Tag Archive | ஆண்டவர்

தாய்மதம் திரும்பும் இந்துக்கள்..!


// திருநெல்வேலி:

பிற மதங்களில் இருந்து, இந்து மதத்திற்கு திரும்பும் நிகழ்ச்சி, நேற்று நெல்லையில் நடந்தது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நெல்லையில் நேற்று மதமாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதமாறும் நிகழ்ச்சி, திருநெல்வேலி பார்வதி சேஷ மகாலில் நடந்தது. இதில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் மற்றவர்கள் கிறிஸ்தவர்கள். சுத்தி ஹோமம் நடத்தப்பட்டு, அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சாரதா கல்லூரி தாளாளர் சங்கரானந்தா சுவாமிகள் அவர்களுக்கு வீட்டில் பூஜை செய்ய விளக்குகள் வழங்கி, ஆசிர்வதித்தார்.

இது குறித்து வி.எச்.பி.,மாநில கோபாலரத்தினம் கூறுகையில், “”இந்தியா முழுவதும் குடும்ப கட்டுப்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை, இந்து மக்கள் மட்டுமே கேட்டு அதன்படி நடக்கிறார்கள். இதனால், மற்ற மதத்தினரை காட்டிலும் இந்து மக்கள் தொகை விகிதாச்சாரம் குறைந்து வருகிறது.

மதமாற்றத்திற்காக, ஒரு ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாயை பல்வேறு வெளிநாடுகள் இந்தியாவில் விதைக்கின்றன. “இந்தியாவில் அறுவடை’ என்ற பெயரில் முகாம் நடத்தி, மதமாற்றங்களை நடத்துகின்றனர். ஆனால், மற்ற மதங்களுக்கு செல்லும் மக்கள் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. அங்கேயும் ஆலய வழிபாட்டில் பேதம், இடுகாடு போன்றவற்றில் ஜாதிப் பிரச்னை நீடிக்கிறது.

எனவே, தாய் மதமான இந்து மதத்திற்கு பலரும் தாங்களாகவே விண்ணப்பித்து மாறுகிறார்கள். நாங்களும் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்களா… அரசின் நலத் திட்டங்களுக்காக மாறுகிறார்களா… என, ஆலோசித்தே சான்றிதழ் வழங்குகிறோம், என்றார். நிகழ்ச்சியில் தர்மபிரசார் அமைப்பாளர் பெருமாள், சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். //

http://www.dinamalar.com/district_detail.asp?id=172793

மேற்கண்ட தினமலர் பத்திரிகையின் விஷமமான செய்தியை வாசித்ததும் பயங்கரமான சிரிப்பு வந்தது;மீனவர்கள் கடலுக்குச் சென்று வலைவீசி மிகுந்த பிரயாசத்துடன் மீன்பிடிக்கிறார்கள்;அப்படி பிடிக்கப்பட்ட மீன்களிலிருந்து சிலது கரையேறும் முன்பே துள்ளி கடலில் வீழும்;அங்கே அவற்றை விழுங்க திமிங்கலங்கள் காத்திருக்கும்;அதுபோலவே மனித வாழ்க்கை என்பது உள்ளேயும் சரி, வெளியேயும் சரி துன்பங்கள் நிறைந்தது;அநித்தியமானது;இதில் எங்கே இருந்தால் என்ன‌?

ஏன் சிரிப்பு வந்தது என்றால் இந்த நாளிதழ் நல்ல தரமான நிருபர்களை உடையதானாலும் இந்த குறிப்பிட்ட செய்தியின் வாசகங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது;அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்,இதில் பக்கத்தை நிரப்ப எதையாவது எழுதவேண்டுமே..!

இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு காரணமாக இந்துக்களின் தொகை வேகமாக குறைந்து வருகிறதாம்;மேலும் மதமாற்றத்தின் காரணமாகவும் இந்துக்கள் தொகை குறைந்து வருகிறதாம்;மதம் மாறியவர்கள் இந்தியாவில் தானே இருக்கிறார்கள்? அவர்கள் இந்தியாவைவிட்டு ஓடினால் தானே தேசபக்தர்கள் கவலைப்படவேண்டும்? இந்த தேசபக்தர்கள் இந்தியாவை சுரண்டி வெளிநாடுகளில் இலட்சம் கோடிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்களே,அதுவல்லவா இந்தியாவை பெலவீனப்படுத்தும்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதமாற்ற தடைசட்டம் கொண்டு வந்தபோது அதில் முக்கிய குறிப்பாக வைத்தது,பெண்களையும் குழந்தைகளையும் மதம் மாற்றக்கூடாது என்பதே;ஆனால் இங்கே 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதம் மாறினார்களா;இது கேலிக்கூத்தாக இல்லையா? குழந்தைகளையும் மதம் மாற்றும் கொடுமையை எங்கே போய் சொல்லுவது? எப்படியோ இந்தியர்கள் அனைவரும் இந்துக்களாகி விட்டால் இந்தியாவில் சாதிக்கொடுமைகளோ வரதட்சணை கொடுமைகளோ இலஞ்ச லாவண்யமோ வர்க்கக்கொடுமைகளோ இல்லாது முழு இந்தியாவும் சுபிக்ஷமாகிவிடும் என்று நம்புவோமாக‌.

மூத்த அப்போஸ்தலர் செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்..!


Senior Chennai Pentecost Leader Rev, P.S.Chelladurai F/O Rev. Sam P. Ch expired at 7.15 p.m. Sunday (5/12). He is 88 yrs.His Funeral service tomorrow 2.30 p.m.at AFT church, Purasavakkam. Burial at 4.30 p.m. at Kilpauk. www.revsam.org

Pls Fwd to all…Thank You..!

PSC4.png

Pastor P. S. Chelladurai – The founder of AFT Church and father of Rev. Sam P. Chelladurai, passed into glory on 05-12-2010 at 07:15pm in Chennai. The funeral service will be held at 02:30pm in AFT Church on Tuesday (07-12-2010). Burial will be in Kilpauk Cemetery at 04:30pm. The service will be webcast LIVE.

பெந்தெகொஸ்தே இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் மூத்த அப்போஸ்தலருமான செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்; நேற்று மாலை 07:15 க்கு அவருடைய உயிர் பிரிந்தது; நாளை மாலை 04:30 மணிக்கு அவருடைய நல்லடக்கம் நடைபெறுவதாக அறிகிறோம்.

ஐயா அவர்கள் தனது  88 வது வயது வரையிலும் நல்ல நினைவாற்றலுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது;அவர்கள் தனது விசுவாசத்தைத் தூண்டும் போதனைகளால் அநேகரை எழுப்பியதுடன் தனது பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்தம் சந்ததியையும் கண்டு ஒரு முழுமையான வெற்றிகரமான கிறித்தவ ஜீவியத்தை நிறைவேற்றினார்.

அவர் தனது துணைவியாருடன் கொண்டிருந்த உத்தமமும் சமாதானமும் நிறைந்த‌ இல்வாழ்க்கை மிகவும் போற்றுதற்குரியது; இளந்தலைமுறையினர் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியானது; பிரபல போதகர் சாம்.P.செல்லத்துரை அவர்கள் அன்னாரது மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்த்தருடைய வருகையில் நாம் அவரை சந்திப்போம் என்ற விசுவாசத்துடன் நம்முடைய சபையின் தலைவருக்கு நமது இறுதி மரியாதையினை செலுத்துகிறோம்;அவர்மூலமாக நாம் கற்றுக்கொண்ட நல்ல விசுவாச போதனைகளுக்காக ஆண்டவருக்கு துதி செலுத்துகிறோம்.

கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை..!


இன்று (2pm) எனது நண்பர் பாலன் பால்ராஜ் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது வெளிப்பட்ட சிந்தனை…

‘ கடவுள் இல்லை ‘ என்று சொல்கிறவர்களை நாத்திகர் என்கிறோம்; நாத்திகர் கடவுள் இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளலாமா,அது ஏற்புடையதா என்று யோசிப்பதற்கு முன்னர் ” கடவுள் இல்லை ” எனும் கொள்கையிலுள்ள இல்லை என்ற சொல்லுக்குரிய கொள்கையை ஆராயவேண்டுமல்லவா?

இல்லை என்பதைக் குறித்த விளக்கம் ஆங்கிலத்தில் Absence of Something என்றும் Something that does not exist என்றும் கூறப்பட்டுள்ளது; இதன்படி இருக்கும் ஏதோ ஒன்று இல்லாமலிருப்பதே இல்லை (What is Something ? and what is Nothing ?) என்பதன் கொள்கையாம்;

உதாரணத்துக்கு, என் கையில் பணமில்லை என்றோ என் பாக்கெட்டில் அல்லது என் சட்டை பையில் பணமில்லை என்றோ சொல்வோமானால் பணம், இல்லை எனும் இரு சொற்களில் பணம் என்பதைக் குறித்து அறிந்திருந்தாலே அது இல்லை என்று சொல்லமுடியும்;

பணத்தின் அருமை யாருக்கு தெரியும்,அதனைப் பயன்படுத்தியவருக்கே அல்லவா? மனநிலை சரியில்லாதோருக்கும் குழந்தைகளுக்கும் பணத்தைக் குறித்து ஒன்றும் தெரியாது;

பணம் என்பது என்ன, அதை யார் உண்டாக்கினார், அதன் நோக்கம் என்ன, அதன் அவசியம் என்ன‌ போன்ற அம்சங்களே பணம் என்ற சொல்லின் ஆதாரமாக இருக்கிறது; அதனை உணர்ந்த பின்னரே அது இல்லாததைக் குறித்து அறிந்தோ அல்லது வருந்தியோ அது இல்லை என்று கூறமுடியும்;

இதுபோலவே கடவுள் இல்லை என்று கூறுவதற்கு முன்னர் அவர் யார் என்ற கொள்கையைக் கூறிய பிறகே அவர் இல்லை என்று கூறமுடியும்; கடவுளைக் குறித்து எதுவும் தெரியாமலே கடவுள் இல்லை என்பது ஒரு பொருளைக் குறித்து இல்லை என்று சொல்லக்கூடிய ஆதாரக் கொள்கைக்கு முரணானது ஆகும்; இல்லாத ஒன்றை இல்லை என்று கூறவேண்டிய அவசியமென்ன‌?

No God, No Peace; Know God, Know Peace..!

இப்போதைக்கு எனக்கு ” ஞானம் இல்லை “என்று வைத்துக்கொள்வோமா..?

திருநங்கைகள் Part.2


திருநங்கைகள் சம்பந்தமாக அண்மையில் தமிழ் கிறித்தவ தளத்தில் நாம் அளித்த பின்னூட்டம்…

அன்பு நண்பர் சரவ் அவர்களுக்கு தாங்கள் குறிப்பிட்ட திருநங்கைகள் சம்பந்தமான எனது கட்டுரையை தொடுப்பில் சென்று பார்க்கவும்;

https://chillsam.wordpress.com/2009/11/12/eunuch/

நண்பரே, 1.கொரிந்தியர் .5 திருநங்கைகளுக்காகவே எழுதப்பட்டதைப் போலக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்; அது மீட்கப்பட்ட சபைக்காக எழுதப்பட்டதாகும்.

// வேதம் நமக்கு இவ்வாறு நமக்கு சொல்லியிருக்க நாம் எப்படி திருநங்கைகள் என்று சொல்லபடுகின்ற நபர்களோடு அவர்கள் மனந்திரும்பாத பட்சத்தில் கர்த்தருக்குள் ஐக்கியம் கொள்ள முடியும்.அவர்கள் சபையில் வரலாம் வேத வார்த்தையை கேட்கலாம் ஆனால் தங்கள் பாவ கிரியைகளை விட்டு மனந்திரும்பாத பட்சத்தில் எப்படி ஐக்கியம் கொள்ள முடியும் என்று தெரியவில்லை.//

மற்ற சாதாரண மனிதர்களோடு பழகி உறவாடி வியாபாரம் செய்து ஐக்கியம் கொள்ளும் போதும் இதே உணர்வு உங்களுக்கு உண்டாகுமா; அவர்கள் மனந்திரும்பும் வரை காத்திருந்து ஐக்கியம் கொள்வதைப் போலவே இவர்களுடனும் நேசம் பாராட்டுவதில் என்ன தயக்கம்? சபைக்குட்பட்ட‌ மற்ற மனிதர்கள் பாவமே செய்யவில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்? திருநங்கைகள் என்றாலே அந்தரங்கமாக மிகவும் மோசமானவர்கள் எனும் தவறான அபிப்ராயமே தங்களது அச்சத்துக்குக் காரணமாக இருக்கிறது; இந்த உலகிலுள்ள அனைவரையும் போலவே திருநங்கைகளும் பாவத் தன்மையில் பிறக்கிறார்கள் என்பதைத் தவிர அவர்கள் எந்த வகையிலும் மற்ற மனிதர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர்களல்ல‌.

இன்னும் சொல்லப்போனால் பாவத்தை நிறைவேற்றும் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட மாறுபாட்டினால் மனம் பேதலித்து துவண்டுபோய் தாழ்வு மனப்பான்மையினால் சமூகத்தைவிட்டு தள்ளப்பட்டவர்கள்; இதனால் பாவ சோதனைகள் குறைவானவர்கள்; அன்புக்காக ஏங்குபவர்கள்.

பின்குறிப்பு:

இதையெல்லாம் படித்துவிட்டு என்னை சந்தேகப்படவேண்டாம்…ஹி..ஹி..!

Part.2:2

//நாளைக்கே ஒரு திருநங்கை மனந்திரும்பாமல் (தன பாலிய தொழிலை செய்து கொண்டும்) ஞான ஸ்நானம் வேண்டும் என்றால் எப்படி நம்மால் கொடுக்க முடியும்.//

திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள் என்ற எண்ணத்தை முதலில் தவிர்க்கவேண்டும் ;அடுத்து தங்கள் பாலியல் தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள் என்ற பகுதி ;இவையெல்லாமே பரிசுத்தாவியைப் பெற்றவர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் நிதானமாக செயல்பட்டு போதனையின் மூலம் நிறைவேற்ற வேண்டிய எல்லைகளாகும் ;

வேதமே தெளிவாகக் கூறுகிறது,தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தோரும் உண்டு ;தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டோருமுண்டு’ என ; ஆம் ,நார்மலாகப் பிறந்து தேவனுடைய ராஜ்யத்துக்காகத் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டோர் என்பார் தவறு செய்யவில்லையா ,அதுவும் போகட்டும் ,மனதின் உணர்வுகளை அடக்கிக் கொண்டு அண்ணகர்களாக தேவபணியாற்றுவோரை விட தங்களை சரீர ரீதியான கெடுத்துக்கொண்டு தங்கள் ஆண்மையை இழந்தோரின் நிலைமை பரிதாபமல்லவா ,அவர்களுடைய மனமே இதைச் செய்யக் காரணமாக இருந்தது எனில் வேத வார்த்தையின்படி அவர்கள் மனம் புதிதாகுமானால் எத்தனை மேன்மையாக இருக்கும்..?

Part.2:3

// நீங்கள் என்ன சொல்ல வருகிறீர் என்று எனக்கு புரியவில்லை.பாலியல் தொழில் செய்து கொண்டு இருந்தாலும் அவர்களை சபையில் ஞான ஸ்நானம் கொடுத்து,கர்த்தரின் பந்தியில் பங்கு பெற சொல்கிறீகளா? அல்லது வேறு என்ன சொல்ல வருகிறீர். //

திருநங்கைகளுக்கென்று தனி சுவிசேஷமோ தனி அணுகுமுறையோ தேவையில்லை என்கிறேன்; பாலியல் தொழில் செய்வோரை வேதம் எப்படி அணுகுகிறதோ அப்படியே திருநங்கைகளையும் அணுகினால் போதுமென்கிறேன்;

பாலியல் தொழில் செய்யாவிட்டாலும் இங்குமங்கும் ஓரிரு காரியங்களில் சறுக்கிவிட்டு பந்தியில் பங்கேற்போர் இருக்கிறார்களல்லவா? பந்தியில் பங்கேற்பது பெரிய விஷயமல்ல; நீங்கள் தராவிட்டால் அவரைக் குறித்து அறியாத எங்கு வேண்டுமானாலும் அவர் பந்தியில் பங்கேற்கமுடியும்; எனவே தான் வேதம் அவரவருடைய மனசாட்சியை இங்கே நீதிபதியாக (1.கொரிந்தியர்.1:31) கூறுகிறது.

இன்னும் சில சபைகளில் கணவன் மனைவி சண்டையிட்டு வந்தாலும்கூட பந்தியிலிருந்து விலக்குவார்கள்; இதற்கெல்லாம் யாருக்கும் அதிகாரமில்லை; இது கிறித்துவுக்குள் விசுவாசிக்குக் கொடுக்கப்பட்டுள்ள சுயாதீனத்தைக் கேள்விக்குரியதாக்கிவிடும்; போதிக்கவும் ஜெபிக்கவும் மட்டுமே ஊழியருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது; ஆனால் இங்கே மனைவியை தள்ளிவிட்டு விசுவாசியாக இருக்கமுடியாது; ஆனால் போதகராக இருக்கலாமல்லவா..? தள்ளிவிடப்பட்டவளை விவாகம் செய்பவனும் அவளை தள்ளிவிட்டவனுமாகிய இருவருமே அவளை விபச்சாரம் செய்யப்பண்ணுகிறார்கள் என்று வேதம் கூறுகிறது.

சரி, மீண்டும் மையப் பொருளை நோக்கி வருவோம்…
திருநங்கைகள் இயல்பிலேயே பாவத்துக்கு அடிமைகளல்ல, அன்புக்கே அடிமைகள்; ஏனெனில் அவர்களுடைய உடற்கூறு அமைப்பே அப்படிப்பட்டதாகும்; மேலும் பிறப்பிலேயே திருநங்கைகளானவர்கள் மூலமே இடையில் மனநிலை காரணமாகத் தங்களைத் திருநங்கைகளாக மாற்றிக் கொண்டோரை சந்திக்கவேண்டும்.

கிறித்தவ விசுவாசத்தைப் போல திருநங்கைகளை முழுமையடையச் செய்யும் வேறொரு கொள்கை இந்த அகிலத்திலேயே கிடையாது என்பேன்; ஆனால் திருநங்கைகளைக் கவர்ச்சிப் பொருளாகவும் வியாபாரப் பொருளாகவும் வேடிக்கைப் பொருளாகவும் இந்த உலகம் பார்க்கிறது; எனவே தங்களை வஞ்சிக்கும் இந்த உலகைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒருவித மூர்க்கத்தனம் அவர்களுடைய குணாதியத்தையே மாற்றிவிடுகிறது;

எப்படி மிகவும் அழுக்காக இருக்கும் ஒரு துணியை மிக அதிக தண்ணீரும் சௌக்காரமும் போட்டு அதிக முயற்சியினால் வெளுக்கிறோமோ அதுபோலவே திருநங்கைகள் மிகவும் மோசம் என்று நீங்கள் நினைத்தால் அவர்களைவிட்டு விலகாமலும் விலக்கிவிடாமலுமிருந்து அவர்கள் தானியேல்,எஸ்தர் போன்ற பரிசுத்தர்களை நேசத்துடன் வளர்த்தவர்தம் வழிவந்தோர் என்ற பாசத்துடன் அணுகினால் போதும் என்கிறேன்.

(தொடருவேன்…)

நல்ல சமாரியன் ஓவன் ராபர்ட்ஸ் ஐயா அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்..!


வலைதளத்தில் தமிழ் கிறித்தவம் மிகவும் பின் தங்கிருக்கிறதோ என்று யோசிக்கிறேன், வருந்துகிறேன்; ஒருவேளை எனக்குத் தேடத் தெரியவில்லையோ என்னவோ..!

நேற்று (15.20.2010) சென்னையில் காலமான மூத்த போதகர் ஓவன் ராபர்ட்ஸ் அவர்களைக் குறித்த எந்த செய்தியும் இணையதளத்தில் கிடைக்கவில்லை.

DSC_1641.JPG

அன்னார் தமது சரீர பெலவீனங்கள் மத்தியிலும் ஆண்டவருக்காக இடையறாது செய்த ஊழியங்களுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம்.

அவருடைய ஊழியத்தைக் குறித்து அறிந்தோர் அவர்தம் ஊழியத்தைக் குறித்த தகவல்களை இங்கே பதித்து அவருடைய ஊழியத்தைப் போற்றும் வண்ணமாக சாட்சிகளைப் பகிர அன்புடன் அழைக்கிறேன்.

மாயாவி ஜட்சன் ஆபிரகாம் கையில் விஷ்ணு சக்கரம்..!


இன்று (02.10.2010)காலையில் சுமார் 7மணிக்கு தமிழன் டிவி-யில் ஜட்சன் ஆபிரகாம் அவர்களின் சுவிசேஷ நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்தேன்;

நிகழ்ச்சிக்கு முன்பதாக அவர்களுடைய வீரதீர பராக்கிரமங்களின் தொகுப்பாக வரும் க்ளிப்பிங்ஸ்…அதிலொரு குறிப்பிட்ட காட்சியில் ஒரு பயங்கரமான துணிகரம் அரங்கேறியது;

மாயாவி ஜட்சன் ஆபிரகாம் தனது வலது கரத்தை உயர்த்துகிறார்;அப்போது அவரது உள்ளங்கையிலிருந்து ஒரு நட்சத்திரம் போன்ற ஒளி தோன்றி வளர்ந்து விஷ்ணு சக்கரம் போல சுழல எதிர்புறம் நிற்கும் அப்பாவி பொதுஜனம் ‘பொத்’தென சரிந்து விழுகிறது;

இதுபோன்ற மோசடிகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதாலும் என்னைப் போன்ற ஒருசிலர் எங்கோ ஒரு மூலையிலிருந்து புலம்பிவிட்டுச் செல்வதாலும் இதுபோன்ற மோசடியாளர்கள் தினவெடுத்து சுவிசேஷ மேடைகளை மாயதந்திர காட்சி மேடையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்;

இவர்கள் வேத சத்தியத்தை மறைத்து அதற்கு விரோதமாக செயல்படுவது இந்துமார்க்கப் பின்னணியிலிருந்து வரும் சாதாரண மக்களுக்கு இது பெரிய குற்றமாக இராது;ஆனால் வேதத்துக்குப் புறம்பான இதுபோன்ற செயல்கள் கண்டிக்கப்படாவிட்டால் அதாவது பணத்துக்காக இவர்களை அழைத்து கூட்டம் போடும் ஒருங்கிணைப்பாளர்கள் அதனைக் குறித்து எச்சரிக்காவிட்டால் தேவ பயங்கரம் இறங்கும்;

அவர் தமது நாமத்தை வீணிலே வழங்கும் ஒருவரையும் சும்மா விடவே மாட்டார்;வியாதியிலோ விபத்திலேயோ கொலைசெய்யப்பட்டோ இந்த துரோகிகள் வீழ்த்தப்படுவர்;அல்லது இந்து விரோதிகளால் முச்சந்தியில் வைத்து அவமானப்படுத்தப்படுவர்;அல்லது வருமான வரி விவகாரங்களில் சிக்கி அசிங்க்ப்படுவர்;அல்லது இவர்களோ இவர்கள் பிள்ளைகளோ
விபச்சார குற்றங்களில் சிக்கி தண்டிக்கப்படுவர்;இவை அன்றாட செய்தியாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

சில நண்பர்கள் கூறுவது போல இவர்களுக்கு எழுதி விளக்கம் கேட்பதோ விளக்கத்துக்காகக் காத்திருப்பதோ வேண்டாத வேலை; இது மோசடி என்பது என்னைப் போன்ற நுனிப்புல் மேயும் முட்டாளுக்கே தெளிவாகத் தெரிகிறதே;

இவர்கள் மனம் புண்படாதிருக்கவே மென்மையாகவும் அப்பாவியைப் போலவும் சந்தேகம் கேட்பது போன்ற பாவனையில் எழுதுகிறேன்; இதனால் எந்த ஒரு புது விசுவாசியும் நிச்சயமாக இடறலடையும் வாய்ப்பே இல்லை;சரியானதைக் குறித்து யோசிக்கும் வாசலையே நான் திறக்கிறேன்;

இதற்கு நீங்கள் ஆதாரம் கேட்பது அநியாயம்,ஏனெனில் இலட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறார்கள்; வெறும் ரெண்டு பேர் தான் பார்த்ததாக சாட்சி சொன்னாலே போதுமானது;

இப்படிப்பட்ட‌ மோசடியும் சத்தியத்துக்கு விரோதமானதுமான  துணிகரமான செயல்களை உண்மையான கிறித்தவர்கள் கண்டித்தாலே இவர்கள் நல்வழி திரும்ப வாய்ப்புண்டு; இன்னும் சொல்லுகிறேன்,இவர்களுடைய இரத்தப்பழியை ஆண்டவர் நம்மிடம் கேட்டால் என்ன செய்வோம்?

என்னைப் போன்ற சாதாரணமானவனுக்கு இந்த உணர்வை ஆண்டவர் கொடுக்க என்ன காரணம்,சிந்திப்போமா?

ஆண்டவர் இவர்களிடம் கிருபையாகக் கொடுத்துள்ள மந்தையினை சூழ்ச்சியினாலோ இழிவான ஆதாயத்துக்காகவோ மேய்க்காத வண்ணம் சபையார் அனைவரும் இணைந்து ஜெபிக்கவும் போராடவும் உணர்த்தவும் வேண்டும்;

சகோதரி ப்ரீத்தா அவர்கள் ஒரு நல்ல சுவிசேஷ பிரசங்கியாளர்; தற்போது அவரையும் இந்த படுபாவி கெடுத்துப் போட்டார்; அபிஷேகம் ஒருவரையும் புழுபோல விழுந்து நெளியச் செய்யாது, சகோதரி.

நீங்கள் சிங்கப்பூரில் பென்னிஹின் கூட்டத்தில் பார்த்த காட்சியைக் குறித்த பெருமை மிகுந்த தொலைக்காட்சி பேச்சில் நீங்களும் உங்கள் கணவரும் மாத்திரமே விழவில்லை என்றீர்கள்; பாஸ்டர்களெல்லாம் விழுந்து நெளிந்தது பரிசுத்தாவி இறங்கியதாலே என்றால் நீங்கள் விழாத காரணமென்ன, நீங்கள் பரிசுத்தாவியானவருக்கு இணையானவர்கள் (Super Power) என்பதாலா அல்லது பிசாசுகள் (devil) என்பதாலா?ஒரே குழப்பமாக இருக்கிறது.

கொஞ்சம் சரியாகவும் அதிகம் தவறாகவும் கலந்தடிக்கிறீர்கள்;  அவற்றை வகை பிரித்து உங்கள் சூழ்ச்சிகளை இனம் காணுமளவுக்கு எமது ஜனம் விவரமானதல்ல; தயவுசெய்து இயேசுவின் பெயரால் இவற்றையெல்லாம் செய்து அவருடைய தியாகத்தை அவமாக்க வேண்டாம்; சொல்லப்பட வேண்டிய தீர்க்கமான செய்தி சிலுவையைப் பற்றியதே என்பதை அறிவீர்களாக.

குற்றச்சாட்டு சுருக்கமாக
:

1. ஆவியில் விழுதல்

ஜெபிக்க வருவோரை கீழே தள்ளுவதும் அதைக் குறித்த தெளிவான போதனையை போதிக்காததும்; நெடுநாளாக பலர் கண்டித்தும் எருமை மாட்டு மேல் மழை பெய்தது போல என்னைக் கேட்க யாருண்டு என்று அந்த தவறைத் தொடருவது.

2. உள்ளங்கையில் விஷ்ணு சக்கரம்

இதில் இன்னும் ஒரு படிமேலேசென்று கணிணியின் தந்திரக்காட்சியின் (Comp.Graphics) உதவியுடன் உள்ளங்கையிலிருந்து விஷ்ணு சக்கரம் சுழன்று வருவதைப் போல சித்தரித்து பார்வையாளர்களை பிரமிக்கச் செய்வது; கொஞ்ச காலத்தில் உங்கள் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் போட்டுக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை; ஆனால் இதுபோன்ற துணிகரங்களை அன்பு சகோதரர் டிஜிஎஸ் அவர்கள் கூட முயற்சிக்கவில்லை.

திருச்சிக்காரன் ஓட்டம்…


எமது பல்முனைத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திருச்சிக்காரன் ஓட்டம்…

http://thiruchchikkaaran.wordpress.com/

சுகவீனம் காரணமாகவும் வேலைப்பளு காரணமாகவும் தளத்தைப் பராமரிக்காமலிருப்பது வழக்கமான ஒன்றுதான்;ஆனால் அதற்காக தளத்தையே மூடிவிட்டு ஓடுவது என்ன நியாயம்?

இதனால் எமது உழைப்பும் வீணாகிறதே… இதனை எதிர்பார்த்துதான் நான் எனது ஒவ்வொரு பின்னூட்டத்தையும் சேமித்து கட்டுரையாக்குகிறேன்;

இதனை எனது தளத்தில் வாசகர்கள் வாசிக்கலாம்.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&subForumID=506728&p=2

வெற்றித் திருமகள் உன்னைத் தேடி..தேர்வு எழுதும் மாணவர்களுக்காக…


பெற்றோருக்கு ஒரு வார்த்தை…

இது உங்களுக்கும் உங்கள் கண்மணிக்கும் சோதனையான கட்டமாகும்;  இந்த நேரத்தில் இருதரப்பும் பதட்டமாகவே இருக்கும்; ஆனால் நீங்கள் தான் சற்று பொறுமையாக இருந்து உங்கள் பிள்ளையை ஆதாயப்படுத்த வேண்டும்; உங்கள் கண்மணியைக் கோபப்படுத்த வேண்டாம்; விரட்ட வேண்டாம்; குற்றப்படுத்த வேண்டாம்; நல்ல வார்த்தைகளைச் சொல்லி தைரியப்படுத்துங்கள்; உயர்த்தி பேசுங்கள்; நீங்கள் கடவுளை நம்புவதால் அவர் நிச்சயமாக நன்மை செய்வார்; அற்புதம் என்பதே எதிர்பாராமல் நடப்பது தானே; அற்புதம் என்பதை ‘மேஜிக்’ போல யாரும் திட்டமிட்டு செய்யமுடியாது;எனவே மனந்தளராமல் சிறந்த வாய்ப்புக்காகப் போராடுங்கள்,உங்கள் கண்மணியுடன் இணைந்து..!
தொடர்ந்து வாசிக்க…


விரும்பினது வாய்க்கும்..!


ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் பல்வேறு ஆசைகள் தோன்றுகிறது;அவை நிறைவேறாவிட்டால் ஏக்கமாகவும் விரக்தியாகவும் மனச்சோர்வாகவும் மாறி மனிதனை துன்புறுத்துகிறது;

ஆனால் ஆண்டவர் “இருதயத்தின் வேண்டுதல்களை” அருள் செய்வதாகக் கூறுகிறார்; “அருள் செய்வேன்” எனும் வார்த்தை இயல்பான தேவ இரக்கத்தினைக் காட்டுகிறது; தகுதியின் அடிப்படையிலல்ல; தமது அன்பின் ஆதாரத்திலிருந்து கிருபையுடன் ஆசி தரும் தேவ சிநேகம்..!

தொடர்ந்து வாசிக்க…

“அப்பா, பிதாவே”


இன்று காமராஜபுரம் ஊழியத்தில் ஜெப நேரத்தில் வெளிப்பட்ட (thought) சிந்தனை…

இயேசுவானவர் இந்த உலகத்தில் 33 .5 வருடம் வாழ்ந்ததாகவும் சுமார் 3 .5 வருடம் ஊழியம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது; ஆனால் ஆவியானவருடைய பணி கடந்த 2000 வருடமாகத் தொடருகிறது;

அவருடைய உதவியாலே பிதாவாகிய தேவனை “அப்பா, பிதாவே” என்று அழைக்கும் உரிமையே எனக்குக் கிடைத்தது;

அவருடைய பெயரைச் சொல்லியே இந்த வருடம் முழுவதும் பிழைத்தேன்;உடுத்தினேன்;சுகமாகத் தங்கினேன்;

இந்த உலகில் நாம் விரும்பும் எத்தனையோ பேரை அண்ணா, அய்யா, அம்மா, அக்கா என்றெல்லாம் உறவு சொல்லி அழைக்கிறோம்; அவர்களெல்லாம் நம்மை மெய்யாகவே உறவாக நினைத்து தங்களிடமிருக்கும் அருமையானவற்றை நமக்குக் கொடுப்பார்களா?

ஆனால் சொந்த அம்மா,அப்பா கூட நம்மைக் காப்பாற்ற முடியாத நிலையில் நம்மை ஏற்றுக்கொண்ட ஆண்டவர் நம்மை போஷிக்கிறார்;

நாமோ மாம்சமும் மனசும் விரும்பினதையெல்லாம் செய்து கோபாக்கினையின் பிள்ளைகளாக மரணத்துக்கு ஏதுவானவர்களாக பயப்படுகிறவர்களாக இருந்தோம்;

ஆண்டவரோ நமக்கு இர(ற)ங்கி நம்மைச் சேர்த்துக்கொண்டு தமக்கு நம்மை உறவாக்கி அழகு பார்க்கிறார்;

பூமியின் கடைக்கோடியில் விசாரிக்கப்படாத நிலையிலிருந்தாலும் உன்னதத்திலிருந்து நம்முடைய கூப்பிடுதலைக் கேட்கிறார்

Amazing Grace..!