Tag Archive | ஆத்துமா

தாய்மதம் திரும்பும் இந்துக்கள்..!


// திருநெல்வேலி:

பிற மதங்களில் இருந்து, இந்து மதத்திற்கு திரும்பும் நிகழ்ச்சி, நேற்று நெல்லையில் நடந்தது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நெல்லையில் நேற்று மதமாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதமாறும் நிகழ்ச்சி, திருநெல்வேலி பார்வதி சேஷ மகாலில் நடந்தது. இதில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் மற்றவர்கள் கிறிஸ்தவர்கள். சுத்தி ஹோமம் நடத்தப்பட்டு, அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சாரதா கல்லூரி தாளாளர் சங்கரானந்தா சுவாமிகள் அவர்களுக்கு வீட்டில் பூஜை செய்ய விளக்குகள் வழங்கி, ஆசிர்வதித்தார்.

இது குறித்து வி.எச்.பி.,மாநில கோபாலரத்தினம் கூறுகையில், “”இந்தியா முழுவதும் குடும்ப கட்டுப்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை, இந்து மக்கள் மட்டுமே கேட்டு அதன்படி நடக்கிறார்கள். இதனால், மற்ற மதத்தினரை காட்டிலும் இந்து மக்கள் தொகை விகிதாச்சாரம் குறைந்து வருகிறது.

மதமாற்றத்திற்காக, ஒரு ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாயை பல்வேறு வெளிநாடுகள் இந்தியாவில் விதைக்கின்றன. “இந்தியாவில் அறுவடை’ என்ற பெயரில் முகாம் நடத்தி, மதமாற்றங்களை நடத்துகின்றனர். ஆனால், மற்ற மதங்களுக்கு செல்லும் மக்கள் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. அங்கேயும் ஆலய வழிபாட்டில் பேதம், இடுகாடு போன்றவற்றில் ஜாதிப் பிரச்னை நீடிக்கிறது.

எனவே, தாய் மதமான இந்து மதத்திற்கு பலரும் தாங்களாகவே விண்ணப்பித்து மாறுகிறார்கள். நாங்களும் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்களா… அரசின் நலத் திட்டங்களுக்காக மாறுகிறார்களா… என, ஆலோசித்தே சான்றிதழ் வழங்குகிறோம், என்றார். நிகழ்ச்சியில் தர்மபிரசார் அமைப்பாளர் பெருமாள், சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். //

http://www.dinamalar.com/district_detail.asp?id=172793

மேற்கண்ட தினமலர் பத்திரிகையின் விஷமமான செய்தியை வாசித்ததும் பயங்கரமான சிரிப்பு வந்தது;மீனவர்கள் கடலுக்குச் சென்று வலைவீசி மிகுந்த பிரயாசத்துடன் மீன்பிடிக்கிறார்கள்;அப்படி பிடிக்கப்பட்ட மீன்களிலிருந்து சிலது கரையேறும் முன்பே துள்ளி கடலில் வீழும்;அங்கே அவற்றை விழுங்க திமிங்கலங்கள் காத்திருக்கும்;அதுபோலவே மனித வாழ்க்கை என்பது உள்ளேயும் சரி, வெளியேயும் சரி துன்பங்கள் நிறைந்தது;அநித்தியமானது;இதில் எங்கே இருந்தால் என்ன‌?

ஏன் சிரிப்பு வந்தது என்றால் இந்த நாளிதழ் நல்ல தரமான நிருபர்களை உடையதானாலும் இந்த குறிப்பிட்ட செய்தியின் வாசகங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது;அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்,இதில் பக்கத்தை நிரப்ப எதையாவது எழுதவேண்டுமே..!

இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு காரணமாக இந்துக்களின் தொகை வேகமாக குறைந்து வருகிறதாம்;மேலும் மதமாற்றத்தின் காரணமாகவும் இந்துக்கள் தொகை குறைந்து வருகிறதாம்;மதம் மாறியவர்கள் இந்தியாவில் தானே இருக்கிறார்கள்? அவர்கள் இந்தியாவைவிட்டு ஓடினால் தானே தேசபக்தர்கள் கவலைப்படவேண்டும்? இந்த தேசபக்தர்கள் இந்தியாவை சுரண்டி வெளிநாடுகளில் இலட்சம் கோடிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்களே,அதுவல்லவா இந்தியாவை பெலவீனப்படுத்தும்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதமாற்ற தடைசட்டம் கொண்டு வந்தபோது அதில் முக்கிய குறிப்பாக வைத்தது,பெண்களையும் குழந்தைகளையும் மதம் மாற்றக்கூடாது என்பதே;ஆனால் இங்கே 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதம் மாறினார்களா;இது கேலிக்கூத்தாக இல்லையா? குழந்தைகளையும் மதம் மாற்றும் கொடுமையை எங்கே போய் சொல்லுவது? எப்படியோ இந்தியர்கள் அனைவரும் இந்துக்களாகி விட்டால் இந்தியாவில் சாதிக்கொடுமைகளோ வரதட்சணை கொடுமைகளோ இலஞ்ச லாவண்யமோ வர்க்கக்கொடுமைகளோ இல்லாது முழு இந்தியாவும் சுபிக்ஷமாகிவிடும் என்று நம்புவோமாக‌.

அநியாயத்துக்கு மதம் மாத்தறாங்க‌..!


மத மாற்றத்திற்கு துணை போகும் அரசு பள்ளிகள் : பெற்றோர் எதிர்ப்பு – தினமலர் செய்தி.

பந்தல்குடி : அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ஒன்றிய துவக்க பள்ளிகளில், மாணவர்களிடம், “பைபிள்’ வழங்குவதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தெற்கு, வடக்கு பள்ளிகளில் 550 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த நவ.16ல், தூத்துக்குடியிலிருந்து வந்த கிறிஸ்தவ “மிஷினரி’யினர், மாணவர்களிடம், பைபிள் புத்தகம் வழங்கினர். இதை படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்று பிரசாரம் செய்தனர். புத்தகத்தின் கடைசியில் இருக்கும் உறுதிமொழி படிவத்தில் மாணவர்களை கையெழுத்திட கூறினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் கூறியவை:

சிவலிங்கம்: மூன்று ஆண்டுகளாக, மத புத்தகங்களை கட்டாய படுத்தி கொடுக்கின்றனர். மதம் மாற்ற முற்படுகின்றனர். இது குறித்து கேட்டால், “இனி தரமாட்டோம்’ என்கின்றனர்.

கருப்பசாமி: சில ஆசிரியர் களால் இந்த தவறு நடக்கிறது. தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கேட்டபோது “புத்தகங்களை எடுத்து செல்லுங்கள், பிரச்னை செய்யாதீர்கள்’ எனக்கூறினார்.

ராகவன், (தலைமை ஆசிரியர், தெற்கு பள்ளி): மதம் பற்றிய புத்தகங்களை கொடுத்தது தவறு தான். அனைவருக்கும் கல்வி இயக்க மற்றும் கற்றல் வழி புத்தகங்களை இலவசமாக தர வருவர். அது போல என நினைத்து பார்க்காமல் விட்டு விட்டேன். “பைபிள்’ என தெரிந்ததும் அவற்றை வாங்கி வைத்து விட்டேன். இனிமேல் இதுபோல நடக்காது.

நாகலட்சுமி, (தலைமை ஆசிரியை, வடக்கு பள்ளி): மத சம்பந்தமான புத்தகங்களை கொடுக்க அனுமதிக்க கூடாது என்று எனக்கு தெரியாது. பெற்றோர் கூறிய பிறகு அவற்றை வாங்கி திருப்பி கொடுத்து விட்டோம். பெற்றோரிடமும் மன்னிப்பும் கேட்டோம்.

அருப்புக்கோட்டை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் நாகராஜன்: தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், உயரதிகாரிடம் தெரிவித்த பின் செய்யுங்கள் என்று பலமுறை கூறி வருகிறோம். மத புத்தகம் வழங்கல் பற்றி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதிகாரி விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=138246

அரசாங்க பள்ளியில் பைபிள் கொடுத்து மதம் மாற்றுகிறார்களாம்;அது உண்மையா?

இங்கே புகைப்படத்தில் காணும் காட்சி என்ன, மாணவர்களே போட்டி போட்டுக்கொண்டு அதனை வாங்குகின்றனர்; யாரும் வற்புறுத்தி கொடுப்பது போலத் தெரியவில்லை; மேலும் இது இலவசமாகத் தரப்படுவதால் அதினால் எந்த பாதிப்பும் இருப்பது போலவும் தெரியவில்லை.

ஆனாலும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உள்நோக்கத்துடன் இதுபோன்ற செய்திகளை தினமலர் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது;தெரிந்தோ தெரியாமலோ இதுபோன்ற எதிர்ப்புகளாலேயே கிறித்தவ மார்க்கம் வளருகிறது.

ஏனெனில் ஒன்றுமறியா சிறுபிராயத்தில் மாணவர்களுடைய சிந்தனையை மழுங்கச் செய்யும் ஒன்றுக்கும் உதவாத‌ தத்துவங்களையும் சடங்குகளையும் இந்து மார்க்கம் திணிக்கிறது;ஆனால் கிறித்தவமோ ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குகிறது.

இதனால் கவரப்படும் மாண‌வர்கள் சிறுவயதில் எளிதில் கிறித்தவத்தின்பால் அதாவது இயேசு எனும் வழிகாட்டியின் மீதான நம்பிக்கை கொள்கிறார்கள்;அதனை பெரியவர்கள் தடுக்கும் போது ஏன் தடுக்கிறார்கள் என்ற கேள்வியே ஒரு மாணவன் மனதில் பெரிய பாதிப்பை உண்டாக்கி மற்றொரு வாய்ப்பில் முழுமையான கிறித்தவனாக மாறுகிறான்.

ஆனால் இந்து மார்க்கத்தின் பெரியவர்களோ தன் பிள்ளை சினிமா பார்த்தாலோ அல்லது வேறு எந்த தவறான பழக்கவழக்கங்களையோ பழகினால் அதனைப் பெரிதுபடுத்தாத நிலையில் மெய்ஞான மார்க்கமாகிய இயேசுவின் மார்க்கத்தைக் குறித்து பெரியதாக எச்சரிக்கை செய்து மாணவர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டுகிறார்களே தவிர அதனைத் தடுக்க இயலாது என்பதே மனோதத்துவ ரீதியிலான உண்மையாகும்.

ரோட்டில் கைப்பிரதி கொடுக்கக்  கூடாது,மருத்துவமனையில் சென்று முன்பின் அறியாத ஏழை எளிய மக்களை சந்தித்து ஆறுதல் கூறி பிரார்த்தனை செய்யக்கூடாது, மாணவர்களுக்கு நல்வழிக்கான ஆலோசனைகளைக் கூறி அவர்கள் வெற்றிபெற உதவும் இயேசுவின் வரலாறு அடங்கிய புதிய ஏற்பாடு புத்தகத்தைக் கொடுக்கவும் கூடாது.

அப்படியானால் எப்படி மத நல்லிணக்கம் வளருமாம்?

ஆனால் இவர்கள் அனைத்து அரசாங்க அலுவலகத்திலும் பொது இடங்களிலும் ஆக்கிரமித்து கோவில் கட்டி உண்டியல் வைத்து ஒன்றுமறியாத மக்களை ஏமாற்றி வசூல் செய்யலாம்;ஒரு சாதாரண தெருவோர கோவிலைச் சுற்றியுள்ள எத்தனை கடைகள், எவ்வளவு பணப்புழக்கம் ? இதையெல்லாம் யார் கேட்பது  ? இது தான் மதசார்பற்ற இந்தியாவில் ஜனநாயகம் என்பதா ? இது தான் பத்திரிகை சுதந்தரத்தைக் குறித்து பெரிதாகப் பேசும் தினமலர் போன்ற பத்திரிகையாளர்களின் கருத்து உரிமை தத்துவமா ?

மூத்த அப்போஸ்தலர் செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்..!


Senior Chennai Pentecost Leader Rev, P.S.Chelladurai F/O Rev. Sam P. Ch expired at 7.15 p.m. Sunday (5/12). He is 88 yrs.His Funeral service tomorrow 2.30 p.m.at AFT church, Purasavakkam. Burial at 4.30 p.m. at Kilpauk. www.revsam.org

Pls Fwd to all…Thank You..!

PSC4.png

Pastor P. S. Chelladurai – The founder of AFT Church and father of Rev. Sam P. Chelladurai, passed into glory on 05-12-2010 at 07:15pm in Chennai. The funeral service will be held at 02:30pm in AFT Church on Tuesday (07-12-2010). Burial will be in Kilpauk Cemetery at 04:30pm. The service will be webcast LIVE.

பெந்தெகொஸ்தே இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் மூத்த அப்போஸ்தலருமான செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்; நேற்று மாலை 07:15 க்கு அவருடைய உயிர் பிரிந்தது; நாளை மாலை 04:30 மணிக்கு அவருடைய நல்லடக்கம் நடைபெறுவதாக அறிகிறோம்.

ஐயா அவர்கள் தனது  88 வது வயது வரையிலும் நல்ல நினைவாற்றலுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது;அவர்கள் தனது விசுவாசத்தைத் தூண்டும் போதனைகளால் அநேகரை எழுப்பியதுடன் தனது பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்தம் சந்ததியையும் கண்டு ஒரு முழுமையான வெற்றிகரமான கிறித்தவ ஜீவியத்தை நிறைவேற்றினார்.

அவர் தனது துணைவியாருடன் கொண்டிருந்த உத்தமமும் சமாதானமும் நிறைந்த‌ இல்வாழ்க்கை மிகவும் போற்றுதற்குரியது; இளந்தலைமுறையினர் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியானது; பிரபல போதகர் சாம்.P.செல்லத்துரை அவர்கள் அன்னாரது மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்த்தருடைய வருகையில் நாம் அவரை சந்திப்போம் என்ற விசுவாசத்துடன் நம்முடைய சபையின் தலைவருக்கு நமது இறுதி மரியாதையினை செலுத்துகிறோம்;அவர்மூலமாக நாம் கற்றுக்கொண்ட நல்ல விசுவாச போதனைகளுக்காக ஆண்டவருக்கு துதி செலுத்துகிறோம்.

திருநங்கைகள் Part.2


திருநங்கைகள் சம்பந்தமாக அண்மையில் தமிழ் கிறித்தவ தளத்தில் நாம் அளித்த பின்னூட்டம்…

அன்பு நண்பர் சரவ் அவர்களுக்கு தாங்கள் குறிப்பிட்ட திருநங்கைகள் சம்பந்தமான எனது கட்டுரையை தொடுப்பில் சென்று பார்க்கவும்;

https://chillsam.wordpress.com/2009/11/12/eunuch/

நண்பரே, 1.கொரிந்தியர் .5 திருநங்கைகளுக்காகவே எழுதப்பட்டதைப் போலக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்; அது மீட்கப்பட்ட சபைக்காக எழுதப்பட்டதாகும்.

// வேதம் நமக்கு இவ்வாறு நமக்கு சொல்லியிருக்க நாம் எப்படி திருநங்கைகள் என்று சொல்லபடுகின்ற நபர்களோடு அவர்கள் மனந்திரும்பாத பட்சத்தில் கர்த்தருக்குள் ஐக்கியம் கொள்ள முடியும்.அவர்கள் சபையில் வரலாம் வேத வார்த்தையை கேட்கலாம் ஆனால் தங்கள் பாவ கிரியைகளை விட்டு மனந்திரும்பாத பட்சத்தில் எப்படி ஐக்கியம் கொள்ள முடியும் என்று தெரியவில்லை.//

மற்ற சாதாரண மனிதர்களோடு பழகி உறவாடி வியாபாரம் செய்து ஐக்கியம் கொள்ளும் போதும் இதே உணர்வு உங்களுக்கு உண்டாகுமா; அவர்கள் மனந்திரும்பும் வரை காத்திருந்து ஐக்கியம் கொள்வதைப் போலவே இவர்களுடனும் நேசம் பாராட்டுவதில் என்ன தயக்கம்? சபைக்குட்பட்ட‌ மற்ற மனிதர்கள் பாவமே செய்யவில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்? திருநங்கைகள் என்றாலே அந்தரங்கமாக மிகவும் மோசமானவர்கள் எனும் தவறான அபிப்ராயமே தங்களது அச்சத்துக்குக் காரணமாக இருக்கிறது; இந்த உலகிலுள்ள அனைவரையும் போலவே திருநங்கைகளும் பாவத் தன்மையில் பிறக்கிறார்கள் என்பதைத் தவிர அவர்கள் எந்த வகையிலும் மற்ற மனிதர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர்களல்ல‌.

இன்னும் சொல்லப்போனால் பாவத்தை நிறைவேற்றும் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட மாறுபாட்டினால் மனம் பேதலித்து துவண்டுபோய் தாழ்வு மனப்பான்மையினால் சமூகத்தைவிட்டு தள்ளப்பட்டவர்கள்; இதனால் பாவ சோதனைகள் குறைவானவர்கள்; அன்புக்காக ஏங்குபவர்கள்.

பின்குறிப்பு:

இதையெல்லாம் படித்துவிட்டு என்னை சந்தேகப்படவேண்டாம்…ஹி..ஹி..!

Part.2:2

//நாளைக்கே ஒரு திருநங்கை மனந்திரும்பாமல் (தன பாலிய தொழிலை செய்து கொண்டும்) ஞான ஸ்நானம் வேண்டும் என்றால் எப்படி நம்மால் கொடுக்க முடியும்.//

திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள் என்ற எண்ணத்தை முதலில் தவிர்க்கவேண்டும் ;அடுத்து தங்கள் பாலியல் தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள் என்ற பகுதி ;இவையெல்லாமே பரிசுத்தாவியைப் பெற்றவர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் நிதானமாக செயல்பட்டு போதனையின் மூலம் நிறைவேற்ற வேண்டிய எல்லைகளாகும் ;

வேதமே தெளிவாகக் கூறுகிறது,தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தோரும் உண்டு ;தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டோருமுண்டு’ என ; ஆம் ,நார்மலாகப் பிறந்து தேவனுடைய ராஜ்யத்துக்காகத் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டோர் என்பார் தவறு செய்யவில்லையா ,அதுவும் போகட்டும் ,மனதின் உணர்வுகளை அடக்கிக் கொண்டு அண்ணகர்களாக தேவபணியாற்றுவோரை விட தங்களை சரீர ரீதியான கெடுத்துக்கொண்டு தங்கள் ஆண்மையை இழந்தோரின் நிலைமை பரிதாபமல்லவா ,அவர்களுடைய மனமே இதைச் செய்யக் காரணமாக இருந்தது எனில் வேத வார்த்தையின்படி அவர்கள் மனம் புதிதாகுமானால் எத்தனை மேன்மையாக இருக்கும்..?

Part.2:3

// நீங்கள் என்ன சொல்ல வருகிறீர் என்று எனக்கு புரியவில்லை.பாலியல் தொழில் செய்து கொண்டு இருந்தாலும் அவர்களை சபையில் ஞான ஸ்நானம் கொடுத்து,கர்த்தரின் பந்தியில் பங்கு பெற சொல்கிறீகளா? அல்லது வேறு என்ன சொல்ல வருகிறீர். //

திருநங்கைகளுக்கென்று தனி சுவிசேஷமோ தனி அணுகுமுறையோ தேவையில்லை என்கிறேன்; பாலியல் தொழில் செய்வோரை வேதம் எப்படி அணுகுகிறதோ அப்படியே திருநங்கைகளையும் அணுகினால் போதுமென்கிறேன்;

பாலியல் தொழில் செய்யாவிட்டாலும் இங்குமங்கும் ஓரிரு காரியங்களில் சறுக்கிவிட்டு பந்தியில் பங்கேற்போர் இருக்கிறார்களல்லவா? பந்தியில் பங்கேற்பது பெரிய விஷயமல்ல; நீங்கள் தராவிட்டால் அவரைக் குறித்து அறியாத எங்கு வேண்டுமானாலும் அவர் பந்தியில் பங்கேற்கமுடியும்; எனவே தான் வேதம் அவரவருடைய மனசாட்சியை இங்கே நீதிபதியாக (1.கொரிந்தியர்.1:31) கூறுகிறது.

இன்னும் சில சபைகளில் கணவன் மனைவி சண்டையிட்டு வந்தாலும்கூட பந்தியிலிருந்து விலக்குவார்கள்; இதற்கெல்லாம் யாருக்கும் அதிகாரமில்லை; இது கிறித்துவுக்குள் விசுவாசிக்குக் கொடுக்கப்பட்டுள்ள சுயாதீனத்தைக் கேள்விக்குரியதாக்கிவிடும்; போதிக்கவும் ஜெபிக்கவும் மட்டுமே ஊழியருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது; ஆனால் இங்கே மனைவியை தள்ளிவிட்டு விசுவாசியாக இருக்கமுடியாது; ஆனால் போதகராக இருக்கலாமல்லவா..? தள்ளிவிடப்பட்டவளை விவாகம் செய்பவனும் அவளை தள்ளிவிட்டவனுமாகிய இருவருமே அவளை விபச்சாரம் செய்யப்பண்ணுகிறார்கள் என்று வேதம் கூறுகிறது.

சரி, மீண்டும் மையப் பொருளை நோக்கி வருவோம்…
திருநங்கைகள் இயல்பிலேயே பாவத்துக்கு அடிமைகளல்ல, அன்புக்கே அடிமைகள்; ஏனெனில் அவர்களுடைய உடற்கூறு அமைப்பே அப்படிப்பட்டதாகும்; மேலும் பிறப்பிலேயே திருநங்கைகளானவர்கள் மூலமே இடையில் மனநிலை காரணமாகத் தங்களைத் திருநங்கைகளாக மாற்றிக் கொண்டோரை சந்திக்கவேண்டும்.

கிறித்தவ விசுவாசத்தைப் போல திருநங்கைகளை முழுமையடையச் செய்யும் வேறொரு கொள்கை இந்த அகிலத்திலேயே கிடையாது என்பேன்; ஆனால் திருநங்கைகளைக் கவர்ச்சிப் பொருளாகவும் வியாபாரப் பொருளாகவும் வேடிக்கைப் பொருளாகவும் இந்த உலகம் பார்க்கிறது; எனவே தங்களை வஞ்சிக்கும் இந்த உலகைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒருவித மூர்க்கத்தனம் அவர்களுடைய குணாதியத்தையே மாற்றிவிடுகிறது;

எப்படி மிகவும் அழுக்காக இருக்கும் ஒரு துணியை மிக அதிக தண்ணீரும் சௌக்காரமும் போட்டு அதிக முயற்சியினால் வெளுக்கிறோமோ அதுபோலவே திருநங்கைகள் மிகவும் மோசம் என்று நீங்கள் நினைத்தால் அவர்களைவிட்டு விலகாமலும் விலக்கிவிடாமலுமிருந்து அவர்கள் தானியேல்,எஸ்தர் போன்ற பரிசுத்தர்களை நேசத்துடன் வளர்த்தவர்தம் வழிவந்தோர் என்ற பாசத்துடன் அணுகினால் போதும் என்கிறேன்.

(தொடருவேன்…)

நேத்து ராத்திரி யம்மா..!


நேற்றிரவு (09:10:2010) தூக்கம் பறிபோனது, துக்கம் வரவானது; காரணம் எங்கள் ஊரிலுள்ள பெருமாளுக்கு ஏதோ விசேஷமாம்; கடந்த மூன்று நாளாக அரற்றிக் கொண்டிருந்தார்கள்; நமக்கு அதில் ஆர்வமில்லாவிட்டாலும் கட்டாயப்படுத்துவது போல அதிகாலையிலிருந்து இரவு பத்து மணிக்கும் மேலாக ஊரை ஒலியினால் மாசுபடுத்தினர்;

எல்லாம் போக நேற்று ஒரு ஊர் பயணம் முடித்து திரும்பி சோர்வுடன் படுக்கைக்குச் செல்லவே இரவு 11:30 ஆனது; ஒலிபெருக்கி சத்தத்திலிருந்து தப்பிக்க கதவையும் சன்னல்களையும் அடைத்துவிட்டு காற்றுக்கு வழியில்லாமல் துன்பத்துடன் தூங்க முயற்சித்தபோது சில மணித் துளிகளில் “டமடம” வென அடித்துக் கொண்டும் பஜன் பாடிக் கொண்டும் சாமி ஊர்வலம் வந்தது;

போதாக்குறைக்கு பட்டாசு வெடி… அந்த மிகப் பெரிய சைஸ் பேண்டு (Big Band)கள் மூன்றும் பள்ளிகளில் ‘மார்ச் ஃபாஸ்டு’ க்கு அடிப்பது, அத்துடன் சாவுக்கு அடிக்கும் மேள வாத்தியமும் சேர நெஞ்சை படபடக்கச் செய்யும் இரைச்சலுடனும் பிணத்துக்கு முன்பாக ஆடும் அருவருப்பான கூத்து நடனத்துடனும் சாமி ஊர்வலம் வந்தது;

கூத்து நடனம் ஆடிய இளைஞர்களும் மற்றவரும் நல்ல போதையில் இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது; இந்த ஊர்வலம் வருவதற்காகவே சில தினங்கட்கு முன்பு எங்கள் வீட்டு வாசலிலிருந்த நல்ல நிழல்தரும் மரத்தை வெட்டி வீழ்த்தியிருந்தனர்; இது அவர்கள் தேசமல்லவா, யாரையும் எதுவும் கேட்க முடியாது;நாங்களோ வாடகைக்கு குடித்தனம் இருப்பவர்கள்; ஏதாவது நியாயம் கேட்டாலும் வீட்டை காலி செய்யவைப்பர்; வேறு வீடும் தரமாட்டார்கள்;

ஒரு மாட்டு வண்டியில் சாமியை அலங்கரித்து வைத்து அதற்கு மின்வசதி தரும் மின்கலத்தையும் வண்டியுடன் இணைத்து மாட்டுக்கு பதிலாக மனிதர்கள் இழுத்துவந்தனர்; வண்டியிலோ ஒரு பூஜாரி ராஜா போல அமர்ந்துகொண்டு கொஞ்சமும் உணர்ச்சியற்ற நிலையில் இயந்திர கதியில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்;

பக்தர்கள் கொடுத்த பூஜை தட்டை சில நொடிகள் அந்த விக்கிரஹத்திடம் ஒரு காட்டு காட்டிவிட்டு பக்தர்களிடம் கொடுக்க, அவர்களும் இயந்திரத்தைப் போல பெற்றுக் கொண்டு திரும்பினர்;

ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக இருக்கக்கூடிய மின்சாரம் மற்றும் கேபிள் தொலைபேசி சர்வீஸ் கம்பிகளில் உரசி, உயர்ந்ததும் மட்டமானதுமான அந்த காகித அட்டை அலங்காரம் கவிழ்ந்து சாமி தடுமாறி விழுந்துவிடுமோ ‘ வென இளைஞர்கள் அதற்கென ஒரு கம்பை தயாரித்து அதன்மூலம் சர்வீஸ் கம்பிகளை உயர்த்திபிடித்து சாமியின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தனர்;

சாமியின் அழகோ கண்கொள்ளா காட்சி…
‘ஒருவனுக்கு ஒருத்தி ‘ என குடும்பஸ்தர்கள் வாழும் தெருக்களில் நுழைந்த சாமியோ சைடுக்கு ஒன்றாக ரெண்டு குட்டிகளுடன் வந்தார்; போனவாரம் வந்து போன மிஸ்டர் கணபதி சிங்கிளாகத் தான் வந்தார்;

சாமி குட்டிகளை மட்டும் கட்டிக்கொள்ள நம்ம பக்தர்கள் அவருடைய பெண்சாதிகளுடன் அவரையும் சேர்த்து கட்டியிருந்தனர்; விழுந்துருவாரோ என்ற நல்ல எண்ணமோ அல்லது தனது ஜோடிகளுடன் ஓடிவிடுவாரோ என்ற கெட்ட எண்ணமோ தெரியவில்லை;

என்னைப் பொருத்தவரை அவர் மிஸ்டர் கிருஷ்ணனாக இருக்கவேண்டும்; ஆனால் அவரைக் குறித்து பெருமாள் என புகழ்ந்தனர்; ‘ லாஜிக் ‘ புரியவில்லை;

பெருமாளைப் பொறுத்தவரையில் அலமேலு அம்மாவுடன் இருப்பார்; அதுவும் ஏதோ கொடுக்கல் வாங்கல் தகராறில் கோவித்துக் கொண்டு திருப்பதி மேலேறி தவமிருப்பதாகவும் அவருடைய கடன் தீர்ந்தபிறகே வந்து குடித்தனம் பண்ணுவார் என்றும் ஐதீகமாம்; நம்முடைய ஏழை எளிய மக்களும் தங்கள் முடி உட்பட அனைத்தையும் ஆண்டாண்டு காலமாக தானமாக வழங்கியும் இன்னும் அவருக்கு திருப்தியாகவில்லை;

எல்லா சாமியும் ஆசீர்வதிக்கும் பாவனையில் போதும் என்பது போல வலக்கரத்தைக் காட்ட இவரோ இன்னும் வேண்டும் என்பது போல வலக்கரத்தையும் இடக்கரத்தை அள்ளி முடித்துக் கொண்டது போலவும் வைத்திருப்பார்;

அப்படியானால் எங்கள் தெருவுக்கு வந்தது பெருமாள் அல்ல; இத்தனை கலாட்டாக்கள் நடந்தும் சாமியோ சாமியாரோ மக்களுடைய பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் சொல்லவில்லை; அவர் அருள் தருவதாகச் சொல்லுவதும் பக்தர்கள் வேண்டியது நடக்கும் என்று காத்திருப்பதும் சுயநலம் சார்ந்த பக்தியாகவே தோன்றுகிறது; ஏனெனில் ஒரு தெருவுக்கு சாமி வந்து போவதாலோ சாமியைத் தேடி பக்தன் சென்று வருவதாலோ ஒரு தனிப்பட்ட மனிதனுடைய வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்பட்டது போலத் தெரியவில்லை;

கோயிலில் விழாக்கோலம் ஒருபுறம், பக்தன் அருகிலிருக்கும் டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு மல்லாந்து கிடக்கும் அலங்கோலம் மறுபுறம்; அவன் பெண்டு பிள்ளைகள் அங்கே சாமியை விழுந்து வணங்கிக்கொண்டிருக்க இங்கே இவன் சாக்கடையில் விழுந்து எதையோ தேடிக்கொண்டிருக்கிறான்;

அந்த காலத்தில் கோயிலில் பரத்தையர் நடனமாடுவர்; இதனை பரதநாட்டியம் என்றும் கூறுவர்; இந்த நடனத்தால் வசீகரிக்கப்ப‌டும் ரிஷிகளும் மன்னர் பெருமக்களும் அன்றிரவு அவர்களோடு தங்களைப் பகிர்ந்துகொள்வர்;

இன்றோ ஒரு பாவமுமறியாத சிறுமிகளையும் வயதுக்கு வந்த இளங்குமரிகளையும் அதே கோவில் வாசலில் ஆடவிட்டு அவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்;

வீட்டுக்கு ஒன்றாக ஆணாகவோ பெண்ணாகவோ பெற்று நம்முடைய எதிர்காலத்தில் நமக்குத் துணையாக பிள்ளைகளை வளர்த்து இதுபோன்ற காமாந்தகர்களுக்கு அவர்களை பலியாக்கும் ஆபத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது;

ஏனெனில் அங்கே இருக்கும் சாமிகளின் கதைகளும் புராணங்களும் வீரபராக்கிரமங்களும் அத்தனை பயங்கரமானது; இந்த காலத்தில் அவர்கள் இறங்கி வந்து நம்முடைய பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு போகாவிட்டாலும் அவர்களுடைய ஆவியை இளைஞர்கள் மனதில் புகுத்தி அவர்கள் மூலம் பெண் பிள்ளைகளைக் கெடுத்துவிடுகிறார்கள்; இன்னும் அடுத்தவன் மனைவியையும்கூட இந்த சாமிகள் விட்டு வைப்பதில்லையே;ஆனானப்பட்ட விஷ்ணு பகவான் உட்பட தனது பக்தர்களை ருசிபார்ப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்;

இதையெல்லாம் யோசித்து யோசித்து நேற்றிரவு தூக்கம் பறிபோனது; சாமி அங்கே வேஷத்தைக் கலைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்க பக்தர்களோ வழக்கம்போல தங்கள் அன்றாட பாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்; பொழுதுபோக்குக்கு எந்திரன் முதலான திரைப்படங்களும் தொலைக்காட்சி சீரியல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சமத்துவ சமதர்ம சமுதாய மறுமலர்ச்சிக்கான அற்புதமான தளமாக டாஸ்மாக் கடைகளும் இருக்கவே இருக்கிறது.

வாழும் பாரதம்… வளரும் தமிழகம்…!?

திருச்சிக்காரன் ஓட்டம்…


எமது பல்முனைத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திருச்சிக்காரன் ஓட்டம்…

http://thiruchchikkaaran.wordpress.com/

சுகவீனம் காரணமாகவும் வேலைப்பளு காரணமாகவும் தளத்தைப் பராமரிக்காமலிருப்பது வழக்கமான ஒன்றுதான்;ஆனால் அதற்காக தளத்தையே மூடிவிட்டு ஓடுவது என்ன நியாயம்?

இதனால் எமது உழைப்பும் வீணாகிறதே… இதனை எதிர்பார்த்துதான் நான் எனது ஒவ்வொரு பின்னூட்டத்தையும் சேமித்து கட்டுரையாக்குகிறேன்;

இதனை எனது தளத்தில் வாசகர்கள் வாசிக்கலாம்.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&subForumID=506728&p=2

கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம்: அதிகாரிகளை திருப்பியனுப்பிய கிராம மக்கள்..!


ஆத்தூர்: “கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம்’ என்று கூறிய கிராம மக்கள், “இலவச வீடே வேண்டாம்’ என, கூறி அதிகாரிகளை திருப்பியனுப்பினர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியக்கரை பஞ்சாயத்துக்குட்பட்ட கருத்தராஜாபாளையம் கிராமத்தில் 600 குடியிருப்புகளில் 2,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

கிராம மக்களின் குலதெய்வமாக பெரியசாமி ஸ்வாமி கோவில் உள்ளது. இரவு நேரத்தில் பெரியசாமி ஸ்வாமி கிராம பகுதி வழியாக வேட்டைக்கு செல்வதாகவும், ஊரை காப்பாற்றி பாதுகாத்து வருவதாகவும் மக்கள் நம்புகின்றனர்.

அதே போல கான்கிரீட் வீடோ, மாடி வீடோ கட்டினால் தெய்வ குற்றம் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால் அந்த கிராமத்தில் இன்றளவும் ஒரு கான்கிரீட் வீடுகூட இல்லை.

தமிழக அரசின் இலவச வீட்டு வசதி திட்டத்துக்காக குடிசை வீடுகளை கணக்கெடுக்கும் பணிக்கு சென்ற அலுவலர்கள், கருத்தராஜாபாளையத்தில் 300க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இருப்பதை கண்டு கணக்கெடுப்பில் சேர்க்க முற்பட்டனர். பொதுமக்களோ, குடிசை வீடே போதும் என்று அதிகாரிகளை திருப்பி அனுப்பினர்.

கருத்தராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி கூறியதாவது: கருத்தராஜாபாளையத்தில் பழமை வாய்ந்த பெரியசாமி, கருப்பையா கோவில் உள்ளது. இந்த கோவிலிலுள்ள ஸ்வாமி நாள்தோறும் ஊஞ்சலில் அமர்ந்து விளையாடி வருவதால், வீடுகளில் படி வைத்து கட்ட கூடாது. மாடியில் நின்று ஸ்வாமியை பார்க்க கூடாது.

எனவே இன்றளவும் கூரை, ஓட்டு வில்லை வீடுகள் மட்டுமே இந்த கிராமத்தில் உள்ளது.கான்கிரீட் வீடுகள் கட்டினால் தெய்வ குற்றமாகிவிடும். 140 ஆண்டுகளுக்கு மேலான ஓட்டு வில்லை வீடுகளே உள்ளன.

இரவில் பெரியசாமி ஸ்வாமி வேட்டைக்கு செல்வதால் கோவிலில் மின்விளக்கு போடுவதில்லை. வீடுகளில் குழந்தைகளை தொட்டில் கட்டி போட மாட்டோம். தரையில் தான் தூங்க வைப்போம். ஸ்வாமி கோவில் விழா நடத்தினால் விருந்து கூட தரையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

மண்பானை செய்யும் குயவர்கள், மரம் மற்றும் நகை சிற்ப ஆசாரிகள் கிராமத்தில் இல்லை. உலி சத்தமும் கேட்க கூடாது. அவ்வாறு உறவினர்களாக குயவர், ஆசாரிகள் வந்தாலும் இரவில் தங்க கூடாது.

கிராமத்தில் இருவர் மாடி வீடுகளை கட்டினர். அவர்களது குடும்பத்தில் உடனடியாக பிள்ளைகள், மூத்தவர்கள் இறந்துவிட்டதோடு ஏழ்மை நிலைக்கு வந்தனர். அரசு தொகுப்பு வீடு கட்டிய வெங்கடேஷ், மருதை ஆகிய இருவரது வீட்டில் தந்தை இறந்தனர். தொகுப்பு வீட்டை இடித்து ஓட்டு வீடாக கட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

கிராம மக்கள் கூறியதாவது: மாரியம்மன் கோவில் கிணற்றை தூர் எடுத்தல், தேர் இழுத்தல், கபாடி போட்டிகள் நடத்தினால் மழை பொழியும்.கோவில் விழாவின்போது பெரியசாமி கோவிலில் ரேடியோ, மின்விளக்கு போன்றவைகள் பயன்படுத்துவதில்லை.

அரசு இலவச வீடு வழங்கும் திட்டத்தில் அதிகாரிகள் கூரை வீடு குறித்து கணக்கெடுப்பு செய்ய வந்தனர். கான்கீரிட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றமாகி, கிராமத்திலுள்ளவர்கள் இறக்க நேரிடும் என விளக்கம் அளித்தோம். கூரை வீடுகளிலேயே வாழ்ந்தாலும் மாடி வீடு தேவையில்லை என கூறி அனுப்பிவிட்டோம். கோடை காலத்திலும் தண்ணீர் பஞ்சம் இல்லாத கிராமமாக இருக்க குலதெய்வம் தான் காரணம், என்றனர்.
-இது நாளிதழ் செய்தி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=17537
ஊருக்கு ஒரு கோடாங்கியையும் நாட்டுக்கு ஒரு நாட்டாமையையும் வைத்துக்கொண்டு இந்த மக்கள் செய்கிற அலம்பல்கள் சொல்லிமாளாது;
இப்படியே கல்வி,சுகாதாரம்,வாகனப் போக்குவரத்து,விவசாய பயன்பாட்டு இயந்திரங்கள் என அனைத்திலும் இந்த மக்களை நம்பவைத்து அவர்கள் நிலையை மேம்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிறது;
அரசாங்க அதிகாரிகள் ஊழலால் சதுரமாகி முக்கோணமாகிப் போன அரசு ஏந்திரத்தை வைத்துக்கொண்டு எப்படியோ கொண்டு சென்று சேர்க்கப்பார்க்கும் திட்டங்களும் இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளால் தடைபட்டு நிற்கிறது;
அரசாங்கத்தை மக்கள் நம்புவதற்கும் மக்களை அரசாங்கம் நம்பவைப்பதற்கும் படுகிற பாடுகளைப் பார்த்து இறைவன் நகைக்கிறான்..!

வெற்றித் திருமகள் உன்னைத் தேடி..தேர்வு எழுதும் மாணவர்களுக்காக…


பெற்றோருக்கு ஒரு வார்த்தை…

இது உங்களுக்கும் உங்கள் கண்மணிக்கும் சோதனையான கட்டமாகும்;  இந்த நேரத்தில் இருதரப்பும் பதட்டமாகவே இருக்கும்; ஆனால் நீங்கள் தான் சற்று பொறுமையாக இருந்து உங்கள் பிள்ளையை ஆதாயப்படுத்த வேண்டும்; உங்கள் கண்மணியைக் கோபப்படுத்த வேண்டாம்; விரட்ட வேண்டாம்; குற்றப்படுத்த வேண்டாம்; நல்ல வார்த்தைகளைச் சொல்லி தைரியப்படுத்துங்கள்; உயர்த்தி பேசுங்கள்; நீங்கள் கடவுளை நம்புவதால் அவர் நிச்சயமாக நன்மை செய்வார்; அற்புதம் என்பதே எதிர்பாராமல் நடப்பது தானே; அற்புதம் என்பதை ‘மேஜிக்’ போல யாரும் திட்டமிட்டு செய்யமுடியாது;எனவே மனந்தளராமல் சிறந்த வாய்ப்புக்காகப் போராடுங்கள்,உங்கள் கண்மணியுடன் இணைந்து..!
தொடர்ந்து வாசிக்க…


சிலையாக..!


நான் கடவுளுக்காக ஒன்றுமே செய்யவில்லை,சிலையாக‌ நின்றுவிட்டேன்;என்னால் யாருக்கும் ஒரு பயனுமில்லை ‘யென சில ஆத்துமாக்கள் தன்னைத் தானே குறுக்கிக் கொள்ளக்கூடும்;

ஆனால் கடவுளுக்காக சிலையாக நின்றதற்கும் பலனுண்டு;ஒரு குறிப்பிட்ட செய்தியை சுமந்தவாறு சிலையாக நின்றதால் பயனடைந்த சிலருமுண்டு;அதற்குரிய பலனும் இறையரசில் கிடைக்கப்பெறும்.

(சில்சாம் கோவை ராஜன் அண்ணனிடம்…)

துடித்துப் போனாள்,துர்கா..!


வீட்டுக்கு வந்து சேரவே இரவு 10:30 மணி ஆனது;அடுத்து பிரசாத்துடன் தொலைபேசியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பல காரியங்கள் பேசி ஜெபித்து முடித்து கணிணியில் சொந்த
குறிப்புகளைப் பதித்துவிட்டு இன்று மாலை நான் கலந்துகொண்ட வீட்டுக்கூட்ட செய்தியின் குறிப்பை கட்டுரையாக்கி எனது தளத்தில் பதித்தேன்; இதனை முடிக்கவே விடிந்துவிட்டது;
படுக்கச் செல்லும் போது காலை 05:30 மணியானது;

எழுந்திருக்கும் போது மதியம் 1மணி;தூக்கத்தைத் தொடர்ந்தேன்; இப்போது 2மணி; நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்றதொரு தூக்கம்;

எனது தாயார் போன் செய்து சத்தம் போட்டார்களாம், நான் ஏன் போனை எடுக்கவில்லையென.

பிறகு எனது கைபேசியை எடுத்துப் பார்த்து அதிர்ந்துபோனேன்; அதில் 42 தவறவிட்ட அழைப்புகள் பதிவாகியிருந்தது;

துர்கா மட்டுமே 14 முறை முயற்சித்திருக்கிறாள்; நேற்று காலையும் இதேபோல நான் காலை 4 மணிக்கு படுத்திருந்ததால் நான் தூக்கக் கலக்கத்தில் சரியாகப் பேசவில்லை;

இன்று காலையிலிருந்தும் நான் போனை எடுக்காததால் பயந்துபோய் வீட்டு நம்பருக்கு தொடர்பு கொள்ள நானே எடுத்தேன்; இப்போது சொல்கிறாள்,ரொம்ப நாள் ஆனது போலிருக்கிறது, உங்களுக்கு உடம்பு சரியில்லையா, என;

பிறகு சமாளித்து எனது சில தனிப்பட்ட அசௌகரியங்களைச் சொன்னேன்; மற்றவருக்காக ஜெபிக்கும்போது நமது சரீரத்தில் ஏற்படும் மாற்றங்களையும் பில்லிசூனிய கட்டுகளிலிருப்போருக்காகப் போராடி ஜெபிக்கும்போது நமக்கு ஏற்படும் உபத்திரவங்களையும் கூறினேன்; ஆச்சரியப்பட்டாள்;

‘நீங்க ரொம்ப கிரேட் ஸார்’ என மனதாரப் பாராட்டினாள்; ஆவி உலகம் சம்பந்தமான மற்றும் சில உண்மைகளையும் எளிமையாகச் சொன்னேன்;

ஒவ்வொரு மனிதனும் நன்மையான அல்லது தீமையான ஏதோ ஒரு ஆவியினால் ஆளப்படுகிறான்; இதில் நன்மையான ஆவியினால் ஆளப்படுவோர்க்கு நன்மைகளும் தீய சக்திகளால் துன்பங்களும் உண்டாகிறது;

தீயசக்தியினால் துன்புறுவோர் தேவைக்காக நாம் அடுத்த வீட்டிலிருப்போரிடம் உதவி கேட்பது போல பிரார்த்தனை செய்ய நம்மிடம் வருவார்கள்;

அவர்களுக்கு உதவி செய்யும்போது தீயசக்திகளின் எரிச்சலுக்கு
நாமும் ஆளாக நேரிடும்; ஆனாலும் நாம் பயப்படப்போவதில்லை; அவற்றை அழிக்கவே ஆண்டவர் நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்;

‘உனக்காக யுத்தம் செய்வேன்’ என்கிறாரே,எப்படி?
இதுபோல பிரார்த்தனை செய்பவர்கள் மூலமே நமக்கு விடுதலை வருகிறது; ஏனென்றால் இந்த உலகில் வாழும் நம்முடைய போராட்டங்களை நாமே மேற்கொள்ளும் வழிமுறைகளையும் அதற்கான ஆயுதங்களையும் ஆண்டவர் ஏற்கனவே நம்மிடம் கொடுத்துவிட்டார்;

இப்படியாகச் சொன்னவுடன் தெளிவடைந்த துர்கா, ‘சரி நீங்க தூங்குங்க நான் சாயங்காலம் அழைக்கிறேன்’ என்றாள்;
நானோ, ‘இப்போதே ஜெபிக்கிறேன், மாலையில் என்னுடைய நிலை எப்படியிருக்குமோ’ என்று பிரார்த்தனை செய்தேன்;

ஜெபத்துக்கு முன்பாக கீழ்க்காணும் வாக்கியம் ஆவியில் உதித்தது,
“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.”(சங்கீதம்.37:4)

இதிலிருந்து நான் சொன்ன சில தத்துவங்கள் எனக்கே பாடமாக இருந்தது;

“இருதயத்தின் வேண்டுதல்களை” என்ற வார்த்தையின் மூலம் நாம் அறிவது என்ன?

ஒவ்வொரு ஆத்துமாவின் இருதயத்திலும் ஒவ்வொரு விதமான தனிப்பட்ட விருப்பங்கள் உருவாகிறது; அந்த விருப்பங்கள் நிறைவேறிவிட்டால் பிரச்சினையில்லை; ஆனால் அவை தாமதிக்கும் போது ஏக்கமாக உருமாறுகிறது; ஏக்கமே விரக்தியாக சோர்வாகவும் மனச் சோர்வாகவும் மன அழுத்தமாகவும் மன நோயாகவும் மாறி மனிதனை நடைபிணமாக்குகிறது;

ஆனால் ஆண்டவர் இதற்கு எளிமையான வழிமுறைகளை கொடுத்திருக்கிறார்; இதனையறிந்து நடைமுறைப்படுத்தினால் விடுதலை உண்டாகும்;

ஏன் நாம் ஆண்டவரிடம் செல்ல சங்கடப்படுகிறோம்?
நமக்கு அவர் மீது நல்ல எண்ணமிருந்தும் நாம் ஏன் அவரை ரெண்டாம் பட்சமாக வைத்திருக்கிறோம்?

காரணம், நம்முடைய பெற்றோர் அல்லது நண்பர்கள் நாம் ஒரு தவறான காரியத்தில் ஈடுபடும் போது அதன் எதிர்கால ஆபத்தினை தங்கள் அனுபவத்தினால் உணரும் அவர்கள் நம்மைத தடுப்பார்கள், தேவைப்பட்டால் கண்டிப்பார்கள்;

ஆனாலும் நாம் மாற்றுவழிகளை ஏற்படுத்திக் கொண்டு
அவர்களுடைய எதிர்ப்பையும் மீறி அவர்களுக்குத் தெரியாமல் தவறான வழிகளைத் தொடருவோம்; இதன் விளைவாக நாம் மோசமான நிலைக்குத் தள்ளப்படும்போது நாம் யாரிடம் உதவி கேட்போம்? புதிய ஆட்களிடமே;அவர்கள் நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்து நம்மை அடிமைப்படுத்துவார்கள்;

நாம் நம் மீது உண்மையான அக்கறை கொண்டோரிடம் செல்லுவதில்லை; ஏனெனில் அவர்களை மீறி நாம் வந்ததால்
உண்டான அவமானம் நம்முடைய உள்ளத்தில் மாறாத வடுவாகப் பதிந்துள்ளது;

ஆனாலும் நம்மீது மெய்யான அன்பு கொண்ட நம்முடைய உறவு தனக்கு எவ்வளவு நஷ்டம், அவமானம் ஏற்பட்டாலும் சகித்துக் கொண்டு வந்து நம்மை மீட்டுச் செல்லும்; இதுபோலவே இயேசுகிறிஸ்துவும் நம்மைத் தேடி நாம் பாதிக்கப்பட்டு கண்ணீரில் மிதக்கும் இடத்துக்கே வந்து நம்மை சந்திக்கிறார்; விடுதலையும் செய்கிறார்..!

இதையெல்லாம் சொல்லி ஜெபித்ததும் துர்கா சாட்சி கூறினாள்; அண்மையில் தான் வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதி தூக்கி எறியப்பட்டு குப்புற விழுந்தும் ஒரு காயமும் இல்லாமல் தப்பினாளாம்; அவளது தோழி சொன்னாளாம், “பரவாயில்லையே,அந்த ஜீஸஸ் தான் உன்னைக் காப்பாற்றியிருக்கிறார்” என்று.