Tag Archive | எதிர்ப்பு

சத்தியா புலம்புகிறாள்..!


என்ன இருந்தாலும் நீங்க மனுஷன் தானே…

எல்லா மனுஷங்களுமே கெட்டவங்கதான்…

உங்கள கடவுளப் போல நெனச்சேன்…

கடவுள் மீது சாய்வதாக நினைத்தே உங்கள் மீது சாய்ந்தேன்…

மனசுல இருக்கறதயெல்லாம் மனசுவிட்டு சொல்லவே தைரியமா வந்தேன்… தப்பு பண்ணிட்டிங்க… நீங்கதான் துவங்கினீங்க…

21 வயசுலேயே எல்லாம் முடிஞ்சாச்சு… நான் தப்பு பண்ணிட்டேன்… உங்க பெண்ணாயிருந்து இப்படி நடந்தா விடுவீங்களா…

இப்ப சிரிச்சிகிட்டிருந்தாலும் வீட்டில போய் அழுவேன்…

கிளாஸுக்குப் போகப் பிடிக்கல…

தூக்கம் வரல… கனவும் வரலை…

ரொம்ப இடம் கொடுத்துட்டேன்…

நான் முன்னமே பொறந்திருக்கணும்…

இல்ல நீங்க லேட்டா பொறந்திருக்கணும்…

காசா,எதுக்கு..?  நான் என்ன “அது” மாதிரியா வந்தேன்..?

நான் வரப்போறவனோட எப்படி இருப்பேன்..? அவன் பாவம்…

உங்கள நெனச்சிக்கிட்டு அவனோட இருக்கறதா..?

எப்படி சொல்லிட்டீங்க..!

இளமை திரும்புதோ… கொஞ்சமாவது யோசிக்கவேண்டாமா?

இது எப்படி சரியா வரும்…

சின்ன வயசாயிருந்தாலும் நான் வந்திருப்பேன்…

14‍ அல்லது 18 வய‌சு பொண்ணுங்களாயிருந்தா முழுவதும் ஏமாந்திருப்பாங்கல்ல..?

எச்சரிக்கை, எச்சரிக்கை என முதல் முறையே சத்தம் கேட்டுது…

நான் ஏமாந்துட்டேன்… இனி என்ன செய்வேன்…

அந்த சத்தமும் இப்ப கேக்கறதில்லை…

சரி… சரி… நீங்க ஏன் ஒரு மாதிரியாயிட்டீங்க…

எப்பவும் போல பேசுங்க…

இல்ல நான் தப்பு பண்ணிட்டேன்… ரொம்ப இடம் கொடுத்துட்டேன்…

அடுத்து எப்ப பாக்கலாம்… எப்பவும் போல பேசுங்க…

நிறைய பேசணும்… வேற எதுவும் வேணாம்…

வெளியவே போய் பேசுவோம்… என்னை மறக்கக்கூடாது…

என் கல்யாணத்துக்கு வரணும்… என்னை வெறுக்கக்கூடாது…

என்ன இருந்தாலும் எங்க வீட்டுல சொல்றத எதிர்த்து நான் எதுவும் செய்யமாட்டேன்… செய்யமுடியாது… விட்டு வரவும் முடியாது…

எப்படி பார்த்தாலும் சரியா வராதே… இப்படியாகும்னு நான் நெனச்சி பாக்கலயே… எங்க வீட்டுல யாரும் இது போல கிடையாது…

அன்று ஒரு வினாடி நடந்த ஒரு கெட்ட காரியத்த நினைத்து படிப்பையே இழந்தேன்… ஆனா இப்ப..?

மனசுவிட்டு பேச மட்டுமே உங்களோட வந்தேன்… உங்க பெண்ணாகத் தானே ஏற்றுக்கொள்ளச் சொன்னேன்… இப்படி செஞ்சிட்டீங்களே…!

(வெறும் (?!) முத்தத்தையும் கட்டியணைத்தலையுமே கற்பு போய் விட்டதாக பாவித்து அரற்றும் இளம்பெண்… இது அந்த காலத்து கதையல்ல… நிகழ்கால கற்பனை… “கற்பு” என்பது மனம் சம்பந்தமானது என்பது எத்தனை சத்தியமான‌ உண்மை… இளம்பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்காததையே சாதகமாக்க நினைத்து முன்னேறுவோர்க்கு இது ஒரு எச்சரிக்கை..! )