Tag Archive | தூக்கம்

நேத்து ராத்திரி யம்மா..!


நேற்றிரவு (09:10:2010) தூக்கம் பறிபோனது, துக்கம் வரவானது; காரணம் எங்கள் ஊரிலுள்ள பெருமாளுக்கு ஏதோ விசேஷமாம்; கடந்த மூன்று நாளாக அரற்றிக் கொண்டிருந்தார்கள்; நமக்கு அதில் ஆர்வமில்லாவிட்டாலும் கட்டாயப்படுத்துவது போல அதிகாலையிலிருந்து இரவு பத்து மணிக்கும் மேலாக ஊரை ஒலியினால் மாசுபடுத்தினர்;

எல்லாம் போக நேற்று ஒரு ஊர் பயணம் முடித்து திரும்பி சோர்வுடன் படுக்கைக்குச் செல்லவே இரவு 11:30 ஆனது; ஒலிபெருக்கி சத்தத்திலிருந்து தப்பிக்க கதவையும் சன்னல்களையும் அடைத்துவிட்டு காற்றுக்கு வழியில்லாமல் துன்பத்துடன் தூங்க முயற்சித்தபோது சில மணித் துளிகளில் “டமடம” வென அடித்துக் கொண்டும் பஜன் பாடிக் கொண்டும் சாமி ஊர்வலம் வந்தது;

போதாக்குறைக்கு பட்டாசு வெடி… அந்த மிகப் பெரிய சைஸ் பேண்டு (Big Band)கள் மூன்றும் பள்ளிகளில் ‘மார்ச் ஃபாஸ்டு’ க்கு அடிப்பது, அத்துடன் சாவுக்கு அடிக்கும் மேள வாத்தியமும் சேர நெஞ்சை படபடக்கச் செய்யும் இரைச்சலுடனும் பிணத்துக்கு முன்பாக ஆடும் அருவருப்பான கூத்து நடனத்துடனும் சாமி ஊர்வலம் வந்தது;

கூத்து நடனம் ஆடிய இளைஞர்களும் மற்றவரும் நல்ல போதையில் இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது; இந்த ஊர்வலம் வருவதற்காகவே சில தினங்கட்கு முன்பு எங்கள் வீட்டு வாசலிலிருந்த நல்ல நிழல்தரும் மரத்தை வெட்டி வீழ்த்தியிருந்தனர்; இது அவர்கள் தேசமல்லவா, யாரையும் எதுவும் கேட்க முடியாது;நாங்களோ வாடகைக்கு குடித்தனம் இருப்பவர்கள்; ஏதாவது நியாயம் கேட்டாலும் வீட்டை காலி செய்யவைப்பர்; வேறு வீடும் தரமாட்டார்கள்;

ஒரு மாட்டு வண்டியில் சாமியை அலங்கரித்து வைத்து அதற்கு மின்வசதி தரும் மின்கலத்தையும் வண்டியுடன் இணைத்து மாட்டுக்கு பதிலாக மனிதர்கள் இழுத்துவந்தனர்; வண்டியிலோ ஒரு பூஜாரி ராஜா போல அமர்ந்துகொண்டு கொஞ்சமும் உணர்ச்சியற்ற நிலையில் இயந்திர கதியில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்;

பக்தர்கள் கொடுத்த பூஜை தட்டை சில நொடிகள் அந்த விக்கிரஹத்திடம் ஒரு காட்டு காட்டிவிட்டு பக்தர்களிடம் கொடுக்க, அவர்களும் இயந்திரத்தைப் போல பெற்றுக் கொண்டு திரும்பினர்;

ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக இருக்கக்கூடிய மின்சாரம் மற்றும் கேபிள் தொலைபேசி சர்வீஸ் கம்பிகளில் உரசி, உயர்ந்ததும் மட்டமானதுமான அந்த காகித அட்டை அலங்காரம் கவிழ்ந்து சாமி தடுமாறி விழுந்துவிடுமோ ‘ வென இளைஞர்கள் அதற்கென ஒரு கம்பை தயாரித்து அதன்மூலம் சர்வீஸ் கம்பிகளை உயர்த்திபிடித்து சாமியின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தனர்;

சாமியின் அழகோ கண்கொள்ளா காட்சி…
‘ஒருவனுக்கு ஒருத்தி ‘ என குடும்பஸ்தர்கள் வாழும் தெருக்களில் நுழைந்த சாமியோ சைடுக்கு ஒன்றாக ரெண்டு குட்டிகளுடன் வந்தார்; போனவாரம் வந்து போன மிஸ்டர் கணபதி சிங்கிளாகத் தான் வந்தார்;

சாமி குட்டிகளை மட்டும் கட்டிக்கொள்ள நம்ம பக்தர்கள் அவருடைய பெண்சாதிகளுடன் அவரையும் சேர்த்து கட்டியிருந்தனர்; விழுந்துருவாரோ என்ற நல்ல எண்ணமோ அல்லது தனது ஜோடிகளுடன் ஓடிவிடுவாரோ என்ற கெட்ட எண்ணமோ தெரியவில்லை;

என்னைப் பொருத்தவரை அவர் மிஸ்டர் கிருஷ்ணனாக இருக்கவேண்டும்; ஆனால் அவரைக் குறித்து பெருமாள் என புகழ்ந்தனர்; ‘ லாஜிக் ‘ புரியவில்லை;

பெருமாளைப் பொறுத்தவரையில் அலமேலு அம்மாவுடன் இருப்பார்; அதுவும் ஏதோ கொடுக்கல் வாங்கல் தகராறில் கோவித்துக் கொண்டு திருப்பதி மேலேறி தவமிருப்பதாகவும் அவருடைய கடன் தீர்ந்தபிறகே வந்து குடித்தனம் பண்ணுவார் என்றும் ஐதீகமாம்; நம்முடைய ஏழை எளிய மக்களும் தங்கள் முடி உட்பட அனைத்தையும் ஆண்டாண்டு காலமாக தானமாக வழங்கியும் இன்னும் அவருக்கு திருப்தியாகவில்லை;

எல்லா சாமியும் ஆசீர்வதிக்கும் பாவனையில் போதும் என்பது போல வலக்கரத்தைக் காட்ட இவரோ இன்னும் வேண்டும் என்பது போல வலக்கரத்தையும் இடக்கரத்தை அள்ளி முடித்துக் கொண்டது போலவும் வைத்திருப்பார்;

அப்படியானால் எங்கள் தெருவுக்கு வந்தது பெருமாள் அல்ல; இத்தனை கலாட்டாக்கள் நடந்தும் சாமியோ சாமியாரோ மக்களுடைய பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் சொல்லவில்லை; அவர் அருள் தருவதாகச் சொல்லுவதும் பக்தர்கள் வேண்டியது நடக்கும் என்று காத்திருப்பதும் சுயநலம் சார்ந்த பக்தியாகவே தோன்றுகிறது; ஏனெனில் ஒரு தெருவுக்கு சாமி வந்து போவதாலோ சாமியைத் தேடி பக்தன் சென்று வருவதாலோ ஒரு தனிப்பட்ட மனிதனுடைய வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்பட்டது போலத் தெரியவில்லை;

கோயிலில் விழாக்கோலம் ஒருபுறம், பக்தன் அருகிலிருக்கும் டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு மல்லாந்து கிடக்கும் அலங்கோலம் மறுபுறம்; அவன் பெண்டு பிள்ளைகள் அங்கே சாமியை விழுந்து வணங்கிக்கொண்டிருக்க இங்கே இவன் சாக்கடையில் விழுந்து எதையோ தேடிக்கொண்டிருக்கிறான்;

அந்த காலத்தில் கோயிலில் பரத்தையர் நடனமாடுவர்; இதனை பரதநாட்டியம் என்றும் கூறுவர்; இந்த நடனத்தால் வசீகரிக்கப்ப‌டும் ரிஷிகளும் மன்னர் பெருமக்களும் அன்றிரவு அவர்களோடு தங்களைப் பகிர்ந்துகொள்வர்;

இன்றோ ஒரு பாவமுமறியாத சிறுமிகளையும் வயதுக்கு வந்த இளங்குமரிகளையும் அதே கோவில் வாசலில் ஆடவிட்டு அவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்;

வீட்டுக்கு ஒன்றாக ஆணாகவோ பெண்ணாகவோ பெற்று நம்முடைய எதிர்காலத்தில் நமக்குத் துணையாக பிள்ளைகளை வளர்த்து இதுபோன்ற காமாந்தகர்களுக்கு அவர்களை பலியாக்கும் ஆபத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது;

ஏனெனில் அங்கே இருக்கும் சாமிகளின் கதைகளும் புராணங்களும் வீரபராக்கிரமங்களும் அத்தனை பயங்கரமானது; இந்த காலத்தில் அவர்கள் இறங்கி வந்து நம்முடைய பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு போகாவிட்டாலும் அவர்களுடைய ஆவியை இளைஞர்கள் மனதில் புகுத்தி அவர்கள் மூலம் பெண் பிள்ளைகளைக் கெடுத்துவிடுகிறார்கள்; இன்னும் அடுத்தவன் மனைவியையும்கூட இந்த சாமிகள் விட்டு வைப்பதில்லையே;ஆனானப்பட்ட விஷ்ணு பகவான் உட்பட தனது பக்தர்களை ருசிபார்ப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்;

இதையெல்லாம் யோசித்து யோசித்து நேற்றிரவு தூக்கம் பறிபோனது; சாமி அங்கே வேஷத்தைக் கலைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்க பக்தர்களோ வழக்கம்போல தங்கள் அன்றாட பாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்; பொழுதுபோக்குக்கு எந்திரன் முதலான திரைப்படங்களும் தொலைக்காட்சி சீரியல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சமத்துவ சமதர்ம சமுதாய மறுமலர்ச்சிக்கான அற்புதமான தளமாக டாஸ்மாக் கடைகளும் இருக்கவே இருக்கிறது.

வாழும் பாரதம்… வளரும் தமிழகம்…!?

துடித்துப் போனாள்,துர்கா..!


வீட்டுக்கு வந்து சேரவே இரவு 10:30 மணி ஆனது;அடுத்து பிரசாத்துடன் தொலைபேசியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பல காரியங்கள் பேசி ஜெபித்து முடித்து கணிணியில் சொந்த
குறிப்புகளைப் பதித்துவிட்டு இன்று மாலை நான் கலந்துகொண்ட வீட்டுக்கூட்ட செய்தியின் குறிப்பை கட்டுரையாக்கி எனது தளத்தில் பதித்தேன்; இதனை முடிக்கவே விடிந்துவிட்டது;
படுக்கச் செல்லும் போது காலை 05:30 மணியானது;

எழுந்திருக்கும் போது மதியம் 1மணி;தூக்கத்தைத் தொடர்ந்தேன்; இப்போது 2மணி; நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்றதொரு தூக்கம்;

எனது தாயார் போன் செய்து சத்தம் போட்டார்களாம், நான் ஏன் போனை எடுக்கவில்லையென.

பிறகு எனது கைபேசியை எடுத்துப் பார்த்து அதிர்ந்துபோனேன்; அதில் 42 தவறவிட்ட அழைப்புகள் பதிவாகியிருந்தது;

துர்கா மட்டுமே 14 முறை முயற்சித்திருக்கிறாள்; நேற்று காலையும் இதேபோல நான் காலை 4 மணிக்கு படுத்திருந்ததால் நான் தூக்கக் கலக்கத்தில் சரியாகப் பேசவில்லை;

இன்று காலையிலிருந்தும் நான் போனை எடுக்காததால் பயந்துபோய் வீட்டு நம்பருக்கு தொடர்பு கொள்ள நானே எடுத்தேன்; இப்போது சொல்கிறாள்,ரொம்ப நாள் ஆனது போலிருக்கிறது, உங்களுக்கு உடம்பு சரியில்லையா, என;

பிறகு சமாளித்து எனது சில தனிப்பட்ட அசௌகரியங்களைச் சொன்னேன்; மற்றவருக்காக ஜெபிக்கும்போது நமது சரீரத்தில் ஏற்படும் மாற்றங்களையும் பில்லிசூனிய கட்டுகளிலிருப்போருக்காகப் போராடி ஜெபிக்கும்போது நமக்கு ஏற்படும் உபத்திரவங்களையும் கூறினேன்; ஆச்சரியப்பட்டாள்;

‘நீங்க ரொம்ப கிரேட் ஸார்’ என மனதாரப் பாராட்டினாள்; ஆவி உலகம் சம்பந்தமான மற்றும் சில உண்மைகளையும் எளிமையாகச் சொன்னேன்;

ஒவ்வொரு மனிதனும் நன்மையான அல்லது தீமையான ஏதோ ஒரு ஆவியினால் ஆளப்படுகிறான்; இதில் நன்மையான ஆவியினால் ஆளப்படுவோர்க்கு நன்மைகளும் தீய சக்திகளால் துன்பங்களும் உண்டாகிறது;

தீயசக்தியினால் துன்புறுவோர் தேவைக்காக நாம் அடுத்த வீட்டிலிருப்போரிடம் உதவி கேட்பது போல பிரார்த்தனை செய்ய நம்மிடம் வருவார்கள்;

அவர்களுக்கு உதவி செய்யும்போது தீயசக்திகளின் எரிச்சலுக்கு
நாமும் ஆளாக நேரிடும்; ஆனாலும் நாம் பயப்படப்போவதில்லை; அவற்றை அழிக்கவே ஆண்டவர் நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்;

‘உனக்காக யுத்தம் செய்வேன்’ என்கிறாரே,எப்படி?
இதுபோல பிரார்த்தனை செய்பவர்கள் மூலமே நமக்கு விடுதலை வருகிறது; ஏனென்றால் இந்த உலகில் வாழும் நம்முடைய போராட்டங்களை நாமே மேற்கொள்ளும் வழிமுறைகளையும் அதற்கான ஆயுதங்களையும் ஆண்டவர் ஏற்கனவே நம்மிடம் கொடுத்துவிட்டார்;

இப்படியாகச் சொன்னவுடன் தெளிவடைந்த துர்கா, ‘சரி நீங்க தூங்குங்க நான் சாயங்காலம் அழைக்கிறேன்’ என்றாள்;
நானோ, ‘இப்போதே ஜெபிக்கிறேன், மாலையில் என்னுடைய நிலை எப்படியிருக்குமோ’ என்று பிரார்த்தனை செய்தேன்;

ஜெபத்துக்கு முன்பாக கீழ்க்காணும் வாக்கியம் ஆவியில் உதித்தது,
“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.”(சங்கீதம்.37:4)

இதிலிருந்து நான் சொன்ன சில தத்துவங்கள் எனக்கே பாடமாக இருந்தது;

“இருதயத்தின் வேண்டுதல்களை” என்ற வார்த்தையின் மூலம் நாம் அறிவது என்ன?

ஒவ்வொரு ஆத்துமாவின் இருதயத்திலும் ஒவ்வொரு விதமான தனிப்பட்ட விருப்பங்கள் உருவாகிறது; அந்த விருப்பங்கள் நிறைவேறிவிட்டால் பிரச்சினையில்லை; ஆனால் அவை தாமதிக்கும் போது ஏக்கமாக உருமாறுகிறது; ஏக்கமே விரக்தியாக சோர்வாகவும் மனச் சோர்வாகவும் மன அழுத்தமாகவும் மன நோயாகவும் மாறி மனிதனை நடைபிணமாக்குகிறது;

ஆனால் ஆண்டவர் இதற்கு எளிமையான வழிமுறைகளை கொடுத்திருக்கிறார்; இதனையறிந்து நடைமுறைப்படுத்தினால் விடுதலை உண்டாகும்;

ஏன் நாம் ஆண்டவரிடம் செல்ல சங்கடப்படுகிறோம்?
நமக்கு அவர் மீது நல்ல எண்ணமிருந்தும் நாம் ஏன் அவரை ரெண்டாம் பட்சமாக வைத்திருக்கிறோம்?

காரணம், நம்முடைய பெற்றோர் அல்லது நண்பர்கள் நாம் ஒரு தவறான காரியத்தில் ஈடுபடும் போது அதன் எதிர்கால ஆபத்தினை தங்கள் அனுபவத்தினால் உணரும் அவர்கள் நம்மைத தடுப்பார்கள், தேவைப்பட்டால் கண்டிப்பார்கள்;

ஆனாலும் நாம் மாற்றுவழிகளை ஏற்படுத்திக் கொண்டு
அவர்களுடைய எதிர்ப்பையும் மீறி அவர்களுக்குத் தெரியாமல் தவறான வழிகளைத் தொடருவோம்; இதன் விளைவாக நாம் மோசமான நிலைக்குத் தள்ளப்படும்போது நாம் யாரிடம் உதவி கேட்போம்? புதிய ஆட்களிடமே;அவர்கள் நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்து நம்மை அடிமைப்படுத்துவார்கள்;

நாம் நம் மீது உண்மையான அக்கறை கொண்டோரிடம் செல்லுவதில்லை; ஏனெனில் அவர்களை மீறி நாம் வந்ததால்
உண்டான அவமானம் நம்முடைய உள்ளத்தில் மாறாத வடுவாகப் பதிந்துள்ளது;

ஆனாலும் நம்மீது மெய்யான அன்பு கொண்ட நம்முடைய உறவு தனக்கு எவ்வளவு நஷ்டம், அவமானம் ஏற்பட்டாலும் சகித்துக் கொண்டு வந்து நம்மை மீட்டுச் செல்லும்; இதுபோலவே இயேசுகிறிஸ்துவும் நம்மைத் தேடி நாம் பாதிக்கப்பட்டு கண்ணீரில் மிதக்கும் இடத்துக்கே வந்து நம்மை சந்திக்கிறார்; விடுதலையும் செய்கிறார்..!

இதையெல்லாம் சொல்லி ஜெபித்ததும் துர்கா சாட்சி கூறினாள்; அண்மையில் தான் வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதி தூக்கி எறியப்பட்டு குப்புற விழுந்தும் ஒரு காயமும் இல்லாமல் தப்பினாளாம்; அவளது தோழி சொன்னாளாம், “பரவாயில்லையே,அந்த ஜீஸஸ் தான் உன்னைக் காப்பாற்றியிருக்கிறார்” என்று.