Archives

சத்தியா புலம்புகிறாள்..!


என்ன இருந்தாலும் நீங்க மனுஷன் தானே…

எல்லா மனுஷங்களுமே கெட்டவங்கதான்…

உங்கள கடவுளப் போல நெனச்சேன்…

கடவுள் மீது சாய்வதாக நினைத்தே உங்கள் மீது சாய்ந்தேன்…

மனசுல இருக்கறதயெல்லாம் மனசுவிட்டு சொல்லவே தைரியமா வந்தேன்… தப்பு பண்ணிட்டிங்க… நீங்கதான் துவங்கினீங்க…

21 வயசுலேயே எல்லாம் முடிஞ்சாச்சு… நான் தப்பு பண்ணிட்டேன்… உங்க பெண்ணாயிருந்து இப்படி நடந்தா விடுவீங்களா…

இப்ப சிரிச்சிகிட்டிருந்தாலும் வீட்டில போய் அழுவேன்…

கிளாஸுக்குப் போகப் பிடிக்கல…

தூக்கம் வரல… கனவும் வரலை…

ரொம்ப இடம் கொடுத்துட்டேன்…

நான் முன்னமே பொறந்திருக்கணும்…

இல்ல நீங்க லேட்டா பொறந்திருக்கணும்…

காசா,எதுக்கு..?  நான் என்ன “அது” மாதிரியா வந்தேன்..?

நான் வரப்போறவனோட எப்படி இருப்பேன்..? அவன் பாவம்…

உங்கள நெனச்சிக்கிட்டு அவனோட இருக்கறதா..?

எப்படி சொல்லிட்டீங்க..!

இளமை திரும்புதோ… கொஞ்சமாவது யோசிக்கவேண்டாமா?

இது எப்படி சரியா வரும்…

சின்ன வயசாயிருந்தாலும் நான் வந்திருப்பேன்…

14‍ அல்லது 18 வய‌சு பொண்ணுங்களாயிருந்தா முழுவதும் ஏமாந்திருப்பாங்கல்ல..?

எச்சரிக்கை, எச்சரிக்கை என முதல் முறையே சத்தம் கேட்டுது…

நான் ஏமாந்துட்டேன்… இனி என்ன செய்வேன்…

அந்த சத்தமும் இப்ப கேக்கறதில்லை…

சரி… சரி… நீங்க ஏன் ஒரு மாதிரியாயிட்டீங்க…

எப்பவும் போல பேசுங்க…

இல்ல நான் தப்பு பண்ணிட்டேன்… ரொம்ப இடம் கொடுத்துட்டேன்…

அடுத்து எப்ப பாக்கலாம்… எப்பவும் போல பேசுங்க…

நிறைய பேசணும்… வேற எதுவும் வேணாம்…

வெளியவே போய் பேசுவோம்… என்னை மறக்கக்கூடாது…

என் கல்யாணத்துக்கு வரணும்… என்னை வெறுக்கக்கூடாது…

என்ன இருந்தாலும் எங்க வீட்டுல சொல்றத எதிர்த்து நான் எதுவும் செய்யமாட்டேன்… செய்யமுடியாது… விட்டு வரவும் முடியாது…

எப்படி பார்த்தாலும் சரியா வராதே… இப்படியாகும்னு நான் நெனச்சி பாக்கலயே… எங்க வீட்டுல யாரும் இது போல கிடையாது…

அன்று ஒரு வினாடி நடந்த ஒரு கெட்ட காரியத்த நினைத்து படிப்பையே இழந்தேன்… ஆனா இப்ப..?

மனசுவிட்டு பேச மட்டுமே உங்களோட வந்தேன்… உங்க பெண்ணாகத் தானே ஏற்றுக்கொள்ளச் சொன்னேன்… இப்படி செஞ்சிட்டீங்களே…!


(வெறும் (?!) முத்தத்தையும் கட்டியணைத்தலையுமே கற்பு போய் விட்டதாக பாவித்து அரற்றும் இளம்பெண்… இது அந்த காலத்து கதையல்ல… நிகழ்கால கற்பனை… “கற்பு” என்பது மனம் சம்பந்தமானது என்பது எத்தனை சத்தியமான‌ உண்மை… இளம்பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்காததையே சாதகமாக்க நினைத்து முன்னேறுவோர்க்கு இது ஒரு எச்சரிக்கை..! )

கொத்துக் குண்டுகள்..!


நான் நெடுஞ்சாலையின் ஓரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறேன்;எனக்கும் அரசாங்கத்துக்கும் ஏதோ கருத்துவேறுபாடு, பகை; எனவே நான் வசிக்கும் வீட்டின் மீது குண்டு போட்டு அழித்துவிடப் போவதாக எனக்கு தெரியவருகிறது; எனது வீடு என்பது சாதாரண ஓலை குடிசைதான்; மாற்று ஏற்பாடுகளை உடனே செய்யமுடியாத நிலையில் எனது பிள்ளைகளுடன் நடந்துசெல்லும் தூரத்தில் உள்ள மற்றொரு குடிசையை நோக்கி நடக்கிறோம்.

நாங்கள் அந்த குறிப்பிட்ட குடிசையை விட்டு வெளியேற சற்று முன்பதாக பூமி அதிருகிறது;அது மின்தூக்கி (lift)யில் செல்லும்போது ஏற்படும் அதிர்வைப் போல இருக்கிறது; எனவே எந்த பொருளையும் எடுக்கமுடியாத நிலையில் அவசரமாக வீட்டைவிட்டு வெளியேறுகிறோம்; ஆனாலும் நான் மட்டும் வீட்டை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்கிறேன்;எனது கணிணி மற்றும் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும் வீட்டிலேயே விட்டு விட்டு அவசரமாக வெளியேறுவதால் ஏதாவதொரு விலைமதிப்புள்ள பொருளையாவது எடுக்கலாமே என்று யோசிக்கும்போதே வானத்தில் போர் விமானம் ஒன்று வட்டமிடுவதைக் காண்கிறேன்.

images?q=tbn:ANd9GcR4O-DfPh0J49QMOrgZklN-Ek-pcjQ0UVChK3ynEeRgeA2dz2doggimages?q=tbn:ANd9GcRagM3Savv1jM6xSqueAKMsIPV5y14gVLU4kL_YYN7WYw5CMeca

அப்போதும் கூட என் மனதில் என்ன தோன்றுகிறதென்றால் என்னை அரசாங்கம் மிரட்டவே செய்யும், என் வீட்டின் மீது குண்டு போடாது என்றே எண்ணிக்கொண்டிருந்தேன்;ஆனால் பயங்கரம் என்னவென்றால் வானத்தில் வட்டமிட்ட போர் விமானம் குண்டு போடத்துவங்கிவிட்டது ;அந்நேரத்தில் கூட நான் யோசிக்கிறேன்,அந்த குண்டுகள் தரையைத் தொடுவதற்கு முன்பு தீப்பிடித்த வீட்டுக்குள் சென்று எடுத்துவருவதைப் போல “ரிஸ்க்” (risk) எடுத்து ஏதாகிலும் ஒரு பொருளை, முக்கியமாக எனது கணிணியை மட்டுமாவது எடுத்து வந்துவிடலாமா, என்று.

images?q=tbn:ANd9GcRj70WeMwPJaTo0LyJvpK3xzSZ4TIZgzmddnQk9JaWOmajFXcbMimages?q=tbn:ANd9GcQ_dfR2mOKPrYAckIX_gx7r45ZVXdKpx59e56rhaHBVWDmy0-hX

ஆனால் நான் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தபோதே பயங்கரமான அந்த காட்சியைப் பார்த்து விக்கித்து நின்று விட்டேன்; வானத்தில் என் கண்ணுக்கு எட்டிய சுற்றளவில் ஆயிரக்கணக்கான குண்டுகள் எரிகற்களைப் போல பரவிக் கிடக்கிறது,அவை உடனே விழவில்லை,ஆனால் மெதுவாக இறங்கிக்கொண்டே இருக்கிறது,சிலது மத்தாப்பு போல பிரகாசமாக வந்தும் அந்தரத்திலேயே அணைந்தும் போகிறது; நானும் என் குடும்பமும் எங்களை நோக்கி வந்துகொண்டிருக்கும் இந்த எரிகின்ற குண்டுகளுக்குத் தப்பி எங்கும் ஓடமுடியாது எங்கே ஒடினாலும் அதில் ஏதோ ஒன்று எங்களை அழித்துபோடும். பதுங்குகுழிகளைப் பற்றிய தகவலோ எண்ணமோ இருக்கவில்லை; எங்களைச் சுற்றிலும் எந்த மனித சஞ்சாரமுமில்லை;என் மனைவியும் மகளும் மகளும் சாலையோரமாக ஏதோ ஒரு மறைவிடத்தை நோக்கி ஓட நான் என்னுடன் இருக்கும் எனது தங்கை மகனைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து பார்க்கவும் தைரியமில்லாமல் “ஆண்டவரே” எனக் கதறிக்கொண்டே சாலையின் மத்தியில் நிற்கிறேன்.

வழக்கமாக இதுபோன்ற கனவுகளின் உச்சக்கட்டத்தில் தோன்றுவது போல நாம் தான் வீட்டுக்குள் பத்திரமாக இருக்கிறோமே, இது நிச்சயமாக கனவாகத் தான் இருக்கவேண்டும் என்றும் அதைத் தொடர்ந்து கனவுதான் என்ற நிச்சயத்துடடனும் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தேன்.

images?q=tbn:ANd9GcRmNIdlLXiHf_j2VQ0uVUZdzsq6ytt0INSy5KupLz9Uia2ie59H

இந்த கனவுக்கு மற்ற போதகர்களைப் போல ஏதேதோ மிகைப்படுத்தப்பட்ட விளக்கங்களைக் கொடுக்க எனக்குத் தெரியாது; இந்த பதட்டமான கனவின் பொருள் எதுவாக இருந்தாலும் எனது மனத் திரையில் உடனே தோன்றியது, இலங்கைத் தமிழர்களின் அவலநிலை தான்; சொந்த அரசாங்கத்தின் பகையாளிகளாக- தங்களைப் பாதுகாக்க வேண்டிய நிர்வாகத்தின் நாசகாரக் கரங்களாலேயே அழிக்கப்பட்ட கொடுமை வானத்தின் கீழே எந்த சமுதாயத்துக்காவது நிகழ்ந்திருக்குமா?

images?q=tbn:ANd9GcTGN9GwsITnqfB_57iORqWinvb6q3d9BvYJyhQMOk4nIXc2vUwRimages?q=tbn:ANd9GcSFYo7jgowE1YJwbDUUNw0LJGrVWlhXXxVIGZ930tJB5Zq3uokPHQ

அகதிகளுக்கே தேசக் குடிகளைவிட அதிகமான கரிசனையெடுத்து உணவு உடை மற்றும் இருப்பிடத்தையும் பாதுகாப்பையும் தரவேண்டியது ஒரு அரசாங்கத்தின் மாண்புக்கு அடையாளமாகும்;ஆனால் இலங்கை அரசாங்கம் எம் தமிழ் மக்களை கொத்தடிமைகளைவிட கேவலமாக நடத்தி வருவதும் அதனை ஊடகங்களில் எடுத்துச் செல்லும் தன்னார்வத் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது; சொந்த தேசத்திலேயே அகதிகளாக்கப்படும் கொடுமை இந்த நவநாகரீக உலகிலும் தொடரத்தான் வேண்டுமா?

images?q=tbn:ANd9GcTNmuOEM4LNRYPeobkRWM2JRo_KzPQqu4FOW_2g4S-9ONP9P8vL7gimages?q=tbn:ANd9GcSu3hTlHU4me9ivg6ICd4KG-CQWtBT3rZ7-CzMxdo6JfaCyTmlN

எரிகுண்டுகள் என்றும் கொத்துக்குண்டுகள் பற்றி இங்கே நம் தமிழ் ஆர்வலர்கள் மேடை போட்டு பேசும்போது அதன் தீவிரத்தை நாம் அறிந்தோமில்லை;ஆனால் அந்த பயங்கரத்தின் காட்சி என் மனதில் எப்படி தோன்றியது, ஏன் தோன்றியது என்றே புரியவில்லை;அதுபோன்ற யுத்த பூமியில் வாழ்ந்த அனுபவமும் எனக்கில்லை;சொப்பனமே இத்தனை கொடூரமாக இருக்கும் என்றால் நிதரிசனம் எப்படி இருந்திருக்கும்..? இதுபோன்ற கனவெல்லாம் இராஜபக்ஷே போன்ற மனித மிருகங்களுக்கும் நம்ம ஊர் அரிசியில்வியாதிகளுக்கும் வராதா..?

இலங்கைத் தமிழருக்காகப் பரிதபிப்போம்..!

இன்னும் கொடுமையான படங்களைக் காண மனோதைரியம் இருந்தால் தொடுப்பைத் தொடரவும்.

{இன்று காலையில் கலக்கத்துடன் எழுந்தேன்;காரணம், நீண்ட நாட்களுக்குப் பிறகு மறக்கமுடியாத ஒரு கனவும் அது தொடர்பான சிந்தனையும்…}

தாய்மதம் திரும்பும் இந்துக்கள்..!


// திருநெல்வேலி:

பிற மதங்களில் இருந்து, இந்து மதத்திற்கு திரும்பும் நிகழ்ச்சி, நேற்று நெல்லையில் நடந்தது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நெல்லையில் நேற்று மதமாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதமாறும் நிகழ்ச்சி, திருநெல்வேலி பார்வதி சேஷ மகாலில் நடந்தது. இதில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் மற்றவர்கள் கிறிஸ்தவர்கள். சுத்தி ஹோமம் நடத்தப்பட்டு, அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சாரதா கல்லூரி தாளாளர் சங்கரானந்தா சுவாமிகள் அவர்களுக்கு வீட்டில் பூஜை செய்ய விளக்குகள் வழங்கி, ஆசிர்வதித்தார்.

இது குறித்து வி.எச்.பி.,மாநில கோபாலரத்தினம் கூறுகையில், “”இந்தியா முழுவதும் குடும்ப கட்டுப்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை, இந்து மக்கள் மட்டுமே கேட்டு அதன்படி நடக்கிறார்கள். இதனால், மற்ற மதத்தினரை காட்டிலும் இந்து மக்கள் தொகை விகிதாச்சாரம் குறைந்து வருகிறது.

மதமாற்றத்திற்காக, ஒரு ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாயை பல்வேறு வெளிநாடுகள் இந்தியாவில் விதைக்கின்றன. “இந்தியாவில் அறுவடை’ என்ற பெயரில் முகாம் நடத்தி, மதமாற்றங்களை நடத்துகின்றனர். ஆனால், மற்ற மதங்களுக்கு செல்லும் மக்கள் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. அங்கேயும் ஆலய வழிபாட்டில் பேதம், இடுகாடு போன்றவற்றில் ஜாதிப் பிரச்னை நீடிக்கிறது.

எனவே, தாய் மதமான இந்து மதத்திற்கு பலரும் தாங்களாகவே விண்ணப்பித்து மாறுகிறார்கள். நாங்களும் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்களா… அரசின் நலத் திட்டங்களுக்காக மாறுகிறார்களா… என, ஆலோசித்தே சான்றிதழ் வழங்குகிறோம், என்றார். நிகழ்ச்சியில் தர்மபிரசார் அமைப்பாளர் பெருமாள், சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். //

http://www.dinamalar.com/district_detail.asp?id=172793

மேற்கண்ட தினமலர் பத்திரிகையின் விஷமமான செய்தியை வாசித்ததும் பயங்கரமான சிரிப்பு வந்தது;மீனவர்கள் கடலுக்குச் சென்று வலைவீசி மிகுந்த பிரயாசத்துடன் மீன்பிடிக்கிறார்கள்;அப்படி பிடிக்கப்பட்ட மீன்களிலிருந்து சிலது கரையேறும் முன்பே துள்ளி கடலில் வீழும்;அங்கே அவற்றை விழுங்க திமிங்கலங்கள் காத்திருக்கும்;அதுபோலவே மனித வாழ்க்கை என்பது உள்ளேயும் சரி, வெளியேயும் சரி துன்பங்கள் நிறைந்தது;அநித்தியமானது;இதில் எங்கே இருந்தால் என்ன‌?

ஏன் சிரிப்பு வந்தது என்றால் இந்த நாளிதழ் நல்ல தரமான நிருபர்களை உடையதானாலும் இந்த குறிப்பிட்ட செய்தியின் வாசகங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது;அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்,இதில் பக்கத்தை நிரப்ப எதையாவது எழுதவேண்டுமே..!

இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு காரணமாக இந்துக்களின் தொகை வேகமாக குறைந்து வருகிறதாம்;மேலும் மதமாற்றத்தின் காரணமாகவும் இந்துக்கள் தொகை குறைந்து வருகிறதாம்;மதம் மாறியவர்கள் இந்தியாவில் தானே இருக்கிறார்கள்? அவர்கள் இந்தியாவைவிட்டு ஓடினால் தானே தேசபக்தர்கள் கவலைப்படவேண்டும்? இந்த தேசபக்தர்கள் இந்தியாவை சுரண்டி வெளிநாடுகளில் இலட்சம் கோடிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்களே,அதுவல்லவா இந்தியாவை பெலவீனப்படுத்தும்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதமாற்ற தடைசட்டம் கொண்டு வந்தபோது அதில் முக்கிய குறிப்பாக வைத்தது,பெண்களையும் குழந்தைகளையும் மதம் மாற்றக்கூடாது என்பதே;ஆனால் இங்கே 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதம் மாறினார்களா;இது கேலிக்கூத்தாக இல்லையா? குழந்தைகளையும் மதம் மாற்றும் கொடுமையை எங்கே போய் சொல்லுவது? எப்படியோ இந்தியர்கள் அனைவரும் இந்துக்களாகி விட்டால் இந்தியாவில் சாதிக்கொடுமைகளோ வரதட்சணை கொடுமைகளோ இலஞ்ச லாவண்யமோ வர்க்கக்கொடுமைகளோ இல்லாது முழு இந்தியாவும் சுபிக்ஷமாகிவிடும் என்று நம்புவோமாக‌.

க்ரெடிட் கார்டு பெண்ணின் சில்மிஷம்..!


ஷீலா,ஆதரவற்ற பரிதாபத்துக்குரிய பெண்;சொந்தங்கள் இருந்தும் கரிசனையற்றவர்களாக இருக்க, மனநிலை சரியில்லாத தாய் ஊரில் பாட்டியின் ஆதரவில் இருக்க, சிறுவயதிலேயே ஓடிப்போன அப்பா , எதிர்காலத்தைக் குறித்த நிச்சயமில்லாத இளம்பெண்.

ஆனாலும் தன் சொந்த துக்கங்களை மனதில் புதைத்துக்கொண்டு, ஒரு இயந்திரம் போல, இங்கே ஒரு விடுதியில் தங்கி சொற்ப சம்பளத்தில் ஏதோ ஒரு அலுவலகப் பணியில் இருக்கிறாள்;சம்பளம் முழுவதும் பெரும்பகுதி ஊரில் அம்மாவை கவனித்துக்கொள்ளும் பாட்டிக்கும், தனது விடுதிக்கும் செலுத்திவிட்டு 27 வயதாகும் தன்னுடைய திருமணத்துக்காகத் தானே கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வருகிறாள்.

அவளுக்கு அலுவலகத்திலிருந்து வற்புறுத்தி கொடுக்கப்பட்ட க்ரெடிட் கார்டு மூலம் எந்த நன்மையும் இராதிருந்தும் தொல்லைகள் அதிகம் இருந்ததால் அதனை ரத்து செய்ய அண்மையில் முடிவுசெய்து அதற்கான சேவை அலுவலகத்துக்குச் சென்றாள்;

அங்கேயிருந்த பணிப்பெண், “க்ரெடிட் கார்டு “ மாத்திரமல்ல, அதன் இரகசிய  (PIN No. )எண்ணும் இருந்தாலே அதனை கணக்கு சரிபார்த்து ரத்து செய்ய முடியும் சூழ்ச்சியுடன் சொல்ல , இந்த அப்பாவிப் பெண் தன் க்ரெடிட் கார்டின் இரகசிய  PIN எண்ணையும் ஒப்புவித்துவிட்டு தன் அலுவலகத்துக்கு வந்துவிட்டாள்; அன்றிரவே அவளது கைபேசிக்கு ஒரு குறுந்தகவல் (Sms) வருகிறது, அவளது க்ரெடிட் கார்டிலிருந்து ரூபாய் 27,000/‍ -க்கு பொருள் வாங்கப்பட்டிருப்பதாக‌.

அதிர்ச்சியடைந்து உடனே வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டால் சரியான பதில் கிடைத்தபாடில்லை; பதட்டத்துடன் இரவெல்லாம் தவித்துபோய் காலையில் வங்கிக்குச் சென்று புகார் செய்யப்போனால் அவளுக்கு யாரும் பொறுப்பான பதில் சொல்லவில்லை;க்ரெடிட் கார்டை இரத்து செய்ய பெற்ற (திருட்டுப்) பணிப்பெண்ணும் அலுவலகத்துக்கு வரவில்லை;

ஷீலா வேறு வழியில்லாமல் தனது உறவினர்களைத் தொடர்பு விஷயத்தைச் சொல்லவும் ,அவர்கள் வங்கி அதிகாரிகளைக் கூப்பிட்டு மிரட்டவும், மிகத் தாமதமாக சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட அவர்கள் அடுத்து இந்த விஷயத்தை விவகாரமாக்காமல் மூடிமறைக்கும் சூழ்ச்சி வலைகளைப் பின்னத் துவங்கினார்கள்;

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் சட்டப்பூர்வமான நடவடிக்கை மன்றத்துக்குச் செல்லுவதைத் தடுத்து, இவர்களே விசாரணை அது இதுவென்று இதோ இழுத்து ஒரு வாரம் ஓட்டிவிட்டார்கள்; இந்த ஒரு வாரமாக ஷீலாவுக்கு அனுதாப விசாரிப்புகள், புத்திமதிகள், பரியாசம் போன்ற துன்பங்களுடன் வங்கியிலிருந்து விசாரணைக்கு அழைக்கும் போதெல்லாம் அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காமல் சிறப்பு அனுமதி (Permission) யும் கிடைக்காமல் இப்படி பல்வேறு மன உளைச்சல்…மன அழுத்தம்..!

இனி இழந்துபோன அந்த 27,000/- ரூபாய் கிடைத்தாலும் இந்த துன்பங்களுக்கெல்லாம் யார் ஈடு செய்யமுடியும்? தற்போதய நிலவரத்தில் வங்கி அதிகாரிகள் அந்த திருட்டுப் பெண்ணுக்கு பரிந்துபேசி, “நாங்க அவசரப்பட முடியாது’ம்மா, அந்த பெண் அவமானம் தாங்காமல் தற்கொலை ஏதாவது செய்துகொண்டால் பிரச்சினையாகிவிடும் “ என்கிறார்களாம்.

வேதம் சொல்லுகிறது,

“நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.” (உபாகமம்.28:12 );

இந்த வசனத்தின் ஆசீர்வாதத்தைக் குறித்த மேன்மை தெரியாத பலரும் இப்படியே சாத்தானின் திட்டங்களுக்கு பலியாகின்றனர்; கடன் வாங்குவதை அவமானமாக எண்ணியது ஒரு காலம்; இன்று க்ரெடிட் கார்டு இல்லாதிருந்தால் அவமானம் என்று நினைக்கும் நவீன காலம்.

இந்த பாழ் உலகின் மாயையில் சிக்கி ஆதியில் கடவுள் மனிதனை உண்டாக்கி அவனை கவலையற்றவனாக வைத்து பராமரித்த தயவை மறந்த மனிதன், தன் விருப்பத்துக்கு ஏற்ற உலகைத் தானே அமைத்துக்கொண்டான்; அதன் விளைவுகளே இன்று மனிதனை ஆட்டிப்படைக்கிறது; ஆசையையும் அவசரத்தையும் ஒழிப்பதே துன்பத்திலிருந்து நீங்கும் வழியாகும்; அதனையடைய கொஞ்சம் சுயகௌரவத்தை விட்டுவிட்டு சிருஷ்டிகரும் மீட்பருமாகிய இயேசுகிறித்துவைச் சார்ந்த எளிமையான வாழ்க்கைக்கு நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்.

மூத்த அப்போஸ்தலர் செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்..!


Senior Chennai Pentecost Leader Rev, P.S.Chelladurai F/O Rev. Sam P. Ch expired at 7.15 p.m. Sunday (5/12). He is 88 yrs.His Funeral service tomorrow 2.30 p.m.at AFT church, Purasavakkam. Burial at 4.30 p.m. at Kilpauk. www.revsam.org

Pls Fwd to all…Thank You..!

PSC4.png

Pastor P. S. Chelladurai – The founder of AFT Church and father of Rev. Sam P. Chelladurai, passed into glory on 05-12-2010 at 07:15pm in Chennai. The funeral service will be held at 02:30pm in AFT Church on Tuesday (07-12-2010). Burial will be in Kilpauk Cemetery at 04:30pm. The service will be webcast LIVE.

பெந்தெகொஸ்தே இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் மூத்த அப்போஸ்தலருமான செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்; நேற்று மாலை 07:15 க்கு அவருடைய உயிர் பிரிந்தது; நாளை மாலை 04:30 மணிக்கு அவருடைய நல்லடக்கம் நடைபெறுவதாக அறிகிறோம்.

ஐயா அவர்கள் தனது  88 வது வயது வரையிலும் நல்ல நினைவாற்றலுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது;அவர்கள் தனது விசுவாசத்தைத் தூண்டும் போதனைகளால் அநேகரை எழுப்பியதுடன் தனது பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்தம் சந்ததியையும் கண்டு ஒரு முழுமையான வெற்றிகரமான கிறித்தவ ஜீவியத்தை நிறைவேற்றினார்.

அவர் தனது துணைவியாருடன் கொண்டிருந்த உத்தமமும் சமாதானமும் நிறைந்த‌ இல்வாழ்க்கை மிகவும் போற்றுதற்குரியது; இளந்தலைமுறையினர் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியானது; பிரபல போதகர் சாம்.P.செல்லத்துரை அவர்கள் அன்னாரது மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்த்தருடைய வருகையில் நாம் அவரை சந்திப்போம் என்ற விசுவாசத்துடன் நம்முடைய சபையின் தலைவருக்கு நமது இறுதி மரியாதையினை செலுத்துகிறோம்;அவர்மூலமாக நாம் கற்றுக்கொண்ட நல்ல விசுவாச போதனைகளுக்காக ஆண்டவருக்கு துதி செலுத்துகிறோம்.

கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை..!


இன்று (2pm) எனது நண்பர் பாலன் பால்ராஜ் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது வெளிப்பட்ட சிந்தனை…

‘ கடவுள் இல்லை ‘ என்று சொல்கிறவர்களை நாத்திகர் என்கிறோம்; நாத்திகர் கடவுள் இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளலாமா,அது ஏற்புடையதா என்று யோசிப்பதற்கு முன்னர் ” கடவுள் இல்லை ” எனும் கொள்கையிலுள்ள இல்லை என்ற சொல்லுக்குரிய கொள்கையை ஆராயவேண்டுமல்லவா?

இல்லை என்பதைக் குறித்த விளக்கம் ஆங்கிலத்தில் Absence of Something என்றும் Something that does not exist என்றும் கூறப்பட்டுள்ளது; இதன்படி இருக்கும் ஏதோ ஒன்று இல்லாமலிருப்பதே இல்லை (What is Something ? and what is Nothing ?) என்பதன் கொள்கையாம்;

உதாரணத்துக்கு, என் கையில் பணமில்லை என்றோ என் பாக்கெட்டில் அல்லது என் சட்டை பையில் பணமில்லை என்றோ சொல்வோமானால் பணம், இல்லை எனும் இரு சொற்களில் பணம் என்பதைக் குறித்து அறிந்திருந்தாலே அது இல்லை என்று சொல்லமுடியும்;

பணத்தின் அருமை யாருக்கு தெரியும்,அதனைப் பயன்படுத்தியவருக்கே அல்லவா? மனநிலை சரியில்லாதோருக்கும் குழந்தைகளுக்கும் பணத்தைக் குறித்து ஒன்றும் தெரியாது;

பணம் என்பது என்ன, அதை யார் உண்டாக்கினார், அதன் நோக்கம் என்ன, அதன் அவசியம் என்ன‌ போன்ற அம்சங்களே பணம் என்ற சொல்லின் ஆதாரமாக இருக்கிறது; அதனை உணர்ந்த பின்னரே அது இல்லாததைக் குறித்து அறிந்தோ அல்லது வருந்தியோ அது இல்லை என்று கூறமுடியும்;

இதுபோலவே கடவுள் இல்லை என்று கூறுவதற்கு முன்னர் அவர் யார் என்ற கொள்கையைக் கூறிய பிறகே அவர் இல்லை என்று கூறமுடியும்; கடவுளைக் குறித்து எதுவும் தெரியாமலே கடவுள் இல்லை என்பது ஒரு பொருளைக் குறித்து இல்லை என்று சொல்லக்கூடிய ஆதாரக் கொள்கைக்கு முரணானது ஆகும்; இல்லாத ஒன்றை இல்லை என்று கூறவேண்டிய அவசியமென்ன‌?

No God, No Peace; Know God, Know Peace..!

இப்போதைக்கு எனக்கு ” ஞானம் இல்லை “என்று வைத்துக்கொள்வோமா..?

நல்ல சமாரியன் ஓவன் ராபர்ட்ஸ் ஐயா அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்..!


வலைதளத்தில் தமிழ் கிறித்தவம் மிகவும் பின் தங்கிருக்கிறதோ என்று யோசிக்கிறேன், வருந்துகிறேன்; ஒருவேளை எனக்குத் தேடத் தெரியவில்லையோ என்னவோ..!

நேற்று (15.20.2010) சென்னையில் காலமான மூத்த போதகர் ஓவன் ராபர்ட்ஸ் அவர்களைக் குறித்த எந்த செய்தியும் இணையதளத்தில் கிடைக்கவில்லை.

DSC_1641.JPG

அன்னார் தமது சரீர பெலவீனங்கள் மத்தியிலும் ஆண்டவருக்காக இடையறாது செய்த ஊழியங்களுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம்.

அவருடைய ஊழியத்தைக் குறித்து அறிந்தோர் அவர்தம் ஊழியத்தைக் குறித்த தகவல்களை இங்கே பதித்து அவருடைய ஊழியத்தைப் போற்றும் வண்ணமாக சாட்சிகளைப் பகிர அன்புடன் அழைக்கிறேன்.

நேத்து ராத்திரி யம்மா..!


நேற்றிரவு (09:10:2010) தூக்கம் பறிபோனது, துக்கம் வரவானது; காரணம் எங்கள் ஊரிலுள்ள பெருமாளுக்கு ஏதோ விசேஷமாம்; கடந்த மூன்று நாளாக அரற்றிக் கொண்டிருந்தார்கள்; நமக்கு அதில் ஆர்வமில்லாவிட்டாலும் கட்டாயப்படுத்துவது போல அதிகாலையிலிருந்து இரவு பத்து மணிக்கும் மேலாக ஊரை ஒலியினால் மாசுபடுத்தினர்;

எல்லாம் போக நேற்று ஒரு ஊர் பயணம் முடித்து திரும்பி சோர்வுடன் படுக்கைக்குச் செல்லவே இரவு 11:30 ஆனது; ஒலிபெருக்கி சத்தத்திலிருந்து தப்பிக்க கதவையும் சன்னல்களையும் அடைத்துவிட்டு காற்றுக்கு வழியில்லாமல் துன்பத்துடன் தூங்க முயற்சித்தபோது சில மணித் துளிகளில் “டமடம” வென அடித்துக் கொண்டும் பஜன் பாடிக் கொண்டும் சாமி ஊர்வலம் வந்தது;

போதாக்குறைக்கு பட்டாசு வெடி… அந்த மிகப் பெரிய சைஸ் பேண்டு (Big Band)கள் மூன்றும் பள்ளிகளில் ‘மார்ச் ஃபாஸ்டு’ க்கு அடிப்பது, அத்துடன் சாவுக்கு அடிக்கும் மேள வாத்தியமும் சேர நெஞ்சை படபடக்கச் செய்யும் இரைச்சலுடனும் பிணத்துக்கு முன்பாக ஆடும் அருவருப்பான கூத்து நடனத்துடனும் சாமி ஊர்வலம் வந்தது;

கூத்து நடனம் ஆடிய இளைஞர்களும் மற்றவரும் நல்ல போதையில் இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது; இந்த ஊர்வலம் வருவதற்காகவே சில தினங்கட்கு முன்பு எங்கள் வீட்டு வாசலிலிருந்த நல்ல நிழல்தரும் மரத்தை வெட்டி வீழ்த்தியிருந்தனர்; இது அவர்கள் தேசமல்லவா, யாரையும் எதுவும் கேட்க முடியாது;நாங்களோ வாடகைக்கு குடித்தனம் இருப்பவர்கள்; ஏதாவது நியாயம் கேட்டாலும் வீட்டை காலி செய்யவைப்பர்; வேறு வீடும் தரமாட்டார்கள்;

ஒரு மாட்டு வண்டியில் சாமியை அலங்கரித்து வைத்து அதற்கு மின்வசதி தரும் மின்கலத்தையும் வண்டியுடன் இணைத்து மாட்டுக்கு பதிலாக மனிதர்கள் இழுத்துவந்தனர்; வண்டியிலோ ஒரு பூஜாரி ராஜா போல அமர்ந்துகொண்டு கொஞ்சமும் உணர்ச்சியற்ற நிலையில் இயந்திர கதியில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்;

பக்தர்கள் கொடுத்த பூஜை தட்டை சில நொடிகள் அந்த விக்கிரஹத்திடம் ஒரு காட்டு காட்டிவிட்டு பக்தர்களிடம் கொடுக்க, அவர்களும் இயந்திரத்தைப் போல பெற்றுக் கொண்டு திரும்பினர்;

ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக இருக்கக்கூடிய மின்சாரம் மற்றும் கேபிள் தொலைபேசி சர்வீஸ் கம்பிகளில் உரசி, உயர்ந்ததும் மட்டமானதுமான அந்த காகித அட்டை அலங்காரம் கவிழ்ந்து சாமி தடுமாறி விழுந்துவிடுமோ ‘ வென இளைஞர்கள் அதற்கென ஒரு கம்பை தயாரித்து அதன்மூலம் சர்வீஸ் கம்பிகளை உயர்த்திபிடித்து சாமியின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தனர்;

சாமியின் அழகோ கண்கொள்ளா காட்சி…
‘ஒருவனுக்கு ஒருத்தி ‘ என குடும்பஸ்தர்கள் வாழும் தெருக்களில் நுழைந்த சாமியோ சைடுக்கு ஒன்றாக ரெண்டு குட்டிகளுடன் வந்தார்; போனவாரம் வந்து போன மிஸ்டர் கணபதி சிங்கிளாகத் தான் வந்தார்;

சாமி குட்டிகளை மட்டும் கட்டிக்கொள்ள நம்ம பக்தர்கள் அவருடைய பெண்சாதிகளுடன் அவரையும் சேர்த்து கட்டியிருந்தனர்; விழுந்துருவாரோ என்ற நல்ல எண்ணமோ அல்லது தனது ஜோடிகளுடன் ஓடிவிடுவாரோ என்ற கெட்ட எண்ணமோ தெரியவில்லை;

என்னைப் பொருத்தவரை அவர் மிஸ்டர் கிருஷ்ணனாக இருக்கவேண்டும்; ஆனால் அவரைக் குறித்து பெருமாள் என புகழ்ந்தனர்; ‘ லாஜிக் ‘ புரியவில்லை;

பெருமாளைப் பொறுத்தவரையில் அலமேலு அம்மாவுடன் இருப்பார்; அதுவும் ஏதோ கொடுக்கல் வாங்கல் தகராறில் கோவித்துக் கொண்டு திருப்பதி மேலேறி தவமிருப்பதாகவும் அவருடைய கடன் தீர்ந்தபிறகே வந்து குடித்தனம் பண்ணுவார் என்றும் ஐதீகமாம்; நம்முடைய ஏழை எளிய மக்களும் தங்கள் முடி உட்பட அனைத்தையும் ஆண்டாண்டு காலமாக தானமாக வழங்கியும் இன்னும் அவருக்கு திருப்தியாகவில்லை;

எல்லா சாமியும் ஆசீர்வதிக்கும் பாவனையில் போதும் என்பது போல வலக்கரத்தைக் காட்ட இவரோ இன்னும் வேண்டும் என்பது போல வலக்கரத்தையும் இடக்கரத்தை அள்ளி முடித்துக் கொண்டது போலவும் வைத்திருப்பார்;

அப்படியானால் எங்கள் தெருவுக்கு வந்தது பெருமாள் அல்ல; இத்தனை கலாட்டாக்கள் நடந்தும் சாமியோ சாமியாரோ மக்களுடைய பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் சொல்லவில்லை; அவர் அருள் தருவதாகச் சொல்லுவதும் பக்தர்கள் வேண்டியது நடக்கும் என்று காத்திருப்பதும் சுயநலம் சார்ந்த பக்தியாகவே தோன்றுகிறது; ஏனெனில் ஒரு தெருவுக்கு சாமி வந்து போவதாலோ சாமியைத் தேடி பக்தன் சென்று வருவதாலோ ஒரு தனிப்பட்ட மனிதனுடைய வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்பட்டது போலத் தெரியவில்லை;

கோயிலில் விழாக்கோலம் ஒருபுறம், பக்தன் அருகிலிருக்கும் டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு மல்லாந்து கிடக்கும் அலங்கோலம் மறுபுறம்; அவன் பெண்டு பிள்ளைகள் அங்கே சாமியை விழுந்து வணங்கிக்கொண்டிருக்க இங்கே இவன் சாக்கடையில் விழுந்து எதையோ தேடிக்கொண்டிருக்கிறான்;

அந்த காலத்தில் கோயிலில் பரத்தையர் நடனமாடுவர்; இதனை பரதநாட்டியம் என்றும் கூறுவர்; இந்த நடனத்தால் வசீகரிக்கப்ப‌டும் ரிஷிகளும் மன்னர் பெருமக்களும் அன்றிரவு அவர்களோடு தங்களைப் பகிர்ந்துகொள்வர்;

இன்றோ ஒரு பாவமுமறியாத சிறுமிகளையும் வயதுக்கு வந்த இளங்குமரிகளையும் அதே கோவில் வாசலில் ஆடவிட்டு அவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்;

வீட்டுக்கு ஒன்றாக ஆணாகவோ பெண்ணாகவோ பெற்று நம்முடைய எதிர்காலத்தில் நமக்குத் துணையாக பிள்ளைகளை வளர்த்து இதுபோன்ற காமாந்தகர்களுக்கு அவர்களை பலியாக்கும் ஆபத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது;

ஏனெனில் அங்கே இருக்கும் சாமிகளின் கதைகளும் புராணங்களும் வீரபராக்கிரமங்களும் அத்தனை பயங்கரமானது; இந்த காலத்தில் அவர்கள் இறங்கி வந்து நம்முடைய பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு போகாவிட்டாலும் அவர்களுடைய ஆவியை இளைஞர்கள் மனதில் புகுத்தி அவர்கள் மூலம் பெண் பிள்ளைகளைக் கெடுத்துவிடுகிறார்கள்; இன்னும் அடுத்தவன் மனைவியையும்கூட இந்த சாமிகள் விட்டு வைப்பதில்லையே;ஆனானப்பட்ட விஷ்ணு பகவான் உட்பட தனது பக்தர்களை ருசிபார்ப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்;

இதையெல்லாம் யோசித்து யோசித்து நேற்றிரவு தூக்கம் பறிபோனது; சாமி அங்கே வேஷத்தைக் கலைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்க பக்தர்களோ வழக்கம்போல தங்கள் அன்றாட பாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்; பொழுதுபோக்குக்கு எந்திரன் முதலான திரைப்படங்களும் தொலைக்காட்சி சீரியல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சமத்துவ சமதர்ம சமுதாய மறுமலர்ச்சிக்கான அற்புதமான தளமாக டாஸ்மாக் கடைகளும் இருக்கவே இருக்கிறது.

வாழும் பாரதம்… வளரும் தமிழகம்…!?

இரண்டில் ஒன்று…தீர்மானம் நன்று..!


நேற்று ஒரு நண்பர் தன்னுடன் ஒரு சகோதரரை அழைத்துக் கொண்டுவந்து அவருக்கு ஆலோசனை சொல்லி பிரார்த்திக்க வேண்டினார்; அவருடன் பேசியபோது எனது சிந்தையில் உதித்த சில கருத்துக்கள்:

ஊழியத்துக்கு ஒப்புக்கொடுத்து -ஆனாலும் வேர்கொள்ளமுடியாமல் – நிரந்தர வேலையுமில்லாமல் – 2007- ம் வருடம் திருமணமாகி – ஆறுமாத ஆண் குழந்தையுடன் மனைவியை விட்டுப் பிரிந்த நிலையில்  -சில வாரங்கட்கு முன்பு சாலை விபத்தில் கையொடிந்து  -தங்க இடமில்லாமல் பரிதாப நிலையிலிருந்தவரிடம் நான் இப்படியாகப் பேசிக் கொண்டிருக்கிறேன்;

அவர்கள் இருவருக்கும் வந்ததும் உபசரிப்பாக ஆளுக்கொரு க்ளாஸ் தண்ணீர் கொடுத்தோம்;அதை ஒருவர் முழுவதும் குடித்துவிட மற்றவர் பாதியளவு மீதம் வைத்திருந்தார்; அதையே உதாரணமாக்கி நான் கேட்டேன்,இந்த இரண்டு க்ளாஸ்களில் எது சிறந்தது?

காலியாக இருக்கும் க்ளாஸா அல்லது ஏதோ கொஞ்சம் இருக்கும் க்ளாஸா?
எப்படியோ மிகச் சரியாகவே சொன்னார்,காலியாக இருக்கும் க்ளாஸ் தான் என்று;எப்படி என்று நான் விளக்கினேன்;

பாதியளவு தண்ணீர் இருக்கும் க்ளாஸில் இன்னும் கொஞ்சம் நிரப்பி பயன்படுத்தவும் முடியாது,இருக்கும் கொஞ்சம் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாமென்றாலும் முடியாது;ஏனெனில் அது இன்னொருவர் குடித்துவிட்டு வைத்ததும் மாசடைந்ததுமான தண்ணீராக இருக்கும்;எனவே என்ன செய்வோம்,அதை கொட்டிக் கவிழ்த்து  கழுவி விட்டு புதியதான தண்ணீரை நிரப்பி பரிமாறுவோம்;இப்படியே இதுவரை வாழ்ந்த உங்கள் வாழ்க்கை பயனற்றதாகவும் இனி செய்வோம் என்ற திகைப்புடனுமிருக்கும்;

ஆனால் ஒன்று செய்யலாம்,புதிய வாய்ப்புக்காக ஆவலுடன் ஆண்டவரை நம்பி காத்திருங்கள்;ஆண்டவர் புதியதொரு வாசலைத் திறப்பார்;அதுவரை உங்களுக்காக நீங்கள் உங்கள் பழைய அனுபவத்திலிருந்து திட்டமிடுவதை நிறுத்துங்கள்; நீங்கள் முழுவதும் குணமாகி சகஜநிலை திரும்பும் இந்த இடைபட்ட ஓய்வு காலத்தில்உங்களைப் பற்றிய நன்மதிப்புகளை வளர்ந்துக்கொள்ளுங்கள்; நல்ல நண்பர்களுடன் ஐக்கியம் கொள்ளுங்கள்; நல்ல ஆவிக்குரிய புத்தகங்களைப் படியுங்கள்;உங்கள் மீது நம்பிக்கை வளரும்படியான காரியங்களை யோசித்து அதை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் காரெக்டரை டெவலப் செய்யுங்கள்; உங்களுக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து நீங்கள் மீண்டு உயிருடனிருப்பதே ஆண்டவர் உங்களை நேசிக்கிறார் என்பதற்கு அடையாளமாகும்;

மனிதர் சற்று நம்பிக்கையுடனும் தெளிவுடனும் விடைபெற்றார்;என்ன என்னுடைய வழக்கமான போட்டோ எடுக்க மறந்துவிட்டேன்;விரைவில் அவரது போட்டோவை இங்கே பதிக்கிறேன்.

எடக்கு மடக்கு..!


எடக்கு மடக்கு..!

தர்மம் தலைகாக்கும்;சுத்தம் சோறு போடும்;
சரி,சாம்பார் ஊத்தறது யாரு?

தாடி வெச்சவன் சோம்பேறி;
அப்ப முழுக்க மழிச்சவன்?
புத்திசாலி..!

வாசகர் தொடரட்டும்…!