கிருஷ்ணகிரியில் பால் வெள்ளம்..!

ஆவின் லாரி சாலையில் கவிழ்ந்தது : 16 ஆயிரம் லிட்டர் பால் வீண் மேட்டூர் அருகே பால் ஏற்றி வந்த ஆவின் லாரி கவிழ்ந்ததில் 16 ஆயிரம் லிட்டர் பால் தரையில் கொட்டி ஆறாக ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து ஆவின் நிறுவவனத்துக்கு சொந்தமான 16 ஆயிரம் லிட்டர் பாலுடன் லாரி ஒன்று கிருஷ்ணகிரியை நோக்கி சென்றது. மேட்டூர் அருகே உள்ள ரவுண்டாணாவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக லாரி தலைகீழாக கவிழ்ந்தது. இதனையடுத்து லாரியில் இருந்த 16 ஆயிரம் லிட்டர் பாலி தரையில் கொட்டியது. அருகில் இருந்த மக்கள், குடங்களிலும், பாத்திரங்களிலும் பாலை பிடித்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://tamilnews.ebest.in/tamilnadu-political-news-in-tamil/milk-aavin-milk-11107/tamilnadu.html

 

Leave a comment