சுதா என்றொரு பெண்

இன்று காலையில் சுதாவின் போன்..!
கடந்த ஒரு வருடமாகக் காத்திருக்கும் அவளுக்கு இன்னும் மாப்பிள்ளை அமையவில்லை;

இதனால் சோர்ந்துபோன வீட்டார் “நீ சாமி தோஷத்திலிருக்கிறாய், மேல்மருத்தூருக்கு மாலை போட்டு, வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போய் வந்தால் தான் நல்லது நடக்கும்” என்று சொல்லிவிட்டார்கள்;

“நான் என்ன செய்யட்டும்;அவர்கள் சொல்வதுபோல எங்கள் ஊரில் சிலருக்கு நல்லது நடந்துள்ளதால் எனக்கு இரண்டு மனமாகவே இருக்கிறது” என்றாள்;

நான் என்ன சொல்வேன்,கடந்த ஐந்து வருடமாக முழு விசுவாசியாகவும் சிறு வயது முதலாக ஆண்டவரது அபிமானியாகவும் இருக்கும் சுதா, “அந்த விக்கிரக பேய் வணக்கம் எனக்கு ஒரு பொருட்டல்லவே; எனது வீட்டாருக்காக இதைச் செய்தால் என்ன? இல்லாவிட்டால் வீட்டில் பெரிய பிரச்சினையாகும்” என்கிறாள்;

நானோ,”இது தான் உனது விசுவாசத்துக்கான சோதனை; இதுபோன்ற சூழ்நிலையில் தான் வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர்; ஆனாலும் உனது சூழ்நிலையில் என்ன செய்வாயோ தெரியவில்லை; உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்; நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று போனை வைத்துவிட்டேன்;

சிறிது நேரத்தில் மீண்டும் போன் செய்த சுதா சொன்னது,”நான் இந்த மாதம் ‘ஒரு தனி காரணம்’ சொல்லி சமாளித்துவிட்டேன்; அடுத்த மாதத்துக்குள் எதாவது அதிசயம் நடக்க பிரார்த்தனை செய்யுங்கள்”.

One thought on “சுதா என்றொரு பெண்

Leave a comment