Tag Archive | செய்தி

தாய்மதம் திரும்பும் இந்துக்கள்..!


// திருநெல்வேலி:

பிற மதங்களில் இருந்து, இந்து மதத்திற்கு திரும்பும் நிகழ்ச்சி, நேற்று நெல்லையில் நடந்தது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நெல்லையில் நேற்று மதமாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதமாறும் நிகழ்ச்சி, திருநெல்வேலி பார்வதி சேஷ மகாலில் நடந்தது. இதில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் மற்றவர்கள் கிறிஸ்தவர்கள். சுத்தி ஹோமம் நடத்தப்பட்டு, அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சாரதா கல்லூரி தாளாளர் சங்கரானந்தா சுவாமிகள் அவர்களுக்கு வீட்டில் பூஜை செய்ய விளக்குகள் வழங்கி, ஆசிர்வதித்தார்.

இது குறித்து வி.எச்.பி.,மாநில கோபாலரத்தினம் கூறுகையில், “”இந்தியா முழுவதும் குடும்ப கட்டுப்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை, இந்து மக்கள் மட்டுமே கேட்டு அதன்படி நடக்கிறார்கள். இதனால், மற்ற மதத்தினரை காட்டிலும் இந்து மக்கள் தொகை விகிதாச்சாரம் குறைந்து வருகிறது.

மதமாற்றத்திற்காக, ஒரு ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாயை பல்வேறு வெளிநாடுகள் இந்தியாவில் விதைக்கின்றன. “இந்தியாவில் அறுவடை’ என்ற பெயரில் முகாம் நடத்தி, மதமாற்றங்களை நடத்துகின்றனர். ஆனால், மற்ற மதங்களுக்கு செல்லும் மக்கள் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. அங்கேயும் ஆலய வழிபாட்டில் பேதம், இடுகாடு போன்றவற்றில் ஜாதிப் பிரச்னை நீடிக்கிறது.

எனவே, தாய் மதமான இந்து மதத்திற்கு பலரும் தாங்களாகவே விண்ணப்பித்து மாறுகிறார்கள். நாங்களும் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்களா… அரசின் நலத் திட்டங்களுக்காக மாறுகிறார்களா… என, ஆலோசித்தே சான்றிதழ் வழங்குகிறோம், என்றார். நிகழ்ச்சியில் தர்மபிரசார் அமைப்பாளர் பெருமாள், சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். //

http://www.dinamalar.com/district_detail.asp?id=172793

மேற்கண்ட தினமலர் பத்திரிகையின் விஷமமான செய்தியை வாசித்ததும் பயங்கரமான சிரிப்பு வந்தது;மீனவர்கள் கடலுக்குச் சென்று வலைவீசி மிகுந்த பிரயாசத்துடன் மீன்பிடிக்கிறார்கள்;அப்படி பிடிக்கப்பட்ட மீன்களிலிருந்து சிலது கரையேறும் முன்பே துள்ளி கடலில் வீழும்;அங்கே அவற்றை விழுங்க திமிங்கலங்கள் காத்திருக்கும்;அதுபோலவே மனித வாழ்க்கை என்பது உள்ளேயும் சரி, வெளியேயும் சரி துன்பங்கள் நிறைந்தது;அநித்தியமானது;இதில் எங்கே இருந்தால் என்ன‌?

ஏன் சிரிப்பு வந்தது என்றால் இந்த நாளிதழ் நல்ல தரமான நிருபர்களை உடையதானாலும் இந்த குறிப்பிட்ட செய்தியின் வாசகங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது;அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்,இதில் பக்கத்தை நிரப்ப எதையாவது எழுதவேண்டுமே..!

இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு காரணமாக இந்துக்களின் தொகை வேகமாக குறைந்து வருகிறதாம்;மேலும் மதமாற்றத்தின் காரணமாகவும் இந்துக்கள் தொகை குறைந்து வருகிறதாம்;மதம் மாறியவர்கள் இந்தியாவில் தானே இருக்கிறார்கள்? அவர்கள் இந்தியாவைவிட்டு ஓடினால் தானே தேசபக்தர்கள் கவலைப்படவேண்டும்? இந்த தேசபக்தர்கள் இந்தியாவை சுரண்டி வெளிநாடுகளில் இலட்சம் கோடிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்களே,அதுவல்லவா இந்தியாவை பெலவீனப்படுத்தும்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதமாற்ற தடைசட்டம் கொண்டு வந்தபோது அதில் முக்கிய குறிப்பாக வைத்தது,பெண்களையும் குழந்தைகளையும் மதம் மாற்றக்கூடாது என்பதே;ஆனால் இங்கே 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதம் மாறினார்களா;இது கேலிக்கூத்தாக இல்லையா? குழந்தைகளையும் மதம் மாற்றும் கொடுமையை எங்கே போய் சொல்லுவது? எப்படியோ இந்தியர்கள் அனைவரும் இந்துக்களாகி விட்டால் இந்தியாவில் சாதிக்கொடுமைகளோ வரதட்சணை கொடுமைகளோ இலஞ்ச லாவண்யமோ வர்க்கக்கொடுமைகளோ இல்லாது முழு இந்தியாவும் சுபிக்ஷமாகிவிடும் என்று நம்புவோமாக‌.

அநியாயத்துக்கு மதம் மாத்தறாங்க‌..!


மத மாற்றத்திற்கு துணை போகும் அரசு பள்ளிகள் : பெற்றோர் எதிர்ப்பு – தினமலர் செய்தி.

பந்தல்குடி : அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ஒன்றிய துவக்க பள்ளிகளில், மாணவர்களிடம், “பைபிள்’ வழங்குவதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தெற்கு, வடக்கு பள்ளிகளில் 550 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த நவ.16ல், தூத்துக்குடியிலிருந்து வந்த கிறிஸ்தவ “மிஷினரி’யினர், மாணவர்களிடம், பைபிள் புத்தகம் வழங்கினர். இதை படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்று பிரசாரம் செய்தனர். புத்தகத்தின் கடைசியில் இருக்கும் உறுதிமொழி படிவத்தில் மாணவர்களை கையெழுத்திட கூறினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் கூறியவை:

சிவலிங்கம்: மூன்று ஆண்டுகளாக, மத புத்தகங்களை கட்டாய படுத்தி கொடுக்கின்றனர். மதம் மாற்ற முற்படுகின்றனர். இது குறித்து கேட்டால், “இனி தரமாட்டோம்’ என்கின்றனர்.

கருப்பசாமி: சில ஆசிரியர் களால் இந்த தவறு நடக்கிறது. தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கேட்டபோது “புத்தகங்களை எடுத்து செல்லுங்கள், பிரச்னை செய்யாதீர்கள்’ எனக்கூறினார்.

ராகவன், (தலைமை ஆசிரியர், தெற்கு பள்ளி): மதம் பற்றிய புத்தகங்களை கொடுத்தது தவறு தான். அனைவருக்கும் கல்வி இயக்க மற்றும் கற்றல் வழி புத்தகங்களை இலவசமாக தர வருவர். அது போல என நினைத்து பார்க்காமல் விட்டு விட்டேன். “பைபிள்’ என தெரிந்ததும் அவற்றை வாங்கி வைத்து விட்டேன். இனிமேல் இதுபோல நடக்காது.

நாகலட்சுமி, (தலைமை ஆசிரியை, வடக்கு பள்ளி): மத சம்பந்தமான புத்தகங்களை கொடுக்க அனுமதிக்க கூடாது என்று எனக்கு தெரியாது. பெற்றோர் கூறிய பிறகு அவற்றை வாங்கி திருப்பி கொடுத்து விட்டோம். பெற்றோரிடமும் மன்னிப்பும் கேட்டோம்.

அருப்புக்கோட்டை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் நாகராஜன்: தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், உயரதிகாரிடம் தெரிவித்த பின் செய்யுங்கள் என்று பலமுறை கூறி வருகிறோம். மத புத்தகம் வழங்கல் பற்றி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதிகாரி விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=138246

அரசாங்க பள்ளியில் பைபிள் கொடுத்து மதம் மாற்றுகிறார்களாம்;அது உண்மையா?

இங்கே புகைப்படத்தில் காணும் காட்சி என்ன, மாணவர்களே போட்டி போட்டுக்கொண்டு அதனை வாங்குகின்றனர்; யாரும் வற்புறுத்தி கொடுப்பது போலத் தெரியவில்லை; மேலும் இது இலவசமாகத் தரப்படுவதால் அதினால் எந்த பாதிப்பும் இருப்பது போலவும் தெரியவில்லை.

ஆனாலும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உள்நோக்கத்துடன் இதுபோன்ற செய்திகளை தினமலர் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது;தெரிந்தோ தெரியாமலோ இதுபோன்ற எதிர்ப்புகளாலேயே கிறித்தவ மார்க்கம் வளருகிறது.

ஏனெனில் ஒன்றுமறியா சிறுபிராயத்தில் மாணவர்களுடைய சிந்தனையை மழுங்கச் செய்யும் ஒன்றுக்கும் உதவாத‌ தத்துவங்களையும் சடங்குகளையும் இந்து மார்க்கம் திணிக்கிறது;ஆனால் கிறித்தவமோ ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குகிறது.

இதனால் கவரப்படும் மாண‌வர்கள் சிறுவயதில் எளிதில் கிறித்தவத்தின்பால் அதாவது இயேசு எனும் வழிகாட்டியின் மீதான நம்பிக்கை கொள்கிறார்கள்;அதனை பெரியவர்கள் தடுக்கும் போது ஏன் தடுக்கிறார்கள் என்ற கேள்வியே ஒரு மாணவன் மனதில் பெரிய பாதிப்பை உண்டாக்கி மற்றொரு வாய்ப்பில் முழுமையான கிறித்தவனாக மாறுகிறான்.

ஆனால் இந்து மார்க்கத்தின் பெரியவர்களோ தன் பிள்ளை சினிமா பார்த்தாலோ அல்லது வேறு எந்த தவறான பழக்கவழக்கங்களையோ பழகினால் அதனைப் பெரிதுபடுத்தாத நிலையில் மெய்ஞான மார்க்கமாகிய இயேசுவின் மார்க்கத்தைக் குறித்து பெரியதாக எச்சரிக்கை செய்து மாணவர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டுகிறார்களே தவிர அதனைத் தடுக்க இயலாது என்பதே மனோதத்துவ ரீதியிலான உண்மையாகும்.

ரோட்டில் கைப்பிரதி கொடுக்கக்  கூடாது,மருத்துவமனையில் சென்று முன்பின் அறியாத ஏழை எளிய மக்களை சந்தித்து ஆறுதல் கூறி பிரார்த்தனை செய்யக்கூடாது, மாணவர்களுக்கு நல்வழிக்கான ஆலோசனைகளைக் கூறி அவர்கள் வெற்றிபெற உதவும் இயேசுவின் வரலாறு அடங்கிய புதிய ஏற்பாடு புத்தகத்தைக் கொடுக்கவும் கூடாது.

அப்படியானால் எப்படி மத நல்லிணக்கம் வளருமாம்?

ஆனால் இவர்கள் அனைத்து அரசாங்க அலுவலகத்திலும் பொது இடங்களிலும் ஆக்கிரமித்து கோவில் கட்டி உண்டியல் வைத்து ஒன்றுமறியாத மக்களை ஏமாற்றி வசூல் செய்யலாம்;ஒரு சாதாரண தெருவோர கோவிலைச் சுற்றியுள்ள எத்தனை கடைகள், எவ்வளவு பணப்புழக்கம் ? இதையெல்லாம் யார் கேட்பது  ? இது தான் மதசார்பற்ற இந்தியாவில் ஜனநாயகம் என்பதா ? இது தான் பத்திரிகை சுதந்தரத்தைக் குறித்து பெரிதாகப் பேசும் தினமலர் போன்ற பத்திரிகையாளர்களின் கருத்து உரிமை தத்துவமா ?

மூத்த அப்போஸ்தலர் செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்..!


Senior Chennai Pentecost Leader Rev, P.S.Chelladurai F/O Rev. Sam P. Ch expired at 7.15 p.m. Sunday (5/12). He is 88 yrs.His Funeral service tomorrow 2.30 p.m.at AFT church, Purasavakkam. Burial at 4.30 p.m. at Kilpauk. www.revsam.org

Pls Fwd to all…Thank You..!

PSC4.png

Pastor P. S. Chelladurai – The founder of AFT Church and father of Rev. Sam P. Chelladurai, passed into glory on 05-12-2010 at 07:15pm in Chennai. The funeral service will be held at 02:30pm in AFT Church on Tuesday (07-12-2010). Burial will be in Kilpauk Cemetery at 04:30pm. The service will be webcast LIVE.

பெந்தெகொஸ்தே இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் மூத்த அப்போஸ்தலருமான செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்; நேற்று மாலை 07:15 க்கு அவருடைய உயிர் பிரிந்தது; நாளை மாலை 04:30 மணிக்கு அவருடைய நல்லடக்கம் நடைபெறுவதாக அறிகிறோம்.

ஐயா அவர்கள் தனது  88 வது வயது வரையிலும் நல்ல நினைவாற்றலுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது;அவர்கள் தனது விசுவாசத்தைத் தூண்டும் போதனைகளால் அநேகரை எழுப்பியதுடன் தனது பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்தம் சந்ததியையும் கண்டு ஒரு முழுமையான வெற்றிகரமான கிறித்தவ ஜீவியத்தை நிறைவேற்றினார்.

அவர் தனது துணைவியாருடன் கொண்டிருந்த உத்தமமும் சமாதானமும் நிறைந்த‌ இல்வாழ்க்கை மிகவும் போற்றுதற்குரியது; இளந்தலைமுறையினர் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியானது; பிரபல போதகர் சாம்.P.செல்லத்துரை அவர்கள் அன்னாரது மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்த்தருடைய வருகையில் நாம் அவரை சந்திப்போம் என்ற விசுவாசத்துடன் நம்முடைய சபையின் தலைவருக்கு நமது இறுதி மரியாதையினை செலுத்துகிறோம்;அவர்மூலமாக நாம் கற்றுக்கொண்ட நல்ல விசுவாச போதனைகளுக்காக ஆண்டவருக்கு துதி செலுத்துகிறோம்.

நல்ல சமாரியன் ஓவன் ராபர்ட்ஸ் ஐயா அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்..!


வலைதளத்தில் தமிழ் கிறித்தவம் மிகவும் பின் தங்கிருக்கிறதோ என்று யோசிக்கிறேன், வருந்துகிறேன்; ஒருவேளை எனக்குத் தேடத் தெரியவில்லையோ என்னவோ..!

நேற்று (15.20.2010) சென்னையில் காலமான மூத்த போதகர் ஓவன் ராபர்ட்ஸ் அவர்களைக் குறித்த எந்த செய்தியும் இணையதளத்தில் கிடைக்கவில்லை.

DSC_1641.JPG

அன்னார் தமது சரீர பெலவீனங்கள் மத்தியிலும் ஆண்டவருக்காக இடையறாது செய்த ஊழியங்களுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம்.

அவருடைய ஊழியத்தைக் குறித்து அறிந்தோர் அவர்தம் ஊழியத்தைக் குறித்த தகவல்களை இங்கே பதித்து அவருடைய ஊழியத்தைப் போற்றும் வண்ணமாக சாட்சிகளைப் பகிர அன்புடன் அழைக்கிறேன்.

சுரங்கத்திலிருந்து அரங்கத்திற்கு..?


ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது..!

69 நாட்கள் பூமிக்கடியில் 2000 அடி ஆழத்தில் 33பேர் உயிர்பிழைத்தது எப்படி?

அண்மையில் சுரங்கத்தில் சிக்கி  69 நாட்களாகத் தவித்த‌  33 தொழிலாளர்களை சிலி நாட்டு அரசாங்கம்  ‘நாசா ‘வின் உதவியுடன் மீட்டதை அனைத்து ஊடகங்களிலும் கவனித்தோம் .

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=317687&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

இந்த செய்தி முதலில் எனது சிந்தைக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவே இல்லை; வழக்கமான செய்தியைப் போல‌ கண்டும் காணாமல் இருந்திருக்கிறேன்;

கடந்த 69 நாட்களாக அந்த தொழிலாளர்களுடைய உயிர் தவிப்பையும் அவர்தம் உயிரின் அருமையுணர்ந்து அவர்களை மீட்கப் போராடிய சிலி அரசின் பொறுப்பையும் அறிந்து கொண்டாலும் இந்த 69 நாட்களும் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் ? என்னைச் சுற்றி நடக்கும் இதுபோன்ற சம்பவங்களுக்கு நான் அன்னியமானதைக் குறித்து வருந்துகிறேன்;அது எனக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதது குறித்து ஆச்சரியப்படுகிறேன்; அதைக் குறித்து யோசித்ததுமே என் மனதில் எழுந்த கேள்வி இதுதான் , 69 நாட்களும் அவர்கள் எப்படி உணவுக்கும் தண்ணீருக்கும் போராடியிருப்பார்கள் என்பதே.

இதைக் குறித்த செய்தியைத் தேடியறிந்ததும் ஆச்சரியமாக இருந்தது;அந்த தொழிலாளர்களுடைய மன உறுதியுடன் கூடிய ஒழுக்கத்தையும் அறிந்தேன்;

http://uk.news.yahoo.com/38/20101013/twl-q-a-how-did-the-chilean-miners-survi-6ae0455.html

என்ன சாப்பிட்டனர்?

சுரங்கத்துக்குள் சென்ற தொழிலாளர்களுக்கு வெளியுலகத் தொடர்பு கிடைப்பதற்கு முன்னர் சுரங்கத்திலிருந்த‌ அவசரகால உணவு கிடங்கிலிருந்த சொற்ப உணவை மிக மிக சிக்கனமாக செலவழித்தார்களாம்;

எப்போது உதவி வரும் என்று தெரியாத நிலையில் பூமிக்கடியில் சுமார் 2257 அடி (688மீட்டர்) ஆழத்திலிருந்த அவர்கள் தாம் உயிர்வாழத் தேவையான மனோதிடத்துடன் உணவு கையிருப்பையும் திட்டமிட்டது கவனிக்கத்தக்கது;

ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டி மீன் உணவையும்  (tuna) ஒரு (சிப்) மிடறு பால் ஒரு கடி பிஸ்கட் (Crackers) துண்டு மற்றும் சின்ன “பீச்சஸ்” (peaches) பழத்துண்டு மட்டுமே உணவாக உட்கொண்டாராம்;


17 நாட்களுக்குப் பிறகு மீட்பு குழுவினர் அவர்களை அடைந்ததும் (அதற்கும் 17இடங்களில் துளைபோட்டு தேடினராம்..) ஹைட்ரஜன் ஜெல், சூப் மற்றும் சில மருந்துகளை  “புறாக்கள் “ (doves) எனப்படும் ப்ளாஸ்டிக் குழாய் மூலம் அனுப்பினர்;

அவர்களுடைய சூழ்நிலை எப்படியிருந்தது?

உஷ்ணமும் ,இருளும் சூழ நெருக்கமான சிறிய இடத்தில் சிக்கியிருந்த அவர்கள் படுத்துறங்க படுக்கைகள் இல்லாவிட்டாலும் 30 நாற்காலிகள் சில பெஞ்சுகளும் கொஞ்சம் போர்வையும் இருந்தது ; 530 சதுர அடி சுற்றளவுள்ள தற்காலிக முகாமில் அவர்கள் இருந்தனர் .

அங்கே போதுமான பிராண வாயு கிடைத்தது ;இதுவே நிலக்கரி சுரங்கமாக இருந்திருந்தால் விளைவுகள் பயங்கரமாக இருந்திருக்கும் ;இது (தாமிரம் மற்றும் தங்க )உலோக சுரங்கமாதலால் அங்கே ஆபத்தான மீத்தேன் வாயுக்கள் இருக்கவில்லை .

அவர்கள் ஆரோக்கியமாக இருந்தது எப்படி?

17 நாட்கள் தவிப்புக்குப் பிறகு ஆகஸ்டு 23 ந்தேதி மீட்புகுழுவினரின் தொடர்பு கிடைத்ததும் தொழிலாளர்கள் தங்கள் தேசிய கீதத்தைப் பாடி மகிழ்ந்தனர்; மீட்பு குழுவினர் சத்துமாத்திரைகளையும் ஊக்க மாத்திரைகளையும் அனுப்பி அவர்களுடைய ஜீரண உறுப்புகளை சகஜநிலைக்குக் கொண்டுவந்தனர் .

இதனிடையே மீட்பு குழுவினரின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது ;அவர்களில் தகவல் தொடர்பு நிபுணர்கள் ,மருத்துவர்கள்,மனோதத்துவ நிபுணர்கள் ,சமையல் மற்றும் துணி துவைப்போர் குழுவினரும் அடக்கம் ;மேலும் தொழிலாளர்களுடைய நாடித் துடிப்பையும் ஆரோக்கியத்தையும் கண்காணிக்கும் வயர்லெஸ் சாதனங்களும் தருவிக்கப்பட்டிருந்தது ;இதன்மூலம் குழாய் வழியே அனுப்பப்பட்ட “பையோமெட்ரிக் பெல்ட் ” எனும் சாதனத்தின் மூலம் தொழிலாளர்களுடைய உடல்நலம் கண்காணிக்கப்பட்டது .

மீட்புக் குழுவினர் அவர்களை நெருங்குவதற்கு முன் சுரங்கத்தினுள் முகாமுக்கு அருகே தொழிலாளர்கள் ஒரு தற்காலிக கழிப்பறையை அமைத்திருந்தனர் ;அதன் காரணமாக வயிற்றுப்போக்கு, காலரா, இரத்தக் கட்டி, இவற்றால் உடலுறுப்பு செயலிழத்தல் ஏற்பட்டிருக்குமோ என்று மீட்புக் குழுவினர் அச்சப்பட்டனர் ;ஆனால் தெய்வாதீனமாக அதுபோல எதுவும் நடைபெறவில்லை .

இந்த நிலையிலும் சிகரெட் மது போன்ற போதைவஸ்துக்களைக் கோரிய தொழிலாளர்களுக்கு அது மறுக்கப்பட்டது ;ஆனாலும் நிகோடின் கம் போன்ற மாற்று பொருட்கள் தரப்பட்டது .

அவர்கள் வெளியுலகைத் தொடர்பு கொண்டது எப்படி?

ஆங்காங்கு துளையிட்டு தேடிக்கொண்டிருந்த கருவியின் முனையானது ஆகஸ்டு 22 -ந்தேதி குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு துண்டு சீட்டானது மீட்பு குழுவினரைக் கொண்டாட வைத்தது ;அதில்,“நாங்கள் 33 பேரும் பத்திரமாக இருக்கிறோம் ” என்று இருந்தது ;

சுரங்கத்துக்குள் மற்றொரு குழாய் மூலம் பைபர் ஆப்டிக் தொடர்பு வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் தரப்படும் வரைக்கும் “டவ்ஸ்” எனும் குழாய் வழியே உறவினர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர்;

அவர்களுடைய அன்றாட வாழ்க்கை முறை எப்படி இருந்தது?

மீட்புகுழுவினர் அவர்களை அடைந்ததும் அவர்களுக்கு காலை ,மதிய ,இரவு உணவு மற்றும் மாலை தேனீர் வழங்கப்பட்டது ; 500 வாட் மின்சாரத்தின் உதவியுடன் விளக்குகளைப் பொறுத்தி அதன்மூலம் பகலையும் இரவையும் அவர்களுக்கு உணர்த்தினர் ;

மனோதத்துவ நிபுணர்கள் அவர்களுக்கு சில எளிமையான உடற்பயிற்சிகளை ஒழுங்கு செய்திருந்தனர் ;இதன்மூலம் தொழிலாளர்களுடைய உடல்திறன் மற்றும் உடல் வாகு பேணப்பட்டது ; இதன்மூலம் குறுகலான மீட்புகுழாயினுள் அவர்களுடைய பொருந்த முடியும் ;

அண்மை வாரங்களில் உள்ளேயிருக்கும் தொழிலாளர்களும் மீட்புகுழுவுக்கு உதவினார்கள்  ;அவர்கள் சுரங்கத்தினுள் அவ்வப்போது சேரும் இடிபாடுகளை அகற்றிக் கொண்டே இருந்தார்கள்  .

அவர்கள் தம்மை உற்சாகப்படுத்திக்கொண்டது எப்படி?

தொழிலாளர்களில் பெரும்பாலானோர் கால்பந்து இரசிகர்கள் ;அவர்களில் ஒருவர் தொழில்ரீதியாக கால்பந்து விளையாடுபவர் ;எனவே அவர்களை மகிழ்விக்க கேபிள் இணைப்பு மூலம் சிலி உக்ரைன் நாட்டுடன் மோதும்  நட்புணர்வு  கால்பந்து போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது ;மேலும் பீலே மாரடோனா போன்ற பிரபலங்களின் வீடியோ தொகுப்பும் அனுப்பப்பட்டது ;

இன்னும் சீட்டாட்டம் மற்றும் டொமினோ போன்ற விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ;மேலும் சிறிய வடிவிலான இசைக் கருவிகளும் பைபிளும் போப் பெனடிக்ட் ஆசீர்வதித்த ரோசரிகளும் வழங்கப்பட்டிருந்தன‌ .

ஒரு தொழிலாளியிடமிருந்த உயர்தொழில்நுட்ப வீடியோ காமிரா மூலம் அவர்களுடைய தவிப்பும் போராட்டமும் இன்னும் அவர்கள் பகிர்ந்துகொண்ட திரைப்பட நகைச்சுவை அனுபவங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது .

இந்த இராஜ மரியாதையையும் புகழும் நமக்கு கிடைக்கவில்லையே என்று மற்றவர் ஏங்குமளவுக்கு அத்தனை வசதிகளுடனும் பாதுகாப்பாக இருந்தனர் ; இன்னும் அவர்களில் சிலர் ஏன் மீட்கப்பட்டோமோ என்று நினைத்திருந்தாலும் ஆச்சரியமில்லை ;அந்த அளவுக்கு அவர்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டனர்;

அவர்கள் மீட்கப்பட்டது எப்படி?

21 அங்குல சுற்றளவுள்ள மீட்கும் குழல் “சிலி “தேசிய கொடியின் வர்ணம் பூசப்பட்டு ஒவ்வொரு தொழிலாளியையும் மீட்க ஆயத்தமானது ;அதனுள் ஒரு டாங்கி நிறைவான காற்று அடைக்கப்பட்டு , தகவல் தொடர்புக்கான மைக்ரோபோன் பொருத்தப்பட்டு ,வேகமாக மேலே தூக்கப்படும் தொழிலாளியின் இதயத் துடிப்பையும் சுவாசத்தையும் கண்காணிக்கும் மானிட்டர் இணைப்புடன் இருந்தது .

தொழிலாளி மேலேறி வர பயணிக்கவேண்டிய உயரமானது ஈஃபில் கோபுரத்தைப் போல இருமடங்கு உயரம் என்று சொல்லப்படுகிறது ;மீட்பு குழல் மேலேறி வர அரைமணிநேரத்துக்கும் குறைவாக ஆனது ; அது தடையின்றி உள்ளே செல்ல‌ அந்த குழலின் வெளிப்புறத்தில் சிறு சக்கரங்கள் பொருத்தப்பட்டு இராட்சத கிரேன் மூலம் இயக்கப்பட்டது .

தொழிலாளர்கள் மீட்கப்படும் முதலாவது நபரை எப்படி தேர்ந்தெடுத்தனர்?

செப்டம்பர் மாத இறுதியில் சிலியின் சுகாதார அமைச்சர் மீட்பு குழுவின் வல்லுனர் மற்றும் மருத்துவ நிபுணருடன் கலந்தாலோசித்து தொழிலாளர்களில் யார் மிகவும் உடலாலும் மனதாலும் பெலவீனமாக இருக்கிறாரோ அவரை முதலாவது மீட்க முடிவுசெய்திருந்தனர் ;ஆனால் தொழிலாளர்களோ யார் கடைசியாக வெளியேறுவது என்பதில் போட்டி போட்டனர் ;அதிசயம் ஒன்றுமில்லை , அவர்களில் யார் அதிக நாட்கள் பூமிக்கடியில் இருந்தனர் என்பதில் கின்னஸ் சாதனை செய்ய விரும்பியதுதான்.

இப்படியும் ஒரு சாதனை..?

ஆழத்தினின்று நாம் கூப்பிடுவோம்
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்
கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்
கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்?

எக்காலத்தும் நம்பிடுவோம் திக்கற்ற மக்களின் மறைவிடம்
பக்கபலம் பாதுகாப்பும் இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்

“அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள். (Psa 107:24 )

சிறுபான்மை கல்விநிறுவனங்கள் மீது புதுவித வன்முறை..!


தமிழகஅரசு அண்மையில் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் ஆணையொன்றை நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் பிறப்பித்தது;இந்த கல்வியாண்டின் ஆரம்பத்தில் திடீரென அவசர கோலத்தில் இந்த ஆணையைப் பிறப்பித்ததால் அதனை நடைமுறைப்படுத்துவதில் தனியார் பள்ளிகள் தடுமாறிப் போயின;

(தொடரத் தொடரவும்…)

” Rosh HaShanah “(happy newyear) greetings..!


“அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.”
(லூக்கா.1:29 Luke)


மரியாள் காபிரியேல் தூதன் சம்பந்தமான வேத வாக்கியம் இது; அதுபோல நண்பர்கள் இந்த (” Rosh HaShanah ” greetings..!) வாழ்த்துதலைக் குறித்து சிந்தித்து அவர்களாக ஒரு சில காரணங்களைக் கண்டுபிடித்து அதனைத் தங்கள் கருத்தாகப் பதித்துள்ளனர்; இதுவே கிறித்தவத்தின் மிகப் பெரிய பெலவீனம்;

Isa 44:18 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.

Hos 8:12 என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.

மேற்காணும் இரண்டு வாக்கியங்களும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்காகச் சொல்லப்பட்டது;ஆனாலும் இங்கே நான் சொல்லவரும் கருத்துக்கும் பொருத்தமாக இருப்பதால் அதனைப் பயன்படுத்துகிறேன்; எனது வாழ்த்துதலுக்கு நண்பர்களுடைய பின்னூட்டம் என்ன‌? அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவில்லை;எனக்கு பதில் வாழ்த்து சொல்லவுமில்லை;

ஆனால் நாம் பார்க்கதான் போகிறோம், இன்னும் இரண்டே மாதங்களில் கிறித்தவ உலகமே அல்லோலகல்லோலப்படுமளவுக்கு கொண்டாட்டங்களுக்கு நாம் ஆயத்தமாவோம்; சுனாமி வந்தாலென்ன, பூகம்பம் வந்தாலென்ன, வடதேசத்தில் சபைகளுக்கெதிராக உபத்திரங்கள் நடந்தாலென்ன, தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும் என கடன்வாங்கியாவது கொண்டாடித் தீர்ப்போம்;

ஆனால் வேதம் கொண்டாட உற்சாகப்படுத்தும் எந்த பண்டிகையும் இதுபோன்றதல்ல; கிறித்தவ உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கும் எந்தவொரு பண்டிகையும் வேதத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டு பரிசுத்தவான்கள் ஆசரித்ததல்ல‌; இதனை எனது வழக்கமான பாணியில் விவாதமாக்காமல்- இதற்கு மேலும் தாமதியாமல்- காலங்கடத்தாமல் போதனையாக எழுத விரும்புகிறேன்;கர்த்தர் தாமே உதவி செய்வாராக‌.

அதற்கு முன்பதாக ஒரு கிறித்தவ தளம் வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களையும் போதனைகளையும் அறிய விரும்பாமல் எப்படி புறக்கணித்து வருகிறது என்கிறதான எனது ஆதங்கத்தைப் பதிவுசெய்து விட்டு தொடருகிறேன்;

“ரோஷ் ஹஷானா ” எனும் வார்த்தையோ இன்னும் நான் எழுதப்போகும் வேத ஆதாரத்தின்படியான பண்டிகை சம்பந்த எபிரெய வார்த்தைகளோ தமிழ் வார்த்தைகளில் தேடுபொறியில் சிக்கவில்லை;அப்படியானால் இதைக் குறித்த ஞானத் தெளிவு நமக்கில்லையோ,அதைக் குறித்த போதனை நமக்கு அந்நியமானதோ என்று யோசித்தேன்;

ஆனால் அதைக் குறித்த வேதசத்தியம் போதிக்கப்படாமலே நம்முடைய சபைகளில் அறுப்பின் பண்டிகை,சேர்ப்பின் பண்டிகை, கூடாரப் பண்டிகை என களைகட்டி ஸ்டால்களில் கலெக்ஷன் தூள் பரத்துகிறது; இதனைத் தானே நமதாண்டவரும் கண்டித்தார்?

“Isa 29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.”

என்னுடைய வாழ்த்துக்கு சகோதரர்  அற்புதம் அவர்களின் பின்னூட்டமிது:
//”  Rosh HaShanah ” greetings..! என்றால் என்ன என்று தேடிப் பார்த்ததில் யூத வருடப் பிறப்பு வாழ்த்துக்கள் என்ற பதிலைப் பெற்றேன். உலகமெங்கிலும் சிதறி கூடி வாழும் யூதர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன். சிறைபிடிக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்ட யூதர்கள் எவ்வாறு ஒன்று சேர்ந்து தங்களுக்கான தேசத்தைப் பெற்றார்களோ அதேப் போல உலக தமிழர்கள் ஒன்று கூடி தங்களுக்கான தமிழ் தேசத்தைப் பெற யூத வருடப் பிறப்பு நினைவூட்டுகிறது. ஏனெனில் அவ்வாறு யூதர்கள் ஒன்று கூடியபோது கொண்டாடப்பட்ட பண்டிகைதான் இன்றளவும் வருடப் பிறப்பாக அவர்களால் ஆசரிக்கப்படுகிறது.
சிந்தனைக்கு:
யூத வருடப்பிறப்பு வாழ்த்துகள் கூற தயாராக இருக்கும் நாம் நம் இந்திய துணைக்கண்டத்தில் வாழும் மொழிவாரி மக்களில் வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் கூறி இருக்கிறோமா? //

இதுதான் இந்திய- தமிழ் கிறித்தவத்தின் நிலைமைக்கு நல்லதொரு உதாரணம்; இந்த வாழ்த்தை அவர்கள் வேதத்தின் வாழ்த்தாகப் பார்க்காமல் யூதர்கள் சம்பந்தமான ஏதோ காரியமாகப் பார்த்து வேறு சில புறசாதியினங்களின் பண்டிகைகளுக்கும் நாம் வாழ்த்து கூறுகிறோமா என்று ஆராய்கிறார்கள்; புறசாதியினரின் பண்டிகைக்கும் வேதத்தின் பண்டிகைக்கும் வித்தியாசமுண்டல்லவா?

யூத வருடப்பிறப்பு என்பது யூதர்களுக்கு மட்டுமானதல்ல,அது முழு உலகத்துக்குமானது, அது சிருஷ்டிப்பு சம்பந்தமானது; சிருஷ்டிகர் சம்பந்தமானது,ஜீவன் சம்பந்தமானது,அர்ப்பணம் சம்பந்தமானது,எதிர்வரும் வருடத்தின் ஆசீர்வாதம் சம்பந்தமானது,முழு வேதத்தின் மீதான நமது உரிமை சம்பந்தமானது; இன்னும் என்ன சொல்ல‌..!

நாம் பெற்றிருக்கும் குறைந்த வேதஅறிவின்படி அது சிதறடிக்கப்பட்ட யூதர்கள் மீண்டும் ஒன்றிணைந்த நாள் (??) போல பாவிக்கப்படுகிறது; ஆனால் காலங்களின் வழியே சென்று வேதத்தை அறிந்துணர -சர்வவல்லவர் மனுக்குலத்துக்காக செய்து முடித்த மாபெரும் இரட்சிப்பின் திட்டத்தை புரிந்துணர உதவுவதே இந்த பண்டிகைதான் என்பது வேதம் போதிக்கும் ஒரு முக்கிய சத்தியமாகும்;

யூதர்களுடைய பாரம்பரியத்தில் இரண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவதுண்டு;அதன் தொடர்பாக ஏழு பண்டிகைகள் ஆசரிக்கப்பட்டன‌; அதிலொன்று இஸ்ரவேலர் (யூதர் என்று கூறாமல் இஸ்ரவேலர் என்றே குறிப்பிடுவோமாக.) எகிப்திலிருந்து வெளிப்பட்டது தொடர்பான நினைவுகூறுதலாகக் கட்டளையிடப்பட்டு தலைமுறை தலைமுறையாக ஆசரிக்கப்படும் பஸ்கா பண்டிகை;இதுவே பிரதானமானது; இதனை நம்முடைய ஆண்டவரும் அவர்தாமே பரமேறிச் சென்றபிறகும் பவுலடிகள் உள்ளிட்டோரும் ஆசரித்ததுண்டு;அதன் பொருள்பட ஆசரிக்க போதித்ததுமுண்டு;

அடுத்து அதற்கு இணையான மற்றொரு கொண்டாட்ட காலம் தான் ரோஷ் ஹஷானா எனும் புதிய ஆரம்பம்;பஸ்கா பண்டிகையானது மதரீதியிலான வருட ஆரம்பமானால் இது வெளிப்புற வாழ்க்கை அல்லது அரசியல்ரீதியிலான வருட ஆரம்பமாகும்; முந்தியது இஸ்ரவேலருக்கு மட்டுமானது என்றால் பிந்திய வருட ஆரம்பமானது உலகமனைத்துக்கும் பொதுவானதாகும்; ஏனெனில் தேவாதி தேவன் இந்த உலகை நிர்மாணித்த நாளாக அதனை இஸ்ரவேலர் ஆசரிக்கிறார்கள்;அது மூடநம்பிக்கை என்போமா? அது மூடநம்பிக்கையாகவோ அந்நியமாகவோ ஆகுமானால் வேதம் பொய்யாகும், நாமும் வேதத்துக்கு அந்நியமாவோம்;

இது எனது மற்றொரு நண்பரான ஜோ அவர்களின் பின்னூட்டம்:
// உலகளாவிய யூதர்கள் தங்களது தேசத்தை 1948’ல் பெற்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தங்களது உரிமைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை யூத வரலாறு அளித்தது. அதேபோல இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கமும் அஹிம்சை என்ற காந்தீய கொள்கையிடம் மண்டியிட நேர்ந்தது. அமெரிக்க கறுப்பின மக்கள் தங்களது உரிமைகளை பெற்றனர். இப்படி உலகமெங்கும் ஒடுக்கப்பட்டோருக்கு நியாயம் செய்த தேவன், ஈழ தமிழர்களுக்கும் நியாயம் கிடைக்க செய்வார். 2000 ஆண்டுகள் காத்திருந்த யூதர் 400 ஆண்டுகள் காத்திருந்த இந்தியர்….. ம் பார்ப்போம், நம் சகோதரர்களுக்கும் நிச்சயம் நீதியின் சூரியன் உதிக்கும்.

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்பது சொல் வழக்கு ஆனால் இன்றைய தமிழர் பிரிவினைகளாலும், ஒற்றுமையின்மையினாலும் தங்களது குரலை ஓங்கி ஒலிக்க செய்யமுடியாமல் தலை குனிந்து நிற்கும் நிலை. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்தே தமிழர்கள் பிளவுபட்டு கிடந்தனர்…. இனிமேல்?

உலகமெங்குமுள்ள ஆபிரகாமின் ரத்தவழி சந்ததிகளுக்கு

ஆபிரகாமின் விசுவாச சந்ததிகளான

எங்களின் ரோஷ் ஹசானா வாழ்த்துக்கள்….//

இந்த சொல்லை உச்சரிப்பதிலேயே அதன் அழகும் கம்பீரமும் மிளிரும்; இதனால் வேதத்தில் ஒரு யுத்தமே நடந்தது;இஸ்லாமியர் அதாவது பாலைவனத்தில் உமிழ்நீர் வற்றிப்போனவன் “ஷ” எனும் சொல்லை உச்சரிக்க இயலாது; இதுவே யூதருக்கும் அரபியருக்கும் வித்தியாசம்; எனவே மிக எச்சரிக்கையாக அதனைச் சரியாகப் பதிக்க முயற்சிக்கிறேன்;ஆனால் நண்பர் “ஜோ” மிகச் சாதாரணமாக ரோஷ் ஹசானா என்று குறிப்பிட்டிருக்கிறார்; இதெல்லாம் பெரிய பாவமில்லை; ஆனால் சிறிய பயிற்சி அவ்வளவே;

இவரும் கூட சற்றும் பதட்டமில்லாமல் மேலோட்டமாகவே கருத்தினைப் பதிவிடுகிறார்; இந்த நவீன காலத்திலும் வேதத்தின் ஆழ்ந்த சத்தியங்களை ஆராய்ந்தறிய மனமில்லாவிட்டால் அதற்காக வைராக்கியம் கொள்ளாவிட்டால் எப்போது அதற்கு சமயமுண்டாகுமோ?

இந்த சத்தியங்கள் எனக்குத் தெரியவந்தபோது என்னிடம் எந்த வசதியும் இல்லை; அதாவது கம்ப்யூட்டரோ (computer) இணையதள (internet) வசதியோ நல்ல காமெண்டரிகளோ (commentaries) யூதக் கலாச்சாரம் சம்பந்தமான புத்தகங்களோ (jewish history) எதுவுமில்லை;

ஒன்று மட்டும் இருந்தது, வரலாற்றுப்பூர்வமாக வேதத்தையறியும் ஆர்வமிருந்தது; அதன் அடிப்படையிலேயே எனது தனிப்பட்ட முயற்சியில்லாமலே பல விஷயங்கள் எனக்குத் தெரியவந்தது;

நம்முடைய தமிழ்ப் போதகர்கள் பலருக்கும் இந்த விஷயங்கள் தெரியாமல் இல்லை;ஆனாலும் வீணான குழப்பங்கள் வேண்டாமென பல காரியங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன‌; எல்லாவற்றுக்கும் ஒரு சில வசனங்களைத் தயாராக வைத்திருப்பார்கள்; அவற்றில் சில‌,

“நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.”(ரோமர்.Rom 14:6 )

“ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.”(கொலொசேயர்.Col 2:16)

ஒரு நண்பர் இந்த வசனம் இருதரப்புக்கும் பொதுவானது என்கிறார்;அதாவது பண்டிகையைக் குறித்த போதனையின் மூலம் பக்திவிருத்தி உண்டாகுமானால் அதனைத் தடுக்கக் கூடாது; அதேபோல அதனைக் குறித்த அறிவில்லாமல் ஒருவன் மந்தமாக இருந்தால் குற்றப்படுத்தவுங்கூடாது;
“விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.” (ரோமர். Rom 14:1)

மேலும் மறுபுறத்தில் மற்றொரு அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது; வேதத்துக்கு முற்றிலும் விரோதமாக – வேதம் நேரடியாகக் கட்டளையிடாத கத்தோலிக்க மார்க்க வழிவந்த பண்டிகைகளைச் சீர்திருத்த சபையார் எனக் கூறிக்கொள்வோரும் அவர்கள் அடியொற்றி ஆவிக்குரிய சபையார் எனக் கூறிக் கொள்வோரும் ஆசரித்துக் கொண்டிருக்கின்றனர்;

வேதத்துடன் நேரடியாக சம்பந்தபட்ட பண்டிகைகளைத் தவிர்த்துவிட்டு பழங்குடியினர் பாரம்பரியமாகக் கொண்டாடி வந்த‌ பண்டிகைகளை நாம் கொண்டாடுவதால் பாபிலோனிய சூழ்ச்சி மார்க்கத்த்துக்கு
கிறித்தவம் விலைபோய்க் கொண்டிருக்கிறது;

வருடமுழுவதும் ஆண்டவருடைய பிறப்பையும் இறப்பையும் உயிர்த்தெழுதலையும் விமர்சிக்கும் உலகத்தார் அனைவரும் குடித்து கூத்தடிக்க பயன்படுத்தும் அந்த  விழாக்காலங்கள் அநேகர் விழுந்து போவதற்கே ஏதுவானது;

ஆனால் வேதத்தின் ஏழுபண்டிகைகளும் புரிந்து ஆசரிக்கப்படுமானால் நாம் முழு வேதத்தினையும் மிக எளிதாக நம் முடைய அடுத்த சந்ததிக்கும் கடத்திச் செல்ல‌முடியும்; இந்த ஏழுபண்டிகைகளும் ஆண்டவருக்குள் நிறைவேறும் அதிசயத்தையும் மிக எளிதாக நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு போதிக்கமுடியும்;

இங்கே நண்பர்கள் சிலாகிக்கும்வண்ணமாக யூதர் சுமார் 2500 வருடத்துக்குப் பிறகும் தங்கள் சுதந்தர தேசத்தையடைந்தார்கள் என்றால் அதற்குக் காரணமாக அமைந்தது,அவர்கள் தங்கள் கலாச்சார அடையாளமான பண்டிகைகளை தேவபயத்துடன் ஆசரித்ததுதான்;அவர்கள் இதில் தவறியபோதெல்லாம் எதிரிகளிடம் வீழ்ந்துபோயினர்;

வேதத்தில் காலங்கள் சம்பந்தமாக சொல்லப்பட்ட வாக்குத்தத்தங்களையும் இந்த அறிவின்மூலமே எளிதாக அடையமுடியும்; இதன்மூலமே விஞ்ஞானத்தையும்  எதிர்கொள்ளமுடியும்;உதாரணமாக,

“வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.”(சங்கீதம்.65:11 Psa )

-எனும் வாக்கியமானது எந்த பொருளில் -எந்த வருட ஆசரிப்பு முறைக்காகச் சொல்லப்பட்டதோ அதற்கு மட்டுமே பொருந்தும்; இதனைக் குறித்தும் இன்னும் விவரமாக எழுதுவேன்; ஒவ்வொரு பண்டிகையையும் அதன் முக்கியத்துவத்தையும் நிதானமாக எழுத முயற்சிக்கிறேன்; வாசகர் எனக்காக ஜெபிக்கவும்; மாற்றுக்கருத்து இருப்பின் தயவுகூர்ந்து தெரிவிக்கவும்.

“ரோஷஹ்ஷானா” –” Rosh HaShanah ” greetings…God Bless You..!

இரண்டில் ஒன்று…தீர்மானம் நன்று..!


நேற்று ஒரு நண்பர் தன்னுடன் ஒரு சகோதரரை அழைத்துக் கொண்டுவந்து அவருக்கு ஆலோசனை சொல்லி பிரார்த்திக்க வேண்டினார்; அவருடன் பேசியபோது எனது சிந்தையில் உதித்த சில கருத்துக்கள்:

ஊழியத்துக்கு ஒப்புக்கொடுத்து -ஆனாலும் வேர்கொள்ளமுடியாமல் – நிரந்தர வேலையுமில்லாமல் – 2007- ம் வருடம் திருமணமாகி – ஆறுமாத ஆண் குழந்தையுடன் மனைவியை விட்டுப் பிரிந்த நிலையில்  -சில வாரங்கட்கு முன்பு சாலை விபத்தில் கையொடிந்து  -தங்க இடமில்லாமல் பரிதாப நிலையிலிருந்தவரிடம் நான் இப்படியாகப் பேசிக் கொண்டிருக்கிறேன்;

அவர்கள் இருவருக்கும் வந்ததும் உபசரிப்பாக ஆளுக்கொரு க்ளாஸ் தண்ணீர் கொடுத்தோம்;அதை ஒருவர் முழுவதும் குடித்துவிட மற்றவர் பாதியளவு மீதம் வைத்திருந்தார்; அதையே உதாரணமாக்கி நான் கேட்டேன்,இந்த இரண்டு க்ளாஸ்களில் எது சிறந்தது?

காலியாக இருக்கும் க்ளாஸா அல்லது ஏதோ கொஞ்சம் இருக்கும் க்ளாஸா?
எப்படியோ மிகச் சரியாகவே சொன்னார்,காலியாக இருக்கும் க்ளாஸ் தான் என்று;எப்படி என்று நான் விளக்கினேன்;

பாதியளவு தண்ணீர் இருக்கும் க்ளாஸில் இன்னும் கொஞ்சம் நிரப்பி பயன்படுத்தவும் முடியாது,இருக்கும் கொஞ்சம் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாமென்றாலும் முடியாது;ஏனெனில் அது இன்னொருவர் குடித்துவிட்டு வைத்ததும் மாசடைந்ததுமான தண்ணீராக இருக்கும்;எனவே என்ன செய்வோம்,அதை கொட்டிக் கவிழ்த்து  கழுவி விட்டு புதியதான தண்ணீரை நிரப்பி பரிமாறுவோம்;இப்படியே இதுவரை வாழ்ந்த உங்கள் வாழ்க்கை பயனற்றதாகவும் இனி செய்வோம் என்ற திகைப்புடனுமிருக்கும்;

ஆனால் ஒன்று செய்யலாம்,புதிய வாய்ப்புக்காக ஆவலுடன் ஆண்டவரை நம்பி காத்திருங்கள்;ஆண்டவர் புதியதொரு வாசலைத் திறப்பார்;அதுவரை உங்களுக்காக நீங்கள் உங்கள் பழைய அனுபவத்திலிருந்து திட்டமிடுவதை நிறுத்துங்கள்; நீங்கள் முழுவதும் குணமாகி சகஜநிலை திரும்பும் இந்த இடைபட்ட ஓய்வு காலத்தில்உங்களைப் பற்றிய நன்மதிப்புகளை வளர்ந்துக்கொள்ளுங்கள்; நல்ல நண்பர்களுடன் ஐக்கியம் கொள்ளுங்கள்; நல்ல ஆவிக்குரிய புத்தகங்களைப் படியுங்கள்;உங்கள் மீது நம்பிக்கை வளரும்படியான காரியங்களை யோசித்து அதை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் காரெக்டரை டெவலப் செய்யுங்கள்; உங்களுக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து நீங்கள் மீண்டு உயிருடனிருப்பதே ஆண்டவர் உங்களை நேசிக்கிறார் என்பதற்கு அடையாளமாகும்;

மனிதர் சற்று நம்பிக்கையுடனும் தெளிவுடனும் விடைபெற்றார்;என்ன என்னுடைய வழக்கமான போட்டோ எடுக்க மறந்துவிட்டேன்;விரைவில் அவரது போட்டோவை இங்கே பதிக்கிறேன்.

ஆகஸ்டு 10 கறுப்புதினம்..!


ஆகஸ்ட் 10 ஆகிய இதே நாளில் சரியாக அறுபது வருடத்துக்கு முன்பு அதாவது 1950 -ல் தலித் கிறித்தவர்களுக்கு மட்டும் உள்நோக்கத்தோடு தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் மறுக்கப்பட்டது;

அதற்கு இன்று வரையிலும் எந்த நியாயமான காரணத்தையும் யாரும் சொல்லி விடவில்லை; ஆனாலும் சமுதாய விடுதலைக்காக மதம் மாறும் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டேயிருக்கிறது;

இதனைப் பொறுக்காத அடிப்படைவாதிகள் அவர்களை இன்னும் தரம் தாழ்த்தும் வண்ணமாக பணத்துக்கு மதம் மாறுவதாக வசைபாடுகிறார்கள்;

உண்மையிலேயே இந்தியா மதசார்பற்ற நாடாக இருந்தால் தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகளை மதசார்பில்லாமல் வழங்க என்ன தடை?

புத்த மதமும் சீக்கிய மதமும் விதிவிலக்காக சலுகை பெறும்போது கிறித்தவருக்கு மட்டும் அது ஏன் பொருந்தாது?

இந்நிலையில் இந்திய கிறித்தவர்களை சிரம் தாழ்ந்தும் பதம் பணிந்தும் வேண்டுவது யாதெனில் தாங்கள் சிறிது தியாகம் செய்து தங்கள் மார்க்க விடுதலையைப் பறைசாற்றுங்கள்;

அது எப்படி..?
அண்மையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்ததல்லவா, அதில் தங்கள் சாதியை எவ்வாறு குறிப்பிட்டீர்களோ அவ்வாறே தங்கள் மதத்தையும் குறிப்பிட்டு – தெளிவாக – நேரடியாக ‘நான் கிறித்தவ ஆதிதிராவிடன்’ என்று பதிக்கவேண்டும்;

இதனால் என்ன பலன் என்று கேட்கலாம், அதன் பிறகே நம்முடைய உண்மையான பெலத்தை அரசாங்கம் உணர்ந்து கொள்ளும்; நாமும் நம்முடைய சலுகைகளை உரக்கச் சொல்லிக் கேட்கலாம்;

அம்பேத்கர் சொன்னாராம், என்னை விட என் நாடு முக்கியம்,என் நாட்டை விட என் இலட்சியம் முக்கியம்,என் இலட்சியத்தைவிட எனது சமுதாயத்தின் விடுதலை முக்கியம்’ என்று!

ஆம், குறுகிய மத உணர்வுகளில் நாம் சிக்கிவிடாமல் இதுபோன்ற சமுதாயப் பிரச்சினைகளிலிருந்து அந்நியப் படாமல் ஏக சிந்தையுடன் இணைந்து போராடுவோம்;

வெற்றி நமதே..!

http://in.christiantoday.com/articles/dalit-christians-declare-black-day-on-aug-10/5548.htm

துடித்துப் போனாள்,துர்கா..!


வீட்டுக்கு வந்து சேரவே இரவு 10:30 மணி ஆனது;அடுத்து பிரசாத்துடன் தொலைபேசியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பல காரியங்கள் பேசி ஜெபித்து முடித்து கணிணியில் சொந்த
குறிப்புகளைப் பதித்துவிட்டு இன்று மாலை நான் கலந்துகொண்ட வீட்டுக்கூட்ட செய்தியின் குறிப்பை கட்டுரையாக்கி எனது தளத்தில் பதித்தேன்; இதனை முடிக்கவே விடிந்துவிட்டது;
படுக்கச் செல்லும் போது காலை 05:30 மணியானது;

எழுந்திருக்கும் போது மதியம் 1மணி;தூக்கத்தைத் தொடர்ந்தேன்; இப்போது 2மணி; நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்றதொரு தூக்கம்;

எனது தாயார் போன் செய்து சத்தம் போட்டார்களாம், நான் ஏன் போனை எடுக்கவில்லையென.

பிறகு எனது கைபேசியை எடுத்துப் பார்த்து அதிர்ந்துபோனேன்; அதில் 42 தவறவிட்ட அழைப்புகள் பதிவாகியிருந்தது;

துர்கா மட்டுமே 14 முறை முயற்சித்திருக்கிறாள்; நேற்று காலையும் இதேபோல நான் காலை 4 மணிக்கு படுத்திருந்ததால் நான் தூக்கக் கலக்கத்தில் சரியாகப் பேசவில்லை;

இன்று காலையிலிருந்தும் நான் போனை எடுக்காததால் பயந்துபோய் வீட்டு நம்பருக்கு தொடர்பு கொள்ள நானே எடுத்தேன்; இப்போது சொல்கிறாள்,ரொம்ப நாள் ஆனது போலிருக்கிறது, உங்களுக்கு உடம்பு சரியில்லையா, என;

பிறகு சமாளித்து எனது சில தனிப்பட்ட அசௌகரியங்களைச் சொன்னேன்; மற்றவருக்காக ஜெபிக்கும்போது நமது சரீரத்தில் ஏற்படும் மாற்றங்களையும் பில்லிசூனிய கட்டுகளிலிருப்போருக்காகப் போராடி ஜெபிக்கும்போது நமக்கு ஏற்படும் உபத்திரவங்களையும் கூறினேன்; ஆச்சரியப்பட்டாள்;

‘நீங்க ரொம்ப கிரேட் ஸார்’ என மனதாரப் பாராட்டினாள்; ஆவி உலகம் சம்பந்தமான மற்றும் சில உண்மைகளையும் எளிமையாகச் சொன்னேன்;

ஒவ்வொரு மனிதனும் நன்மையான அல்லது தீமையான ஏதோ ஒரு ஆவியினால் ஆளப்படுகிறான்; இதில் நன்மையான ஆவியினால் ஆளப்படுவோர்க்கு நன்மைகளும் தீய சக்திகளால் துன்பங்களும் உண்டாகிறது;

தீயசக்தியினால் துன்புறுவோர் தேவைக்காக நாம் அடுத்த வீட்டிலிருப்போரிடம் உதவி கேட்பது போல பிரார்த்தனை செய்ய நம்மிடம் வருவார்கள்;

அவர்களுக்கு உதவி செய்யும்போது தீயசக்திகளின் எரிச்சலுக்கு
நாமும் ஆளாக நேரிடும்; ஆனாலும் நாம் பயப்படப்போவதில்லை; அவற்றை அழிக்கவே ஆண்டவர் நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்;

‘உனக்காக யுத்தம் செய்வேன்’ என்கிறாரே,எப்படி?
இதுபோல பிரார்த்தனை செய்பவர்கள் மூலமே நமக்கு விடுதலை வருகிறது; ஏனென்றால் இந்த உலகில் வாழும் நம்முடைய போராட்டங்களை நாமே மேற்கொள்ளும் வழிமுறைகளையும் அதற்கான ஆயுதங்களையும் ஆண்டவர் ஏற்கனவே நம்மிடம் கொடுத்துவிட்டார்;

இப்படியாகச் சொன்னவுடன் தெளிவடைந்த துர்கா, ‘சரி நீங்க தூங்குங்க நான் சாயங்காலம் அழைக்கிறேன்’ என்றாள்;
நானோ, ‘இப்போதே ஜெபிக்கிறேன், மாலையில் என்னுடைய நிலை எப்படியிருக்குமோ’ என்று பிரார்த்தனை செய்தேன்;

ஜெபத்துக்கு முன்பாக கீழ்க்காணும் வாக்கியம் ஆவியில் உதித்தது,
“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.”(சங்கீதம்.37:4)

இதிலிருந்து நான் சொன்ன சில தத்துவங்கள் எனக்கே பாடமாக இருந்தது;

“இருதயத்தின் வேண்டுதல்களை” என்ற வார்த்தையின் மூலம் நாம் அறிவது என்ன?

ஒவ்வொரு ஆத்துமாவின் இருதயத்திலும் ஒவ்வொரு விதமான தனிப்பட்ட விருப்பங்கள் உருவாகிறது; அந்த விருப்பங்கள் நிறைவேறிவிட்டால் பிரச்சினையில்லை; ஆனால் அவை தாமதிக்கும் போது ஏக்கமாக உருமாறுகிறது; ஏக்கமே விரக்தியாக சோர்வாகவும் மனச் சோர்வாகவும் மன அழுத்தமாகவும் மன நோயாகவும் மாறி மனிதனை நடைபிணமாக்குகிறது;

ஆனால் ஆண்டவர் இதற்கு எளிமையான வழிமுறைகளை கொடுத்திருக்கிறார்; இதனையறிந்து நடைமுறைப்படுத்தினால் விடுதலை உண்டாகும்;

ஏன் நாம் ஆண்டவரிடம் செல்ல சங்கடப்படுகிறோம்?
நமக்கு அவர் மீது நல்ல எண்ணமிருந்தும் நாம் ஏன் அவரை ரெண்டாம் பட்சமாக வைத்திருக்கிறோம்?

காரணம், நம்முடைய பெற்றோர் அல்லது நண்பர்கள் நாம் ஒரு தவறான காரியத்தில் ஈடுபடும் போது அதன் எதிர்கால ஆபத்தினை தங்கள் அனுபவத்தினால் உணரும் அவர்கள் நம்மைத தடுப்பார்கள், தேவைப்பட்டால் கண்டிப்பார்கள்;

ஆனாலும் நாம் மாற்றுவழிகளை ஏற்படுத்திக் கொண்டு
அவர்களுடைய எதிர்ப்பையும் மீறி அவர்களுக்குத் தெரியாமல் தவறான வழிகளைத் தொடருவோம்; இதன் விளைவாக நாம் மோசமான நிலைக்குத் தள்ளப்படும்போது நாம் யாரிடம் உதவி கேட்போம்? புதிய ஆட்களிடமே;அவர்கள் நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்து நம்மை அடிமைப்படுத்துவார்கள்;

நாம் நம் மீது உண்மையான அக்கறை கொண்டோரிடம் செல்லுவதில்லை; ஏனெனில் அவர்களை மீறி நாம் வந்ததால்
உண்டான அவமானம் நம்முடைய உள்ளத்தில் மாறாத வடுவாகப் பதிந்துள்ளது;

ஆனாலும் நம்மீது மெய்யான அன்பு கொண்ட நம்முடைய உறவு தனக்கு எவ்வளவு நஷ்டம், அவமானம் ஏற்பட்டாலும் சகித்துக் கொண்டு வந்து நம்மை மீட்டுச் செல்லும்; இதுபோலவே இயேசுகிறிஸ்துவும் நம்மைத் தேடி நாம் பாதிக்கப்பட்டு கண்ணீரில் மிதக்கும் இடத்துக்கே வந்து நம்மை சந்திக்கிறார்; விடுதலையும் செய்கிறார்..!

இதையெல்லாம் சொல்லி ஜெபித்ததும் துர்கா சாட்சி கூறினாள்; அண்மையில் தான் வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதி தூக்கி எறியப்பட்டு குப்புற விழுந்தும் ஒரு காயமும் இல்லாமல் தப்பினாளாம்; அவளது தோழி சொன்னாளாம், “பரவாயில்லையே,அந்த ஜீஸஸ் தான் உன்னைக் காப்பாற்றியிருக்கிறார்” என்று.