Tag Archive | திட்டம்

மனிதனுக்காக மரணிக்கும் மிருகங்கள்..!


இது மாலை மலர் இதழில் வெளியான செய்தியாகும்.

மாற்று ஆபரேசன் மூலம் மிருக உறுப்புகளை மனித உடலில் பொருத்த திட்டம்; சீன விஞ்ஞானிகள் ஆய்வு

பெய்ஜிங், மார்ச். 26- பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மிருகங்களின் உடல் உறுப்புகளை பொருத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.சீனாவில் உள்ள நாஜ்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதற் கான ஆய்வை மேற்கொண் டுள்ளனர்.முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன.

அது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பின்னர் மற்ற விலங்குகளின் உடல் உறுப்புகளையும் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

http://www.maalaimalar.com/2011/03/26123621/transfer-operation-used-for-an.html

இந்த செய்தியைச் சொன்னதுமே எனது மனைவி சொன்னது, பிசாசை ஆண்டவர் பன்றிக்குள் அனுப்பினார், மனுஷன் அந்த பன்றியை மனுஷனுக்குள் வைக்கப்போறானா ‘ என்று அங்கலாய்த்துக் கொண்டார்..!

ஏற்கனவே பன்றியின் கொழுப்பிலிருந்து இனிப்புகள் மீது போடப்படும் சில்வர் ஃபாயில் தயாரிக்கப்படுவதாகவும் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டவருக்கான இன்ஸுலின் கூட பன்றியின் கணையத்திலிருந்தே தயாரிக்கப்படுவதாகவும் சொல்லப்படும் நிலையில் தற்போது அதன் உடல் உறுப்புகளும் மனிதனுக்குப் பொருத்தப்படும் என்ற செய்தியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது; அப்படியானால் பன்றிக்கும் மனிதனுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்கிறது;  இந்து மக்கள் இதன்காரணமாகவே ஒரு மிருகத்தையும் விடாமல் அனைத்தின் ஆதரவையும் நாடி அவற்றை தெய்வமாக வழிபடுகிறார்கள் போலும். இனி, உன் தெய்வங்கள் மனிதனுக்காக என்ன செய்தது என்று யாரும் கேட்கமுடியாத நிலை இதனால் ஏற்பட்டுள்ளது; அவை தன்னைத் தானே பலியாக்கி மனித ஜீவன்களைக் காப்பாற்றப்போகிறது; மேலும் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கூற்றும் இதனால் பொய்யாகப் போகிறது; ஏனெனில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருந்தால் குரங்குகளின் உடல் உறுப்புகளையல்லவா ஆராய்ச்சிக்கு பயன்படுத்தியிருப்பார்கள்? 

மனிதன் நீடித்த நாட்கள் வாழ என்னென்ன ஆராய்ச்சிகளையோ செய்கிறான்; ஆனால் நித்திய நித்தியமாக வாழ அவனுடைய ஜென்ம பாவங்களுக்காக ஒருவன் பிராயசித்தம் செய்யாவிட்டால் அவனுடைய சரீரத்திலுள்ள வியாதிகள் குணமடையா.ஆன்மாவில் நம்பிக்கை பெருகினால் மாத்திரமே வியாதி குணமாகும்;அது மாத்திரமல்ல, இந்த ஜீவனுக்குப் பிறகு வரும் ஜீவனுக்கு உறுதியளிக்கும் ஒரு நண்பரை தன் சொந்த இரட்சகராக ஒருவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

  • “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்;  அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” (நீதிமொழிகள். 28:13)
  • “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” (ரோமர்.6:23)
  • “…இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (1.யோவான்.1:7)
  • “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால்,நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.” (1.யோவான்.1:9,10)
  • “சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.” (1.தீமோத்தேயு.4:8)