Tag Archive | prayer

தாய்மதம் திரும்பும் இந்துக்கள்..!


// திருநெல்வேலி:

பிற மதங்களில் இருந்து, இந்து மதத்திற்கு திரும்பும் நிகழ்ச்சி, நேற்று நெல்லையில் நடந்தது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நெல்லையில் நேற்று மதமாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதமாறும் நிகழ்ச்சி, திருநெல்வேலி பார்வதி சேஷ மகாலில் நடந்தது. இதில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் மற்றவர்கள் கிறிஸ்தவர்கள். சுத்தி ஹோமம் நடத்தப்பட்டு, அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சாரதா கல்லூரி தாளாளர் சங்கரானந்தா சுவாமிகள் அவர்களுக்கு வீட்டில் பூஜை செய்ய விளக்குகள் வழங்கி, ஆசிர்வதித்தார்.

இது குறித்து வி.எச்.பி.,மாநில கோபாலரத்தினம் கூறுகையில், “”இந்தியா முழுவதும் குடும்ப கட்டுப்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை, இந்து மக்கள் மட்டுமே கேட்டு அதன்படி நடக்கிறார்கள். இதனால், மற்ற மதத்தினரை காட்டிலும் இந்து மக்கள் தொகை விகிதாச்சாரம் குறைந்து வருகிறது.

மதமாற்றத்திற்காக, ஒரு ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாயை பல்வேறு வெளிநாடுகள் இந்தியாவில் விதைக்கின்றன. “இந்தியாவில் அறுவடை’ என்ற பெயரில் முகாம் நடத்தி, மதமாற்றங்களை நடத்துகின்றனர். ஆனால், மற்ற மதங்களுக்கு செல்லும் மக்கள் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. அங்கேயும் ஆலய வழிபாட்டில் பேதம், இடுகாடு போன்றவற்றில் ஜாதிப் பிரச்னை நீடிக்கிறது.

எனவே, தாய் மதமான இந்து மதத்திற்கு பலரும் தாங்களாகவே விண்ணப்பித்து மாறுகிறார்கள். நாங்களும் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்களா… அரசின் நலத் திட்டங்களுக்காக மாறுகிறார்களா… என, ஆலோசித்தே சான்றிதழ் வழங்குகிறோம், என்றார். நிகழ்ச்சியில் தர்மபிரசார் அமைப்பாளர் பெருமாள், சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். //

http://www.dinamalar.com/district_detail.asp?id=172793

மேற்கண்ட தினமலர் பத்திரிகையின் விஷமமான செய்தியை வாசித்ததும் பயங்கரமான சிரிப்பு வந்தது;மீனவர்கள் கடலுக்குச் சென்று வலைவீசி மிகுந்த பிரயாசத்துடன் மீன்பிடிக்கிறார்கள்;அப்படி பிடிக்கப்பட்ட மீன்களிலிருந்து சிலது கரையேறும் முன்பே துள்ளி கடலில் வீழும்;அங்கே அவற்றை விழுங்க திமிங்கலங்கள் காத்திருக்கும்;அதுபோலவே மனித வாழ்க்கை என்பது உள்ளேயும் சரி, வெளியேயும் சரி துன்பங்கள் நிறைந்தது;அநித்தியமானது;இதில் எங்கே இருந்தால் என்ன‌?

ஏன் சிரிப்பு வந்தது என்றால் இந்த நாளிதழ் நல்ல தரமான நிருபர்களை உடையதானாலும் இந்த குறிப்பிட்ட செய்தியின் வாசகங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது;அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்,இதில் பக்கத்தை நிரப்ப எதையாவது எழுதவேண்டுமே..!

இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு காரணமாக இந்துக்களின் தொகை வேகமாக குறைந்து வருகிறதாம்;மேலும் மதமாற்றத்தின் காரணமாகவும் இந்துக்கள் தொகை குறைந்து வருகிறதாம்;மதம் மாறியவர்கள் இந்தியாவில் தானே இருக்கிறார்கள்? அவர்கள் இந்தியாவைவிட்டு ஓடினால் தானே தேசபக்தர்கள் கவலைப்படவேண்டும்? இந்த தேசபக்தர்கள் இந்தியாவை சுரண்டி வெளிநாடுகளில் இலட்சம் கோடிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்களே,அதுவல்லவா இந்தியாவை பெலவீனப்படுத்தும்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதமாற்ற தடைசட்டம் கொண்டு வந்தபோது அதில் முக்கிய குறிப்பாக வைத்தது,பெண்களையும் குழந்தைகளையும் மதம் மாற்றக்கூடாது என்பதே;ஆனால் இங்கே 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதம் மாறினார்களா;இது கேலிக்கூத்தாக இல்லையா? குழந்தைகளையும் மதம் மாற்றும் கொடுமையை எங்கே போய் சொல்லுவது? எப்படியோ இந்தியர்கள் அனைவரும் இந்துக்களாகி விட்டால் இந்தியாவில் சாதிக்கொடுமைகளோ வரதட்சணை கொடுமைகளோ இலஞ்ச லாவண்யமோ வர்க்கக்கொடுமைகளோ இல்லாது முழு இந்தியாவும் சுபிக்ஷமாகிவிடும் என்று நம்புவோமாக‌.

அநியாயத்துக்கு மதம் மாத்தறாங்க‌..!


மத மாற்றத்திற்கு துணை போகும் அரசு பள்ளிகள் : பெற்றோர் எதிர்ப்பு – தினமலர் செய்தி.

பந்தல்குடி : அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ஒன்றிய துவக்க பள்ளிகளில், மாணவர்களிடம், “பைபிள்’ வழங்குவதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தெற்கு, வடக்கு பள்ளிகளில் 550 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த நவ.16ல், தூத்துக்குடியிலிருந்து வந்த கிறிஸ்தவ “மிஷினரி’யினர், மாணவர்களிடம், பைபிள் புத்தகம் வழங்கினர். இதை படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்று பிரசாரம் செய்தனர். புத்தகத்தின் கடைசியில் இருக்கும் உறுதிமொழி படிவத்தில் மாணவர்களை கையெழுத்திட கூறினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் கூறியவை:

சிவலிங்கம்: மூன்று ஆண்டுகளாக, மத புத்தகங்களை கட்டாய படுத்தி கொடுக்கின்றனர். மதம் மாற்ற முற்படுகின்றனர். இது குறித்து கேட்டால், “இனி தரமாட்டோம்’ என்கின்றனர்.

கருப்பசாமி: சில ஆசிரியர் களால் இந்த தவறு நடக்கிறது. தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கேட்டபோது “புத்தகங்களை எடுத்து செல்லுங்கள், பிரச்னை செய்யாதீர்கள்’ எனக்கூறினார்.

ராகவன், (தலைமை ஆசிரியர், தெற்கு பள்ளி): மதம் பற்றிய புத்தகங்களை கொடுத்தது தவறு தான். அனைவருக்கும் கல்வி இயக்க மற்றும் கற்றல் வழி புத்தகங்களை இலவசமாக தர வருவர். அது போல என நினைத்து பார்க்காமல் விட்டு விட்டேன். “பைபிள்’ என தெரிந்ததும் அவற்றை வாங்கி வைத்து விட்டேன். இனிமேல் இதுபோல நடக்காது.

நாகலட்சுமி, (தலைமை ஆசிரியை, வடக்கு பள்ளி): மத சம்பந்தமான புத்தகங்களை கொடுக்க அனுமதிக்க கூடாது என்று எனக்கு தெரியாது. பெற்றோர் கூறிய பிறகு அவற்றை வாங்கி திருப்பி கொடுத்து விட்டோம். பெற்றோரிடமும் மன்னிப்பும் கேட்டோம்.

அருப்புக்கோட்டை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் நாகராஜன்: தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், உயரதிகாரிடம் தெரிவித்த பின் செய்யுங்கள் என்று பலமுறை கூறி வருகிறோம். மத புத்தகம் வழங்கல் பற்றி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதிகாரி விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=138246

அரசாங்க பள்ளியில் பைபிள் கொடுத்து மதம் மாற்றுகிறார்களாம்;அது உண்மையா?

இங்கே புகைப்படத்தில் காணும் காட்சி என்ன, மாணவர்களே போட்டி போட்டுக்கொண்டு அதனை வாங்குகின்றனர்; யாரும் வற்புறுத்தி கொடுப்பது போலத் தெரியவில்லை; மேலும் இது இலவசமாகத் தரப்படுவதால் அதினால் எந்த பாதிப்பும் இருப்பது போலவும் தெரியவில்லை.

ஆனாலும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உள்நோக்கத்துடன் இதுபோன்ற செய்திகளை தினமலர் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது;தெரிந்தோ தெரியாமலோ இதுபோன்ற எதிர்ப்புகளாலேயே கிறித்தவ மார்க்கம் வளருகிறது.

ஏனெனில் ஒன்றுமறியா சிறுபிராயத்தில் மாணவர்களுடைய சிந்தனையை மழுங்கச் செய்யும் ஒன்றுக்கும் உதவாத‌ தத்துவங்களையும் சடங்குகளையும் இந்து மார்க்கம் திணிக்கிறது;ஆனால் கிறித்தவமோ ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குகிறது.

இதனால் கவரப்படும் மாண‌வர்கள் சிறுவயதில் எளிதில் கிறித்தவத்தின்பால் அதாவது இயேசு எனும் வழிகாட்டியின் மீதான நம்பிக்கை கொள்கிறார்கள்;அதனை பெரியவர்கள் தடுக்கும் போது ஏன் தடுக்கிறார்கள் என்ற கேள்வியே ஒரு மாணவன் மனதில் பெரிய பாதிப்பை உண்டாக்கி மற்றொரு வாய்ப்பில் முழுமையான கிறித்தவனாக மாறுகிறான்.

ஆனால் இந்து மார்க்கத்தின் பெரியவர்களோ தன் பிள்ளை சினிமா பார்த்தாலோ அல்லது வேறு எந்த தவறான பழக்கவழக்கங்களையோ பழகினால் அதனைப் பெரிதுபடுத்தாத நிலையில் மெய்ஞான மார்க்கமாகிய இயேசுவின் மார்க்கத்தைக் குறித்து பெரியதாக எச்சரிக்கை செய்து மாணவர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டுகிறார்களே தவிர அதனைத் தடுக்க இயலாது என்பதே மனோதத்துவ ரீதியிலான உண்மையாகும்.

ரோட்டில் கைப்பிரதி கொடுக்கக்  கூடாது,மருத்துவமனையில் சென்று முன்பின் அறியாத ஏழை எளிய மக்களை சந்தித்து ஆறுதல் கூறி பிரார்த்தனை செய்யக்கூடாது, மாணவர்களுக்கு நல்வழிக்கான ஆலோசனைகளைக் கூறி அவர்கள் வெற்றிபெற உதவும் இயேசுவின் வரலாறு அடங்கிய புதிய ஏற்பாடு புத்தகத்தைக் கொடுக்கவும் கூடாது.

அப்படியானால் எப்படி மத நல்லிணக்கம் வளருமாம்?

ஆனால் இவர்கள் அனைத்து அரசாங்க அலுவலகத்திலும் பொது இடங்களிலும் ஆக்கிரமித்து கோவில் கட்டி உண்டியல் வைத்து ஒன்றுமறியாத மக்களை ஏமாற்றி வசூல் செய்யலாம்;ஒரு சாதாரண தெருவோர கோவிலைச் சுற்றியுள்ள எத்தனை கடைகள், எவ்வளவு பணப்புழக்கம் ? இதையெல்லாம் யார் கேட்பது  ? இது தான் மதசார்பற்ற இந்தியாவில் ஜனநாயகம் என்பதா ? இது தான் பத்திரிகை சுதந்தரத்தைக் குறித்து பெரிதாகப் பேசும் தினமலர் போன்ற பத்திரிகையாளர்களின் கருத்து உரிமை தத்துவமா ?

சுரங்கத்திலிருந்து அரங்கத்திற்கு..?


ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது..!

69 நாட்கள் பூமிக்கடியில் 2000 அடி ஆழத்தில் 33பேர் உயிர்பிழைத்தது எப்படி?

அண்மையில் சுரங்கத்தில் சிக்கி  69 நாட்களாகத் தவித்த‌  33 தொழிலாளர்களை சிலி நாட்டு அரசாங்கம்  ‘நாசா ‘வின் உதவியுடன் மீட்டதை அனைத்து ஊடகங்களிலும் கவனித்தோம் .

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=317687&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

இந்த செய்தி முதலில் எனது சிந்தைக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவே இல்லை; வழக்கமான செய்தியைப் போல‌ கண்டும் காணாமல் இருந்திருக்கிறேன்;

கடந்த 69 நாட்களாக அந்த தொழிலாளர்களுடைய உயிர் தவிப்பையும் அவர்தம் உயிரின் அருமையுணர்ந்து அவர்களை மீட்கப் போராடிய சிலி அரசின் பொறுப்பையும் அறிந்து கொண்டாலும் இந்த 69 நாட்களும் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் ? என்னைச் சுற்றி நடக்கும் இதுபோன்ற சம்பவங்களுக்கு நான் அன்னியமானதைக் குறித்து வருந்துகிறேன்;அது எனக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதது குறித்து ஆச்சரியப்படுகிறேன்; அதைக் குறித்து யோசித்ததுமே என் மனதில் எழுந்த கேள்வி இதுதான் , 69 நாட்களும் அவர்கள் எப்படி உணவுக்கும் தண்ணீருக்கும் போராடியிருப்பார்கள் என்பதே.

இதைக் குறித்த செய்தியைத் தேடியறிந்ததும் ஆச்சரியமாக இருந்தது;அந்த தொழிலாளர்களுடைய மன உறுதியுடன் கூடிய ஒழுக்கத்தையும் அறிந்தேன்;

http://uk.news.yahoo.com/38/20101013/twl-q-a-how-did-the-chilean-miners-survi-6ae0455.html

என்ன சாப்பிட்டனர்?

சுரங்கத்துக்குள் சென்ற தொழிலாளர்களுக்கு வெளியுலகத் தொடர்பு கிடைப்பதற்கு முன்னர் சுரங்கத்திலிருந்த‌ அவசரகால உணவு கிடங்கிலிருந்த சொற்ப உணவை மிக மிக சிக்கனமாக செலவழித்தார்களாம்;

எப்போது உதவி வரும் என்று தெரியாத நிலையில் பூமிக்கடியில் சுமார் 2257 அடி (688மீட்டர்) ஆழத்திலிருந்த அவர்கள் தாம் உயிர்வாழத் தேவையான மனோதிடத்துடன் உணவு கையிருப்பையும் திட்டமிட்டது கவனிக்கத்தக்கது;

ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டி மீன் உணவையும்  (tuna) ஒரு (சிப்) மிடறு பால் ஒரு கடி பிஸ்கட் (Crackers) துண்டு மற்றும் சின்ன “பீச்சஸ்” (peaches) பழத்துண்டு மட்டுமே உணவாக உட்கொண்டாராம்;


17 நாட்களுக்குப் பிறகு மீட்பு குழுவினர் அவர்களை அடைந்ததும் (அதற்கும் 17இடங்களில் துளைபோட்டு தேடினராம்..) ஹைட்ரஜன் ஜெல், சூப் மற்றும் சில மருந்துகளை  “புறாக்கள் “ (doves) எனப்படும் ப்ளாஸ்டிக் குழாய் மூலம் அனுப்பினர்;

அவர்களுடைய சூழ்நிலை எப்படியிருந்தது?

உஷ்ணமும் ,இருளும் சூழ நெருக்கமான சிறிய இடத்தில் சிக்கியிருந்த அவர்கள் படுத்துறங்க படுக்கைகள் இல்லாவிட்டாலும் 30 நாற்காலிகள் சில பெஞ்சுகளும் கொஞ்சம் போர்வையும் இருந்தது ; 530 சதுர அடி சுற்றளவுள்ள தற்காலிக முகாமில் அவர்கள் இருந்தனர் .

அங்கே போதுமான பிராண வாயு கிடைத்தது ;இதுவே நிலக்கரி சுரங்கமாக இருந்திருந்தால் விளைவுகள் பயங்கரமாக இருந்திருக்கும் ;இது (தாமிரம் மற்றும் தங்க )உலோக சுரங்கமாதலால் அங்கே ஆபத்தான மீத்தேன் வாயுக்கள் இருக்கவில்லை .

அவர்கள் ஆரோக்கியமாக இருந்தது எப்படி?

17 நாட்கள் தவிப்புக்குப் பிறகு ஆகஸ்டு 23 ந்தேதி மீட்புகுழுவினரின் தொடர்பு கிடைத்ததும் தொழிலாளர்கள் தங்கள் தேசிய கீதத்தைப் பாடி மகிழ்ந்தனர்; மீட்பு குழுவினர் சத்துமாத்திரைகளையும் ஊக்க மாத்திரைகளையும் அனுப்பி அவர்களுடைய ஜீரண உறுப்புகளை சகஜநிலைக்குக் கொண்டுவந்தனர் .

இதனிடையே மீட்பு குழுவினரின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது ;அவர்களில் தகவல் தொடர்பு நிபுணர்கள் ,மருத்துவர்கள்,மனோதத்துவ நிபுணர்கள் ,சமையல் மற்றும் துணி துவைப்போர் குழுவினரும் அடக்கம் ;மேலும் தொழிலாளர்களுடைய நாடித் துடிப்பையும் ஆரோக்கியத்தையும் கண்காணிக்கும் வயர்லெஸ் சாதனங்களும் தருவிக்கப்பட்டிருந்தது ;இதன்மூலம் குழாய் வழியே அனுப்பப்பட்ட “பையோமெட்ரிக் பெல்ட் ” எனும் சாதனத்தின் மூலம் தொழிலாளர்களுடைய உடல்நலம் கண்காணிக்கப்பட்டது .

மீட்புக் குழுவினர் அவர்களை நெருங்குவதற்கு முன் சுரங்கத்தினுள் முகாமுக்கு அருகே தொழிலாளர்கள் ஒரு தற்காலிக கழிப்பறையை அமைத்திருந்தனர் ;அதன் காரணமாக வயிற்றுப்போக்கு, காலரா, இரத்தக் கட்டி, இவற்றால் உடலுறுப்பு செயலிழத்தல் ஏற்பட்டிருக்குமோ என்று மீட்புக் குழுவினர் அச்சப்பட்டனர் ;ஆனால் தெய்வாதீனமாக அதுபோல எதுவும் நடைபெறவில்லை .

இந்த நிலையிலும் சிகரெட் மது போன்ற போதைவஸ்துக்களைக் கோரிய தொழிலாளர்களுக்கு அது மறுக்கப்பட்டது ;ஆனாலும் நிகோடின் கம் போன்ற மாற்று பொருட்கள் தரப்பட்டது .

அவர்கள் வெளியுலகைத் தொடர்பு கொண்டது எப்படி?

ஆங்காங்கு துளையிட்டு தேடிக்கொண்டிருந்த கருவியின் முனையானது ஆகஸ்டு 22 -ந்தேதி குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு துண்டு சீட்டானது மீட்பு குழுவினரைக் கொண்டாட வைத்தது ;அதில்,“நாங்கள் 33 பேரும் பத்திரமாக இருக்கிறோம் ” என்று இருந்தது ;

சுரங்கத்துக்குள் மற்றொரு குழாய் மூலம் பைபர் ஆப்டிக் தொடர்பு வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் தரப்படும் வரைக்கும் “டவ்ஸ்” எனும் குழாய் வழியே உறவினர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர்;

அவர்களுடைய அன்றாட வாழ்க்கை முறை எப்படி இருந்தது?

மீட்புகுழுவினர் அவர்களை அடைந்ததும் அவர்களுக்கு காலை ,மதிய ,இரவு உணவு மற்றும் மாலை தேனீர் வழங்கப்பட்டது ; 500 வாட் மின்சாரத்தின் உதவியுடன் விளக்குகளைப் பொறுத்தி அதன்மூலம் பகலையும் இரவையும் அவர்களுக்கு உணர்த்தினர் ;

மனோதத்துவ நிபுணர்கள் அவர்களுக்கு சில எளிமையான உடற்பயிற்சிகளை ஒழுங்கு செய்திருந்தனர் ;இதன்மூலம் தொழிலாளர்களுடைய உடல்திறன் மற்றும் உடல் வாகு பேணப்பட்டது ; இதன்மூலம் குறுகலான மீட்புகுழாயினுள் அவர்களுடைய பொருந்த முடியும் ;

அண்மை வாரங்களில் உள்ளேயிருக்கும் தொழிலாளர்களும் மீட்புகுழுவுக்கு உதவினார்கள்  ;அவர்கள் சுரங்கத்தினுள் அவ்வப்போது சேரும் இடிபாடுகளை அகற்றிக் கொண்டே இருந்தார்கள்  .

அவர்கள் தம்மை உற்சாகப்படுத்திக்கொண்டது எப்படி?

தொழிலாளர்களில் பெரும்பாலானோர் கால்பந்து இரசிகர்கள் ;அவர்களில் ஒருவர் தொழில்ரீதியாக கால்பந்து விளையாடுபவர் ;எனவே அவர்களை மகிழ்விக்க கேபிள் இணைப்பு மூலம் சிலி உக்ரைன் நாட்டுடன் மோதும்  நட்புணர்வு  கால்பந்து போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது ;மேலும் பீலே மாரடோனா போன்ற பிரபலங்களின் வீடியோ தொகுப்பும் அனுப்பப்பட்டது ;

இன்னும் சீட்டாட்டம் மற்றும் டொமினோ போன்ற விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ;மேலும் சிறிய வடிவிலான இசைக் கருவிகளும் பைபிளும் போப் பெனடிக்ட் ஆசீர்வதித்த ரோசரிகளும் வழங்கப்பட்டிருந்தன‌ .

ஒரு தொழிலாளியிடமிருந்த உயர்தொழில்நுட்ப வீடியோ காமிரா மூலம் அவர்களுடைய தவிப்பும் போராட்டமும் இன்னும் அவர்கள் பகிர்ந்துகொண்ட திரைப்பட நகைச்சுவை அனுபவங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது .

இந்த இராஜ மரியாதையையும் புகழும் நமக்கு கிடைக்கவில்லையே என்று மற்றவர் ஏங்குமளவுக்கு அத்தனை வசதிகளுடனும் பாதுகாப்பாக இருந்தனர் ; இன்னும் அவர்களில் சிலர் ஏன் மீட்கப்பட்டோமோ என்று நினைத்திருந்தாலும் ஆச்சரியமில்லை ;அந்த அளவுக்கு அவர்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டனர்;

அவர்கள் மீட்கப்பட்டது எப்படி?

21 அங்குல சுற்றளவுள்ள மீட்கும் குழல் “சிலி “தேசிய கொடியின் வர்ணம் பூசப்பட்டு ஒவ்வொரு தொழிலாளியையும் மீட்க ஆயத்தமானது ;அதனுள் ஒரு டாங்கி நிறைவான காற்று அடைக்கப்பட்டு , தகவல் தொடர்புக்கான மைக்ரோபோன் பொருத்தப்பட்டு ,வேகமாக மேலே தூக்கப்படும் தொழிலாளியின் இதயத் துடிப்பையும் சுவாசத்தையும் கண்காணிக்கும் மானிட்டர் இணைப்புடன் இருந்தது .

தொழிலாளி மேலேறி வர பயணிக்கவேண்டிய உயரமானது ஈஃபில் கோபுரத்தைப் போல இருமடங்கு உயரம் என்று சொல்லப்படுகிறது ;மீட்பு குழல் மேலேறி வர அரைமணிநேரத்துக்கும் குறைவாக ஆனது ; அது தடையின்றி உள்ளே செல்ல‌ அந்த குழலின் வெளிப்புறத்தில் சிறு சக்கரங்கள் பொருத்தப்பட்டு இராட்சத கிரேன் மூலம் இயக்கப்பட்டது .

தொழிலாளர்கள் மீட்கப்படும் முதலாவது நபரை எப்படி தேர்ந்தெடுத்தனர்?

செப்டம்பர் மாத இறுதியில் சிலியின் சுகாதார அமைச்சர் மீட்பு குழுவின் வல்லுனர் மற்றும் மருத்துவ நிபுணருடன் கலந்தாலோசித்து தொழிலாளர்களில் யார் மிகவும் உடலாலும் மனதாலும் பெலவீனமாக இருக்கிறாரோ அவரை முதலாவது மீட்க முடிவுசெய்திருந்தனர் ;ஆனால் தொழிலாளர்களோ யார் கடைசியாக வெளியேறுவது என்பதில் போட்டி போட்டனர் ;அதிசயம் ஒன்றுமில்லை , அவர்களில் யார் அதிக நாட்கள் பூமிக்கடியில் இருந்தனர் என்பதில் கின்னஸ் சாதனை செய்ய விரும்பியதுதான்.

இப்படியும் ஒரு சாதனை..?

ஆழத்தினின்று நாம் கூப்பிடுவோம்
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்
கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்
கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்?

எக்காலத்தும் நம்பிடுவோம் திக்கற்ற மக்களின் மறைவிடம்
பக்கபலம் பாதுகாப்பும் இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்

“அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள். (Psa 107:24 )

ஆகஸ்டு 10 கறுப்புதினம்..!


ஆகஸ்ட் 10 ஆகிய இதே நாளில் சரியாக அறுபது வருடத்துக்கு முன்பு அதாவது 1950 -ல் தலித் கிறித்தவர்களுக்கு மட்டும் உள்நோக்கத்தோடு தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் மறுக்கப்பட்டது;

அதற்கு இன்று வரையிலும் எந்த நியாயமான காரணத்தையும் யாரும் சொல்லி விடவில்லை; ஆனாலும் சமுதாய விடுதலைக்காக மதம் மாறும் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டேயிருக்கிறது;

இதனைப் பொறுக்காத அடிப்படைவாதிகள் அவர்களை இன்னும் தரம் தாழ்த்தும் வண்ணமாக பணத்துக்கு மதம் மாறுவதாக வசைபாடுகிறார்கள்;

உண்மையிலேயே இந்தியா மதசார்பற்ற நாடாக இருந்தால் தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகளை மதசார்பில்லாமல் வழங்க என்ன தடை?

புத்த மதமும் சீக்கிய மதமும் விதிவிலக்காக சலுகை பெறும்போது கிறித்தவருக்கு மட்டும் அது ஏன் பொருந்தாது?

இந்நிலையில் இந்திய கிறித்தவர்களை சிரம் தாழ்ந்தும் பதம் பணிந்தும் வேண்டுவது யாதெனில் தாங்கள் சிறிது தியாகம் செய்து தங்கள் மார்க்க விடுதலையைப் பறைசாற்றுங்கள்;

அது எப்படி..?
அண்மையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்ததல்லவா, அதில் தங்கள் சாதியை எவ்வாறு குறிப்பிட்டீர்களோ அவ்வாறே தங்கள் மதத்தையும் குறிப்பிட்டு – தெளிவாக – நேரடியாக ‘நான் கிறித்தவ ஆதிதிராவிடன்’ என்று பதிக்கவேண்டும்;

இதனால் என்ன பலன் என்று கேட்கலாம், அதன் பிறகே நம்முடைய உண்மையான பெலத்தை அரசாங்கம் உணர்ந்து கொள்ளும்; நாமும் நம்முடைய சலுகைகளை உரக்கச் சொல்லிக் கேட்கலாம்;

அம்பேத்கர் சொன்னாராம், என்னை விட என் நாடு முக்கியம்,என் நாட்டை விட என் இலட்சியம் முக்கியம்,என் இலட்சியத்தைவிட எனது சமுதாயத்தின் விடுதலை முக்கியம்’ என்று!

ஆம், குறுகிய மத உணர்வுகளில் நாம் சிக்கிவிடாமல் இதுபோன்ற சமுதாயப் பிரச்சினைகளிலிருந்து அந்நியப் படாமல் ஏக சிந்தையுடன் இணைந்து போராடுவோம்;

வெற்றி நமதே..!

http://in.christiantoday.com/articles/dalit-christians-declare-black-day-on-aug-10/5548.htm

தவித்துப்போன விஜயா..!


விஜயா கடந்த ஒரு மாதமாகத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களுடைய வேலைக்காரி தனது மகளுடைய பிரசவத்துக்காக ஊருக்குச் சென்றவர்கள் இரண்டு மாதமாகியும் இன்னும் வந்துசேரவில்லை;

இந்நிலையில் இன்று கணவனுடைய வற்புறுத்தலின் காரணமாக LIC முகவர் பயிற்சிக்காகச் சென்றாகவேண்டும்; அது பிடிக்காததுடன் வீட்டையும் பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளை யார் கவனித்துக் கொள்ளுவார்கள் என்று கவலை..!

முதலில் அவர்கள் LIC முகவர் பணிக்குச் செல்லுவது ஒருவகையில் அவர்களுடைய தனிமை உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாக இருக்கும் என்று சொல்லி அதற்காக அவர்களை ஆயத்தப்படுத்தினேன்; இதன்மூலம் நீங்கள் சுதந்தரமாக வெளியே செல்லவும் அதினால் வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் அநேகருக்கு ஆண்டவருடைய அன்பைப் பகிர்ந்துக் கொள்ளவும் முடியும் என்று சொன்னதும் சந்தோஷப்பட்டார்கள்; ஆனால் இன்னும் வேலைக்காரி வராததைக் குறித்துத் தொடர்ந்து அரற்றிக் கொண்டேயிருந்தார்கள்;

திடீரென்று நேற்று போன் செய்த போது பயத்துடனே (தொல்லை..?!) போனை எடுத்தேன்;  எடுத்தவுடனே வழக்கம்போல, “ஐயையோ, தூங்கறீங்களா, தொல்லைபண்ணிட்டேனா” எனவும் நான் சற்று கோபத்துடன்  “பரவாயில்லைமா, விஷயத்தைச் சொல்லுங்க” என்றதும் மிகச் சாதாரணமாகச் சொன்னார்கள், “போன வெள்ளிக்கிழமை வேலைக்காரி வந்துட்டாங்க,  இன்றைக்கு முகவர் பயிற்சிக்காகச் செல்கிறேன்,  ஜெபித்துக் கொள்ளுங்கள்”
என்றதும் நான் சற்று கண்டிப்புடன் சொன்னேன்,  “நான் முன்பே சொன்னேனல்லவா,  நீங்கள் கவலைப்பட்டதெல்லாம் வீணாகிப்போனதே,  இப்போதாவது ஆண்டவரை நம்புவீர்களா, அவருக்கு எல்லாம் தெரியுமல்லவா,  எனவே சொல்லுகிறார், ‘ தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள் ‘ என்று; மரியாள் அதைக் குறித்து தெளிவாக அறிந்திருந்தாள்;

நாம் கூட ஒரு பல்பொருள் அங்காடிக்குச் செல்லுகிறோம், அங்கே இருக்கும் அனைத்து பொருட்களையும் வாங்க முயற்சிப்போமா, நமக்குத் தேவையானதை மட்டுமே எடுத்துக்கொள்ளுகிறோம்;

இப்படியே நமது அன்றாட வாழ்விலும் நமக்கு துன்பத்தைத் தரக்கூடிய நமது சக்திக்கு மீறிய காரியங்களைக் குறித்து கவலைப்படுவதை விட்டு விட்டு ஆண்டவருடைய செயல்பாட்டுக்கு முழுவதுமாக ஒப்புக்கொடுத்துவிட்டு நம்பிக்கையுடன் அமர்ந்திருக்க வேண்டும்” என்று கூறினேன்.

வெற்றித் திருமகள் உன்னைத் தேடி..தேர்வு எழுதும் மாணவர்களுக்காக…


பெற்றோருக்கு ஒரு வார்த்தை…

இது உங்களுக்கும் உங்கள் கண்மணிக்கும் சோதனையான கட்டமாகும்;  இந்த நேரத்தில் இருதரப்பும் பதட்டமாகவே இருக்கும்; ஆனால் நீங்கள் தான் சற்று பொறுமையாக இருந்து உங்கள் பிள்ளையை ஆதாயப்படுத்த வேண்டும்; உங்கள் கண்மணியைக் கோபப்படுத்த வேண்டாம்; விரட்ட வேண்டாம்; குற்றப்படுத்த வேண்டாம்; நல்ல வார்த்தைகளைச் சொல்லி தைரியப்படுத்துங்கள்; உயர்த்தி பேசுங்கள்; நீங்கள் கடவுளை நம்புவதால் அவர் நிச்சயமாக நன்மை செய்வார்; அற்புதம் என்பதே எதிர்பாராமல் நடப்பது தானே; அற்புதம் என்பதை ‘மேஜிக்’ போல யாரும் திட்டமிட்டு செய்யமுடியாது;எனவே மனந்தளராமல் சிறந்த வாய்ப்புக்காகப் போராடுங்கள்,உங்கள் கண்மணியுடன் இணைந்து..!
தொடர்ந்து வாசிக்க…


இயேசுவின் இரத்தத்தால் மட்டுமே விடுதலை..!


அண்மையில் என்னிடம் ஒரு தாயார் தனது மகள் மற்றும் மகனுடன் பிரார்த்தனைக்காகச் வந்திருந்தார்கள்; அந்த தாயார் அதற்கு முன்பு மகனுடன் வந்திருந்தபோது அவர்களது சரீர பெலவீனத்துக்காக பிரார்த்தனை செய்து அனுப்பியிருந்தேன்;

ஆனாலும் அவர்களது மகள் நம்பிக்கையில்லாமல் மலையனூர் அருகே உள்ள பிரபலமான கோவிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறாள்; அங்கேயிருந்த பூஜாரி ஒருவன் ஏதேதோ சொல்லி மிரட்டி 10000 ரூபாயை எடுத்து வரச்சொல்ல விடுதலை கிடைத்தால் போதும் என நகையை அடகு வைத்து எடுத்துச் சென்று கொடுத்தார்களாம்;

நிலைமை முன்பைவிட இன்னும் மோசமாக அலறிக் கொண்டே என்னிடம் வந்தனர்; வேறு ஏதேதோ ஏவல் சக்திகளை அவர்கள் மீது ஏவிவிடவும் வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவரை அவை அலைக்கழிக்க இரவெல்லாம் நிம்மதியில்லாமல் பயத்தில் இருந்தார்களாம்;

வீட்டிலிருந்த ஆண்களையும் அவை விடவில்லை என்பது தான் ஆச்சரியம்; ஏனெனில் பெண்களுக்கு மட்டும் என்றால் அது மூடநம்பிக்கை எனலாம்; பிரமை எனலாம்;ஆனால் 10வது படிக்கும் வாலிபன் முதலாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்;

பணத்தை பிடுங்கிக் கொண்ட அந்த பூஜாரி நீ இங்கே பார்த்தத வெளிய சொன்னா உன் உயிரை எடுத்துடுவேன் என்று மிரட்டியும அனுப்பியிருப்பதால் தான் அங்கே பார்த்தத சொல்லமுடியாமலும் அதை மறக்கமுடியாமலும் மனநோயாளியைப் போல இருக்கிறார்கள்; அந்த பெண்ணின் பெயர் ஜெயந்தி.

“பணம் போனால் போகட்டும், அவன் என் மீது ஏவிவிட்ட தீயசக்திகளிலிருந்து விடுதலை பெற்று தாருங்கள்” என அழுகிறார்கள்;

அவர்களுடைய குல தெய்வமான அங்காளபரமேஸ்வரி எனும் தெய்வமும் ஒரு புறம் வந்து மிரட்டுகிறதாம்; அதுவும் இவர்கள் மீது ஏதோ கோபத்தில் இருக்கிறதாம்;

இது போன்ற அப்பாவி மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்து அவர்களுடைய மூடநம்பிக்கைகளிலிருந்து அவர்களை விடுவித்து என்னைப் போன்றவர்கள் செய்யும் ஊழியமே மதமாற்றம் எனப்படுகிறது;

இன்று என் கண்முன்னே அவர்களே தன் கைகளில் கட்டியிருந்த கயிறுகளை அறுத்தெறிந்தார்கள்; “வீட்டில் எந்த பூஜையும் செய்கிறதில்லை;எல்லாம் போதும் போதும்’னு ஆயிடுச்சி” என்கிறார்கள்;

இப்போதைக்கு செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் காலையில் வரச் சொல்லி இறைவாக்கையும் ஆசியையும் வழங்கி அனுப்புகிறேன்; தற்போது தைரியமாக இருக்கிறார்கள்;

ஒரு முக்கியமான விஷயம், இன்னும் அவர்களிடமிருந்து நான் ஒரு பைசாவும் வாங்கவில்லை; தொழில் செய்யும் அந்த தாயாரின் மகனான சரவணனுக்கு நான் தான் அவனது தொழில் சிறக்க பத்து ரூபாயை ஒரு புதிய ஏற்பாடு புத்தகத்தில் வைத்து கொடுத்தேன்.

சத்தியா புலம்புகிறாள்..!


என்ன இருந்தாலும் நீங்க மனுஷன் தானே…

எல்லா மனுஷங்களுமே கெட்டவங்கதான்…

உங்கள கடவுளப் போல நெனச்சேன்…

கடவுள் மீது சாய்வதாக நினைத்தே உங்கள் மீது சாய்ந்தேன்…

மனசுல இருக்கறதயெல்லாம் மனசுவிட்டு சொல்லவே தைரியமா வந்தேன்… தப்பு பண்ணிட்டிங்க… நீங்கதான் துவங்கினீங்க…

21 வயசுலேயே எல்லாம் முடிஞ்சாச்சு… நான் தப்பு பண்ணிட்டேன்… உங்க பெண்ணாயிருந்து இப்படி நடந்தா விடுவீங்களா…

இப்ப சிரிச்சிகிட்டிருந்தாலும் வீட்டில போய் அழுவேன்…

கிளாஸுக்குப் போகப் பிடிக்கல…

தூக்கம் வரல… கனவும் வரலை…

ரொம்ப இடம் கொடுத்துட்டேன்…

நான் முன்னமே பொறந்திருக்கணும்…

இல்ல நீங்க லேட்டா பொறந்திருக்கணும்…

காசா,எதுக்கு..?  நான் என்ன “அது” மாதிரியா வந்தேன்..?

நான் வரப்போறவனோட எப்படி இருப்பேன்..? அவன் பாவம்…

உங்கள நெனச்சிக்கிட்டு அவனோட இருக்கறதா..?

எப்படி சொல்லிட்டீங்க..!

இளமை திரும்புதோ… கொஞ்சமாவது யோசிக்கவேண்டாமா?

இது எப்படி சரியா வரும்…

சின்ன வயசாயிருந்தாலும் நான் வந்திருப்பேன்…

14‍ அல்லது 18 வய‌சு பொண்ணுங்களாயிருந்தா முழுவதும் ஏமாந்திருப்பாங்கல்ல..?

எச்சரிக்கை, எச்சரிக்கை என முதல் முறையே சத்தம் கேட்டுது…

நான் ஏமாந்துட்டேன்… இனி என்ன செய்வேன்…

அந்த சத்தமும் இப்ப கேக்கறதில்லை…

சரி… சரி… நீங்க ஏன் ஒரு மாதிரியாயிட்டீங்க…

எப்பவும் போல பேசுங்க…

இல்ல நான் தப்பு பண்ணிட்டேன்… ரொம்ப இடம் கொடுத்துட்டேன்…

அடுத்து எப்ப பாக்கலாம்… எப்பவும் போல பேசுங்க…

நிறைய பேசணும்… வேற எதுவும் வேணாம்…

வெளியவே போய் பேசுவோம்… என்னை மறக்கக்கூடாது…

என் கல்யாணத்துக்கு வரணும்… என்னை வெறுக்கக்கூடாது…

என்ன இருந்தாலும் எங்க வீட்டுல சொல்றத எதிர்த்து நான் எதுவும் செய்யமாட்டேன்… செய்யமுடியாது… விட்டு வரவும் முடியாது…

எப்படி பார்த்தாலும் சரியா வராதே… இப்படியாகும்னு நான் நெனச்சி பாக்கலயே… எங்க வீட்டுல யாரும் இது போல கிடையாது…

அன்று ஒரு வினாடி நடந்த ஒரு கெட்ட காரியத்த நினைத்து படிப்பையே இழந்தேன்… ஆனா இப்ப..?

மனசுவிட்டு பேச மட்டுமே உங்களோட வந்தேன்… உங்க பெண்ணாகத் தானே ஏற்றுக்கொள்ளச் சொன்னேன்… இப்படி செஞ்சிட்டீங்களே…!

(வெறும் (?!) முத்தத்தையும் கட்டியணைத்தலையுமே கற்பு போய் விட்டதாக பாவித்து அரற்றும் இளம்பெண்… இது அந்த காலத்து கதையல்ல… நிகழ்கால கற்பனை… “கற்பு” என்பது மனம் சம்பந்தமானது என்பது எத்தனை சத்தியமான‌ உண்மை… இளம்பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்காததையே சாதகமாக்க நினைத்து முன்னேறுவோர்க்கு இது ஒரு எச்சரிக்கை..! )

Please visit me..!


கர்த்தருக்குள் பிரியமான நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்;

இணைய உலகைக் குறித்து ஏதுமறியாவிட்டாலும் கர்த்தருக்காக ஏதேனும் செய்யவேண்டுமென்ற வைராக்கியத்தினால் கடந்த ஒரு வருடமாக கடினமாகப் பிரயாசப்படுகிறேன்;

எனது முயற்சிகளுக்காக ஜெபிக்கவும் எனது தளத்தைப் பார்வையிடவும் அன்புடன் அழைக்கிறேன்..!

http://chillsam.activeboard.com/

துடித்துப் போனாள்,துர்கா..!


வீட்டுக்கு வந்து சேரவே இரவு 10:30 மணி ஆனது;அடுத்து பிரசாத்துடன் தொலைபேசியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பல காரியங்கள் பேசி ஜெபித்து முடித்து கணிணியில் சொந்த
குறிப்புகளைப் பதித்துவிட்டு இன்று மாலை நான் கலந்துகொண்ட வீட்டுக்கூட்ட செய்தியின் குறிப்பை கட்டுரையாக்கி எனது தளத்தில் பதித்தேன்; இதனை முடிக்கவே விடிந்துவிட்டது;
படுக்கச் செல்லும் போது காலை 05:30 மணியானது;

எழுந்திருக்கும் போது மதியம் 1மணி;தூக்கத்தைத் தொடர்ந்தேன்; இப்போது 2மணி; நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்றதொரு தூக்கம்;

எனது தாயார் போன் செய்து சத்தம் போட்டார்களாம், நான் ஏன் போனை எடுக்கவில்லையென.

பிறகு எனது கைபேசியை எடுத்துப் பார்த்து அதிர்ந்துபோனேன்; அதில் 42 தவறவிட்ட அழைப்புகள் பதிவாகியிருந்தது;

துர்கா மட்டுமே 14 முறை முயற்சித்திருக்கிறாள்; நேற்று காலையும் இதேபோல நான் காலை 4 மணிக்கு படுத்திருந்ததால் நான் தூக்கக் கலக்கத்தில் சரியாகப் பேசவில்லை;

இன்று காலையிலிருந்தும் நான் போனை எடுக்காததால் பயந்துபோய் வீட்டு நம்பருக்கு தொடர்பு கொள்ள நானே எடுத்தேன்; இப்போது சொல்கிறாள்,ரொம்ப நாள் ஆனது போலிருக்கிறது, உங்களுக்கு உடம்பு சரியில்லையா, என;

பிறகு சமாளித்து எனது சில தனிப்பட்ட அசௌகரியங்களைச் சொன்னேன்; மற்றவருக்காக ஜெபிக்கும்போது நமது சரீரத்தில் ஏற்படும் மாற்றங்களையும் பில்லிசூனிய கட்டுகளிலிருப்போருக்காகப் போராடி ஜெபிக்கும்போது நமக்கு ஏற்படும் உபத்திரவங்களையும் கூறினேன்; ஆச்சரியப்பட்டாள்;

‘நீங்க ரொம்ப கிரேட் ஸார்’ என மனதாரப் பாராட்டினாள்; ஆவி உலகம் சம்பந்தமான மற்றும் சில உண்மைகளையும் எளிமையாகச் சொன்னேன்;

ஒவ்வொரு மனிதனும் நன்மையான அல்லது தீமையான ஏதோ ஒரு ஆவியினால் ஆளப்படுகிறான்; இதில் நன்மையான ஆவியினால் ஆளப்படுவோர்க்கு நன்மைகளும் தீய சக்திகளால் துன்பங்களும் உண்டாகிறது;

தீயசக்தியினால் துன்புறுவோர் தேவைக்காக நாம் அடுத்த வீட்டிலிருப்போரிடம் உதவி கேட்பது போல பிரார்த்தனை செய்ய நம்மிடம் வருவார்கள்;

அவர்களுக்கு உதவி செய்யும்போது தீயசக்திகளின் எரிச்சலுக்கு
நாமும் ஆளாக நேரிடும்; ஆனாலும் நாம் பயப்படப்போவதில்லை; அவற்றை அழிக்கவே ஆண்டவர் நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்;

‘உனக்காக யுத்தம் செய்வேன்’ என்கிறாரே,எப்படி?
இதுபோல பிரார்த்தனை செய்பவர்கள் மூலமே நமக்கு விடுதலை வருகிறது; ஏனென்றால் இந்த உலகில் வாழும் நம்முடைய போராட்டங்களை நாமே மேற்கொள்ளும் வழிமுறைகளையும் அதற்கான ஆயுதங்களையும் ஆண்டவர் ஏற்கனவே நம்மிடம் கொடுத்துவிட்டார்;

இப்படியாகச் சொன்னவுடன் தெளிவடைந்த துர்கா, ‘சரி நீங்க தூங்குங்க நான் சாயங்காலம் அழைக்கிறேன்’ என்றாள்;
நானோ, ‘இப்போதே ஜெபிக்கிறேன், மாலையில் என்னுடைய நிலை எப்படியிருக்குமோ’ என்று பிரார்த்தனை செய்தேன்;

ஜெபத்துக்கு முன்பாக கீழ்க்காணும் வாக்கியம் ஆவியில் உதித்தது,
“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.”(சங்கீதம்.37:4)

இதிலிருந்து நான் சொன்ன சில தத்துவங்கள் எனக்கே பாடமாக இருந்தது;

“இருதயத்தின் வேண்டுதல்களை” என்ற வார்த்தையின் மூலம் நாம் அறிவது என்ன?

ஒவ்வொரு ஆத்துமாவின் இருதயத்திலும் ஒவ்வொரு விதமான தனிப்பட்ட விருப்பங்கள் உருவாகிறது; அந்த விருப்பங்கள் நிறைவேறிவிட்டால் பிரச்சினையில்லை; ஆனால் அவை தாமதிக்கும் போது ஏக்கமாக உருமாறுகிறது; ஏக்கமே விரக்தியாக சோர்வாகவும் மனச் சோர்வாகவும் மன அழுத்தமாகவும் மன நோயாகவும் மாறி மனிதனை நடைபிணமாக்குகிறது;

ஆனால் ஆண்டவர் இதற்கு எளிமையான வழிமுறைகளை கொடுத்திருக்கிறார்; இதனையறிந்து நடைமுறைப்படுத்தினால் விடுதலை உண்டாகும்;

ஏன் நாம் ஆண்டவரிடம் செல்ல சங்கடப்படுகிறோம்?
நமக்கு அவர் மீது நல்ல எண்ணமிருந்தும் நாம் ஏன் அவரை ரெண்டாம் பட்சமாக வைத்திருக்கிறோம்?

காரணம், நம்முடைய பெற்றோர் அல்லது நண்பர்கள் நாம் ஒரு தவறான காரியத்தில் ஈடுபடும் போது அதன் எதிர்கால ஆபத்தினை தங்கள் அனுபவத்தினால் உணரும் அவர்கள் நம்மைத தடுப்பார்கள், தேவைப்பட்டால் கண்டிப்பார்கள்;

ஆனாலும் நாம் மாற்றுவழிகளை ஏற்படுத்திக் கொண்டு
அவர்களுடைய எதிர்ப்பையும் மீறி அவர்களுக்குத் தெரியாமல் தவறான வழிகளைத் தொடருவோம்; இதன் விளைவாக நாம் மோசமான நிலைக்குத் தள்ளப்படும்போது நாம் யாரிடம் உதவி கேட்போம்? புதிய ஆட்களிடமே;அவர்கள் நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்து நம்மை அடிமைப்படுத்துவார்கள்;

நாம் நம் மீது உண்மையான அக்கறை கொண்டோரிடம் செல்லுவதில்லை; ஏனெனில் அவர்களை மீறி நாம் வந்ததால்
உண்டான அவமானம் நம்முடைய உள்ளத்தில் மாறாத வடுவாகப் பதிந்துள்ளது;

ஆனாலும் நம்மீது மெய்யான அன்பு கொண்ட நம்முடைய உறவு தனக்கு எவ்வளவு நஷ்டம், அவமானம் ஏற்பட்டாலும் சகித்துக் கொண்டு வந்து நம்மை மீட்டுச் செல்லும்; இதுபோலவே இயேசுகிறிஸ்துவும் நம்மைத் தேடி நாம் பாதிக்கப்பட்டு கண்ணீரில் மிதக்கும் இடத்துக்கே வந்து நம்மை சந்திக்கிறார்; விடுதலையும் செய்கிறார்..!

இதையெல்லாம் சொல்லி ஜெபித்ததும் துர்கா சாட்சி கூறினாள்; அண்மையில் தான் வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதி தூக்கி எறியப்பட்டு குப்புற விழுந்தும் ஒரு காயமும் இல்லாமல் தப்பினாளாம்; அவளது தோழி சொன்னாளாம், “பரவாயில்லையே,அந்த ஜீஸஸ் தான் உன்னைக் காப்பாற்றியிருக்கிறார்” என்று.