Archive | October 2010

கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை..!

இன்று (2pm) எனது நண்பர் பாலன் பால்ராஜ் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது வெளிப்பட்ட சிந்தனை…

‘ கடவுள் இல்லை ‘ என்று சொல்கிறவர்களை நாத்திகர் என்கிறோம்; நாத்திகர் கடவுள் இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளலாமா,அது ஏற்புடையதா என்று யோசிப்பதற்கு முன்னர் ” கடவுள் இல்லை ” எனும் கொள்கையிலுள்ள இல்லை என்ற சொல்லுக்குரிய கொள்கையை ஆராயவேண்டுமல்லவா?

இல்லை என்பதைக் குறித்த விளக்கம் ஆங்கிலத்தில் Absence of Something என்றும் Something that does not exist என்றும் கூறப்பட்டுள்ளது; இதன்படி இருக்கும் ஏதோ ஒன்று இல்லாமலிருப்பதே இல்லை (What is Something ? and what is Nothing ?) என்பதன் கொள்கையாம்;

உதாரணத்துக்கு, என் கையில் பணமில்லை என்றோ என் பாக்கெட்டில் அல்லது என் சட்டை பையில் பணமில்லை என்றோ சொல்வோமானால் பணம், இல்லை எனும் இரு சொற்களில் பணம் என்பதைக் குறித்து அறிந்திருந்தாலே அது இல்லை என்று சொல்லமுடியும்;

பணத்தின் அருமை யாருக்கு தெரியும்,அதனைப் பயன்படுத்தியவருக்கே அல்லவா? மனநிலை சரியில்லாதோருக்கும் குழந்தைகளுக்கும் பணத்தைக் குறித்து ஒன்றும் தெரியாது;

பணம் என்பது என்ன, அதை யார் உண்டாக்கினார், அதன் நோக்கம் என்ன, அதன் அவசியம் என்ன‌ போன்ற அம்சங்களே பணம் என்ற சொல்லின் ஆதாரமாக இருக்கிறது; அதனை உணர்ந்த பின்னரே அது இல்லாததைக் குறித்து அறிந்தோ அல்லது வருந்தியோ அது இல்லை என்று கூறமுடியும்;

இதுபோலவே கடவுள் இல்லை என்று கூறுவதற்கு முன்னர் அவர் யார் என்ற கொள்கையைக் கூறிய பிறகே அவர் இல்லை என்று கூறமுடியும்; கடவுளைக் குறித்து எதுவும் தெரியாமலே கடவுள் இல்லை என்பது ஒரு பொருளைக் குறித்து இல்லை என்று சொல்லக்கூடிய ஆதாரக் கொள்கைக்கு முரணானது ஆகும்; இல்லாத ஒன்றை இல்லை என்று கூறவேண்டிய அவசியமென்ன‌?

No God, No Peace; Know God, Know Peace..!

இப்போதைக்கு எனக்கு ” ஞானம் இல்லை “என்று வைத்துக்கொள்வோமா..?

ஹோமோசெக்ஸ் பழக்கம் தவறா? திருநங்கைகள்.Part.4

இது ஜாமக்காரன் எனும் கிறித்தவ பத்திரிகையின் கட்டுரையில் ஒரு பகுதியாகும்.

http://www.jamakaran.com/tam/2010/october/nithyananda.htm

ஹோமோ-லெஸ்பியன் என்ற பாவ பிரவேசம்

ஆண்-பெண் இருபாலாரிடையே இப்போது மிக வேகமாக பரவிவரும் பாவம் ஹோமோ செக்ஸ் – லெஸ்பியன் செக்ஸ் என்பது ஆகும். அலிகள், ஆண் புணர்ச்சிகாரர்கள் ஆகியவர்கள் (Gayism – Lesbianism) தங்களை இறைவனின் படைப்பு என்று இவர்கள் இருவரும் (மத் 19:12வசனத்தைக்காட்டி) நம்புகிறார்கள். இப்படிப்பட்டவர்களை மக்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்ககூடாது என்கிறார்கள்.

அலிகள், ஆண் புணர்ச்சிக்காரர்கள், பெண் புணர்ச்சி பாவம் செய்யும் பெண்கள் ஆகியவர்கள் (Gayism – Lesbianism) பிறக்கும் போதே அப்படிப்பட்ட பால் உணர்ச்சி உள்ளவர்களாகவே பிறக்கிறார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள், உலகமும் அதை நம்புகிறது. பிறப்பிலேயே அப்படியாக பிறந்தவர்கள் (மத் 19:12) லட்சத்தில் ஒன்றைத்தவிர, மற்றவர்கள் யாரும் இயற்கையின் படைப்பு அல்ல. அதைக்குறித்து விரைவில் மருத்துவ விஞ்ஞான உடல்கூறு விவரத்தோடு ஜாமக்காரனில் எழுதுவேன்.

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்த வலையில் விழுந்துள்ளதால் நான் எழுதி அறிவிக்கவேண்டியது அவசியமாகிறது.

ஆண்-பெண் தன்மைக்குள்ள இரண்டுவித (Sex) பால் உணர்ச்சிகளும் நம் எல்லாருடைய சரீரத்திலும் உண்டு. விடுதியில் (ஹாஸ்டல்) தங்கி படிப்பவர்கள், தனிவீடு எடுத்து நண்பர்களாக தங்கி படிப்பவர்களை பெற்றோர்கள் கட்டுப்பாடற்ற முறையில் அவர்களின் போக்குக்கு விட்டுவிடுகிறார்கள். இப்படி வாழ்பவர்களிடம் இந்த பாவங்கள் மிக அதிகமாக தொற்றிக்கொள்கிறது.

மேலும் போதைக்கு அடிமையான பெண்கள் – ஆண்கள் இவர்களிடையேயும் இப்படிப்பட்ட பாவசெயல் மிக அதிகமாக காணப்படுகிறது. பள்ளிப்பருவத்தில் ஒருவரோடு ஒருவர் தொட்டு பழகுவார்கள் அல்லது விடுதியில்(ஹாஸ்டல்) தங்கி படிக்கும்போது நண்பர்கள் இருவர் ஒரே கட்டிலில் படுப்பது, இப்படி ஏற்பட்ட பழக்கம் அல்லது உறவுகளின் மூலம் உண்டாகும் தொடுதல் உணர்ச்சிகளால் உண்டான பாவத்தை விளையாட்டுபோல பழகியவர்கள், பள்ளிப்பருவம் அல்லது கல்லூரி பருவம் கடந்தபின்னும், அதை தொடருவதால் அந்த பாவத்துக்கு அடிமையாகி அதை பழக்கத்தில் கொண்டு வந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட தொட்டுபழகும் சூழ்நிலையில் பெண்களுக்கான சரீர பால்உணர்வு ஆண்களுக்கும் – ஆண்களுக்கான சரீர பால்உணர்வு பெண்களுக்கு உள்ளும் இயற்கையாக ஹார்மோன் செயல்பட்டால் உருவாகும்போது யார் எந்தவிதமான பால் உணர்வுக்கு அதிகமான தீனிபோடுகிறார்களோ அதுவாகவே மாறிவிடுகிறார்கள். (ஆண்கள் பெண்களைப்போல – பெண்கள் ஆண்களைப்போல) இவர்கள்தான் நாளடைவில் அலிகளாக ஹோமோ அல்லது லெஸ்பியன் கேரக்டர்களாக மாறுகிறார்கள்.

பல வருடங்களுக்குமுன் இரகசியமாக பேசப்பட்ட இத்தகைய பாவம் இப்போது கடவுளின் படைப்பு என்றும், இயற்கை என்றும் கூறப்பட்டு பொது பழக்கமாக மாறிவிட்டது. இதற்கு அரசாங்கமும் சட்டவடிவம் அமைத்து மனித உரிமை என்ற பெயரில் நியாயப்படுத்திவிட்டனர்.

(Natural Use - இயல்பான முறை), (Against Natural Use - இயல்புக்கு மாறாக) பெண்கள் சுபாவ அநுபோகத்தை சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்…… அப்படியே ஆண்களும்…. ஆணோடே + ஆண் அவலட்சணமானதை நடப்பி(க்கிறார்கள்)…. பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய்….. இருக்கிறார்கள். ரோ 1:26-32 என்று வேதம் எச்சரிக்கின்றது.

(ஒரு ஆண்) பெண்ணோடு சேர்க்கை கொள்வதுபோல் ஆணோடு சேர்க்கை கொள்ளாதே! லேவி 18:22.

ஒருவன் பெண்ணோடு மோகங்கொள்வதுபோல் (புணர்வதுபோல்) ஆண் மகனோடு புணர்வது அருவருப்பான காரியம். அப்படி செய்த இருவரும் கொலை செய்யப்படகடவர்கள். (They shall surely be put death. Lev 20:13). லேவி 20:13. இப்படி வேதத்தில் பழைய ஏற்பாட்டு சட்டம் கூறுகிறது.

இயற்கைக்கு மாறான பாவம் செய்வோர், இவர்களுக்கு கடவுளின் அரசு உரிமையாகாது. 1கொரி 6:9. ஆண்புணர்ச்சிக்காரர்…. தேவனுடைய இராஜ்யத்தை சுதந்திரிப்பதில்லை. 1கொரி 6:9.

நியாயபிரமாண சட்டம்… ஆண்புணர்ச்சிகாரர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. 1திமோ 1:10,11. இப்படியெல்லாம் வேதத்தில் புதிய ஏற்பாட்டிலும் திட்டவட்டமாக எச்சரிக்கும்போது, இது எப்படி இயற்கை அல்லது இறைவனின் படைப்பு என்று கிறிஸ்தவ தலைவர்களே கூறுகிறார்கள்?

மேலே வாசிக்கப்பட்ட பாவ செயல்கள் எல்லாம் சோதோம் கொமாராவில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

ஆதி 19:5ல் சோதோமின் ஊர் ஜனங்கள் லோத்தை நோக்கி… நேற்று இராத்திரி உன்னிடத்தில் வந்த ஆடவர் எங்கே? நாங்கள் அவர்களோடு சற்றுச்சரசமாடும்படி அவர்களை இங்கே கொண்டுவா.. (எங்களுக்கு உன் பெண் பிள்ளைகள் வேண்டாம்) என்றார்கள். ஆதி 19:5.

இப்படிப்பட்ட ஹோமோ செக்ஸ் – லெஸ்பியன் போன்றவர்கள் இயற்கை விதிகளுக்கும், மனித தன்மைக்கும் அப்பாற்பட்ட நிலையில் தங்கள் காமவெறியை தணித்துகொள்ள முயலுகிறதினால் இவர்கள் யாரும் இயற்கையாக அந்தவித பாலுணர்வை பெற்றவர்கள் அல்ல. அவர்களின் காமவெறியை மிருகத்துக்கு ஒப்பாக அவர்கள் அனுபவிக்க முயலுவதால் இதை வேதபுத்தகம் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகம் என்று குறிப்பிட்டு அதை பாவம் என்று அறிவிக்கிறது. இதை எந்த தேசமும், எந்த சபையும், எந்த ஊழியனும் ஊக்குவிக்ககூடாது. அவர்களுக்கு ஒரு ஆராதனை இடத்தை அமைத்துகொடுத்தால் அவர்கள் பாவத்தை நாம் கடவுளுக்கு விரோதமாக ஊக்கப்படுத்துகிறோம் என்பதாகும். இதன்மூலம் அந்த பாவம் செய்பவர்களுக்கும், அதை ஊக்கப்படுத்துபவர்களுக்கும் அதற்கான தண்டனை நிச்சயம்.

இப்படிப்பட்ட பாவத்துக்குள் விழுந்து எழுந்திருக்கமுடியாமல் தவிக்கும் பெண்களுக்கும் – ஆண்களுக்கும் ஆலோசனை கொடுத்து அவர்களை விடுவிக்க இப்போது மருத்துவதுறையில் ஆலோசகர்கள் (Psychologist) உண்டு. இவர்கள் மனநல வைத்தியர் அல்ல, மனநல ஆலோசகர் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களிடம் ஆரம்பத்திலேயே கொண்டுபோவது நல்லது. இப்படிப்பட்ட தவறான பால் உணர்வை வைத்தியத்திலும் சுகமாக்கலாம். வீட்டில் உங்கள் பெண் பிள்ளைகள் – ஆண் பிள்ளைகளின் நடவடிக்கைகளை சிறு வயதிலிருந்தே கவனிக்க தொடங்குங்கள். கவலையீனமாக விட்டுவிடவேண்டாம். உபவாசித்து அவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்கள் பேச்சும், அவர்கள் நடையும், அவர்கள் உடுத்தும் உடுப்பும், பழகும் விதமும், அவர்களுடன் பழகும் நண்பர்கள், பெண் பிள்ளையாக இருந்தால் அவர்களோடு நெருங்கி பழகும் அவர்களின் சிநேகிதிகளையும் கவனியுங்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் பழகும் விதத்தை மிக ஜாக்கிரதையாக கவனியுங்கள். கவலையீனமாக விட்டுவிடாதீர்கள். முழு குடும்பத்துக்கும் அது அவமானத்தை உண்டாக்கிவிடும்.

வெளிநாட்டில் ஊழியம் செய்ய நான் சென்றபோது கிறிஸ்தவ ஸ்தாபனத்தில் ஒரு வாலிப தம்பியின் நடவடிக்கைகளை கவனித்தேன். மற்றவர்கள் ஜெபத்துக்காகவும், ஆலோசனைக்காகவும் என் அறைக்கு வந்தபோது, இவனும் தனிமையில் என்னிடம் ஜெபம்மட்டும் செய்ய வந்தான். அங்கு நான் தங்கியிருந்த சிலவாரங்கள் அவன் நடவடிக்கைகளின் வித்தியாசத்தை ஆரம்ப முதலே நான் கவனித்ததால் அவனைப்பற்றியும், அவன் பலவீனத்தைபற்றியும் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அவனிடமே அறிவித்தேன். ஒத்துக்கொண்டான்.

10ம் வகுப்பு படிக்கும்போதே இந்த பாவசெய்கைக்கு நண்பர்கள் என்னை கட்டாயப்படுத்தி கெடுத்துபோட்டதால் பின் அதை நானே பழக்கமாகவும் ஆக்கிக்கொண்டேன். Youth for Christ மூலம் இரட்சிக்கப்பட்டு இப்போது இந்த ஊழிய ஸ்தாபனத்தில் சேர்ந்து ஊழியத்தில் இறங்கியுள்ளேன். ஆனால் அவ்வப்போது இந்த பாவபழக்கம் எனக்குள் கடந்துவருகிறது. இரகசியமாக பல வாலிபர்களை ஜெபிக்க வாருங்கள் என்று கூறி அவர்களை என் பாவத்துக்கு இசைய வைத்தேன். என்னால் அந்த பாவத்தை விடமுடியவில்லை என்று என்னிடம் கூறிய அந்த சூழ்நிலையில்தான் அவன் அழ ஆரம்பித்தான்.

ஒரு நல்ல ஊழிய ஸ்தாபனத்தில் அந்த வாலிபன் இணைந்து நல்ல ஊழியம் செய்துக்கொண்டிருக்கும்போதுதான் அவனோடு அந்த என் சந்திப்பு நிகழ்ந்தது. கர்த்தர் அவனுக்கு நல்ல தாலந்துகளை கொடுத்திருந்தார். பிரசங்க தாலந்து, எழுத்து தாலந்து இதன்மூலம் அந்த ஸ்தாபனம் அவனை நம்பி ஊழிய பொறுப்பை அவன் வசம் கையளித்திருந்தது. என்னிடம் ஆலோசனைக்கு என்று வந்தவனின் பாவத்தைக்குறித்து அந்த ஸ்தாபன தலைவர்களிடமோ அல்லது வேறு யாரிடமும் நான் கூறக்கூடாது, அதுதான் இரகசிய ஆலோசனை தர்மம். ஆகவே அவனிடம் நீயாக ஊழியத்தை விட்டுவிலகி விடு – மனநல ஆலோசகரை சந்தித்து ஜெபத்துடன் உன்னை சீர்ப்படுத்திக்கொள் என்றேன்.

குறிப்பிட்ட அந்த ஸ்தாபனத்தின் மாத பத்திரிக்கை, தியான புத்தகம் யாவிலும் அவன் பிரசங்கம் இடம் பெறும். அவன் பிரசங்கத்துக்கு நல்ல ஆதரவும் உண்டு. ஆனால் பல வருடங்கள் கடந்தும் அவன் அந்த ஸ்தாபனத்திலிருந்து நீங்கவில்லை. அந்த ஸ்தாபனத்தைதேடி வரும் சிறுவர்களையெல்லாம் கெடுத்துப் போட்டான். என் உள்ளம் தவியாய் தவித்தது. ஸ்தாபனத்தின் உள்ளேயிருந்து இன்னும் எத்தனை சிறுவர்களையும், வாலிபர்களையும் இவன் சீர்அழிக்கப்போகிறானோ என்று அந்த ஸ்தாபனத்தைப் பற்றியும், ஸ்தாபனத்தில் உள்ளவர்களையும் நினைத்து கலங்கினேன். ஒரு வழியாக அந்த வாலிபனின் செயல் ஸ்தாபனத்தில் உள்ளவர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டு அவனை அவர்கள் அவமானப்படுத்த துணியாமல் அவனாகவே ஸ்தாபனத்தைவிட்டு நீங்கும்படி செய்தார்கள்.

ஆனால் இப்போது அவன் அதே நாட்டில் சுதந்திரமாக ஏதோ பெரிய ஊழியம் செய்து கொண்டிருப்பதாக சமீபத்தில் கேள்விப்பட்டேன். ஆரம்பத்திலேயே அவன் தன்னை சரி செய்திருக்கலாம். இப்போது அவன் ஊழியம் செய்துகொண்டே எத்தனைபேர்களை கெடுத்து தன் பாவத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறானோ தெரியவில்லை!

இப்படிப்பட்ட பாவசெயல் திருமணமாகாமல் ஊழியம் செய்யும் சில பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களிடமும் காணப்படுகிறது. உதவி பாஸ்டர்களை தன் பாவசெயலுக்கு பெரிய பாஸ்டர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஈரோட்டில் ஒரு பாஸ்டர் இந்த பாவத்தில் பிடிக்கப்பட்டு சபை மூப்பர்களால் அந்த பாஸ்டர் மன்னிப்பு பெற்று இப்போதும் ஊழியம் செய்கிறார். இதை அங்குள்ள பெந்தேகோஸ்தே சபையில் உள்ள சிலர் அறிவார்கள். ஆனால் கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.

சில சமயங்களில் சில பாஸ்டர்மார் பிடிக்கப்படுகிறார்கள், இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். கத்தோலிக்க சபை குருமார் கிரமித்த சிறுவர்களின் எண்ணிக்கை குறித்து பத்திரிக்கைக்காரர்கள் வெளியிட்டபோது போப் அவர்களும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டாரே! இதுபோலவே பெண்கள் பகுதியிலும் பெண்கள் ஹாஸ்டல், பெண்கள் விடுதி, பள்ளி, அனாதை விடுதிகள், கைவிடப்பட்ட பெண்களின் விடுதிகள் இவைகளில் தங்கும் பெண்களிடம் இப்படிப்பட்ட பாவம் பெருகிக்கொண்டேயிருக்கிறது. ஜாக்கிரதை! ஜெபிப்போம்.

கிருஷ்ணகிரியில் பால் வெள்ளம்..!

ஆவின் லாரி சாலையில் கவிழ்ந்தது : 16 ஆயிரம் லிட்டர் பால் வீண் மேட்டூர் அருகே பால் ஏற்றி வந்த ஆவின் லாரி கவிழ்ந்ததில் 16 ஆயிரம் லிட்டர் பால் தரையில் கொட்டி ஆறாக ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து ஆவின் நிறுவவனத்துக்கு சொந்தமான 16 ஆயிரம் லிட்டர் பாலுடன் லாரி ஒன்று கிருஷ்ணகிரியை நோக்கி சென்றது. மேட்டூர் அருகே உள்ள ரவுண்டாணாவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக லாரி தலைகீழாக கவிழ்ந்தது. இதனையடுத்து லாரியில் இருந்த 16 ஆயிரம் லிட்டர் பாலி தரையில் கொட்டியது. அருகில் இருந்த மக்கள், குடங்களிலும், பாத்திரங்களிலும் பாலை பிடித்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://tamilnews.ebest.in/tamilnadu-political-news-in-tamil/milk-aavin-milk-11107/tamilnadu.html

 

இந்தோனேஷியாவில் திடீர் சுனாமி..!

இந்தோனேஷியாவில் சில மணிநேரத்துக்கு முன் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியை அடுத்த சுனாமி தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்;மேலும் 500 பேரைக் காணவில்லை.

மேலும் இதுதொடர்பான விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamilnews.ebest.in/world-news-in-tamil/earthquake-indonesia-tsunami-11073/world.html

http://news.malaysia.msn.com/regional/article.aspx?cp-documentid=4421245


திருநங்கைகள் Part.3

அறிந்து கொள்வோம் அரவாணிகளை

Posted by Pethuru Devadason at 1:27 AM
அரவாணிகள் அல்லது திருநங்கைகள் என கண்ணியமான வார்த்தைகளாலும் இன்னும் பிற கண்ணியமற்ற சில வார்த்தைகளாலும் அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர் பற்றி நம்மில் பலருக்கு சரியான முழுவிபரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் அவர்களைக் குறித்து நேர்மையான நோக்குடன் அணுகாமல் அவர்களை பிச்சை மற்றும் பாலியல் தொழிலாளர்களாக ஊடகங்கள் சித்தரித்து வரும் நிலை தான். முழுமையாக ஆண் எண்றோ அல்லது பெண் என்றோ இல்லாமல் இருவரது பண்புகளையும் உள்ளடக்கிய இடைநிலை பாலினமான (Intersex) இவர்கள் மூன்றம் பாலினத்தவராக (Third Gender) தற்போது தான் பல நாடுகளிலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறார்கள்.
ஆணும் பெண்ணுமாக

ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் (மாற்கு 10:6). அப்படியென்றால், இவர்கள் எப்படி வந்தார்கள் எப்போது வந்தார்கள், இவர்களைக் குறித்த தேவனின் திட்டம் என்ன, இவர்களை நாம் அணுக வேண்டிய விதம் என்ன என்பதை குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மனித உடலில் 46 குரோமோசோம்கள் உண்டு என்பது நாம் பள்ளிப் பருவத்திலேயே அறிந்து கொண்டது தான். அதைப்பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொண்டால் தான் அரவாணிகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். மனிதனின் பல்வேறு குணாதிசயங்களுக்கும் காரணமான வெவ்வேறு மரபணுக்களை (Genes) கற்றையாக ஒருங்கே கொண்டிருப்பது தான் குரோமோசோம். இந்த 46 குரோமோசோம்களும் இரண்டிரண்டாக மொத்தம் 23 ஜோடிகளாக காணப்படும். இவற்றில் 22 ஜோடிகள் உடலின் பால் சம்பந்தப்பாடாத உடலின் மற்ற அனைத்துப் பண்புகளையும் கட்டுப்படுத்துபவை. கடைசி ஜோடி குரோமோசோம்கள் பாலினம் (Sex) சம்பந்தப்பட்டவை. அது XX என்று ஆண்களிலும் XY என்று பெண்களிலும் கானப்படும். இனப்பெருக்கத்தின் போது ஆண்களில் அது X மற்றும் Y ஆகவும். பெண்களில் இரண்டு X களாகவும் அளவில் மட்டுமல்ல பண்புகளிலும் சரிபாதியாக பிரிந்து கரு உருவாக உதவும். உருவாகும் கருவில் ஆணின் X ம் பெண்ணின் X ம் இணைந்து XX குரோமோசோம் உருவானால் அது பெண்ணாக வளரும். ஆணின் Y ம் பெண்ணின் X ம் இணைந்து XY குரோமோசாமாக உருவானால் ஆணாகவும் வளரும். இன்னும் வேறுவிதமாக கூறினால் உருவாகும் கருவில் Y குரோமாசோம் இருந்தால் அது ஆணாகவும் Y இல்லையென்றால் அது பெண்ணாகவும் வளர்ச்சியடைகிறது எனலாம்.

மிகச்சில வேளைகளில் (ஆயிரத்தில் ஒன்றிரண்டு) இது இவ்விதம் முறைப்படி இரண்டாக பிரிந்து இணைவதில்லை. எடுத்துக்காட்டாக உருவாகும் கருவில் அல்லது என்ற ஒற்றைக்குரோமோசோம் மட்டுமே காணப்படலாம்; இவர்கள் 45Y ஆகவோ (ஆண்பண்புகள் குறைவான ஆண்கள்) அல்லது 45X (பெண்பண்புகள் குறைந்த பெண்களாகள்) ஆகவோ இருப்பர். இதுபோன்று உருவாகும் கருவில் இரண்டிற்கும் மேற்பட்ட குரோமோசோம்களும் காணப்படலாம். இவர்கள் பெண்பண்புகள் அதிகம் கொண்ட பெண்கள் (47XXX) ஆண்பண்புகள் அதிகம் கொண்ட ஆண்கள் (47XYY) ஆண்பண்புகள் கொண்ட பெண்கள் அல்லது பெண்பண்புகள் கொண்ட ஆண்கள் (47XXY) என வித்தியாசமானவர்களாக இருப்பர்.

இவ்விதம் குரோமோசோமின் எண்ணிக்கை கூடுதல் குறைவைப் பொறுத்தும் இவற்றில் Y குரோமோசோம் இருப்பதையும் இல்லாததையும் பொறுத்தும் அந்த கருவானது வளர்ச்சியடையும் போது அதில் உட்புறமான மற்றும் வெளிப்புறமான இன உறுப்புக்கள் உருவாகுவது கட்டுப்படுத்துகிறது. மட்டுமல்ல, இப்படியான இன உறுப்புக்களின் வளர்ச்சியின் அளவை பொறுத்து அவர் பின் நாட்களில் பருவ மாற்றங்கள் உடலில் தென்பட ஆரம்பித்து முழுமையான ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அல்லது இடைநிலையாகவோ அடையாளம் காணப்படுகிறார்.

ஆணா? அல்லது பெண்ணா?

ஒருவரை ஆண் என்றோ அல்லது பெண் என்றோ வெளித்தோற்றத்தை வைத்து, எளிதாக அடையாளம் கண்டு விடுகிறோம். ஆனால் அது எப்போதும் சாத்தியமில்லாத சூழ்நிலையில், ஆணுக்கும் பெண்ணிற்கும் உள்ள பல்வேறு பால் வேறுபாடுகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆணுக்கும் பெண்ணிற்கும் உள்ள வேறுபாடுகள் அடிப்படையில் பால் வேறுபாடுகள் என்பதை கீழ்கண்டவாறு 4 முக்கிய வகையாக பிரிக்கலாம்:

1. மரபணு பால் (Genetic Sex) : இதன் படி ஒருவரின் உடலில் 23ம் ஜோடி குரோமோசோமில் Y காணப்பட்டால் அவரை ஆண்(XY) அது காணப்படாவில்லையெனில் பெண்(XX) எனவும் கூறுகிறோம்.

2. இன உறுப்புகள் பால் (Gonadal Sex) : உருவாகும் கருவில் Y குரோமோசோம் இருப்பதையும் இல்லாததையும் பொறுத்து உள்ளான மற்றும் வெளிப்புறமான இனஉறுப்புக்கள் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ வளர ஆரம்பிக்கும். எனவே இந்த இன உறுப்புகள் பால் உருவாக அடிப்படையாது மரபணு பால் எனலாம்.

3. புறத்தோற்ற பால் (Phenotype Sex) – இதில் இனஉறுப்புக்கள் வளர்வது மாத்திரம்மல்ல, அதற்கேற்ப அவைகளில் நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்கள் (ஆண்ட்ரோஜன், ஈஸ்ரொஜன்) அதனால் ஏற்படும் உடல்வாகு / பிற உடல் மாற்றங்கள் (Secondary Sexual Characters) ஆகியவை அடங்கும். இன உறுப்புகளில் ஆண்ட்ரோஜென் சுரந்தால் ஆணாகவும் ஈஸ்ட்ரோஜன் சுரந்தால் பெண்ணாகவும் வளர்ச்சியடைகின்றனர்.

4. உளவியல் பால் (Psychological Sex) – மேற்கண்ட பண்புகளுடன் ஒருவரது வளர்ப்புமுறை சமுதாய சூச் நிலையை பொறுத்து ஒருவர் மனதளவிலும் முழுமையான ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ முதிர்ச்சிய்டைகிறார்.
இவ்விதம் ஒருவர் நான்கு நிலைகளிலும் ஒரேவகையினராக பொருந்தினால் மட்டுமே அவர் ஒரு முழுமையான ஆண் அல்லது பெண் எனலாம். ஒர் முழுமையான ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாமல், இடை நிலையுடன் இருப்பது கரு உருவாகும் போது அவற்றிலுள்ள மரபணுக்கள் மற்றும் அவற்றைத் தாங்கியுள்ள குரோமோசோம்களின் அமைப்பையும் அளவையும் பொறுத்தது. இந்த மரபணுக்களில் நடைபெறும் மாற்றங்கள் (mutations) தன்னிச்சையாக தலைமுறைதோறும் தொடர்கின்றன. இதனை மரபணு ஆலோசனை மூலம் ஓரளவு தவிர்க்கலாமே தவிர முற்றிலும் சரிப்படுத்துவது நம் கையில் இல்லை.

அண்ணகர்கள் (அரவாணிகள்) மூன்றுவிதம்

விவாகரத்து குறித்து கேள்வி கேட்ட பரிசேயர்களைப் பார்த்து இயேசு: ”தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப் பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டவர்களும் உண்டு. இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக் கடவன்” என்றார் (மத் 19:12).

தாயின் வயிற்றில் அண்ணகர்களாய் பிறந்தவர்களை மரபணு பால் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் பால் வகையில் இவ்விதம் வகைப்படுத்துகிறோம். இவர்களுக்கே இன்று சரியான அங்கிகாரமும் தேவைகளும் இல்லாத நிலையில் மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்படுகிறவர்கள் இன்றைய நாட்களில் இல்லை எனலாம். இவர்கள் இனப்பெருக்க உறுப்புகளை அறுவைசிகிச்சை செய்து கொள்வதன் மூலம் புறத்தோற்ற பால் மற்றும் உளவியல் பாலில் மாற்றம் காண முற்படுபவர்கள். இன்றைய காலகட்டத்தில் அண்ணகர்களுக்கு இத்தகைய அறுவைசிகிச்சை மூலம் தங்களின் முதன்மை பாலினத்தோடு ஒத்துப்போகும் புறத்தோற்ற/உளவியல் பாலின நிலையை அடையவே இவை அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. பரலோக இராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொள்பவர்களை உளவியல் பால் வகை எனலாம். இவர்கள் ஒரு முழுமையான ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருப்பவர்கள். இவர்களுக்கு உடலளவில் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை; ஆனால் மனதளவில் இவர்கள் தங்களை ஒரு ஆண் அல்லது பெண்ணின் இனப்பெருக்க கடமையை செய்வதில் நாட்டமில்லாதவர்கள். இவர்களைக் குறித்து 1 கொரி 7: 25-40 ல் விபரமாக கூறப்பட்டுள்ளது. இவைகளை உற்று நோக்கும் போது அண்ணகர்கள் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்பது தெளிவாகிறது.

வேதாகமத்தில் இவர்கள்

வேதாகமத்தில் இவர்கள் பிரதானிகள் (2 இரா 9:32, எரே 38:7, ஆதி 37:36, எஸ்தர் 1:11) விதயடிக்கப்பட்டவர்கள் (உபா 28:1), அண்ணகர்கள் (மத் 19:12). என பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்கள். ராஜாவின் அரணமனைகளில் பிரதானிகள், பானபாத்திரக்காரரின் தலைவன், சுயம்பாகிகளின் தலைவன் (ஆதி 40:2), தலையாரிகளுக்கு அதிபதி (ஆதி 37:36) ராஜஸ்திரீக்கு மந்திரி (அப் 8:27) என்ற முக்கிய பொறுப்புகளில் இவர்கள் இருந்து வந்துள்ளனர். இதன் மூலம் அக்காலங்களில் இவர்களுக்கென்றும் ஒரு சிறப்பான அந்தஸ்து இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இப்படிப்பட்ட அன்ணகர்களுக்கும் அவர்கள் வகித்த பொறுப்புகளுக்கும் ஒரே வார்த்தை வார்த்தை பயன்படுத்தப்படுவதால் வேதாகமத்தில் இவர்களைக் குறித்து கிட்டதட்ட 50 முறை சொல்லப்பட்டிருந்தாலும் 28 இடங்களில் மட்டுமே தான் உண்மையான விதயடிக்கப்பட்டவர்கள், அண்ணகர்களைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புண்டு.

ஆரம்பத்தில் ஆலய ஆராதனைகளில் சேர்த்துக் கொள்ளப்படாத இவர்கள் (உபா 23:1) பின்னர் சிறப்பாக அங்கீகரிக்கப்படுவதாக ஏசாயாவால் வாக்கு அருளப்பட்டது. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகைளைத் தெரிந்துகொண்டு உடன்படிக்கையைப் பறறிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன். (ஏசாயா 56:4,5).

தேவனைத் தொழுது கொள்ளும் இஸ்ரவேலர் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே அன்று அங்கவீனன் அங்கீகரிக்கப்படவில்லை எனலாம். மாத்திரமல்ல இவ்விதம் விதையடிக்கப்படுதல் அந்நிய தேவர்களுக்காக செய்யப்படுதவதாக இருந்ததாலும் பழுதுள்ள எதுவும் பலி செலுத்தப்படலாகாது என நியாயப் பிரமாண சட்டம் இருந்ததாலும் இவர்கள் அவ்விதம் ஆலயங்களில் ஒதுக்கப்பட்டிருந்தனர். புதிய ஏற்பாட்டு காலத்தில் எத்தியோப்பிய ராஜாஸ்திரியின் நிதிப்பொறுப்பிலிருந்த அண்ணகன் பிலிப்பு மூலம் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றான் (அப். 8:37,38). இது கிறிஸ்தவத்தில் அண்ணகர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதையும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதையுமே காட்டுகிறது.

இந்தியாவில் இவர்களின் நிலை:

காலாகாலமாக ஒவ்வோரு நாட்டிலும் இவர்கள் வெவ்வேறு குறிப்பிட்ட வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டனர். அதனைப் பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் அவர்களது சமூக அந்தஸ்தில் மாற்றங்கள் உண்டு. இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கனவே மக்கள் தொகை மலிந்துவிட்ட நிலையில் இடப்பட்ட இவர்களின் நிலைமை திண்டாட்டம் தான். கேலி, கிண்டல், பரியாசம், குடும்பத்தினரால் வெறுக்கப்படுதல், மற்றும் சமுதாயத்தில் சரியாக ஏற்றுக் கொள்ளப்படாதிருக்கும் போது இவர்களில் பலர் பாலியல் மற்றும் பிச்சை தொழிலுக்கு வந்து சேருகின்றனர். இவர்களைக் குறித்த சரியான விழிப்புணர்வும் புரிந்து கொளதலும் அக்கறையும் சமுதாயத்தில் இல்லாமையால் இவர்களின் சமூக நிலைமை இன்னமும் மோசமாகி இவர்களைக் குறித்த தவறான கண்ணோட்ட்த்துக்கு விட்டுச் செல்கிறது. எனவே இவர்களைக் குறித்த தெளிவான பார்வை நமக்குத் தேவை.

திருநங்கையர் என மரியாதைக்குரியவர்களாக அழைக்கப்படுவது போன்று தோன்றினாலும், அவர்கள் எல்லோரிடமும் குறைந்தபட்சம் ஒரு X குரோமோசோம் உள்ளது என்பதற்காக இவர்களை முற்றிலும் நங்கையர் பிரிவில் சேர்த்துவிட்டது நியாயமாக இருக்க முடியாது. இவர்களில் பெரும்பான்மையினோருக்கு Y குரோமோசோமும் உண்டு என்பதைக் கருத்தில் கொண்டு இவர்களை உளவியல் மற்றும் புறத்தோற்ற பால் வகையில் ஆணாக இருந்திட ஏன் சமுதாயம் அனுமதிக்கக் கூடாது? இன்றும் இந்தியாவில் பெண்களின் நிலையே பரிதாபமாக காணப்படும் போது இவர்கள் நிலை இன்னும் பரிதாபம் தான்.

சமீப காலங்களில் இவர்களைப் பற்றிய சமூகப் பார்வையில் மாற்றங்கள் வந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. 2005 முதல் பாள்போர்ட் விண்ணப்பங்களில் இவர்களுக்கென மூன்றாம் பாலினத்தை குறிப்பிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 2009 முதல் வாக்காளர் பட்டியலிலும் இவர்கள் தனிபாலின வகையினராக அங்கிகரிக்கப்பட்டு அடையாள அட்டைகளும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் இவர்களின் நலனுக்கென தனி வாரியமே அமைக்கப்பட்டுள்ளது நல்ல விஷயம். அரசியல் மற்றும் அதிகார மட்டத்தில் மட்டும் இந்த மாற்றங்கள் போதாது. ஒவ்வொருவரும் இதுபோன்ற ஆயிரத்தில் ஓரிருவரை அடையாளம் காணும்போது பரிவுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். தங்களாலியன்ற தனிப்பட்ட மற்றும் சமுதாய உதவிகளை நல்கிட முன்வர வேண்டும். இத்தகைய மாற்றுப் பார்வையில் தங்கள் கடமையினை ஆற்றிட முதலில் கிறிஸ்தவர்கள் முன்வரவேண்டும்.

”ஏழையைப் பரியாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்”(நீதி 17:5).
Thanks To:

திருநங்கைகள் Part.2

திருநங்கைகள் சம்பந்தமாக அண்மையில் தமிழ் கிறித்தவ தளத்தில் நாம் அளித்த பின்னூட்டம்…

அன்பு நண்பர் சரவ் அவர்களுக்கு தாங்கள் குறிப்பிட்ட திருநங்கைகள் சம்பந்தமான எனது கட்டுரையை தொடுப்பில் சென்று பார்க்கவும்;

http://chillsam.wordpress.com/2009/11/12/eunuch/

நண்பரே, 1.கொரிந்தியர் .5 திருநங்கைகளுக்காகவே எழுதப்பட்டதைப் போலக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்; அது மீட்கப்பட்ட சபைக்காக எழுதப்பட்டதாகும்.

// வேதம் நமக்கு இவ்வாறு நமக்கு சொல்லியிருக்க நாம் எப்படி திருநங்கைகள் என்று சொல்லபடுகின்ற நபர்களோடு அவர்கள் மனந்திரும்பாத பட்சத்தில் கர்த்தருக்குள் ஐக்கியம் கொள்ள முடியும்.அவர்கள் சபையில் வரலாம் வேத வார்த்தையை கேட்கலாம் ஆனால் தங்கள் பாவ கிரியைகளை விட்டு மனந்திரும்பாத பட்சத்தில் எப்படி ஐக்கியம் கொள்ள முடியும் என்று தெரியவில்லை.//

மற்ற சாதாரண மனிதர்களோடு பழகி உறவாடி வியாபாரம் செய்து ஐக்கியம் கொள்ளும் போதும் இதே உணர்வு உங்களுக்கு உண்டாகுமா; அவர்கள் மனந்திரும்பும் வரை காத்திருந்து ஐக்கியம் கொள்வதைப் போலவே இவர்களுடனும் நேசம் பாராட்டுவதில் என்ன தயக்கம்? சபைக்குட்பட்ட‌ மற்ற மனிதர்கள் பாவமே செய்யவில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்? திருநங்கைகள் என்றாலே அந்தரங்கமாக மிகவும் மோசமானவர்கள் எனும் தவறான அபிப்ராயமே தங்களது அச்சத்துக்குக் காரணமாக இருக்கிறது; இந்த உலகிலுள்ள அனைவரையும் போலவே திருநங்கைகளும் பாவத் தன்மையில் பிறக்கிறார்கள் என்பதைத் தவிர அவர்கள் எந்த வகையிலும் மற்ற மனிதர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர்களல்ல‌.

இன்னும் சொல்லப்போனால் பாவத்தை நிறைவேற்றும் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட மாறுபாட்டினால் மனம் பேதலித்து துவண்டுபோய் தாழ்வு மனப்பான்மையினால் சமூகத்தைவிட்டு தள்ளப்பட்டவர்கள்; இதனால் பாவ சோதனைகள் குறைவானவர்கள்; அன்புக்காக ஏங்குபவர்கள்.

பின்குறிப்பு:

இதையெல்லாம் படித்துவிட்டு என்னை சந்தேகப்படவேண்டாம்…ஹி..ஹி..!

Part.2:2

//நாளைக்கே ஒரு திருநங்கை மனந்திரும்பாமல் (தன பாலிய தொழிலை செய்து கொண்டும்) ஞான ஸ்நானம் வேண்டும் என்றால் எப்படி நம்மால் கொடுக்க முடியும்.//

திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள் என்ற எண்ணத்தை முதலில் தவிர்க்கவேண்டும் ;அடுத்து தங்கள் பாலியல் தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள் என்ற பகுதி ;இவையெல்லாமே பரிசுத்தாவியைப் பெற்றவர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் நிதானமாக செயல்பட்டு போதனையின் மூலம் நிறைவேற்ற வேண்டிய எல்லைகளாகும் ;

வேதமே தெளிவாகக் கூறுகிறது,தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தோரும் உண்டு ;தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டோருமுண்டு’ என ; ஆம் ,நார்மலாகப் பிறந்து தேவனுடைய ராஜ்யத்துக்காகத் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டோர் என்பார் தவறு செய்யவில்லையா ,அதுவும் போகட்டும் ,மனதின் உணர்வுகளை அடக்கிக் கொண்டு அண்ணகர்களாக தேவபணியாற்றுவோரை விட தங்களை சரீர ரீதியான கெடுத்துக்கொண்டு தங்கள் ஆண்மையை இழந்தோரின் நிலைமை பரிதாபமல்லவா ,அவர்களுடைய மனமே இதைச் செய்யக் காரணமாக இருந்தது எனில் வேத வார்த்தையின்படி அவர்கள் மனம் புதிதாகுமானால் எத்தனை மேன்மையாக இருக்கும்..?

Part.2:3

// நீங்கள் என்ன சொல்ல வருகிறீர் என்று எனக்கு புரியவில்லை.பாலியல் தொழில் செய்து கொண்டு இருந்தாலும் அவர்களை சபையில் ஞான ஸ்நானம் கொடுத்து,கர்த்தரின் பந்தியில் பங்கு பெற சொல்கிறீகளா? அல்லது வேறு என்ன சொல்ல வருகிறீர். //

திருநங்கைகளுக்கென்று தனி சுவிசேஷமோ தனி அணுகுமுறையோ தேவையில்லை என்கிறேன்; பாலியல் தொழில் செய்வோரை வேதம் எப்படி அணுகுகிறதோ அப்படியே திருநங்கைகளையும் அணுகினால் போதுமென்கிறேன்;

பாலியல் தொழில் செய்யாவிட்டாலும் இங்குமங்கும் ஓரிரு காரியங்களில் சறுக்கிவிட்டு பந்தியில் பங்கேற்போர் இருக்கிறார்களல்லவா? பந்தியில் பங்கேற்பது பெரிய விஷயமல்ல; நீங்கள் தராவிட்டால் அவரைக் குறித்து அறியாத எங்கு வேண்டுமானாலும் அவர் பந்தியில் பங்கேற்கமுடியும்; எனவே தான் வேதம் அவரவருடைய மனசாட்சியை இங்கே நீதிபதியாக (1.கொரிந்தியர்.1:31) கூறுகிறது.

இன்னும் சில சபைகளில் கணவன் மனைவி சண்டையிட்டு வந்தாலும்கூட பந்தியிலிருந்து விலக்குவார்கள்; இதற்கெல்லாம் யாருக்கும் அதிகாரமில்லை; இது கிறித்துவுக்குள் விசுவாசிக்குக் கொடுக்கப்பட்டுள்ள சுயாதீனத்தைக் கேள்விக்குரியதாக்கிவிடும்; போதிக்கவும் ஜெபிக்கவும் மட்டுமே ஊழியருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது; ஆனால் இங்கே மனைவியை தள்ளிவிட்டு விசுவாசியாக இருக்கமுடியாது; ஆனால் போதகராக இருக்கலாமல்லவா..? தள்ளிவிடப்பட்டவளை விவாகம் செய்பவனும் அவளை தள்ளிவிட்டவனுமாகிய இருவருமே அவளை விபச்சாரம் செய்யப்பண்ணுகிறார்கள் என்று வேதம் கூறுகிறது.

சரி, மீண்டும் மையப் பொருளை நோக்கி வருவோம்…
திருநங்கைகள் இயல்பிலேயே பாவத்துக்கு அடிமைகளல்ல, அன்புக்கே அடிமைகள்; ஏனெனில் அவர்களுடைய உடற்கூறு அமைப்பே அப்படிப்பட்டதாகும்; மேலும் பிறப்பிலேயே திருநங்கைகளானவர்கள் மூலமே இடையில் மனநிலை காரணமாகத் தங்களைத் திருநங்கைகளாக மாற்றிக் கொண்டோரை சந்திக்கவேண்டும்.

கிறித்தவ விசுவாசத்தைப் போல திருநங்கைகளை முழுமையடையச் செய்யும் வேறொரு கொள்கை இந்த அகிலத்திலேயே கிடையாது என்பேன்; ஆனால் திருநங்கைகளைக் கவர்ச்சிப் பொருளாகவும் வியாபாரப் பொருளாகவும் வேடிக்கைப் பொருளாகவும் இந்த உலகம் பார்க்கிறது; எனவே தங்களை வஞ்சிக்கும் இந்த உலகைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒருவித மூர்க்கத்தனம் அவர்களுடைய குணாதியத்தையே மாற்றிவிடுகிறது;

எப்படி மிகவும் அழுக்காக இருக்கும் ஒரு துணியை மிக அதிக தண்ணீரும் சௌக்காரமும் போட்டு அதிக முயற்சியினால் வெளுக்கிறோமோ அதுபோலவே திருநங்கைகள் மிகவும் மோசம் என்று நீங்கள் நினைத்தால் அவர்களைவிட்டு விலகாமலும் விலக்கிவிடாமலுமிருந்து அவர்கள் தானியேல்,எஸ்தர் போன்ற பரிசுத்தர்களை நேசத்துடன் வளர்த்தவர்தம் வழிவந்தோர் என்ற பாசத்துடன் அணுகினால் போதும் என்கிறேன்.

(தொடருவேன்…)

நல்ல சமாரியன் ஓவன் ராபர்ட்ஸ் ஐயா அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்..!

வலைதளத்தில் தமிழ் கிறித்தவம் மிகவும் பின் தங்கிருக்கிறதோ என்று யோசிக்கிறேன், வருந்துகிறேன்; ஒருவேளை எனக்குத் தேடத் தெரியவில்லையோ என்னவோ..!

நேற்று (15.20.2010) சென்னையில் காலமான மூத்த போதகர் ஓவன் ராபர்ட்ஸ் அவர்களைக் குறித்த எந்த செய்தியும் இணையதளத்தில் கிடைக்கவில்லை.

DSC_1641.JPG

அன்னார் தமது சரீர பெலவீனங்கள் மத்தியிலும் ஆண்டவருக்காக இடையறாது செய்த ஊழியங்களுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம்.

அவருடைய ஊழியத்தைக் குறித்து அறிந்தோர் அவர்தம் ஊழியத்தைக் குறித்த தகவல்களை இங்கே பதித்து அவருடைய ஊழியத்தைப் போற்றும் வண்ணமாக சாட்சிகளைப் பகிர அன்புடன் அழைக்கிறேன்.

சுரங்கத்திலிருந்து அரங்கத்திற்கு..?

ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது..!

69 நாட்கள் பூமிக்கடியில் 2000 அடி ஆழத்தில் 33பேர் உயிர்பிழைத்தது எப்படி?

அண்மையில் சுரங்கத்தில் சிக்கி  69 நாட்களாகத் தவித்த‌  33 தொழிலாளர்களை சிலி நாட்டு அரசாங்கம்  ‘நாசா ‘வின் உதவியுடன் மீட்டதை அனைத்து ஊடகங்களிலும் கவனித்தோம் .

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=317687&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

இந்த செய்தி முதலில் எனது சிந்தைக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவே இல்லை; வழக்கமான செய்தியைப் போல‌ கண்டும் காணாமல் இருந்திருக்கிறேன்;

கடந்த 69 நாட்களாக அந்த தொழிலாளர்களுடைய உயிர் தவிப்பையும் அவர்தம் உயிரின் அருமையுணர்ந்து அவர்களை மீட்கப் போராடிய சிலி அரசின் பொறுப்பையும் அறிந்து கொண்டாலும் இந்த 69 நாட்களும் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் ? என்னைச் சுற்றி நடக்கும் இதுபோன்ற சம்பவங்களுக்கு நான் அன்னியமானதைக் குறித்து வருந்துகிறேன்;அது எனக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதது குறித்து ஆச்சரியப்படுகிறேன்; அதைக் குறித்து யோசித்ததுமே என் மனதில் எழுந்த கேள்வி இதுதான் , 69 நாட்களும் அவர்கள் எப்படி உணவுக்கும் தண்ணீருக்கும் போராடியிருப்பார்கள் என்பதே.

இதைக் குறித்த செய்தியைத் தேடியறிந்ததும் ஆச்சரியமாக இருந்தது;அந்த தொழிலாளர்களுடைய மன உறுதியுடன் கூடிய ஒழுக்கத்தையும் அறிந்தேன்;

http://uk.news.yahoo.com/38/20101013/twl-q-a-how-did-the-chilean-miners-survi-6ae0455.html

என்ன சாப்பிட்டனர்?

சுரங்கத்துக்குள் சென்ற தொழிலாளர்களுக்கு வெளியுலகத் தொடர்பு கிடைப்பதற்கு முன்னர் சுரங்கத்திலிருந்த‌ அவசரகால உணவு கிடங்கிலிருந்த சொற்ப உணவை மிக மிக சிக்கனமாக செலவழித்தார்களாம்;

எப்போது உதவி வரும் என்று தெரியாத நிலையில் பூமிக்கடியில் சுமார் 2257 அடி (688மீட்டர்) ஆழத்திலிருந்த அவர்கள் தாம் உயிர்வாழத் தேவையான மனோதிடத்துடன் உணவு கையிருப்பையும் திட்டமிட்டது கவனிக்கத்தக்கது;

ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டி மீன் உணவையும்  (tuna) ஒரு (சிப்) மிடறு பால் ஒரு கடி பிஸ்கட் (Crackers) துண்டு மற்றும் சின்ன “பீச்சஸ்” (peaches) பழத்துண்டு மட்டுமே உணவாக உட்கொண்டாராம்;


17 நாட்களுக்குப் பிறகு மீட்பு குழுவினர் அவர்களை அடைந்ததும் (அதற்கும் 17இடங்களில் துளைபோட்டு தேடினராம்..) ஹைட்ரஜன் ஜெல், சூப் மற்றும் சில மருந்துகளை  “புறாக்கள் “ (doves) எனப்படும் ப்ளாஸ்டிக் குழாய் மூலம் அனுப்பினர்;

அவர்களுடைய சூழ்நிலை எப்படியிருந்தது?

உஷ்ணமும் ,இருளும் சூழ நெருக்கமான சிறிய இடத்தில் சிக்கியிருந்த அவர்கள் படுத்துறங்க படுக்கைகள் இல்லாவிட்டாலும் 30 நாற்காலிகள் சில பெஞ்சுகளும் கொஞ்சம் போர்வையும் இருந்தது ; 530 சதுர அடி சுற்றளவுள்ள தற்காலிக முகாமில் அவர்கள் இருந்தனர் .

அங்கே போதுமான பிராண வாயு கிடைத்தது ;இதுவே நிலக்கரி சுரங்கமாக இருந்திருந்தால் விளைவுகள் பயங்கரமாக இருந்திருக்கும் ;இது (தாமிரம் மற்றும் தங்க )உலோக சுரங்கமாதலால் அங்கே ஆபத்தான மீத்தேன் வாயுக்கள் இருக்கவில்லை .

அவர்கள் ஆரோக்கியமாக இருந்தது எப்படி?

17 நாட்கள் தவிப்புக்குப் பிறகு ஆகஸ்டு 23 ந்தேதி மீட்புகுழுவினரின் தொடர்பு கிடைத்ததும் தொழிலாளர்கள் தங்கள் தேசிய கீதத்தைப் பாடி மகிழ்ந்தனர்; மீட்பு குழுவினர் சத்துமாத்திரைகளையும் ஊக்க மாத்திரைகளையும் அனுப்பி அவர்களுடைய ஜீரண உறுப்புகளை சகஜநிலைக்குக் கொண்டுவந்தனர் .

இதனிடையே மீட்பு குழுவினரின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது ;அவர்களில் தகவல் தொடர்பு நிபுணர்கள் ,மருத்துவர்கள்,மனோதத்துவ நிபுணர்கள் ,சமையல் மற்றும் துணி துவைப்போர் குழுவினரும் அடக்கம் ;மேலும் தொழிலாளர்களுடைய நாடித் துடிப்பையும் ஆரோக்கியத்தையும் கண்காணிக்கும் வயர்லெஸ் சாதனங்களும் தருவிக்கப்பட்டிருந்தது ;இதன்மூலம் குழாய் வழியே அனுப்பப்பட்ட “பையோமெட்ரிக் பெல்ட் ” எனும் சாதனத்தின் மூலம் தொழிலாளர்களுடைய உடல்நலம் கண்காணிக்கப்பட்டது .

மீட்புக் குழுவினர் அவர்களை நெருங்குவதற்கு முன் சுரங்கத்தினுள் முகாமுக்கு அருகே தொழிலாளர்கள் ஒரு தற்காலிக கழிப்பறையை அமைத்திருந்தனர் ;அதன் காரணமாக வயிற்றுப்போக்கு, காலரா, இரத்தக் கட்டி, இவற்றால் உடலுறுப்பு செயலிழத்தல் ஏற்பட்டிருக்குமோ என்று மீட்புக் குழுவினர் அச்சப்பட்டனர் ;ஆனால் தெய்வாதீனமாக அதுபோல எதுவும் நடைபெறவில்லை .

இந்த நிலையிலும் சிகரெட் மது போன்ற போதைவஸ்துக்களைக் கோரிய தொழிலாளர்களுக்கு அது மறுக்கப்பட்டது ;ஆனாலும் நிகோடின் கம் போன்ற மாற்று பொருட்கள் தரப்பட்டது .

அவர்கள் வெளியுலகைத் தொடர்பு கொண்டது எப்படி?

ஆங்காங்கு துளையிட்டு தேடிக்கொண்டிருந்த கருவியின் முனையானது ஆகஸ்டு 22 -ந்தேதி குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு துண்டு சீட்டானது மீட்பு குழுவினரைக் கொண்டாட வைத்தது ;அதில்,“நாங்கள் 33 பேரும் பத்திரமாக இருக்கிறோம் ” என்று இருந்தது ;

சுரங்கத்துக்குள் மற்றொரு குழாய் மூலம் பைபர் ஆப்டிக் தொடர்பு வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் தரப்படும் வரைக்கும் “டவ்ஸ்” எனும் குழாய் வழியே உறவினர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர்;

அவர்களுடைய அன்றாட வாழ்க்கை முறை எப்படி இருந்தது?

மீட்புகுழுவினர் அவர்களை அடைந்ததும் அவர்களுக்கு காலை ,மதிய ,இரவு உணவு மற்றும் மாலை தேனீர் வழங்கப்பட்டது ; 500 வாட் மின்சாரத்தின் உதவியுடன் விளக்குகளைப் பொறுத்தி அதன்மூலம் பகலையும் இரவையும் அவர்களுக்கு உணர்த்தினர் ;

மனோதத்துவ நிபுணர்கள் அவர்களுக்கு சில எளிமையான உடற்பயிற்சிகளை ஒழுங்கு செய்திருந்தனர் ;இதன்மூலம் தொழிலாளர்களுடைய உடல்திறன் மற்றும் உடல் வாகு பேணப்பட்டது ; இதன்மூலம் குறுகலான மீட்புகுழாயினுள் அவர்களுடைய பொருந்த முடியும் ;

அண்மை வாரங்களில் உள்ளேயிருக்கும் தொழிலாளர்களும் மீட்புகுழுவுக்கு உதவினார்கள்  ;அவர்கள் சுரங்கத்தினுள் அவ்வப்போது சேரும் இடிபாடுகளை அகற்றிக் கொண்டே இருந்தார்கள்  .

அவர்கள் தம்மை உற்சாகப்படுத்திக்கொண்டது எப்படி?

தொழிலாளர்களில் பெரும்பாலானோர் கால்பந்து இரசிகர்கள் ;அவர்களில் ஒருவர் தொழில்ரீதியாக கால்பந்து விளையாடுபவர் ;எனவே அவர்களை மகிழ்விக்க கேபிள் இணைப்பு மூலம் சிலி உக்ரைன் நாட்டுடன் மோதும்  நட்புணர்வு  கால்பந்து போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது ;மேலும் பீலே மாரடோனா போன்ற பிரபலங்களின் வீடியோ தொகுப்பும் அனுப்பப்பட்டது ;

இன்னும் சீட்டாட்டம் மற்றும் டொமினோ போன்ற விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ;மேலும் சிறிய வடிவிலான இசைக் கருவிகளும் பைபிளும் போப் பெனடிக்ட் ஆசீர்வதித்த ரோசரிகளும் வழங்கப்பட்டிருந்தன‌ .

ஒரு தொழிலாளியிடமிருந்த உயர்தொழில்நுட்ப வீடியோ காமிரா மூலம் அவர்களுடைய தவிப்பும் போராட்டமும் இன்னும் அவர்கள் பகிர்ந்துகொண்ட திரைப்பட நகைச்சுவை அனுபவங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது .

இந்த இராஜ மரியாதையையும் புகழும் நமக்கு கிடைக்கவில்லையே என்று மற்றவர் ஏங்குமளவுக்கு அத்தனை வசதிகளுடனும் பாதுகாப்பாக இருந்தனர் ; இன்னும் அவர்களில் சிலர் ஏன் மீட்கப்பட்டோமோ என்று நினைத்திருந்தாலும் ஆச்சரியமில்லை ;அந்த அளவுக்கு அவர்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டனர்;

அவர்கள் மீட்கப்பட்டது எப்படி?

21 அங்குல சுற்றளவுள்ள மீட்கும் குழல் “சிலி “தேசிய கொடியின் வர்ணம் பூசப்பட்டு ஒவ்வொரு தொழிலாளியையும் மீட்க ஆயத்தமானது ;அதனுள் ஒரு டாங்கி நிறைவான காற்று அடைக்கப்பட்டு , தகவல் தொடர்புக்கான மைக்ரோபோன் பொருத்தப்பட்டு ,வேகமாக மேலே தூக்கப்படும் தொழிலாளியின் இதயத் துடிப்பையும் சுவாசத்தையும் கண்காணிக்கும் மானிட்டர் இணைப்புடன் இருந்தது .

தொழிலாளி மேலேறி வர பயணிக்கவேண்டிய உயரமானது ஈஃபில் கோபுரத்தைப் போல இருமடங்கு உயரம் என்று சொல்லப்படுகிறது ;மீட்பு குழல் மேலேறி வர அரைமணிநேரத்துக்கும் குறைவாக ஆனது ; அது தடையின்றி உள்ளே செல்ல‌ அந்த குழலின் வெளிப்புறத்தில் சிறு சக்கரங்கள் பொருத்தப்பட்டு இராட்சத கிரேன் மூலம் இயக்கப்பட்டது .

தொழிலாளர்கள் மீட்கப்படும் முதலாவது நபரை எப்படி தேர்ந்தெடுத்தனர்?

செப்டம்பர் மாத இறுதியில் சிலியின் சுகாதார அமைச்சர் மீட்பு குழுவின் வல்லுனர் மற்றும் மருத்துவ நிபுணருடன் கலந்தாலோசித்து தொழிலாளர்களில் யார் மிகவும் உடலாலும் மனதாலும் பெலவீனமாக இருக்கிறாரோ அவரை முதலாவது மீட்க முடிவுசெய்திருந்தனர் ;ஆனால் தொழிலாளர்களோ யார் கடைசியாக வெளியேறுவது என்பதில் போட்டி போட்டனர் ;அதிசயம் ஒன்றுமில்லை , அவர்களில் யார் அதிக நாட்கள் பூமிக்கடியில் இருந்தனர் என்பதில் கின்னஸ் சாதனை செய்ய விரும்பியதுதான்.

இப்படியும் ஒரு சாதனை..?

ஆழத்தினின்று நாம் கூப்பிடுவோம்
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்
கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்
கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்?

எக்காலத்தும் நம்பிடுவோம் திக்கற்ற மக்களின் மறைவிடம்
பக்கபலம் பாதுகாப்பும் இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்

“அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள். (Psa 107:24 )

நேத்து ராத்திரி யம்மா..!

நேற்றிரவு (09:10:2010) தூக்கம் பறிபோனது, துக்கம் வரவானது; காரணம் எங்கள் ஊரிலுள்ள பெருமாளுக்கு ஏதோ விசேஷமாம்; கடந்த மூன்று நாளாக அரற்றிக் கொண்டிருந்தார்கள்; நமக்கு அதில் ஆர்வமில்லாவிட்டாலும் கட்டாயப்படுத்துவது போல அதிகாலையிலிருந்து இரவு பத்து மணிக்கும் மேலாக ஊரை ஒலியினால் மாசுபடுத்தினர்;

எல்லாம் போக நேற்று ஒரு ஊர் பயணம் முடித்து திரும்பி சோர்வுடன் படுக்கைக்குச் செல்லவே இரவு 11:30 ஆனது; ஒலிபெருக்கி சத்தத்திலிருந்து தப்பிக்க கதவையும் சன்னல்களையும் அடைத்துவிட்டு காற்றுக்கு வழியில்லாமல் துன்பத்துடன் தூங்க முயற்சித்தபோது சில மணித் துளிகளில் “டமடம” வென அடித்துக் கொண்டும் பஜன் பாடிக் கொண்டும் சாமி ஊர்வலம் வந்தது;

போதாக்குறைக்கு பட்டாசு வெடி… அந்த மிகப் பெரிய சைஸ் பேண்டு (Big Band)கள் மூன்றும் பள்ளிகளில் ‘மார்ச் ஃபாஸ்டு’ க்கு அடிப்பது, அத்துடன் சாவுக்கு அடிக்கும் மேள வாத்தியமும் சேர நெஞ்சை படபடக்கச் செய்யும் இரைச்சலுடனும் பிணத்துக்கு முன்பாக ஆடும் அருவருப்பான கூத்து நடனத்துடனும் சாமி ஊர்வலம் வந்தது;

கூத்து நடனம் ஆடிய இளைஞர்களும் மற்றவரும் நல்ல போதையில் இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது; இந்த ஊர்வலம் வருவதற்காகவே சில தினங்கட்கு முன்பு எங்கள் வீட்டு வாசலிலிருந்த நல்ல நிழல்தரும் மரத்தை வெட்டி வீழ்த்தியிருந்தனர்; இது அவர்கள் தேசமல்லவா, யாரையும் எதுவும் கேட்க முடியாது;நாங்களோ வாடகைக்கு குடித்தனம் இருப்பவர்கள்; ஏதாவது நியாயம் கேட்டாலும் வீட்டை காலி செய்யவைப்பர்; வேறு வீடும் தரமாட்டார்கள்;

ஒரு மாட்டு வண்டியில் சாமியை அலங்கரித்து வைத்து அதற்கு மின்வசதி தரும் மின்கலத்தையும் வண்டியுடன் இணைத்து மாட்டுக்கு பதிலாக மனிதர்கள் இழுத்துவந்தனர்; வண்டியிலோ ஒரு பூஜாரி ராஜா போல அமர்ந்துகொண்டு கொஞ்சமும் உணர்ச்சியற்ற நிலையில் இயந்திர கதியில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்;

பக்தர்கள் கொடுத்த பூஜை தட்டை சில நொடிகள் அந்த விக்கிரஹத்திடம் ஒரு காட்டு காட்டிவிட்டு பக்தர்களிடம் கொடுக்க, அவர்களும் இயந்திரத்தைப் போல பெற்றுக் கொண்டு திரும்பினர்;

ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக இருக்கக்கூடிய மின்சாரம் மற்றும் கேபிள் தொலைபேசி சர்வீஸ் கம்பிகளில் உரசி, உயர்ந்ததும் மட்டமானதுமான அந்த காகித அட்டை அலங்காரம் கவிழ்ந்து சாமி தடுமாறி விழுந்துவிடுமோ ‘ வென இளைஞர்கள் அதற்கென ஒரு கம்பை தயாரித்து அதன்மூலம் சர்வீஸ் கம்பிகளை உயர்த்திபிடித்து சாமியின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தனர்;

சாமியின் அழகோ கண்கொள்ளா காட்சி…
‘ஒருவனுக்கு ஒருத்தி ‘ என குடும்பஸ்தர்கள் வாழும் தெருக்களில் நுழைந்த சாமியோ சைடுக்கு ஒன்றாக ரெண்டு குட்டிகளுடன் வந்தார்; போனவாரம் வந்து போன மிஸ்டர் கணபதி சிங்கிளாகத் தான் வந்தார்;

சாமி குட்டிகளை மட்டும் கட்டிக்கொள்ள நம்ம பக்தர்கள் அவருடைய பெண்சாதிகளுடன் அவரையும் சேர்த்து கட்டியிருந்தனர்; விழுந்துருவாரோ என்ற நல்ல எண்ணமோ அல்லது தனது ஜோடிகளுடன் ஓடிவிடுவாரோ என்ற கெட்ட எண்ணமோ தெரியவில்லை;

என்னைப் பொருத்தவரை அவர் மிஸ்டர் கிருஷ்ணனாக இருக்கவேண்டும்; ஆனால் அவரைக் குறித்து பெருமாள் என புகழ்ந்தனர்; ‘ லாஜிக் ‘ புரியவில்லை;

பெருமாளைப் பொறுத்தவரையில் அலமேலு அம்மாவுடன் இருப்பார்; அதுவும் ஏதோ கொடுக்கல் வாங்கல் தகராறில் கோவித்துக் கொண்டு திருப்பதி மேலேறி தவமிருப்பதாகவும் அவருடைய கடன் தீர்ந்தபிறகே வந்து குடித்தனம் பண்ணுவார் என்றும் ஐதீகமாம்; நம்முடைய ஏழை எளிய மக்களும் தங்கள் முடி உட்பட அனைத்தையும் ஆண்டாண்டு காலமாக தானமாக வழங்கியும் இன்னும் அவருக்கு திருப்தியாகவில்லை;

எல்லா சாமியும் ஆசீர்வதிக்கும் பாவனையில் போதும் என்பது போல வலக்கரத்தைக் காட்ட இவரோ இன்னும் வேண்டும் என்பது போல வலக்கரத்தையும் இடக்கரத்தை அள்ளி முடித்துக் கொண்டது போலவும் வைத்திருப்பார்;

அப்படியானால் எங்கள் தெருவுக்கு வந்தது பெருமாள் அல்ல; இத்தனை கலாட்டாக்கள் நடந்தும் சாமியோ சாமியாரோ மக்களுடைய பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் சொல்லவில்லை; அவர் அருள் தருவதாகச் சொல்லுவதும் பக்தர்கள் வேண்டியது நடக்கும் என்று காத்திருப்பதும் சுயநலம் சார்ந்த பக்தியாகவே தோன்றுகிறது; ஏனெனில் ஒரு தெருவுக்கு சாமி வந்து போவதாலோ சாமியைத் தேடி பக்தன் சென்று வருவதாலோ ஒரு தனிப்பட்ட மனிதனுடைய வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்பட்டது போலத் தெரியவில்லை;

கோயிலில் விழாக்கோலம் ஒருபுறம், பக்தன் அருகிலிருக்கும் டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு மல்லாந்து கிடக்கும் அலங்கோலம் மறுபுறம்; அவன் பெண்டு பிள்ளைகள் அங்கே சாமியை விழுந்து வணங்கிக்கொண்டிருக்க இங்கே இவன் சாக்கடையில் விழுந்து எதையோ தேடிக்கொண்டிருக்கிறான்;

அந்த காலத்தில் கோயிலில் பரத்தையர் நடனமாடுவர்; இதனை பரதநாட்டியம் என்றும் கூறுவர்; இந்த நடனத்தால் வசீகரிக்கப்ப‌டும் ரிஷிகளும் மன்னர் பெருமக்களும் அன்றிரவு அவர்களோடு தங்களைப் பகிர்ந்துகொள்வர்;

இன்றோ ஒரு பாவமுமறியாத சிறுமிகளையும் வயதுக்கு வந்த இளங்குமரிகளையும் அதே கோவில் வாசலில் ஆடவிட்டு அவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்;

வீட்டுக்கு ஒன்றாக ஆணாகவோ பெண்ணாகவோ பெற்று நம்முடைய எதிர்காலத்தில் நமக்குத் துணையாக பிள்ளைகளை வளர்த்து இதுபோன்ற காமாந்தகர்களுக்கு அவர்களை பலியாக்கும் ஆபத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது;

ஏனெனில் அங்கே இருக்கும் சாமிகளின் கதைகளும் புராணங்களும் வீரபராக்கிரமங்களும் அத்தனை பயங்கரமானது; இந்த காலத்தில் அவர்கள் இறங்கி வந்து நம்முடைய பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு போகாவிட்டாலும் அவர்களுடைய ஆவியை இளைஞர்கள் மனதில் புகுத்தி அவர்கள் மூலம் பெண் பிள்ளைகளைக் கெடுத்துவிடுகிறார்கள்; இன்னும் அடுத்தவன் மனைவியையும்கூட இந்த சாமிகள் விட்டு வைப்பதில்லையே;ஆனானப்பட்ட விஷ்ணு பகவான் உட்பட தனது பக்தர்களை ருசிபார்ப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்;

இதையெல்லாம் யோசித்து யோசித்து நேற்றிரவு தூக்கம் பறிபோனது; சாமி அங்கே வேஷத்தைக் கலைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்க பக்தர்களோ வழக்கம்போல தங்கள் அன்றாட பாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்; பொழுதுபோக்குக்கு எந்திரன் முதலான திரைப்படங்களும் தொலைக்காட்சி சீரியல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சமத்துவ சமதர்ம சமுதாய மறுமலர்ச்சிக்கான அற்புதமான தளமாக டாஸ்மாக் கடைகளும் இருக்கவே இருக்கிறது.

வாழும் பாரதம்… வளரும் தமிழகம்…!?

“கிறித்தவ விழிப்புணர்வு இயக்கம்”

அண்மையில் எனது ஆதங்கத்தை “மாயாவி ஜட்சன் ஆபிரகாம் கையில் விஷ்ணு சக்கரம்” என்ற கட்டுரையாக்கும் போது தீவிரமான ஒரு சிந்தனையிலிருந்தேன்; ஆம், சரியான மாற்றுவழியைச் சொல்லாமல் வெறுமனே கிறித்தவ ஊழியர்களை விமர்சித்து பேசிக்கொண்டிருந்து கெட்டபெயரை எடுப்பதைவிட தீவிரமாக எதையாவது செய்யவேண்டுமென;  “கிறித்தவ விழிப்புணர்வு இயக்கம்” போன்ற பெயரில் ஒரு சுயாதீன இயக்கத்தைத் துவங்கவேண்டும்; அது
தமிழகம் முழுவதும்
ஆங்காங்கு துவக்கப்பட்டு ஒரு இயக்கமாகப் பதிவுசெய்யப்பட வேண்டும்;  இதன் உறுப்பினர்கள் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ செயல்படலாம்;  இவர்களின் பணியானது அஹிம்ஸா வழியில்- ஜனநாயக முறையில் அமைந்திருக்கவேண்டும்.

அதாவது சத்தியத்துக்கு விரோதமான செயல்களை வரையறுத்துக் கொண்டு முதலாவது அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை எச்சரிக்க வேண்டும்.

அடுத்து அவர்களை அழைத்து கூட்டம் போடும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு சில ஆலோசனைகளைக் கூறி அவர்கள் கவனமாக இருக்கவேண்டிய காரியங்களை உணர்த்தவேண்டும்.

இந்த மோசடி ஊழியர்கள் தங்கள் வழியை மாற்றிக் கொள்ளாமலும் நம்முடைய எச்சரிப்பைக் குறித்து மேடையில் பகிரங்கமாக அறிவித்து விளக்கம் கொடுக்காத பட்சத்தில் இவர்கள் நடத்தும் கூட்டத்தில் இவர்களுடைய நடவடிக்கைகள் கிறித்தவ நடைமுறைகளுக்கு விரோதமானது என்பதை துண்டுபிரதிகள் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.

இன்னும் தேவைப்பட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்; மோசடி நிதிநிறுவனங்களையும் போலி மருத்துவர்களையும் கூட புகாரின் அடிப்படையிலேயே போலீஸார் விசாரிக்கின்றனர்; எனவே பாதிக்கப்படாதிருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிக்கச் சொல்லி காவல்துறையில் புகார் செய்யலாம்.

இதில் ஒத்த கருத்துடைய சகோதரர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ‘எது சத்தியம், எது சத்தியத்துக்கு விரோதமானது’ என்ற வரையறைகளையும் நடவடிக்கை எடுக்கவேண்டிய வழிமுறைகளையும் இறுதி செய்யலாம்;

இதற்கு தலைவர் என்று யாரும் தேவையில்லை; ஜாமக்காரன் ஆசிரியர் போன்ற யாரையாவது கௌரவ ஆலோசகராக வைத்துக் கொள்ளலாம்.

இது அவசியமா என்று கேட்டால்…

இந்த தேசத்தில் பத்திரிகை சுதந்தரம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா?

மனித உரிமை குறித்த விழிப்புணர்ச்சி இருக்கிறதல்லவா?

தகவல் அறியும் உரிமை சட்டம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா?

அவ்வளவு ஏன் இயேசுவானவரையே எந்த அதிகாரத்தில் இவற்றை செய்கிறீர் என்று கேள்வி கேட்டனரே?

அந்நியன் வந்து நம்மை கேள்வி கேட்டு அவமானப்படுத்துவதற்குள் நம்மை நாமே சரி செய்துகொண்டால் என்ன‌?