“அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.”
(லூக்கா.1:29 Luke)
மரியாள் காபிரியேல் தூதன் சம்பந்தமான வேத வாக்கியம் இது; அதுபோல நண்பர்கள் இந்த (” Rosh HaShanah ” greetings..!) வாழ்த்துதலைக் குறித்து சிந்தித்து அவர்களாக ஒரு சில காரணங்களைக் கண்டுபிடித்து அதனைத் தங்கள் கருத்தாகப் பதித்துள்ளனர்; இதுவே கிறித்தவத்தின் மிகப் பெரிய பெலவீனம்;
Isa 44:18 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.
Hos 8:12 என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.
மேற்காணும் இரண்டு வாக்கியங்களும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்காகச் சொல்லப்பட்டது;ஆனாலும் இங்கே நான் சொல்லவரும் கருத்துக்கும் பொருத்தமாக இருப்பதால் அதனைப் பயன்படுத்துகிறேன்; எனது வாழ்த்துதலுக்கு நண்பர்களுடைய பின்னூட்டம் என்ன? அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவில்லை;எனக்கு பதில் வாழ்த்து சொல்லவுமில்லை;
ஆனால் நாம் பார்க்கதான் போகிறோம், இன்னும் இரண்டே மாதங்களில் கிறித்தவ உலகமே அல்லோலகல்லோலப்படுமளவுக்கு கொண்டாட்டங்களுக்கு நாம் ஆயத்தமாவோம்; சுனாமி வந்தாலென்ன, பூகம்பம் வந்தாலென்ன, வடதேசத்தில் சபைகளுக்கெதிராக உபத்திரவங்கள் நடந்தாலென்ன, தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும் என கடன்வாங்கியாவது கொண்டாடித் தீர்ப்போம்;
ஆனால் வேதம் கொண்டாட உற்சாகப்படுத்தும் எந்த பண்டிகையும் இதுபோன்றதல்ல; கிறித்தவ உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கும் எந்தவொரு பண்டிகையும் வேதத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டு பரிசுத்தவான்கள் ஆசரித்ததல்ல; இதனை எனது வழக்கமான பாணியில் விவாதமாக்காமல்- இதற்கு மேலும் தாமதியாமல்- காலங்கடத்தாமல் போதனையாக எழுத விரும்புகிறேன்;கர்த்தர் தாமே உதவி செய்வாராக.
அதற்கு முன்பதாக ஒரு கிறித்தவ தளம் வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களையும் போதனைகளையும் அறிய விரும்பாமல் எப்படி புறக்கணித்து வருகிறது என்கிறதான எனது ஆதங்கத்தைப் பதிவுசெய்து விட்டு தொடருகிறேன்;
“ரோஷ் ஹஷானா ” எனும் வார்த்தையோ இன்னும் நான் எழுதப்போகும் வேத ஆதாரத்தின்படியான பண்டிகை சம்பந்த எபிரெய வார்த்தைகளோ தமிழ் வார்த்தைகளில் தேடுபொறியில் சிக்கவில்லை;அப்படியானால் இதைக் குறித்த ஞானத் தெளிவு நமக்கில்லையோ,அதைக் குறித்த போதனை நமக்கு அந்நியமானதோ என்று யோசித்தேன்;
ஆனால் அதைக் குறித்த வேதசத்தியம் போதிக்கப்படாமலே நம்முடைய சபைகளில் அறுப்பின் பண்டிகை,சேர்ப்பின் பண்டிகை, கூடாரப் பண்டிகை என களைகட்டி ஸ்டால்களில் கலெக்ஷன் தூள் பரத்துகிறது; இதனைத் தானே நமதாண்டவரும் கண்டித்தார்?
“Isa 29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.”
என்னுடைய வாழ்த்துக்கு சகோதரர் அற்புதம் அவர்களின் பின்னூட்டமிது:
//” Rosh HaShanah ” greetings..! என்றால் என்ன என்று தேடிப் பார்த்ததில் யூத வருடப் பிறப்பு வாழ்த்துக்கள் என்ற பதிலைப் பெற்றேன். உலகமெங்கிலும் சிதறி கூடி வாழும் யூதர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன். சிறைபிடிக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்ட யூதர்கள் எவ்வாறு ஒன்று சேர்ந்து தங்களுக்கான தேசத்தைப் பெற்றார்களோ அதேப் போல உலக தமிழர்கள் ஒன்று கூடி தங்களுக்கான தமிழ் தேசத்தைப் பெற யூத வருடப் பிறப்பு நினைவூட்டுகிறது. ஏனெனில் அவ்வாறு யூதர்கள் ஒன்று கூடியபோது கொண்டாடப்பட்ட பண்டிகைதான் இன்றளவும் வருடப் பிறப்பாக அவர்களால் ஆசரிக்கப்படுகிறது.
சிந்தனைக்கு:
யூத வருடப்பிறப்பு வாழ்த்துகள் கூற தயாராக இருக்கும் நாம் நம் இந்திய துணைக்கண்டத்தில் வாழும் மொழிவாரி மக்களில் வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் கூறி இருக்கிறோமா? //
இதுதான் இந்திய- தமிழ் கிறித்தவத்தின் நிலைமைக்கு நல்லதொரு உதாரணம்; இந்த வாழ்த்தை அவர்கள் வேதத்தின் வாழ்த்தாகப் பார்க்காமல் யூதர்கள் சம்பந்தமான ஏதோ காரியமாகப் பார்த்து வேறு சில புறசாதியினங்களின் பண்டிகைகளுக்கும் நாம் வாழ்த்து கூறுகிறோமா என்று ஆராய்கிறார்கள்; புறசாதியினரின் பண்டிகைக்கும் வேதத்தின் பண்டிகைக்கும் வித்தியாசமுண்டல்லவா?
யூத வருடப்பிறப்பு என்பது யூதர்களுக்கு மட்டுமானதல்ல,அது முழு உலகத்துக்குமானது, அது சிருஷ்டிப்பு சம்பந்தமானது; சிருஷ்டிகர் சம்பந்தமானது,ஜீவன் சம்பந்தமானது,அர்ப்பணம் சம்பந்தமானது,எதிர்வரும் வருடத்தின் ஆசீர்வாதம் சம்பந்தமானது,முழு வேதத்தின் மீதான நமது உரிமை சம்பந்தமானது; இன்னும் என்ன சொல்ல..!
நாம் பெற்றிருக்கும் குறைந்த வேதஅறிவின்படி அது சிதறடிக்கப்பட்ட யூதர்கள் மீண்டும் ஒன்றிணைந்த நாள் (??) போல பாவிக்கப்படுகிறது; ஆனால் காலங்களின் வழியே சென்று வேதத்தை அறிந்துணர -சர்வவல்லவர் மனுக்குலத்துக்காக செய்து முடித்த மாபெரும் இரட்சிப்பின் திட்டத்தை புரிந்துணர உதவுவதே இந்த பண்டிகைதான் என்பது வேதம் போதிக்கும் ஒரு முக்கிய சத்தியமாகும்;
யூதர்களுடைய பாரம்பரியத்தில் இரண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவதுண்டு;அதன் தொடர்பாக ஏழு பண்டிகைகள் ஆசரிக்கப்பட்டன; அதிலொன்று இஸ்ரவேலர் (யூதர் என்று கூறாமல் இஸ்ரவேலர் என்றே குறிப்பிடுவோமாக.) எகிப்திலிருந்து வெளிப்பட்டது தொடர்பான நினைவுகூறுதலாகக் கட்டளையிடப்பட்டு தலைமுறை தலைமுறையாக ஆசரிக்கப்படும் பஸ்கா பண்டிகை;இதுவே பிரதானமானது; இதனை நம்முடைய ஆண்டவரும் அவர்தாமே பரமேறிச் சென்றபிறகும் பவுலடிகள் உள்ளிட்டோரும் ஆசரித்ததுண்டு;அதன் பொருள்பட ஆசரிக்க போதித்ததுமுண்டு;
அடுத்து அதற்கு இணையான மற்றொரு கொண்டாட்ட காலம் தான் ரோஷ் ஹஷானா எனும் புதிய ஆரம்பம்;பஸ்கா பண்டிகையானது மதரீதியிலான வருட ஆரம்பமானால் இது வெளிப்புற வாழ்க்கை அல்லது அரசியல்ரீதியிலான வருட ஆரம்பமாகும்; முந்தியது இஸ்ரவேலருக்கு மட்டுமானது என்றால் பிந்திய வருட ஆரம்பமானது உலகமனைத்துக்கும் பொதுவானதாகும்; ஏனெனில் தேவாதி தேவன் இந்த உலகை நிர்மாணித்த நாளாக அதனை இஸ்ரவேலர் ஆசரிக்கிறார்கள்;அது மூடநம்பிக்கை என்போமா? அது மூடநம்பிக்கையாகவோ அந்நியமாகவோ ஆகுமானால் வேதம் பொய்யாகும், நாமும் வேதத்துக்கு அந்நியமாவோம்;
இது எனது மற்றொரு நண்பரான ஜோ அவர்களின் பின்னூட்டம்:
// உலகளாவிய யூதர்கள் தங்களது தேசத்தை 1948’ல் பெற்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தங்களது உரிமைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை யூத வரலாறு அளித்தது. அதேபோல இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கமும் அஹிம்சை என்ற காந்தீய கொள்கையிடம் மண்டியிட நேர்ந்தது. அமெரிக்க கறுப்பின மக்கள் தங்களது உரிமைகளை பெற்றனர். இப்படி உலகமெங்கும் ஒடுக்கப்பட்டோருக்கு நியாயம் செய்த தேவன், ஈழ தமிழர்களுக்கும் நியாயம் கிடைக்க செய்வார். 2000 ஆண்டுகள் காத்திருந்த யூதர் 400 ஆண்டுகள் காத்திருந்த இந்தியர்….. ம் பார்ப்போம், நம் சகோதரர்களுக்கும் நிச்சயம் நீதியின் சூரியன் உதிக்கும்.
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்பது சொல் வழக்கு ஆனால் இன்றைய தமிழர் பிரிவினைகளாலும், ஒற்றுமையின்மையினாலும் தங்களது குரலை ஓங்கி ஒலிக்க செய்யமுடியாமல் தலை குனிந்து நிற்கும் நிலை. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்தே தமிழர்கள் பிளவுபட்டு கிடந்தனர்…. இனிமேல்?
உலகமெங்குமுள்ள ஆபிரகாமின் ரத்தவழி சந்ததிகளுக்கு
ஆபிரகாமின் விசுவாச சந்ததிகளான
எங்களின் ரோஷ் ஹசானா வாழ்த்துக்கள்….//
இந்த சொல்லை உச்சரிப்பதிலேயே அதன் அழகும் கம்பீரமும் மிளிரும்; இதனால் வேதத்தில் ஒரு யுத்தமே நடந்தது;இஸ்லாமியர் அதாவது பாலைவனத்தில் உமிழ்நீர் வற்றிப்போனவன் “ஷ” எனும் சொல்லை உச்சரிக்க இயலாது; இதுவே யூதருக்கும் அரபியருக்கும் வித்தியாசம்; எனவே மிக எச்சரிக்கையாக அதனைச் சரியாகப் பதிக்க முயற்சிக்கிறேன்;ஆனால் நண்பர் “ஜோ” மிகச் சாதாரணமாக ரோஷ் ஹசானா என்று குறிப்பிட்டிருக்கிறார்; இதெல்லாம் பெரிய பாவமில்லை; ஆனால் சிறிய பயிற்சி அவ்வளவே;
இவரும் கூட சற்றும் பதட்டமில்லாமல் மேலோட்டமாகவே கருத்தினைப் பதிவிடுகிறார்; இந்த நவீன காலத்திலும் வேதத்தின் ஆழ்ந்த சத்தியங்களை ஆராய்ந்தறிய மனமில்லாவிட்டால் அதற்காக வைராக்கியம் கொள்ளாவிட்டால் எப்போது அதற்கு சமயமுண்டாகுமோ?
இந்த சத்தியங்கள் எனக்குத் தெரியவந்தபோது என்னிடம் எந்த வசதியும் இல்லை; அதாவது கம்ப்யூட்டரோ (computer) இணையதள (internet) வசதியோ நல்ல காமெண்டரிகளோ (commentaries) யூதக் கலாச்சாரம் சம்பந்தமான புத்தகங்களோ (jewish history) எதுவுமில்லை;
ஒன்று மட்டும் இருந்தது, வரலாற்றுப்பூர்வமாக வேதத்தையறியும் ஆர்வமிருந்தது; அதன் அடிப்படையிலேயே எனது தனிப்பட்ட முயற்சியில்லாமலே பல விஷயங்கள் எனக்குத் தெரியவந்தது;
நம்முடைய தமிழ்ப் போதகர்கள் பலருக்கும் இந்த விஷயங்கள் தெரியாமல் இல்லை;ஆனாலும் வீணான குழப்பங்கள் வேண்டாமென பல காரியங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன; எல்லாவற்றுக்கும் ஒரு சில வசனங்களைத் தயாராக வைத்திருப்பார்கள்; அவற்றில் சில,
“நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.”(ரோமர்.Rom 14:6 )
“ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.”(கொலொசேயர்.Col 2:16)
ஒரு நண்பர் இந்த வசனம் இருதரப்புக்கும் பொதுவானது என்கிறார்;அதாவது பண்டிகையைக் குறித்த போதனையின் மூலம் பக்திவிருத்தி உண்டாகுமானால் அதனைத் தடுக்கக் கூடாது; அதேபோல அதனைக் குறித்த அறிவில்லாமல் ஒருவன் மந்தமாக இருந்தால் குற்றப்படுத்தவுங்கூடாது;
“விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.” (ரோமர். Rom 14:1)
மேலும் மறுபுறத்தில் மற்றொரு அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது; வேதத்துக்கு முற்றிலும் விரோதமாக – வேதம் நேரடியாகக் கட்டளையிடாத கத்தோலிக்க மார்க்க வழிவந்த பண்டிகைகளைச் சீர்திருத்த சபையார் எனக் கூறிக்கொள்வோரும் அவர்கள் அடியொற்றி ஆவிக்குரிய சபையார் எனக் கூறிக் கொள்வோரும் ஆசரித்துக் கொண்டிருக்கின்றனர்;
வேதத்துடன் நேரடியாக சம்பந்தபட்ட பண்டிகைகளைத் தவிர்த்துவிட்டு பழங்குடியினர் பாரம்பரியமாகக் கொண்டாடி வந்த பண்டிகைகளை நாம் கொண்டாடுவதால் பாபிலோனிய சூழ்ச்சி மார்க்கத்த்துக்கு
கிறித்தவம் விலைபோய்க் கொண்டிருக்கிறது;
வருடமுழுவதும் ஆண்டவருடைய பிறப்பையும் இறப்பையும் உயிர்த்தெழுதலையும் விமர்சிக்கும் உலகத்தார் அனைவரும் குடித்து கூத்தடிக்க பயன்படுத்தும் அந்த விழாக்காலங்கள் அநேகர் விழுந்து போவதற்கே ஏதுவானது;
ஆனால் வேதத்தின் ஏழுபண்டிகைகளும் புரிந்து ஆசரிக்கப்படுமானால் நாம் முழு வேதத்தினையும் மிக எளிதாக நம் முடைய அடுத்த சந்ததிக்கும் கடத்திச் செல்லமுடியும்; இந்த ஏழுபண்டிகைகளும் ஆண்டவருக்குள் நிறைவேறும் அதிசயத்தையும் மிக எளிதாக நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு போதிக்கமுடியும்;
இங்கே நண்பர்கள் சிலாகிக்கும்வண்ணமாக யூதர் சுமார் 2500 வருடத்துக்குப் பிறகும் தங்கள் சுதந்தர தேசத்தையடைந்தார்கள் என்றால் அதற்குக் காரணமாக அமைந்தது,அவர்கள் தங்கள் கலாச்சார அடையாளமான பண்டிகைகளை தேவபயத்துடன் ஆசரித்ததுதான்;அவர்கள் இதில் தவறியபோதெல்லாம் எதிரிகளிடம் வீழ்ந்துபோயினர்;
வேதத்தில் காலங்கள் சம்பந்தமாக சொல்லப்பட்ட வாக்குத்தத்தங்களையும் இந்த அறிவின்மூலமே எளிதாக அடையமுடியும்; இதன்மூலமே விஞ்ஞானத்தையும் எதிர்கொள்ளமுடியும்;உதாரணமாக,
“வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.”(சங்கீதம்.65:11 Psa )
-எனும் வாக்கியமானது எந்த பொருளில் -எந்த வருட ஆசரிப்பு முறைக்காகச் சொல்லப்பட்டதோ அதற்கு மட்டுமே பொருந்தும்; இதனைக் குறித்தும் இன்னும் விவரமாக எழுதுவேன்; ஒவ்வொரு பண்டிகையையும் அதன் முக்கியத்துவத்தையும் நிதானமாக எழுத முயற்சிக்கிறேன்; வாசகர் எனக்காக ஜெபிக்கவும்; மாற்றுக்கருத்து இருப்பின் தயவுகூர்ந்து தெரிவிக்கவும்.
“ரோஷஹ்ஷானா” –” Rosh HaShanah ” greetings…God Bless You..!