக்தர்கள் கவலைப்படவேண்டும்? இந்த தேசபக்தர்கள் இந்தியாவை சுரண்டி வெளிநாடுகளில் இலட்சம் கோடிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்களே,அதுவல்லவா இந்தியாவை பெலவீனப்படுத்தும்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதமாற்ற தடைசட்டம் கொண்டு வந்தபோது அதில் முக்கிய குறிப்பாக வைத்தது,பெண்களையும் குழந்தைகளையும் மதம் மாற்றக்கூடாது என்பதே;ஆனால் இங்கே 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதம் மாறினார்களா;இது கேலிக்கூத்தாக இல்லையா? குழந்தைகளையும் மதம் மாற்றும் கொடுமையை எங்கே போய் சொல்லுவது? எப்படியோ இந்தியர்கள் அனைவரும் இந்துக்களாகி விட்டால் இந்தியாவில் சாதிக்கொடுமைகளோ வரதட்சணை கொடுமைகளோ இலஞ்ச லாவண்யமோ வர்க்கக்கொடுமைகளோ இல்லாது முழு இந்தியாவும் சுபிக்ஷமாகிவிடும் என்று நம்புவோமாக‌.

அநியாயத்துக்கு மதம் மாத்தறாங்க‌..!


மத மாற்றத்திற்கு துணை போகும் அரசு பள்ளிகள் : பெற்றோர் எதிர்ப்பு – தினமலர் செய்தி.

பந்தல்குடி : அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ஒன்றிய துவக்க பள்ளிகளில், மாணவர்களிடம், “பைபிள்’ வழங்குவதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தெற்கு, வடக்கு பள்ளிகளில் 550 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த நவ.16ல், தூத்துக்குடியிலிருந்து வந்த கிறிஸ்தவ “மிஷினரி’யினர், மாணவர்களிடம், பைபிள் புத்தகம் வழங்கினர். இதை படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்று பிரசாரம் செய்தனர். புத்தகத்தின் கடைசியில் இருக்கும் உறுதிமொழி படிவத்தில் மாணவர்களை கையெழுத்திட கூறினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் கூறியவை:

சிவலிங்கம்: மூன்று ஆண்டுகளாக, மத புத்தகங்களை கட்டாய படுத்தி கொடுக்கின்றனர். மதம் மாற்ற முற்படுகின்றனர். இது குறித்து கேட்டால், “இனி தரமாட்டோம்’ என்கின்றனர்.

கருப்பசாமி: சில ஆசிரியர் களால் இந்த தவறு நடக்கிறது. தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கேட்டபோது “புத்தகங்களை எடுத்து செல்லுங்கள், பிரச்னை செய்யாதீர்கள்’ எனக்கூறினார்.

ராகவன், (தலைமை ஆசிரியர், தெற்கு பள்ளி): மதம் பற்றிய புத்தகங்களை கொடுத்தது தவறு தான். அனைவருக்கும் கல்வி இயக்க மற்றும் கற்றல் வழி புத்தகங்களை இலவசமாக தர வருவர். அது போல என நினைத்து பார்க்காமல் விட்டு விட்டேன். “பைபிள்’ என தெரிந்ததும் அவற்றை வாங்கி வைத்து விட்டேன். இனிமேல் இதுபோல நடக்காது.

நாகலட்சுமி, (தலைமை ஆசிரியை, வடக்கு பள்ளி): மத சம்பந்தமான புத்தகங்களை கொடுக்க அனுமதிக்க கூடாது என்று எனக்கு தெரியாது. பெற்றோர் கூறிய பிறகு அவற்றை வாங்கி திருப்பி கொடுத்து விட்டோம். பெற்றோரிடமும் மன்னிப்பும் கேட்டோம்.

அருப்புக்கோட்டை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் நாகராஜன்: தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், உயரதிகாரிடம் தெரிவித்த பின் செய்யுங்கள் என்று பலமுறை கூறி வருகிறோம். மத புத்தகம் வழங்கல் பற்றி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதிகாரி விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=138246

அரசாங்க பள்ளியில் பைபிள் கொடுத்து மதம் மாற்றுகிறார்களாம்;அது உண்மையா?

இங்கே புகைப்படத்தில் காணும் காட்சி என்ன, மாணவர்களே போட்டி போட்டுக்கொண்டு அதனை வாங்குகின்றனர்; யாரும் வற்புறுத்தி கொடுப்பது போலத் தெரியவில்லை; மேலும் இது இலவசமாகத் தரப்படுவதால் அதினால் எந்த பாதிப்பும் இருப்பது போலவும் தெரியவில்லை.

ஆனாலும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உள்நோக்கத்துடன் இதுபோன்ற செய்திகளை தினமலர் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது;தெரிந்தோ தெரியாமலோ இதுபோன்ற எதிர்ப்புகளாலேயே கிறித்தவ மார்க்கம் வளருகிறது.

ஏனெனில் ஒன்றுமறியா சிறுபிராயத்தில் மாணவர்களுடைய சிந்தனையை மழுங்கச் செய்யும் ஒன்றுக்கும் உதவாத‌ தத்துவங்களையும் சடங்குகளையும் இந்து மார்க்கம் திணிக்கிறது;ஆனால் கிறித்தவமோ ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குகிறது.

இதனால் கவரப்படும் மாண‌வர்கள் சிறுவயதில் எளிதில் கிறித்தவத்தின்பால் அதாவது இயேசு எனும் வழிகாட்டியின் மீதான நம்பிக்கை கொள்கிறார்கள்;அதனை பெரியவர்கள் தடுக்கும் போது ஏன் தடுக்கிறார்கள் என்ற கேள்வியே ஒரு மாணவன் மனதில் பெரிய பாதிப்பை உண்டாக்கி மற்றொரு வாய்ப்பில் முழுமையான கிறித்தவனாக மாறுகிறான்.

ஆனால் இந்து மார்க்கத்தின் பெரியவர்களோ தன் பிள்ளை சினிமா பார்த்தாலோ அல்லது வேறு எந்த தவறான பழக்கவழக்கங்களையோ பழகினால் அதனைப் பெரிதுபடுத்தாத நிலையில் மெய்ஞான மார்க்கமாகிய இயேசுவின் மார்க்கத்தைக் குறித்து பெரியதாக எச்சரிக்கை செய்து மாணவர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டுகிறார்களே தவிர அதனைத் தடுக்க இயலாது என்பதே மனோதத்துவ ரீதியிலான உண்மையாகும்.

ரோட்டில் கைப்பிரதி கொடுக்கக்  கூடாது,மருத்துவமனையில் சென்று முன்பின் அறியாத ஏழை எளிய மக்களை சந்தித்து ஆறுதல் கூறி பிரார்த்தனை செய்யக்கூடாது, மாணவர்களுக்கு நல்வழிக்கான ஆலோசனைகளைக் கூறி அவர்கள் வெற்றிபெற உதவும் இயேசுவின் வரலாறு அடங்கிய புதிய ஏற்பாடு புத்தகத்தைக் கொடுக்கவும் கூடாது.

அப்படியானால் எப்படி மத நல்லிணக்கம் வளருமாம்?

ஆனால் இவர்கள் அனைத்து அரசாங்க அலுவலகத்திலும் பொது இடங்களிலும் ஆக்கிரமித்து கோவில் கட்டி உண்டியல் வைத்து ஒன்றுமறியாத மக்களை ஏமாற்றி வசூல் செய்யலாம்;ஒரு சாதாரண தெருவோர கோவிலைச் சுற்றியுள்ள எத்தனை கடைகள், எவ்வளவு பணப்புழக்கம் ? இதையெல்லாம் யார் கேட்பது  ? இது தான் மதசார்பற்ற இந்தியாவில் ஜனநாயகம் என்பதா ? இது தான் பத்திரிகை சுதந்தரத்தைக் குறித்து பெரிதாகப் பேசும் தினமலர் போன்ற பத்திரிகையாளர்களின் கருத்து உரிமை தத்துவமா ?

கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை..!


இன்று (2pm) எனது நண்பர் பாலன் பால்ராஜ் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது வெளிப்பட்ட சிந்தனை…

‘ கடவுள் இல்லை ‘ என்று சொல்கிறவர்களை நாத்திகர் என்கிறோம்; நாத்திகர் கடவுள் இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளலாமா,அது ஏற்புடையதா என்று யோசிப்பதற்கு முன்னர் ” கடவுள் இல்லை ” எனும் கொள்கையிலுள்ள இல்லை என்ற சொல்லுக்குரிய கொள்கையை ஆராயவேண்டுமல்லவா?

இல்லை என்பதைக் குறித்த விளக்கம் ஆங்கிலத்தில் Absence of Something என்றும் Something that does not exist என்றும் கூறப்பட்டுள்ளது; இதன்படி இருக்கும் ஏதோ ஒன்று இல்லாமலிருப்பதே இல்லை (What is Something ? and what is Nothing ?) என்பதன் கொள்கையாம்;

உதாரணத்துக்கு, என் கையில் பணமில்லை என்றோ என் பாக்கெட்டில் அல்லது என் சட்டை பையில் பணமில்லை என்றோ சொல்வோமானால் பணம், இல்லை எனும் இரு சொற்களில் பணம் என்பதைக் குறித்து அறிந்திருந்தாலே அது இல்லை என்று சொல்லமுடியும்;

பணத்தின் அருமை யாருக்கு தெரியும்,அதனைப் பயன்படுத்தியவருக்கே அல்லவா? மனநிலை சரியில்லாதோருக்கும் குழந்தைகளுக்கும் பணத்தைக் குறித்து ஒன்றும் தெரியாது;

பணம் என்பது என்ன, அதை யார் உண்டாக்கினார், அதன் நோக்கம் என்ன, அதன் அவசியம் என்ன‌ போன்ற அம்சங்களே பணம் என்ற சொல்லின் ஆதாரமாக இருக்கிறது; அதனை உணர்ந்த பின்னரே அது இல்லாததைக் குறித்து அறிந்தோ அல்லது வருந்தியோ அது இல்லை என்று கூறமுடியும்;

இதுபோலவே கடவுள் இல்லை என்று கூறுவதற்கு முன்னர் அவர் யார் என்ற கொள்கையைக் கூறிய பிறகே அவர் இல்லை என்று கூறமுடியும்; கடவுளைக் குறித்து எதுவும் தெரியாமலே கடவுள் இல்லை என்பது ஒரு பொருளைக் குறித்து இல்லை என்று சொல்லக்கூடிய ஆதாரக் கொள்கைக்கு முரணானது ஆகும்; இல்லாத ஒன்றை இல்லை என்று கூறவேண்டிய அவசியமென்ன‌?

No God, No Peace; Know God, Know Peace..!

இப்போதைக்கு எனக்கு ” ஞானம் இல்லை “என்று வைத்துக்கொள்வோமா..?

நேத்து ராத்திரி யம்மா..!


நேற்றிரவு (09:10:2010) தூக்கம் பறிபோனது, துக்கம் வரவானது; காரணம் எங்கள் ஊரிலுள்ள பெருமாளுக்கு ஏதோ விசேஷமாம்; கடந்த மூன்று நாளாக அரற்றிக் கொண்டிருந்தார்கள்; நமக்கு அதில் ஆர்வமில்லாவிட்டாலும் கட்டாயப்படுத்துவது போல அதிகாலையிலிருந்து இரவு பத்து மணிக்கும் மேலாக ஊரை ஒலியினால் மாசுபடுத்தினர்;

எல்லாம் போக நேற்று ஒரு ஊர் பயணம் முடித்து திரும்பி சோர்வுடன் படுக்கைக்குச் செல்லவே இரவு 11:30 ஆனது; ஒலிபெருக்கி சத்தத்திலிருந்து தப்பிக்க கதவையும் சன்னல்களையும் அடைத்துவிட்டு காற்றுக்கு வழியில்லாமல் துன்பத்துடன் தூங்க முயற்சித்தபோது சில மணித் துளிகளில் “டமடம” வென அடித்துக் கொண்டும் பஜன் பாடிக் கொண்டும் சாமி ஊர்வலம் வந்தது;

போதாக்குறைக்கு பட்டாசு வெடி… அந்த மிகப் பெரிய சைஸ் பேண்டு (Big Band)கள் மூன்றும் பள்ளிகளில் ‘மார்ச் ஃபாஸ்டு’ க்கு அடிப்பது, அத்துடன் சாவுக்கு அடிக்கும் மேள வாத்தியமும் சேர நெஞ்சை படபடக்கச் செய்யும் இரைச்சலுடனும் பிணத்துக்கு முன்பாக ஆடும் அருவருப்பான கூத்து நடனத்துடனும் சாமி ஊர்வலம் வந்தது;

கூத்து நடனம் ஆடிய இளைஞர்களும் மற்றவரும் நல்ல போதையில் இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது; இந்த ஊர்வலம் வருவதற்காகவே சில தினங்கட்கு முன்பு எங்கள் வீட்டு வாசலிலிருந்த நல்ல நிழல்தரும் மரத்தை வெட்டி வீழ்த்தியிருந்தனர்; இது அவர்கள் தேசமல்லவா, யாரையும் எதுவும் கேட்க முடியாது;நாங்களோ வாடகைக்கு குடித்தனம் இருப்பவர்கள்; ஏதாவது நியாயம் கேட்டாலும் வீட்டை காலி செய்யவைப்பர்; வேறு வீடும் தரமாட்டார்கள்;

ஒரு மாட்டு வண்டியில் சாமியை அலங்கரித்து வைத்து அதற்கு மின்வசதி தரும் மின்கலத்தையும் வண்டியுடன் இணைத்து மாட்டுக்கு பதிலாக மனிதர்கள் இழுத்துவந்தனர்; வண்டியிலோ ஒரு பூஜாரி ராஜா போல அமர்ந்துகொண்டு கொஞ்சமும் உணர்ச்சியற்ற நிலையில் இயந்திர கதியில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்;

பக்தர்கள் கொடுத்த பூஜை தட்டை சில நொடிகள் அந்த விக்கிரஹத்திடம் ஒரு காட்டு காட்டிவிட்டு பக்தர்களிடம் கொடுக்க, அவர்களும் இயந்திரத்தைப் போல பெற்றுக் கொண்டு திரும்பினர்;

ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக இருக்கக்கூடிய மின்சாரம் மற்றும் கேபிள் தொலைபேசி சர்வீஸ் கம்பிகளில் உரசி, உயர்ந்ததும் மட்டமானதுமான அந்த காகித அட்டை அலங்காரம் கவிழ்ந்து சாமி தடுமாறி விழுந்துவிடுமோ ‘ வென இளைஞர்கள் அதற்கென ஒரு கம்பை தயாரித்து அதன்மூலம் சர்வீஸ் கம்பிகளை உயர்த்திபிடித்து சாமியின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தனர்;

சாமியின் அழகோ கண்கொள்ளா காட்சி…
‘ஒருவனுக்கு ஒருத்தி ‘ என குடும்பஸ்தர்கள் வாழும் தெருக்களில் நுழைந்த சாமியோ சைடுக்கு ஒன்றாக ரெண்டு குட்டிகளுடன் வந்தார்; போனவாரம் வந்து போன மிஸ்டர் கணபதி சிங்கிளாகத் தான் வந்தார்;

சாமி குட்டிகளை மட்டும் கட்டிக்கொள்ள நம்ம பக்தர்கள் அவருடைய பெண்சாதிகளுடன் அவரையும் சேர்த்து கட்டியிருந்தனர்; விழுந்துருவாரோ என்ற நல்ல எண்ணமோ அல்லது தனது ஜோடிகளுடன் ஓடிவிடுவாரோ என்ற கெட்ட எண்ணமோ தெரியவில்லை;

என்னைப் பொருத்தவரை அவர் மிஸ்டர் கிருஷ்ணனாக இருக்கவேண்டும்; ஆனால் அவரைக் குறித்து பெருமாள் என புகழ்ந்தனர்; ‘ லாஜிக் ‘ புரியவில்லை;

பெருமாளைப் பொறுத்தவரையில் அலமேலு அம்மாவுடன் இருப்பார்; அதுவும் ஏதோ கொடுக்கல் வாங்கல் தகராறில் கோவித்துக் கொண்டு திருப்பதி மேலேறி தவமிருப்பதாகவும் அவருடைய கடன் தீர்ந்தபிறகே வந்து குடித்தனம் பண்ணுவார் என்றும் ஐதீகமாம்; நம்முடைய ஏழை எளிய மக்களும் தங்கள் முடி உட்பட அனைத்தையும் ஆண்டாண்டு காலமாக தானமாக வழங்கியும் இன்னும் அவருக்கு திருப்தியாகவில்லை;

எல்லா சாமியும் ஆசீர்வதிக்கும் பாவனையில் போதும் என்பது போல வலக்கரத்தைக் காட்ட இவரோ இன்னும் வேண்டும் என்பது போல வலக்கரத்தையும் இடக்கரத்தை அள்ளி முடித்துக் கொண்டது போலவும் வைத்திருப்பார்;

அப்படியானால் எங்கள் தெருவுக்கு வந்தது பெருமாள் அல்ல; இத்தனை கலாட்டாக்கள் நடந்தும் சாமியோ சாமியாரோ மக்களுடைய பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் சொல்லவில்லை; அவர் அருள் தருவதாகச் சொல்லுவதும் பக்தர்கள் வேண்டியது நடக்கும் என்று காத்திருப்பதும் சுயநலம் சார்ந்த பக்தியாகவே தோன்றுகிறது; ஏனெனில் ஒரு தெருவுக்கு சாமி வந்து போவதாலோ சாமியைத் தேடி பக்தன் சென்று வருவதாலோ ஒரு தனிப்பட்ட மனிதனுடைய வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்பட்டது போலத் தெரியவில்லை;

கோயிலில் விழாக்கோலம் ஒருபுறம், பக்தன் அருகிலிருக்கும் டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு மல்லாந்து கிடக்கும் அலங்கோலம் மறுபுறம்; அவன் பெண்டு பிள்ளைகள் அங்கே சாமியை விழுந்து வணங்கிக்கொண்டிருக்க இங்கே இவன் சாக்கடையில் விழுந்து எதையோ தேடிக்கொண்டிருக்கிறான்;

அந்த காலத்தில் கோயிலில் பரத்தையர் நடனமாடுவர்; இதனை பரதநாட்டியம் என்றும் கூறுவர்; இந்த நடனத்தால் வசீகரிக்கப்ப‌டும் ரிஷிகளும் மன்னர் பெருமக்களும் அன்றிரவு அவர்களோடு தங்களைப் பகிர்ந்துகொள்வர்;

இன்றோ ஒரு பாவமுமறியாத சிறுமிகளையும் வயதுக்கு வந்த இளங்குமரிகளையும் அதே கோவில் வாசலில் ஆடவிட்டு அவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்;

வீட்டுக்கு ஒன்றாக ஆணாகவோ பெண்ணாகவோ பெற்று நம்முடைய எதிர்காலத்தில் நமக்குத் துணையாக பிள்ளைகளை வளர்த்து இதுபோன்ற காமாந்தகர்களுக்கு அவர்களை பலியாக்கும் ஆபத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது;

ஏனெனில் அங்கே இருக்கும் சாமிகளின் கதைகளும் புராணங்களும் வீரபராக்கிரமங்களும் அத்தனை பயங்கரமானது; இந்த காலத்தில் அவர்கள் இறங்கி வந்து நம்முடைய பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு போகாவிட்டாலும் அவர்களுடைய ஆவியை இளைஞர்கள் மனதில் புகுத்தி அவர்கள் மூலம் பெண் பிள்ளைகளைக் கெடுத்துவிடுகிறார்கள்; இன்னும் அடுத்தவன் மனைவியையும்கூட இந்த சாமிகள் விட்டு வைப்பதில்லையே;ஆனானப்பட்ட விஷ்ணு பகவான் உட்பட தனது பக்தர்களை ருசிபார்ப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்;

இதையெல்லாம் யோசித்து யோசித்து நேற்றிரவு தூக்கம் பறிபோனது; சாமி அங்கே வேஷத்தைக் கலைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்க பக்தர்களோ வழக்கம்போல தங்கள் அன்றாட பாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்; பொழுதுபோக்குக்கு எந்திரன் முதலான திரைப்படங்களும் தொலைக்காட்சி சீரியல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சமத்துவ சமதர்ம சமுதாய மறுமலர்ச்சிக்கான அற்புதமான தளமாக டாஸ்மாக் கடைகளும் இருக்கவே இருக்கிறது.

வாழும் பாரதம்… வளரும் தமிழகம்…!?

“கிறித்தவ விழிப்புணர்வு இயக்கம்”


அண்மையில் எனது ஆதங்கத்தை “மாயாவி ஜட்சன் ஆபிரகாம் கையில் விஷ்ணு சக்கரம்” என்ற கட்டுரையாக்கும் போது தீவிரமான ஒரு சிந்தனையிலிருந்தேன்; ஆம், சரியான மாற்றுவழியைச் சொல்லாமல் வெறுமனே கிறித்தவ ஊழியர்களை விமர்சித்து பேசிக்கொண்டிருந்து கெட்டபெயரை எடுப்பதைவிட தீவிரமாக எதையாவது செய்யவேண்டுமென;  “கிறித்தவ விழிப்புணர்வு இயக்கம்” போன்ற பெயரில் ஒரு சுயாதீன இயக்கத்தைத் துவங்கவேண்டும்; அது
தமிழகம் முழுவதும்
ஆங்காங்கு துவக்கப்பட்டு ஒரு இயக்கமாகப் பதிவுசெய்யப்பட வேண்டும்;  இதன் உறுப்பினர்கள் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ செயல்படலாம்;  இவர்களின் பணியானது அஹிம்ஸா வழியில்- ஜனநாயக முறையில் அமைந்திருக்கவேண்டும்.

அதாவது சத்தியத்துக்கு விரோதமான செயல்களை வரையறுத்துக் கொண்டு முதலாவது அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை எச்சரிக்க வேண்டும்.

அடுத்து அவர்களை அழைத்து கூட்டம் போடும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு சில ஆலோசனைகளைக் கூறி அவர்கள் கவனமாக இருக்கவேண்டிய காரியங்களை உணர்த்தவேண்டும்.

இந்த மோசடி ஊழியர்கள் தங்கள் வழியை மாற்றிக் கொள்ளாமலும் நம்முடைய எச்சரிப்பைக் குறித்து மேடையில் பகிரங்கமாக அறிவித்து விளக்கம் கொடுக்காத பட்சத்தில் இவர்கள் நடத்தும் கூட்டத்தில் இவர்களுடைய நடவடிக்கைகள் கிறித்தவ நடைமுறைகளுக்கு விரோதமானது என்பதை துண்டுபிரதிகள் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.

இன்னும் தேவைப்பட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்; மோசடி நிதிநிறுவனங்களையும் போலி மருத்துவர்களையும் கூட புகாரின் அடிப்படையிலேயே போலீஸார் விசாரிக்கின்றனர்; எனவே பாதிக்கப்படாதிருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிக்கச் சொல்லி காவல்துறையில் புகார் செய்யலாம்.

இதில் ஒத்த கருத்துடைய சகோதரர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ‘எது சத்தியம், எது சத்தியத்துக்கு விரோதமானது’ என்ற வரையறைகளையும் நடவடிக்கை எடுக்கவேண்டிய வழிமுறைகளையும் இறுதி செய்யலாம்;

இதற்கு தலைவர் என்று யாரும் தேவையில்லை; ஜாமக்காரன் ஆசிரியர் போன்ற யாரையாவது கௌரவ ஆலோசகராக வைத்துக் கொள்ளலாம்.

இது அவசியமா என்று கேட்டால்…

இந்த தேசத்தில் பத்திரிகை சுதந்தரம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா?

மனித உரிமை குறித்த விழிப்புணர்ச்சி இருக்கிறதல்லவா?

தகவல் அறியும் உரிமை சட்டம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா?

அவ்வளவு ஏன் இயேசுவானவரையே எந்த அதிகாரத்தில் இவற்றை செய்கிறீர் என்று கேள்வி கேட்டனரே?

அந்நியன் வந்து நம்மை கேள்வி கேட்டு அவமானப்படுத்துவதற்குள் நம்மை நாமே சரி செய்துகொண்டால் என்ன‌?

மாயாவி ஜட்சன் ஆபிரகாம் கையில் விஷ்ணு சக்கரம்..!


இன்று (02.10.2010)காலையில் சுமார் 7மணிக்கு தமிழன் டிவி-யில் ஜட்சன் ஆபிரகாம் அவர்களின் சுவிசேஷ நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்தேன்;

நிகழ்ச்சிக்கு முன்பதாக அவர்களுடைய வீரதீர பராக்கிரமங்களின் தொகுப்பாக வரும் க்ளிப்பிங்ஸ்…அதிலொரு குறிப்பிட்ட காட்சியில் ஒரு பயங்கரமான துணிகரம் அரங்கேறியது;

மாயாவி ஜட்சன் ஆபிரகாம் தனது வலது கரத்தை உயர்த்துகிறார்;அப்போது அவரது உள்ளங்கையிலிருந்து ஒரு நட்சத்திரம் போன்ற ஒளி தோன்றி வளர்ந்து விஷ்ணு சக்கரம் போல சுழல எதிர்புறம் நிற்கும் அப்பாவி பொதுஜனம் ‘பொத்’தென சரிந்து விழுகிறது;

இதுபோன்ற மோசடிகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதாலும் என்னைப் போன்ற ஒருசிலர் எங்கோ ஒரு மூலையிலிருந்து புலம்பிவிட்டுச் செல்வதாலும் இதுபோன்ற மோசடியாளர்கள் தினவெடுத்து சுவிசேஷ மேடைகளை மாயதந்திர காட்சி மேடையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்;

இவர்கள் வேத சத்தியத்தை மறைத்து அதற்கு விரோதமாக செயல்படுவது இந்துமார்க்கப் பின்னணியிலிருந்து வரும் சாதாரண மக்களுக்கு இது பெரிய குற்றமாக இராது;ஆனால் வேதத்துக்குப் புறம்பான இதுபோன்ற செயல்கள் கண்டிக்கப்படாவிட்டால் அதாவது பணத்துக்காக இவர்களை அழைத்து கூட்டம் போடும் ஒருங்கிணைப்பாளர்கள் அதனைக் குறித்து எச்சரிக்காவிட்டால் தேவ பயங்கரம் இறங்கும்;

அவர் தமது நாமத்தை வீணிலே வழங்கும் ஒருவரையும் சும்மா விடவே மாட்டார்;வியாதியிலோ விபத்திலேயோ கொலைசெய்யப்பட்டோ இந்த துரோகிகள் வீழ்த்தப்படுவர்;அல்லது இந்து விரோதிகளால் முச்சந்தியில் வைத்து அவமானப்படுத்தப்படுவர்;அல்லது வருமான வரி விவகாரங்களில் சிக்கி அசிங்க்ப்படுவர்;அல்லது இவர்களோ இவர்கள் பிள்ளைகளோ
விபச்சார குற்றங்களில் சிக்கி தண்டிக்கப்படுவர்;இவை அன்றாட செய்தியாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

சில நண்பர்கள் கூறுவது போல இவர்களுக்கு எழுதி விளக்கம் கேட்பதோ விளக்கத்துக்காகக் காத்திருப்பதோ வேண்டாத வேலை; இது மோசடி என்பது என்னைப் போன்ற நுனிப்புல் மேயும் முட்டாளுக்கே தெளிவாகத் தெரிகிறதே;

இவர்கள் மனம் புண்படாதிருக்கவே மென்மையாகவும் அப்பாவியைப் போலவும் சந்தேகம் கேட்பது போன்ற பாவனையில் எழுதுகிறேன்; இதனால் எந்த ஒரு புது விசுவாசியும் நிச்சயமாக இடறலடையும் வாய்ப்பே இல்லை;சரியானதைக் குறித்து யோசிக்கும் வாசலையே நான் திறக்கிறேன்;

இதற்கு நீங்கள் ஆதாரம் கேட்பது அநியாயம்,ஏனெனில் இலட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறார்கள்; வெறும் ரெண்டு பேர் தான் பார்த்ததாக சாட்சி சொன்னாலே போதுமானது;

இப்படிப்பட்ட‌ மோசடியும் சத்தியத்துக்கு விரோதமானதுமான  துணிகரமான செயல்களை உண்மையான கிறித்தவர்கள் கண்டித்தாலே இவர்கள் நல்வழி திரும்ப வாய்ப்புண்டு; இன்னும் சொல்லுகிறேன்,இவர்களுடைய இரத்தப்பழியை ஆண்டவர் நம்மிடம் கேட்டால் என்ன செய்வோம்?

என்னைப் போன்ற சாதாரணமானவனுக்கு இந்த உணர்வை ஆண்டவர் கொடுக்க என்ன காரணம்,சிந்திப்போமா?

ஆண்டவர் இவர்களிடம் கிருபையாகக் கொடுத்துள்ள மந்தையினை சூழ்ச்சியினாலோ இழிவான ஆதாயத்துக்காகவோ மேய்க்காத வண்ணம் சபையார் அனைவரும் இணைந்து ஜெபிக்கவும் போராடவும் உணர்த்தவும் வேண்டும்;

சகோதரி ப்ரீத்தா அவர்கள் ஒரு நல்ல சுவிசேஷ பிரசங்கியாளர்; தற்போது அவரையும் இந்த படுபாவி கெடுத்துப் போட்டார்; அபிஷேகம் ஒருவரையும் புழுபோல விழுந்து நெளியச் செய்யாது, சகோதரி.

நீங்கள் சிங்கப்பூரில் பென்னிஹின் கூட்டத்தில் பார்த்த காட்சியைக் குறித்த பெருமை மிகுந்த தொலைக்காட்சி பேச்சில் நீங்களும் உங்கள் கணவரும் மாத்திரமே விழவில்லை என்றீர்கள்; பாஸ்டர்களெல்லாம் விழுந்து நெளிந்தது பரிசுத்தாவி இறங்கியதாலே என்றால் நீங்கள் விழாத காரணமென்ன, நீங்கள் பரிசுத்தாவியானவருக்கு இணையானவர்கள் (Super Power) என்பதாலா அல்லது பிசாசுகள் (devil) என்பதாலா?ஒரே குழப்பமாக இருக்கிறது.

கொஞ்சம் சரியாகவும் அதிகம் தவறாகவும் கலந்தடிக்கிறீர்கள்;  அவற்றை வகை பிரித்து உங்கள் சூழ்ச்சிகளை இனம் காணுமளவுக்கு எமது ஜனம் விவரமானதல்ல; தயவுசெய்து இயேசுவின் பெயரால் இவற்றையெல்லாம் செய்து அவருடைய தியாகத்தை அவமாக்க வேண்டாம்; சொல்லப்பட வேண்டிய தீர்க்கமான செய்தி சிலுவையைப் பற்றியதே என்பதை அறிவீர்களாக.

குற்றச்சாட்டு சுருக்கமாக
:

1. ஆவியில் விழுதல்

ஜெபிக்க வருவோரை கீழே தள்ளுவதும் அதைக் குறித்த தெளிவான போதனையை போதிக்காததும்; நெடுநாளாக பலர் கண்டித்தும் எருமை மாட்டு மேல் மழை பெய்தது போல என்னைக் கேட்க யாருண்டு என்று அந்த தவறைத் தொடருவது.

2. உள்ளங்கையில் விஷ்ணு சக்கரம்

இதில் இன்னும் ஒரு படிமேலேசென்று கணிணியின் தந்திரக்காட்சியின் (Comp.Graphics) உதவியுடன் உள்ளங்கையிலிருந்து விஷ்ணு சக்கரம் சுழன்று வருவதைப் போல சித்தரித்து பார்வையாளர்களை பிரமிக்கச் செய்வது; கொஞ்ச காலத்தில் உங்கள் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் போட்டுக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை; ஆனால் இதுபோன்ற துணிகரங்களை அன்பு சகோதரர் டிஜிஎஸ் அவர்கள் கூட முயற்சிக்கவில்லை.

இரண்டில் ஒன்று…தீர்மானம் நன்று..!


நேற்று ஒரு நண்பர் தன்னுடன் ஒரு சகோதரரை அழைத்துக் கொண்டுவந்து அவருக்கு ஆலோசனை சொல்லி பிரார்த்திக்க வேண்டினார்; அவருடன் பேசியபோது எனது சிந்தையில் உதித்த சில கருத்துக்கள்:

ஊழியத்துக்கு ஒப்புக்கொடுத்து -ஆனாலும் வேர்கொள்ளமுடியாமல் – நிரந்தர வேலையுமில்லாமல் – 2007- ம் வருடம் திருமணமாகி – ஆறுமாத ஆண் குழந்தையுடன் மனைவியை விட்டுப் பிரிந்த நிலையில்  -சில வாரங்கட்கு முன்பு சாலை விபத்தில் கையொடிந்து  -தங்க இடமில்லாமல் பரிதாப நிலையிலிருந்தவரிடம் நான் இப்படியாகப் பேசிக் கொண்டிருக்கிறேன்;

அவர்கள் இருவருக்கும் வந்ததும் உபசரிப்பாக ஆளுக்கொரு க்ளாஸ் தண்ணீர் கொடுத்தோம்;அதை ஒருவர் முழுவதும் குடித்துவிட மற்றவர் பாதியளவு மீதம் வைத்திருந்தார்; அதையே உதாரணமாக்கி நான் கேட்டேன்,இந்த இரண்டு க்ளாஸ்களில் எது சிறந்தது?

காலியாக இருக்கும் க்ளாஸா அல்லது ஏதோ கொஞ்சம் இருக்கும் க்ளாஸா?
எப்படியோ மிகச் சரியாகவே சொன்னார்,காலியாக இருக்கும் க்ளாஸ் தான் என்று;எப்படி என்று நான் விளக்கினேன்;

பாதியளவு தண்ணீர் இருக்கும் க்ளாஸில் இன்னும் கொஞ்சம் நிரப்பி பயன்படுத்தவும் முடியாது,இருக்கும் கொஞ்சம் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாமென்றாலும் முடியாது;ஏனெனில் அது இன்னொருவர் குடித்துவிட்டு வைத்ததும் மாசடைந்ததுமான தண்ணீராக இருக்கும்;எனவே என்ன செய்வோம்,அதை கொட்டிக் கவிழ்த்து  கழுவி விட்டு புதியதான தண்ணீரை நிரப்பி பரிமாறுவோம்;இப்படியே இதுவரை வாழ்ந்த உங்கள் வாழ்க்கை பயனற்றதாகவும் இனி செய்வோம் என்ற திகைப்புடனுமிருக்கும்;

ஆனால் ஒன்று செய்யலாம்,புதிய வாய்ப்புக்காக ஆவலுடன் ஆண்டவரை நம்பி காத்திருங்கள்;ஆண்டவர் புதியதொரு வாசலைத் திறப்பார்;அதுவரை உங்களுக்காக நீங்கள் உங்கள் பழைய அனுபவத்திலிருந்து திட்டமிடுவதை நிறுத்துங்கள்; நீங்கள் முழுவதும் குணமாகி சகஜநிலை திரும்பும் இந்த இடைபட்ட ஓய்வு காலத்தில்உங்களைப் பற்றிய நன்மதிப்புகளை வளர்ந்துக்கொள்ளுங்கள்; நல்ல நண்பர்களுடன் ஐக்கியம் கொள்ளுங்கள்; நல்ல ஆவிக்குரிய புத்தகங்களைப் படியுங்கள்;உங்கள் மீது நம்பிக்கை வளரும்படியான காரியங்களை யோசித்து அதை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் காரெக்டரை டெவலப் செய்யுங்கள்; உங்களுக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து நீங்கள் மீண்டு உயிருடனிருப்பதே ஆண்டவர் உங்களை நேசிக்கிறார் என்பதற்கு அடையாளமாகும்;

மனிதர் சற்று நம்பிக்கையுடனும் தெளிவுடனும் விடைபெற்றார்;என்ன என்னுடைய வழக்கமான போட்டோ எடுக்க மறந்துவிட்டேன்;விரைவில் அவரது போட்டோவை இங்கே பதிக்கிறேன்.

ஆகஸ்டு 10 கறுப்புதினம்..!


ஆகஸ்ட் 10 ஆகிய இதே நாளில் சரியாக அறுபது வருடத்துக்கு முன்பு அதாவது 1950 -ல் தலித் கிறித்தவர்களுக்கு மட்டும் உள்நோக்கத்தோடு தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் மறுக்கப்பட்டது;

அதற்கு இன்று வரையிலும் எந்த நியாயமான காரணத்தையும் யாரும் சொல்லி விடவில்லை; ஆனாலும் சமுதாய விடுதலைக்காக மதம் மாறும் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டேயிருக்கிறது;

இதனைப் பொறுக்காத அடிப்படைவாதிகள் அவர்களை இன்னும் தரம் தாழ்த்தும் வண்ணமாக பணத்துக்கு மதம் மாறுவதாக வசைபாடுகிறார்கள்;

உண்மையிலேயே இந்தியா மதசார்பற்ற நாடாக இருந்தால் தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகளை மதசார்பில்லாமல் வழங்க என்ன தடை?

புத்த மதமும் சீக்கிய மதமும் விதிவிலக்காக சலுகை பெறும்போது கிறித்தவருக்கு மட்டும் அது ஏன் பொருந்தாது?

இந்நிலையில் இந்திய கிறித்தவர்களை சிரம் தாழ்ந்தும் பதம் பணிந்தும் வேண்டுவது யாதெனில் தாங்கள் சிறிது தியாகம் செய்து தங்கள் மார்க்க விடுதலையைப் பறைசாற்றுங்கள்;

அது எப்படி..?
அண்மையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்ததல்லவா, அதில் தங்கள் சாதியை எவ்வாறு குறிப்பிட்டீர்களோ அவ்வாறே தங்கள் மதத்தையும் குறிப்பிட்டு – தெளிவாக – நேரடியாக ‘நான் கிறித்தவ ஆதிதிராவிடன்’ என்று பதிக்கவேண்டும்;

இதனால் என்ன பலன் என்று கேட்கலாம், அதன் பிறகே நம்முடைய உண்மையான பெலத்தை அரசாங்கம் உணர்ந்து கொள்ளும்; நாமும் நம்முடைய சலுகைகளை உரக்கச் சொல்லிக் கேட்கலாம்;

அம்பேத்கர் சொன்னாராம், என்னை விட என் நாடு முக்கியம்,என் நாட்டை விட என் இலட்சியம் முக்கியம்,என் இலட்சியத்தைவிட எனது சமுதாயத்தின் விடுதலை முக்கியம்’ என்று!

ஆம், குறுகிய மத உணர்வுகளில் நாம் சிக்கிவிடாமல் இதுபோன்ற சமுதாயப் பிரச்சினைகளிலிருந்து அந்நியப் படாமல் ஏக சிந்தையுடன் இணைந்து போராடுவோம்;

வெற்றி நமதே..!

http://in.christiantoday.com/articles/dalit-christians-declare-black-day-on-aug-10/5548.htm

பெண்ணின் மூக்கை துண்டித்த தலிபான்கள்: ஆப்கனில் கொடூரம்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=56320

வாஷிங்டன் : கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தான். காந்தாரக் கலைகளுக்கும், உலர் பழ விளைச்சலுக்கும் ஒருகாலத்தில் புகழ் பெற்ற தேசம் இது. இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. குண்டு வெடிப்பும், துப்பாக்கிச் சத்தமும் ஆப்கன் மக்களின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. திரும்பிய இடமெல்லாம், குண்டு வெடிப்பால் சிதைந்த கட்டடங்கள், இறுக்கமான முகங்களுடன் துப்பாக்கிகளுடன் நடமாடும் ராணுவ வீரர்கள். பீதி அகலாத கண்களுடனும், விரக்தி அடைந்த மனதுடனும் நடமாடும் மக்கள். இதுதான் இன்றைய ஆப்கானிஸ்தானின் அடையாளங்கள். அழகு மிகுந்த அந்த தேசம், தற்போது உருக்குலைந்து போய் கிடக்கிறது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தலிபான் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது, ஆப்கானிஸ்தான். அப்போது அவர்கள் வைத்தது தான், அங்கு சட்டம். பெண்கள் பள்ளிக்கு போகக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் அங்கு அரங்கேறின. கடந்த 2001ல் அமெரிக்காவின் நியூயார்க் இரட்டை கோபுரத்தின் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவம், ஆப்கனில் குவிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பின், தலிபான்களின் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது. இருந்தாலும், தலிபான்களின் ஆதிக்கம் இன்னும் அங்கு கொடிகட்டி பறக்கிறது. தலிபான்களின் கொடூரத்துக்கு ஆளான ஆப்கன் இளம்பெண் ஒருவரை பற்றிய விஷயம் தான், தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அமெரிக்காவின் “டைம்’ பத்திரிகையைச் சேர்ந்த குழு, ஆப்கனுக்கு சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேட்டி எடுத்து, அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

அது குறித்த விவரம்:

பீபி ஆயிஷா: அந்த இளம்பெண்ணின் பெயர் பீபி ஆயிஷா. தற்போது அவருக்கு 18 வயதாகிறது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதாகும்போதே, தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து, ஆயிஷாவை பணத்துக்காக விற்பனை செய்து விட்டார், அவரது தந்தை. அதற்கு பின், இரண்டு ஆண்டுகளுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைகளை சந்தித்தார், ஆயிஷா. கணவரின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்டோர் ஆயிஷாவை தினமும் கொடுமைப் படுத்தி வந்தனர்.


வீட்டை விட்டு வெளியேறினார்: ஒரு கட்டத்தில், இங்கிருந்து எப்படியாவது வெளியேறி விடவேண்டும் என்று முடிவெடுத்தார். அங்கிருந்து தப்பிச் சென்றார். ஆனால், இந்த நிம்மதி அவருக்கு நீண்ட நாள் நீடிக்கவில்லை. கடந்தாண்டு அவரது கணவர், ஆயிஷாவை கண்டு பிடித்து விட்டார். ஒருஜ்கான் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த தலிபான் கோர்ட் முன், ஆயிஷா நிறுத்தப்பட்டார். வீட்டை விட்டு ஓடிப்போன குற்றத்துக்காக ஆயிஷாவின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தலிபான் கோர்ட், கடுமையான தண்டனை விதித்தது.


மூக்கு வெட்டப்பட்டது: உயரமான மலைப் பகுதிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆயிஷாவின் கணவரின் சகோதரரும், மற்றவர்களும் அவரை கீழே படுக்க வைத்து, அசையவிடாமல் பிடித்துக் கொண்டனர். பின், அவரது கணவர் கத்தியுடன் வந் தார். முதலில் ஆயிஷாவின் காதை கத்தியால் வெட்டினார். இதன்பின், அவரது மூக்கையும் துண் டித்தார். வலியால் கதறித் துடித்தார், ஆயிஷா. இறந்து விடுவார் என, நினைத்து அவரை மலைப் பகுதியிலேயே விட்டு, விட்டு போய்விட்டனர்.


இதன்பின், எப்படியோ அங்கிருந்து தப்பிச் சென்றார். காபூலில் பெண்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அகதிகள் முகாமில், ஆயிஷா தஞ்சம் அடைந்தார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் சேதமான உறுப்புகளுடன் தற்போது உயிர் வாழ்கிறார். கடந்த சில மாதங்களாக அங்கு தான் அவர் தங்கியுள்ளார். அகதிகள் முகாமுக்கு ஏராளமான மீடியாக்காரர்கள் வந்து சென்றனர். அவர்களுக்கு, ஆயிஷாவின் பரிதாப நிலை குறித்து தெரியவந்தது. இதற்கு பின், அமெரிக்காவின் “டைம்’ பத்திரிகையில், சிதைந்த முகத்துடன் ஆயிஷா விரக்தியுடன் காட்சி தரும் புகைப்படங்கள் வெளியாயின. இந்த பரிதாப காட்சியை பார்த்த மக்கள், அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.


மறுவாழ்வு: இதுகுறித்த தகவல், அமெரிக்காவில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் தெரியவந்தது. நல்ல உள்ளம் கொண்ட சிலர், ஆயிஷாவின் சிதைந்த மூக்கு மற்றும் காதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முன்வந்தனர். இதற்கு ஆயிஷாவும் சம்மதித்தார். இதற்காக அவர் விரைவில் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். பயங்கரவாதத்துக்கு தன் முகத்தையே விலையாக கொடுத்த ஆயிஷா, “டைம்’ பத்திரிகை குழுவிடம் கூறுகையில், “தலிபான் அமைப்புடன் சில ஒப்பந்தங்களை செய்து கொள்ள முடிவு செய்துள்ளாக அதிபர் கர்சாய் தெரிவித்துள்ளார். ஆனால், மிகக்கொடூரமாக நடந்து கொள்வோரிடம் எப்படி இணக்கமாக வாழ முடியும். என்னை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் அவர் கள் தானே’ என, தனது சிதைந்த முகத்தை விரல்களால் தொட்டுக் காட்டி விரக்தியுடன் பேசினார்.